.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 28 December 2013

அந்த மூன்றாம் நாள்

ஓர் இரவுநேரம் ஒருவன் தன் மூன்று வயது மகன் தூங்கிக்கொண்டிருக்கும் போது தன் மனைவியின் மேல்உள்ள கோபத்தில் அவளைக் கொன்று யாருக்கும் தெரியாமல் பிணத்தை புதைத்து விட்டான்  மறுநாள் காலை மகன் எழுந்து அம்மாவைப் பற்றி கேட்டால் என்ன சொல்லி சமாளிப்பது என்று ஆலோசனை செய்தான்..ஆனால் மகன் அம்மாவைப்பற்றி கேட்க வில்லை.இரண்டாம் நாளாவது கேட்பான் என நினைத்தான்.ஆனாலும் கேட்கவில்லை.வழக்கம் போல மகன் சந்தோசமாக இருந்தான்.மூன்றாம் நாள் மெதுவாக மகனிடம் பேச்சு கொடுத்தான். "உனக்கு நம்ம வீட்ல எதாவது மாற்றம் தெரியுதா? எங்கிட்ட ஏதாவது கேக்கணும் போல இருந்தா கேளு"மகன் மெல்லக்கேட்டான்: "மூணுநாளா அம்மா ஏன் உங்க பின்னாடியே நிக்கிறாங்கப்பா...

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை  காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய், முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய், எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும். எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும். எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாத...

மோகன்லால் பர்ஸ்ட், விஜய் நெக்ஸ்ட்!

'ஜில்லா' பட டைட்டிலில் மோகன்லால் பெயரை போடுமாறு விட்டுக்கொடுத்துள்ளாராம் விஜய்.    விஜய், மோகன்லால் இணைந்து நடித்துள்ள ‘ஜில்லா’ படப்பிடிப்பை நடத்தி, படத்தையும் முடித்துவிட்டார் இயக்குனர் ஆர்.டி.நேசன். இப்போது டைட்டில் போடும் நேரத்தில் அவர் முன்னரே எதிர்பார்த்த அந்த தர்மசங்கடமான சூழ்நிலை வந்துவிட்டது. விஜய் தமிழ்நாட்டில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர். மோகன்லாலோ 35 வருட காலமாக மலையாள சினிமாவின் எவர்கிரீன் ஹீரோ. முழுப்படத்தையும் இயக்கி முடித்துவிட்ட இயக்குனர் ஆர்.டி.நேசனுக்கு டைட்டிலில் யார் பெயரை முதலில் போடுவது என்பதில் குழப்பம். ஆனால் இயக்குனரின் மனப்போராட்டத்தை புரிந்துகொண்டு, விஜய்யின் பெயரைத்தான் முதலில் போடவேண்டும்...

சொல்லாதீர்கள்... கவிதை?

எங்களை இல்லாதவர்கள்  என்று சொல்லாதீர்கள்... எப்போதும் குறையாத வறுமையை  வைத்துக்கொண்டிருக்கிறோம் நாங்கள்...! எங்களை இயலாதவர்கள் என்று சொல்லாதீர்கள்.... அடுத்தவருக்கு தெரியாமல்  தனித்து அழமுடியும் எங்களால்..! எங்களை வீரமற்றவர்கள்  என்று சொல்லாதீர்கள்... பசியை எதிர்த்து போராடும்  தைரியம் இருக்கிறது எங்களிடம்..! எங்களை திக்கற்றவர்கள்  என்று சொல்லாதீர்கள்.... எட்டுத்திக்கும் சூழ்ந்துக்கொண்டிருப்பது  எங்கள் வறுமை ஜாதிதான்..! எங்களை பாதுகாப்பில்லாதவர்கள்  என்று சொல்லாதீர்கள்... எப்போதும் எங்களுக்கு சூன்யமாய்  குடைபிடித்துக்கொண்டிருக்கிறது வறுமை கோடு....

மலையாளத்திலும் சந்தானம்

தமிழ் சினிமாவின் தற்போதைய நகைச்சுவை மன்னனாக வலம்வரும் நடிகர் சந்தானம் தற்பொழுது மலையாளத் திரையுலகிலும் நுழைந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.நஸ்ரியா மற்றும் துல்கர் சல்மான் நடிப்பில் தற்பொழுது உருவாகிவரும் சலாலா மொபைல்ஸ் திரைப்படத்தில் நடிகர் சந்தானம் நடித்துவருவதாகக்கூறப்படுகிறது. இப்படம் சந்தானம் நடிக்கும் முதல் மலையாளத் திரைப்படமாகும். தமிழில் தவிர்க்க இயலாத நகைச்சுவை நாயகனாக வலம்வரும்சந்தானம் மலையாளத்திலும் ஜொலிப்பாரா என்பது இப்படம் வெளியானபின்பு தெரியவரும்.ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் இப்படத்தை சரத் ஏ.ஹரிதாசன் இயக்கிவருகிறார். நகைச்சுவையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வரும் இப்படம் வருகிற ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்...

