.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 30 October 2013

சத்தான மாவிலே அத்தனையும் செய்யலாம் செம ருசியாக!

சத்துமாவு தயார் செய்ய…  தானியங்கள் அனைத்தும் ஒரே அளவு எடுத்துக்கொள்ளவும். கம்பு, கேப்பை (கேழ்வரகு), வெள்ளைச் சோளம், தினை, கோதுமை, புழுங்கலரிசி, பச்சரிசி சிறு தானியங்கள் அனைத்தையும் தனித்தனியாக மண் நீக்கி, கழுவி, வெயிலில் உலர்த்தி, வறுத்து ஆற வைத்து, ஒன்றாகக் கலந்து மில்லில் நைசாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் பொட்டுக்கடலை, நிலக்கடலையும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இந்த மாவு சத்துமாவு கஞ்சிக்கு மட்டும் பயன்படுத்த என்றால், இதனுடன் நாலுக்கு ஒரு பங்கு என முந்திரி, பாதாம் பருப்புகளும், வாசனைக்குத் தேவையெனில் சிறிது ஏலக்காயும் சேர்க்கலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள மற்ற வகை பதார்த்தங்கள் செய்ய மு.பருப்பு, பா.பருப்பு, ஏலக்காய் சேர்க்க வேண்டியதில்லை.1. சத்துமாவு கஞ்சி  என்னென்ன தேவை? சத்துமாவு, பனங்கற்கண்டு அல்லது வெல்லம், பால். எப்படிச் செய்வது? சத்துமாவில், தூசி நீக்கிய வெல்லம்...

இறந்தும் வாழ்கிறார்கள் பொதுநலவாதிகள்..!

உறவுகள் மட்டுமல்ல ஊரும் மரணத்திற்கு அழுதால் வாழ்வாங்கு வாழ்ந்துள்ளார் !-—————–-இறப்பு இல்லை இறந்தும் வாழ்கிறார்கள் பொதுநலவாதிகள் !-——————-வராது நோய் பசித்த பின் புசித்தால் !-———————-உச்சரிக்க வேண்டாம் முன்னேற்றத்தின் எதிரிகள் முடியாது தெரியாது நடக்காது !-———————- -நாளை என்று நாளைத் தள்ளிட நாள் உன்னைத் தள்ளும் !-——————-உடலை உருக்கும் உருவமில்லா நோய் கவலை !-——————–-பெறுவதை விட கொடுப்பதே இன்பம் பொதுநலம் !பெறுவதை விட கொடுப்பதே இன்பம் பொதுநலம் ...

உலகில் உள்ள சில விசித்திரமான அடிமைத்தனங்கள்!!!

உலகில் உள்ளோர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அடிமைத்தனங்கள் இருக்கும். அதில் அடிமைத்தனம் என்று சொல்லும் போமு, பெரும்பாலும் அனைவரது நினைவுக்கும் வருவது புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், வீடியோ கேம்ஸ் விளையாடுதல் போன்றவை தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் உலகில் இன்னும் சில விசித்திரமான, அதிசயப்படக்கூடிய வகையில் சில அடிமைத்தனங்களும் உள்ளன.அவற்றில் சிலவற்றைக் கேட்டால், அருவெறுப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கும். ஆனால் அவற்றையும் மக்கள் அன்றாடம் மேற்கொள்கின்றனர். மேலும் அத்தகைய அடிமைத்தனத்தால், இத்தனை நாட்கள் உயிர் வாழ்கின்றனரா என்று சற்று யோசித்தால், ஆச்சரியப்படக்கூடிய வகையில் தான் இருக்கும்.இப்போது அவற்றில் அந்த மாதிரியான சில விசித்திரமான அடிமைத்தனங்களைப் பற்றி கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து பாருங்களேன்...சிறுநீர் அடிமைகேர்ரி என்பவருக்கு சிறுநீரின் சுவை...

ஜானகியுடன் பாடிய தனுஷ்!

வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். இப்படத்தில் அனிருத் இசையில் தனுஷுடன் ஜானகியம்மா மெலடி பாடல் ஒன்றைப் பாடியுள்ளாராம். தற்போது 75 வயதாகும் ஜானகியம்மா கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாடும் பாடல் இது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கி வருகிறார்...

கனவுகளிடம் கவனமாக இருங்கள்!

நாம் எதிர்காலத்தைப் பற்றி காணும் கனவுகளை நனவாக்குவதற்கு கடின முயற்சியும் அவசியம். எனவே, கனவை நனவாக்குவதில் கவனமாக இருக்க வேண்டும்.வாழ்நாளை யாராலும் அதிகப்படுத்த முடியாது. ஆனால் அர்த்தப்படுத்த முடியும். மேலும் ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழப் போகிறார் என்பது தெரியாது, என்றாலும் நம்பிக்கையோடு எதிர்காலத்திற்கான கனவுகளை வளர்க்கிறோம். அவ்வாறன இலட்சியக் கனவுகளை எவ்வளவு விரைவில் நனவுகளாக மாற்றப் போகின்றோம் என்பதுதான் முக்கியம்.கனவு காண்பதிலேயே வாழ்நாளைக் கழித்து விடாமல் உங்களுக்குத் தேவையானது எது? தேவையற்றது எது? என்பது குறித்து ஒரு தெளிவான தீர்மானம் செய்து கொள்வது மிக அவசியம்.நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்களுடைய கனவுகளுக்கு மெருகேற்றும் விதமாக இருக்க வேண்டும். அத்தோடு, ஒவ்வொரு நாளும் நீங்கள் உங்களுடைய கனவை நனவாக்கும் நோக்கில்  முன்னோக்கியே செயல்பட வேண்டும். சிலர் ஆண்டுதோறும் சில குறிக்கோள்களை...