4000 தடவைகளுக்கும் மேலாக ஒலிபரப்பான பூமி என்ன சுத்துதே பாடல்

கொலவெறி புகழ் அனிருத் இசையில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் எதிர்நீச்சல். இப்படத்தின் “பூமி என்ன சுத்துதே” பாடல் இவ்வாண்டில்அதிகம் ஒலிபரப்பப்பட்ட பாடலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் கடந்த மே மாதம் வெளியான திரைப்படம் எதிர்நீச்சல்.சிவகார்த்திகேயன் மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் அனைத்துப் பாடல்களுமே மாபெரும் ஹிட்டாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் மிகமுக்கியச் செய்தியாக “ பூமி என்ன சுத்துதே” பாடலை நடிகர் தனுஷ் எழுதியிருந்தார். அனிருத் இப்பாடலைப் பாடியிருந்தார் என்பதே. இவர்களின் கூட்டணியில்தான் கடந்த வருடம் வெளியான “...

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கான வேலைகள் தொடங்கின ? -

இளைய தளபதி விஜய் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான துப்பாக்கி திரைப்படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக ஏற்கெனவே கூறப்பட்டது. அதற்கான படப்பிடிப்புத் தளங்களைப் பார்வையிட ஏ.ஆர்.முருகதாஸ் தற்பொழுது கொல்கத்தாவில் முகாமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.ஏ.ஆர்.முருகதாஸ் மட்டுமின்றி அவருடன் இசையமைப்பாளர் அனிருத், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோரும் தற்பொழுது கொல்கத்தாவில் படப்பிடிப்பிற்கான லொகேசன்களைத் தேர்வு செய்துவருவதாகக் கூறப்படுகிறது.துப்பாக்கி திரைப்படம் முழுவதும் மும்பை நகரை மையப்படுத்திஉருவாக்கப்பட்டது நினைவிருக்கலாம். தற்பொழுது கொல்கத்தாவை மையப்படுத்தி...

இசைஞானி இல்லாமல் கிங் ஆப் கிங்ஸ் 2

                        இசைஞானி இளையராஜா தலைமையில் இன்று கோலாலம்பூர் மெர்டாக்கா மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. கிங் ஆப் கிங்ஸ் 2 என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சியில் தன்னால் கலந்து கொள்ள இயலாது என்று இசைஞானி அறிவித்துள்ளார்.கார்த்திக் ராஜா வழங்கும் கிங் ஆப் கிங்ஸ் 2 இசை நிகழ்ச்சி இன்று கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் இசைஞானி இளையராஜா மற்றும் யுவன்சங்கர்ராஜா ஆகியோர் முக்கியக் கலைஞர்களாக இருந்து நிகழ்ச்சியை நடத்துவார்கள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர்...

சமையலில் செய்யக்கூடாதவை… செய்ய வேண்டியவை….

சமையலில் செய்யக்கூடாதவை…* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. செய்ய வேண்டியவை….*...

வாழ்க்கை ஒரு வாய்ப்பு – தவறவிட்டுவிடாதீர்...

01. அ. வாழ்க்கை ஒரு வாய்ப்பு – தவறவிட்டுவிடாதீர்கள்.ஆ. வாழ்க்கை ஒரு சாகசம் – செயல்படுங்கள்.இ. வாழ்க்கை ஒரு சோகம் – வெளியே வாருங்கள்ஈ. வாழ்க்கை போராட்டம் – உன்னதமாக்குங்கள்.உ. வாழ்க்கை ஒரு கவிதை – பாடுங்கள்ஊ. வாழ்க்கை ஒரு சத்தியம் – சந்தியுங்கள்.எ. வாழ்க்கை ஒரு விளையாட்டு – விளையாடுங்கள்.ஏ. வாழ்க்கை ஒரு கடமை – செய்யுங்கள்ஐ. வாழ்க்கை ஒரு சவால் – மோதுங்கள்ஒ. வாழ்க்கை ஒரு கனவு – நனவாக்குங்கள்.ஓ. வாழ்க்கை ஒரு அழகு – உணருங்கள்.ஒள. வாழ்க்கை ஒரு ஆனந்தம் – அனுபவியுங்கள்.02. ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும். கவனித்தப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை. தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன.03. எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே...

திட்டமிட்டால் திகட்டாத மகிழ்ச்சி!

நிதி நிர்வாகம் என்பது வாழ்வில் முக்கியமான விஷயம். வரவு& செலவு விஷயத்தில் திட்டமிட்டுச் செயல்படுபவர்கள் என்றுமே திண்டாட வேண்டியிருக்காது. அவர்கள் திகட்டாத மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள். நிதி விஷயத்தில் நிம்மதியை அனுபவிப்பதற்கான ஆலோசனைகள் உங்களுக்கும்... கடன்களை ஒழியுங்கள் வாழ்வில் விரைவாக முன்னேற்றம் காண விரும்புபவர் முதலில் செய்ய வேண்டியது, கடன்களை ஒழிப்பதுதான். கடன்களுக்கான வட்டிக்காக நீங்கள் மாதமாதம் எவ்வளவு செலவழிக்கிறீர்கள் என்று கணக்கிட்டாலே போதும். அதிலிருந்து மீள்வதற்கான உத்வேகம் பிறந்துவிடும். கடன்களுக்கான வட்டிகளில் இருந்து உங்கள் வருவாயை மீட்டால், சேமிப்பு உயரும். எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக நீங்கள் கடன்களில் இருந்து மீள்கிறீர்களோ, அவ்வளவு விரைவாக உங்களின் பொருளாதாரம் நலம் பெறும். கடன்களை உடனே ஒழிக்க முடியாது, ஆனால் பணமும் சேமிக்க வேண்டும் என்றால், முதலில் உங்கள் கடன்களை...

நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி ?

நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய முழு விவரங்கள்... நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும் போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம். புல எண் (Survey Number) : ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk),...

இந்திய வாகனப் பதிவு எண்ணிற்கான குறியீடுக ...

இந்தியாவிலிருக்கும் மாநிலங்களிலும், மத்திய அரசின் ஆட்சிக்குட்பட்ட ஆட்சிப் பகுதிகளிலும் உள்ள போக்குவரத்து வாகனங்களுக்கு வழங்கப்படும் பதிவு எண்களில் அந்தந்த மாநிலம் அல்லது ஆட்சிப்பகுதிக்கான குறியீடு இரண்டு ஆங்கில எழுத்துக்களாக முதலில் இடம் பெறுகிறது. இங்கு ஒவ்வொரு மாநிலம் / ஆட்சிப்பகுதிக்கான குறியீடு தரப்பட்டுள்ளன. ■அருணாசலப் பிரதேசம் - AR ■அஸ்ஸாம் - AS ■ஆந்திரப் பிரதேசம் - AP ■பீகார் - BR ■கோவா - GA ■குஜராத் - GJ ■ஹரியானா - HR ■இமாசலப் பிரதேசம் - HP ■கர்நாடகம் - KA ■கேரளம் - KL ■மத்தியப் பிரதேசம் - MP ■மகாராஷ்டிரம் - MH ■மணிப்பூர் - MN ■மேகாலயா - ML ■மிசோரம் - MZ ■நாகலாந்து - NL ■ஒரிசா - OR ■பஞ்சாப் - PB ■ராஜஸ்தான் - RJ ■சிக்கிம் - SK ■தமிழ்நாடு - TN ■திரிபுரா - TR ■உத்திர பிரதேசம் - UP ■மேற்கு வங்காளம் - WB ■அந்தமான்-நிகோபார் - AN ■சண்டிகர் - CH ■தாத்ரா நாகர்ஹவேலி...

குண்டலினி ...

அது என்ன குண்டலினி..? யோக மார்கத்தில் இருக்கும் ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்தவொரு வார்த்தையை உபயோகிக்காமல் இருக்க முடியாது. அடிப்படையான உயிராற்றல் அல்லது உயிர் சக்தியை குண்டலினி என்பார்கள். யோகா மற்றும் தியானங்களில் திளைத்தவர்கள் அதன் சக்தியையும் மேன்மையையும் அறிவார்கள். பாம்பு பெரும்பான்மையான இடங்களில் வணங்கப்படுகிறது. கடவுளர்களும் பாம்புடன் இருப்பதைப் பல இடங்களில் "சிலை"ப் படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. ஏன் பாம்பு என்ற கேள்வி எழலாம். ஒரு பாம்பு அசையாமல் இருக்கும்போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர வென்று ஓடும்போதுதான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினியும் இந்தப் பாம்பு போன்றதுதான். மனிதனின் முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில்...

இனி இல்லை மன அழுத்தம்!

இந்த விஷயத்தை எப்படிச் சமாளிக்கப்போறேன்னு தெரியலையே?' என்கிற நினைப்புதான் மன அழுத்தத்தின் ஆரம்பம். ஒரு குழப்பமான மனநிலையில் இருந்து மீள்வதற்குள், அடுத்தடுத்த பிரச்னைகள் வந்து சுமையாக இறங்கும்போது, 'ஸ்ட்ரெஸ்' என்கிற மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது. இப்படி, தொடர்ந்து மன அழுத்தம் நேரும்போது, உடல் சார்ந்த பல்வேறு நோய்கள் நம்மை வாட்டி எடுக்கத் தொடங்கிவிடும்.  வேலைக்காக... குடும்பத்தையோ, குடும்பத்துக்காக... வேலையையோ விட்டுக்கொடுக்கவும் முடியாமல், பிரச்னைகளை எதிர்கொள்ளவும் தெரியாமல் மனதைக் குழப்பிக்கொள்பவர்களே இன்று அதிகம். இந்த ரீதியில் பார்த்தால், மன அழுத்தம் இல்லாத மனிதர்களே இல்லை. பள்ளி செல்லும் குழந்தைகளிடம்கூட மன அழுத்தம் புகுந்துவிட்டது என்பதுதான் வேதனை. மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் இருக்கத் தெரிந்துகொண்டால், ஆரோக்கியமாக வாழ முடியும். மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் நுட்பம்...

அன்பு எங்கே வாழ்ந்தது?!

அன்பினால் உலகையே வளைத்து விடலாம் என்று நினைத்தேன். கடைசியில் வளைந்தது. என்னவோ நான்தான். அன்பு செலுத்தியதால் துன்பத்துக்கு ஆளாகி இருக்கிறேன் என்ற புலம்பலைக் கிட்டத்தட்ட எல்லோரிட மும் கேட்க முடிகிறது. நமது துன்பத்துக்கு காரணம் அன்பல்ல.... பற்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.   அன்புக்கும் பற்றுக்கும் நிறைய வேற்றுமைகள் உண்டு. நந்தவனத்தில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அவற்றில் சில மலர்களே இறை வழிபாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மீதமுள்ளவை பதில் புன்னகையைக் கூட எதிர்பாராமல் சிரிக்கின்றன. அன்பு எதிர்பார்ப்புகள் அற்றது பற்று, எதிர்பார்ப்புகள் நிறைந்தது. நாம். அன்பு செலுத்துகிறோம் என்ற பெயரில் மூட்டை மூட்டையாக எதிர்பார்ப்புகளையும் சேர்த்துச் செலுத்துகிறோம்.  அதனால் ஏமாற்றங்களை சந்தித்துத் துவண்டு போகிறோம். அன்பு ஏமாற்றம் அடைவதில்லை. ஏனெனில் அன்பு எதையும் எதிர்பார்ப்பதில்லை....

திருமணம் முடித்த கையோடு புகுந்த வீட்டில்?

திருமணம் முடித்த கையோடு புகுந்த வீட்டில் கைதட்டல் வாங்க...... திருமண ஷாப்பிங், பியூட்டி பார்லர் என்று குஷியாக இருக்கும் புதுப்பெண்கள், அடுத்த மாதம் முதலே ஒரு குடும்பத்தைக் கட்டி ஆளும் பொறுப்புக்கு பதவி உயர்வு பெற்றுவிடுவார்கள். குறிப்பாக முன்பின் அறிமுகமில்லாத வீட்டின் நிதி நிர்வாகம் அவர்கள் கைக்கு வரும். கணவரின் சம்பளம், இன்ஷூரன்ஸ், லோன், வரி என்று அவற்றை ஆரம்பம் முதலே திறம்பட திட்டமிட்டு, புகுந்த வீட்டில் கைதட்டல் வாங்க இங்கே அணிவகுக்கின்றன அத்தியாவசியமான நிதி ஆலோசனைகள்... தனிக்குடித்தன தயாரிப்புகள்! திருமணம் முடித்த கையோடு, ஃபர்னிச்சர் முதல் பாத்திரங்கள் வரை வாங்க வேண்டியிருக்கும். தனிக்குடித்தனம் என்றால், இது கட்டாயம். இப்படி வாங்கும்போது, நீண்டகாலத்துக்கு பயன்தரும் வகையில் யோசித்து வாங்குவது நல்லது. வீட்டுக்கு வந்து போகும் பெற்றோர், உறவினர்களுக்கு ஏற்றபடியும், குழந்தைகள் வளரும்வரை...

ஏன் வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடிக்காதன்னு சொல்றாங்க தெரியுமா?

ஏன் வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடிக்காதன்னு சொல்றாங்க தெரியுமா? அக்காலத்தில் எல்லாம் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வேண்டுமானால், பெயிண்ட் பிரஷ் தான் பயன்படுத்துவோம். ஆனால் தற்போது மிகவும் எளிமையான முறையில் வீட்டில் பெயிண்ட் அடிக்க ஸ்ப்ரே போன்ற ஒரு கருவி வந்துள்ளது. இப்படி வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தால் நல்லதல்ல என்று பலர் சொல்வதை கேட்டிருப்பீர்கள். ஏன் என்று தெரியுமா? அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று வீட்டின் சுவற்றிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தால், அது சீக்கிரம் போவதோடு, உடலுக்கு தீங்கையும் விளைவிக்கும். இங்கு அந்த ஸ்ப்ரே பெயிண்ட்டை எதற்கு பயன்படுத்த வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் ஸ்ப்ரே பெயிண்ட் அடிப்பதை தவிர்த்திடுங்கள். ஏன் வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடிக்காதன்னு சொல்றாங்க தெரியுமா? * வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தால்,...

பெஸ்ட் கன்ட்ரோல் - கரப்பான்பூச்சி, எலி, பல்லி...

பெஸ்ட் கன்ட்ரோல் - கரப்பான்பூச்சி, எலி, பல்லி, எறும்பு... இல்லத்தரசிகளுக்கு தீராத தலைவலிகள் என்று பெரிய பட்டியலே இருக்கும்...  அதில் பூச்சிகள் உள்ளிட்டவற்றுக்கும் கட்டாயம் இடமுண்டு. ஆம்... கரப்பான்பூச்சி, பல்லி, எலி, எறும்பு, மூட்டைப்பூச்சி என வீட்டில் வாழும் 'ஜீவன்'களின் தொல்லை... தாங்க முடியாத தொல்லையே.  'அடச்சே... என்ன செய்தாலும் இதையெல்லாம் ஒழிக்க முடியலையே' என்று புலம்பிக்கொண்டே இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு, அவற்றை விரட்டி அடிக்கும் வழிகள்... கெட் அவுட் கரப்பான்பூச்சி! ''பொதுவாக ஈரம், இருட்டுள்ள இடங்களிலும், சமையலறையிலும் கரப்பான்பூச்சியின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். பூச்சிக்கொல்லி ஸ்பிரே உள்ளிட்ட ரசாயன பொருட்களை உபயோகித்து விரட்ட முயற்சிக்கும்போது, அந்த ரசாயனங்கள் காற்றில் கலந்து... அரிசி, மாவு, மசாலா பொருட்கள் போன்றவை திறந்திருந்தால், அதில் கலந்துவிட அதிக...

உன்னதமான உறவு!!!

ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும் ,ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு .ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும் ,கசப்பையும் ,இனிப்பாக்க வல்லது இவ் உறவு .புது புது உறவுகளை உருவாக்க கூடியது .இதை விட புனிதமான உறவும் இல்லை நெருக்கமான உறவும் இல்லை, இது ஒரு தெய்விகமான உறவு . இன்றைய காலகட்டத்தில் நமது அறியாமையால், நமக்கு நாமே ஏற்ப்படுத்தி கொள்கின்ற பொருளாதார சிக்கல்களினால், ஆளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளால் , தனது ஆதிக்கமே நடைபெற வேண்டுமென்ற தன்முனைப்பால் உண்மையான உறவுகள் பல உடைந்து போகின்றது . ஒருவரின் பெருமையை ஒருவர் உணராத சிறுமையால் இன்று பரவலாக பல இல்லங்களில் கணவன் மனைவி உறவு தன் புனிதத்தை இழந்து புழுதியாகிவிட்டது ,இந்த உறவின் வீழ்ச்சியால் தான் உருவாகிறது ,சமூகதின் அத்தனை வீழ்ச்சிகளும் .உடல்களை பகிர்ந்து கொண்ட அளவிற்கு உள்ளங்களை பகிர்ந்து...

நினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன?

சென்ட்டர் ஃபர் சிஸ்ட்டம்ஸ் நியூராலஜி, பாஸ்ட்டன் பல்கலைக்கழகத்தில் உள்ளது. அங்கே ஆராய்ச்சி செய்யும் லாங்குயன் லின் மற்றும் ஜோ டிரெய்ன் என்ற இரு நரம்பியல் வல்லுநர்கள், அண்மையில் வெளியிட்டிருக்கும் ஆராய்ச்சி முடிவுகள் மூளையில் எப்படி நினைவுகள் பதிவாகின்றன என்பதை ஓரளவுக்கு விளக்குவதாக உள்ளது. நரம்புக்கூட்டத்தின் சமநேர மின்துடிப்பே நினைவுகள். நேரடியாக மின் முனைகளை எலிகளின் மூளையில் பதித்து, அவை இயல்பாக நடமாடும்போதே நினைவுகள் எப்படி பதிகின்றன என்பதை நவீன கருவிகள் கொண்டு ஆராய்ந்தனர். தக்க புள்ளியியல் கணக்குகளைப் பயன்படுத்தி தகவல்களை தொகுத்திருக்கின்றனர். நரம்பு செல்களின் வழியாகப் பாயும் மின்சார ஒட்டம்தான் நினைவுகள் என்பதை பொதுவாக எல்லோருமே ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின்படி ஒரே சமயத்தில் துடித்து செயல்படும் நரம்பு செல் கூட்டங்களே குறிப்பிட்ட நினைவுகளுக்குக் காரணம் அவற்றில்தான் நினைவுகள்...

உலகில் மிகவும் குட்டியாக இருக்கும் 14?

உலகில் மிகவும் குட்டியாக இருக்கும் 14 உயிரினங்கள்!!! இந்த பெரிய உலகில் வாழும் நாம், பெரியது முதல் சிறியது வரை நிறைய உயிரினங்களைப் பார்த்திருப்போம். அதிலும் ஒரு சாதாரண அளவில் இருக்க வேண்டிய உயிரினமானது அளவுக்கு அதிகமாக பெரிய உருவத்தில் காணப்பட்டால், உலகில் உள்ளோரால் அதிசயமாக பார்க்கப்படுகின்றனவோ, அதேப் போல் மிகவும் சிறிய அளவில் காணப்பட்டாலும் அதிசயிக்கத்தக்கவையே. ஆனால் ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால், அப்படி சிறியதாக இருக்கும் உயிரினங்களின் வாழ்நாள் மிகவும் குறைவாகவே இருக்கும். அதுமட்டுமின்றி இப்படி ஒரு சாதாரண உயிரினமானது மிகச்சிறிய அளவில் இருப்பதற்கு காரணம் பிறப்பு குறைப்பாடுகள் தான்.இங்கு தமிழ் போல்ட் ஸ்கை, வளர்ச்சி குறைபாடு மற்றும் பிறப்பு...

குளிர்காலத்தில் மரச்சாமான்களில் பூஞ்சை...

குளிர்காலத்தில் மரச்சாமான்களில் பூஞ்சை பிடிக்காமல் இருக்க சில டிப்ஸ்... குளிர்காலங்களில் ஏற்படும் ஒரு பெரிய தொல்லை தான், மரச்சாமான்களில் பூஞ்சை படிவது. ஆம், இந்த காலங்களில் வீட்டில் அதிகப்படியான ஈரப்பசை இருப்பதால், மரச்சாமான்களில் ஈரமானது தங்கி, பூஞ்சைகளை படிய வைக்கின்றன. இப்படி மரச்சாமான்களில் பூஞ்சை இருந்தால், அது ஆங்காங்கு வெள்ளை வெள்ளையாக காணப்படுவதோடு, மரச்சாமானின் அழகு மற்றும் தரத்தை கெடுத்துவிடுகின்றன. எனவே வீட்டில் மேஜை மற்றும் நாற்காலிகளில் மரத்தால் செய்யப்பட்டதாக இருந்தால், சரியாக பராமரிப்பது அவசியமாகும். அதுமட்டுமின்றி, நிபுணர்கள் வீட்டில் மரச்சாமான்கள் ஈரமாக இருந்தால், அவற்றை வெயிலில் நீண்ட நேரம் உலர வைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். மேலும் மரச்சாமான்களுக்கு போதிய வெயில் கிடைக்காவிட்டால், மீண்டும் பூஞ்சை பிடிக்க ஆரம்பித்துவிடும் என்றும் கூறுகின்றனர். குளிர்காலத்தில் மரச்சாமான்களில்...

இந்தியாவில் இன்னமும் சவாலாகவே இருக்கும் ?

இந்தியாவில் இன்னமும் சவாலாகவே இருக்கும் வரதட்சிணை.... இந்தியாவில் பெண்ணுக்கு சம உரிமை, எல்லா துறைகளிலும் பெண்களின் பங்கு, அரசியலில் பெண்களின் பங்கு என எவ்வளவோ மாறிவிட்டாலும், இன்னமும் வரதட்சிணை என்பது மிகப்பெரிய சவாலாகவே உள்ளதாக இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி ஒன்று கூறியுள்ளது. இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் பெண்களை தரம் தாழ்த்தும் வகையிலான வரதட்சிணை இன்னமும் பல பகுதிகளில் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது. வரதட்சிணையும், அதனால் இளம் பெண்கள் சந்திக்கும் கொடுமைகளும், இதற்கெல்லாம் ஆணி வேராக பல வீடுகளில் மாமியாரே இருப்பதும் இன்னமும் 50 சதவீதம் அளவுக்கு நடந்து கொண்டுதான் உள்ளது என்கிறது அந்த ஆய்வு. கேரளாவில் தான் ஆண்களை விட பெண்கள் விகிதம் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் மட்டும் அல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளில் இன்னமும் வரதட்சிணை பிரச்னை உள்ளது. ஆனால், இந்த பாதிப்பு...

சீனாவில் பிரபலமாகும் புதியவகை ஷால்!

சீனாவில் அறிமுகம் ஆகியிருக்கும் புதிவித ஷால் இதுதான்.  இந்த ஷால் டு இன் ஒன்.  ஷால் மறைக்க வேண்டியதையும் மறைக்கும். அதே நேரத்தில் குழந்தையையும் சுமக்கும். இப்போது இந்த ஷால் சீனப்பெண்கள் இடையே மிகவும்பிரபலம் ஆகி வருகிறது. இதன் விலை $69 ...

ஆனந்தம் என்பது எது தெரியுமா?

* தீமையை நன்மையால் வெல்ல வேண்டும். கருமியை ஈகையால்  வெல்ல வேண்டும். பொய்யனை உண்மையால் வெல்ல வேண்டும். பகைவனைஅன்பினால் வெல்ல வேண்டும். இவையே பண்புடையோரின்  நெறிமுறையாகும்.  * பிறர் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி அவர்களுடைய  குறைகளையே காணுபவர்கள், பிறரைப் பற்றி புறஞ்சொல்லும்  குணமுடையவர்கள், இறுதியில் தங்களுடைய குறைகளை திருத்த  முடியாமல் தவிப்பார்கள்.  * உண்மையில் ஆனந்தம் என்பது எது தெரியுமா? உங்களால்  இயன்ற நல்ல செயல்களை செய்வதில் ஆர்வத்தை வளர்த்துக்  கொள்ளுங்கள். அதன் மூலம் கிடைக்கும் ஆனந்தத்தை இழக்க  மாட்டீர்கள்.  * மனிதன் பழக்கத்திற்கு அடிமையானவன். ஒருமுறை செய்த  செயலைத் திரும்ப திரும்பச் செய்யும் தன்மை கொண்டவன். ஆதலால், பாவம் தரும் செயல்களை செய்வதற்கு அஞ்சுங்கள். இல்லாவிட்டால், பழக்கத்தினால் மீண்டும் மீண்டும் செய்ய  ஆரம்பித்து...

வெளிநாட்டுக் கல்வி - கொஞ்சம் திட்டமிட்டால் போதும்...

வெளிநாட்டுக் கல்வியானது பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்று நினைத்தது அந்தக் காலம். கொஞ்சம் திட்டமிட்டால் போதும்; படிப்பு தகுதிகொண்ட நடுத்தர குடும்பத்து மாணவன்கூட வெளிநாடு சென்று படிக்க முடியும் என்பது இந்தக் காலம். என்றாலும், இந்த உண்மை பலரையும் சென்று சேராததற்கு காரணம், அதுகுறித்த விழிப்பு உணர்வு பரந்த அளவில் மக்களிடம் சென்று சேராததே. வெளிநாட்டில் கல்வி வாய்ப்புகள் எப்படி உள்ளது? என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்? ''இந்தியாவில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இருந்தாலும், உலகளவில் டாப் 100 கல்வி நிறுவனங்களில் நம் நாட்டைச் சேர்ந்தவை எதுவும் இல்லை. வேலையுடன் கூடிய கல்வி, உடனடி வேலை வாய்ப்பைத் தரும் கல்வி என்பது இந்தியாவில் குறைவுதான். ஆனால், அயர்லாந்து போன்ற மிகச் சிறிய மேற்கத்திய நாடுகளில்கூட கல்வி, வேலை வாய்ப்போடு பிரிக்க முடியாதவாறு உள்ளது. இந்தியாவில்...

நச்சு எண்ணங்கள்?

ஒரு சில நச்சு எண்ணங்களை சுலபமாக அடையாளம் காண முடியாது. அவை எங்கும் பரவிக் கிடக்கும். மிகச் சாவகாசமாக வேலை செய்யும்.அவற்றுக்கு இரையாகும் மனிதர்கள் அவற்றின் பாதிப்பை உணரும்போது ஏற்கனவே காலம் கடந்து போயிருக்கும்.  அவை...... குமுறல்:  நாம் சிறுமைப்படுத்தப் பட்டு விட்டதாக எண்ணும் போதும்,நமது உறவு,உடமைகளை ஒருவர் அவமானப் படுத்தியதாக எண்ணும்போதும் நமக்குள் ஏற்படும் எரிச்சல்தான் குமுறல்.குமுறல் நமது உள் மனதில் அடியில் தங்கிப் புற்று நோய் போல வேலை செய்கிறது. அது படிப்படியாக வளர்ந்து மேற்கொண்டு மனம் புண்படுவதைத் தவிர்க்கவும்,மென்மையான உள்ளங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவும்,தன்னிரக்க வடிவெடுத்து நாளாவட்டத்தில் வாழ்க்கையிலிருந்து நம்மை ஒரேயடியாக ஒதுங்கிக் கொள்ளச் செய்யும்.அல்லது படு வேகமாகப் பரவும் குமுறல்,கோபமாகி ,கோபம் தாங்க முடியாத வெறுப்பாகி,வெறுப்பு வன்முறையாகி,சில சமயங்களில்...

நான் நல்ல அழனும்டா.. அதுக்காக 'சியர்ஸ்'டா...

நான் நல்ல அழனும்டா.. அதுக்காக 'சியர்ஸ்'டா... குடிக்க இப்படியும் காரணம் சொல்றாங்கய்யா...! உங்களுக்கு சரக்கு அடிக்க ரொம்ப பிடிக்குமா? அப்படி சரக்கு அடித்த பின்னர் நீங்கள் செய்த அட்டகாசங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இல்லையா.. அப்படியெனில் இந்த கட்டுரையைப் படித்து பாருங்கள். பொதுவாக சரக்கு அடித்தவர்களுக்கு, சரக்கு அடித்தப் பின்பு செய்யும் லூட்டிகள் எதுவும் ஞாபகத்தில் இருக்காது. ஆனால் உங்களுக்கு சரக்கு அடித்த பின்னர் ஆண்கள் செய்யும் லூட்டிகள் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியானால், தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக சரக்கு அடித்தப் பின்னர், ஆண்கள் செய்யும் சில லூட்டிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்துப் பாருங்கள். நான் நல்ல அழனும்டா.. அதுக்காக 'சியர்ஸ்'டா... குடிக்க இப்படியும் காரணம் சொல்றாங்கய்யா...! * சில ஆண்கள் சரக்கு அடித்தப் பின்னர் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுவார்கள்....

சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்?

சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்? சின்ன வயசுல, தூக்கத்துல இருக்கும்போது நாம பண்ண சில சேட்டைகளப் (?) பத்தி, அடுத்த நாள் காலையில நம்ம குடும்பத்தாரோ/பள்ளி, கல்லூரியில கூட தங்கியிருந்த பசங்களோ சொல்லி கிண்டல் செய்யும்போது, “ஏய் நான் ஒன்னும் அப்படியெல்லாம் பண்ணல, சும்மா பொய் சொல்லாதீங்கப்பா”ன்னு சொல்றவங்ககிட்ட வாய்ச்சவடால் விட்டு சமாளிச்சிடுவோம் (?). ஆனா, கொஞ்ச நேரம் கழிச்சி, தனியா நாமளே யோசிச்சுப் பார்த்துட்டு, “ஐய்யீய்ய…..நேத்து தூங்கும்போது, நாம இப்படியா செஞ்சிட்டோம்?!”னு நம்மள நாமே நொந்துக்கிட்ட அனுபவம், கிட்டத்தட்ட நம்ம எல்லாருக்குமே இருக்கும்னு நெனக்கிறேன்?! அது என்ன சேட்டைன்னு கேட்டா, பினாத்துறது, பாட்டு பாடுறது (ரெண்டு பாட்டுமேதான்?!), புறண்டு விழுந்து விடுவது, தூக்கத்துலேயே எழுந்து வெளியே நடந்து போறதுன்னு இப்படி நிறைய சொல்லலாம். (எதாவது விட்டுப் போயிருந்தா மறுமொழியில கொஞ்சம் சொல்லிட்டுப்...

வீதி விபத்துக்கள் ஏற்படும் முக்கிய காரணங்கள் ?

1. மது அருந்துதல் எத்தனையோ அப்பாவி உயிர்கள் பல கொடிய மது அருந்திகளால் தங்கள் இரத்தத்தைத் தானம் செய்கிறார்கள். குடி போதையில் கண்ணு முன்னு தெரியாமல் வண்டியை ஓட்டுகிறார்கள். இதனால் பல விபத்துகள் ஏற்படுகின்றன எனவும் உங்களுக்கும் தெரியும். சரி இப்படியும் சொன்னால் உங்களுக்கு விளங்கவில்லை என்றால் "தல" சொன்ன மாதிரி "Light ஐ போட்டு வண்டி ஒட்டு' Light ஆக போட்டு வண்டி ஓட்டாதே..." சரி இந்தப் பதிவை வாசிக்கும் நீங்கள் மது அருந்தியாகவிருந்தால் மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அடுத்ததாக பெண்கள் வீதிகளில் குட்டைப் பாவாடை அணிந்து செல்வதை வாயைப் பிளந்து பார்க்கும் ஆண்கள் (ஒரு சில ஆண்கள்) . நான் ஆண்களையும் குறை சொல்ல மாட்டேன் , பெண்களையும் குறை சொல்ல மாட்டேன்... வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் கவனமாக பார்த்து வண்டி ஓட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்பொது...

பிறந்தவுடன் குழந்தைகள் எதற்காக அழுகிறது?

இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு உண்மையான காரணம் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. சரி அப்படி எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது காரணங்கள் என்ன? இதோ தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம். இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத்துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால் தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம். அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக் கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை...

டோங்கிரியா கோண்ட் பழங்குடியினரின் போராட்டமும் வெற்றியும்!!!

 ஒடிஷா மாநிலத்தில் நியமகிரி மலைப்பகுதியில் வாழும் டோங்கிரியா கோண்ட் (Dongria Kondh) பழங்குடியினர் தங்கள் மலைகளில் வேதாந்தா நிறுவனம் பாக்சைட் தாதுவினை வெட்டி எடுக்க திறந்தவெளி சுரங்கம் அமைக்கக்கூடாது என்று பல வருடங்களாகப் போராடி வருகின்றனர். இந்திய உச்ச நீதி மன்றம் டோங்கிரியா கோண்ட் கிராம சபைகளின் சம்மதமும் அனுமதியும் இல்லாமல் வேதாந்தா தன் சுரங்கத்தை அமைக்க முடியாது என்று இந்த வருடம்  ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்பிற்கும் பாராட்டுக்கும் உரியது; இந்திய பழங்குடிகளுக்கு இயற்கை வளங்களின் மேல் உள்ள பாரம்பரிய உரிமைகளுக்கு வலு சேர்க்கக்கூடியது; கிராமசபை போன்ற அடிமட்ட ஜனநாயக அமைப்புகளின்...

சிலிண்டரின் உள்ளே இருக்கும் கேஸ் ஏன் பற்றிக் கொள்வதில்லை?

கேஸ் (gas) திறந்து பற்ற வைத்த உடனே அடுப்பு நமது உபயோகத்துக்கு தயாராகிவிடுகிறது. வெளியே வரும் கேஸ் மட்டும் ஏன் எரிகிறது? சிலிண்டரின் உள்ளே இருக்கும் கேஸ் ஏன் பற்றிக் கொள்வதில்லை? நாம் சமையலுக்கு உபயோகிக்கும் கேஸ் என்-பியூட்டேன் (N-BUTANE) என்ற எரிபொருள். எந்த ஒரு எரிபொருளாக இருந்தாலும், அது எரிய வேண்டுமானால் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று அந்த எரிபொருள் தான் பற்றிக்கொள்ளும் வெப்பநிலையை (Ignition point) அடைய வேண்டும்.இரண்டு எரிவதற்குத் தேவையான பிராண வாயு, ஆக்சிஜன் போதுமான அளவில் கிடைக்க வேண்டும். நமது கேஸ் அடுப்பில் என்ன நிகழ்கிறது? சமையல் வாயு பற்றிக்கொள்ளும் வெப்பநிலை 360 oC ஆகும். சிலிண்டர் வால்வைத் திறந்ததும் கேஸ் வெளியேறி...

வேறு வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் இனிரூ.26 கட்!

வேறு வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் இனி ரூ.26 கட்! வேறு வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவை மேல் பணம் எடுத்தால் ஒரு தடவைக்கு தலா ரூ.26 பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் கட்டணமின்றி மாதத்துக்கு 5 தடவை பயன்படுத்துவதை 3 ஆக குறைக்க வங்கிகள் ஆலோசித்து வருகின்றன. பெங்களூருவில் சமீபத்தில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக் கொண்டிருந்த வங்கி பெண் அதிகாரி சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார். இதையடுத்து ஏ.டி.எம்.களில் பாதுகாப்பை பலப் படுத்த போலீசார் உத்தர விட்டுள்ளனர். வேறு வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் இனி ரூ.26 கட்! தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள், ஏ.எம்.டி.களில் பாதுகாப்பை செய்ய கால அவகாசத்துடன் ‘கெடு' விதித்துள்ளன. இதனால் காவலாளியை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளன. இது வங்கிகளுக்கு கூடுதல்...

ஜாதி சான்றிதழ் வாங்குவது எப்படி...?

சாதிகள் இல்லையடி பாப்பா என்போம், ஆனால்... சாதி சான்றிதழ் கேட்போம்.... வருமானச் சான்றிதழ் போலவே சாதிச் சான்றிதழும் பெரும்பாலும் மாணவர்களுக்கும், அரசுப் பணியில் சேர்பவர்களுக்கும் மட்டுமே நடைமுறையில் தேவைப்படுகிறது. இச் சான்றிதழும் ஒரு தற்காலிகச் சான்றிதழே ஆகும். எவரும் சாதியை மாற்றிக்கொள்ள முடியாது என்ற போதிலும், வகுப்பு என்பது மாற வாய்ப்பு இருக்கிறது. அதாவது, ஒருவர் பிற்பட்ட வகுப்பில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர், தனது மதத்தை மாற்றிக்கொண்டால், வேறு வகுப்பிற்குச் சென்றுவிடுவார். இச்சான்றிதழ் தமிழில் வகுப்புச் சான்றிதழ் என்றுதான் அழைக்கப்படவேண்டும். ஆனால், சாதிச் சான்றிதழ் என்றே அழைக்கப்படுகிறது. எனவே, சாதியை மாற்றமுடியாவிட்டாலும், வகுப்பு என்பது நிலையானது அல்ல. எனவே, சாதிச் சான்றிதழும் ஒரு நிலையான சான்றிதழ் அல்ல. இருப்பினும் மாணவர்கள் தங்கள் கல்வித் தேவைகளுக்காக ஒருமுறை...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top