Xolo Q900 ஸ்மார்ட்போன் ரூ.12.999 விலையில் அறிமுகம்

Xolo சமீபத்தில் Q தொடர் வரிசையில் Q900 ஸ்மார்ட்போன் ரூ.12.999  விலையில் வெளியிட்டுள்ளது. புதிய Xolo ஸ்மார்ட்போன் Q ஸ்மார்ட்போன் தொடர் வரிசையை விரிவுபடுத்தி ஏற்கனவே Xolo Q700, Xolo Q600, Xolo Q1000, Xolo Q1000S, மற்றும் Xolo Q800 போன்ற ஃபோன்களை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் Quad-core ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.Xolo Q900: 312ppi பிக்சல் அடர்த்தி அதிகம் கொண்ட 4.7-இன்ச் ஹச்டி (720x1280 பிக்சல்) டிஎஃப்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது மற்றும் இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) செயல்பாடுகள் ஆதரிக்கின்றது. இது BSI சென்சார் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற ஆட்டோ...

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற்றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலக வாழ்க்கையை பார்க்கும் போது, சாதாரண விஷயங்களில் உள்ள நிறைய உண்மைகள் விசித்திரமாகவே கருதப்படுகின்றன. மேலும் அத்தகைய உண்மைகளை கேட்டால், பலரும் வாயில் கை வைத்து 'அப்படியா!!!' என்று ஆச்சரியமாக கேட்பார்கள். சொன்னால் கூட நம்பமாட்டார்கள். உதாரணமாக, உலகிலேயே வெடிகுண்டு வெடித்தாலும் இறக்காத பூச்சி கரப்பான்பூச்சி என்று தெரியும். ஆனால் அந்த பூச்சி தலை இல்லாமல் கூட உயிருடன் இருக்கும் என்று சொன்னால் ஆச்சரியம் தானே.இது போன்று நிறைய விசித்திரமான சில உண்மைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் வேறு ஏதாவது இயற்கையில் உள்ள சில விசித்திரமான உண்மைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சரி, அந்த விசித்திரமான உண்மைகளைப் பார்ப்போமா!!!லிப்ஸ்டிக்பெண்களுக்கு லிப்ஸ்டிக் என்றால்...

கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்காதீங்க.

பேஸ்புக் என்பது மிகப்பெரிய மீடியாவாக மாறிவிட்டது. பேஸ்புக்கில் பகிரும் சில செய்திகள் காட்டுத்தீப்போல பரவிவிடும். அதுவும் அந்த செய்திகள் உண்மையா இல்லை வெறும் வதந்தியா என்றெல்லாம் யோசிப்பதற்கு நேரமில்லாமல் நாமும் பகிர்ந்துவிடுகிறோம். இதில் நாம் பார்க்கப் போவது "டூத்பேஸ்ட் கலரும், தவறான விளக்கமும்"பொதுவாக நாம் வாங்கும் டூத்பேஸ்ட்களில் சதுர வடிவ நிறங்களில் குறியீடு இருக்கும். பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு போன்ற கலர்களில் இருக்கும்.இவற்றுக்கு கொடுக்கப்படும் தவறான விளக்கம்:பச்சை - இயற்கைநீளம் - இயற்கை + மருத்துவ குணம்சிவப்பு - இயற்கை + ரசாயன கலவைகருப்பு - சுத்தமான ரசாயன கலவைஉண்மை என்ன?இவ்வாறான நிறங்கள் உண்மையில் Packaging Process-காக பயன்படுகிறது. இந்த குறியீட்டுக்கு "Eye Mark அல்லது Eye Spot" என்று பெயர். இவைகள் டூத்பேஸ்ட் ட்யூபை உருவாக்கும் நவீன பேக்கேஜிங் இயந்திரங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.இவைகள்...

மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்!

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம்.  அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.1.        போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.2.        நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.3.        உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.4.        பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல5.        பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல6.     சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?7.      அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான்....

நம்மை அறியாமலேயே தினமும் பேசும் சமஸ்க்ருத வார்த்தைகள் சில!

அஅகங்காரம் - செருக்குஅக்கிரமம் - முறைகேடுஅசலம் - உறுப்புஅசூயை - பொறாமைஅதிபர் - தலைவர்அதிருப்தி - மனக்குறைஅதிருஷ்டம்- ஆகூழ், தற்போதுஅத்தியாவசியம் --இன்றியமையாததுஅநாவசியம் -வேண்டாததுஅநேகம் - பலஅந்தரங்கம்- மறைபொருள்அபகரி -பறி, கைப்பற்றுஅபாயம் -இடர்அபிப்ராயம் -கருத்துஅபிஷேகம் -திருமுழுக்குஅபூர்வம் -புதுமைஅமிசம் -கூறுபாடுஅயோக்கியன் -நேர்மையற்றவன்அர்த்தநாரி -உமைபாகன்அர்த்த புஷ்டியுள்ள -பொருள் செறிந்தஅர்த்தம் -பொருள்அர்த்த ஜாமம் - நள்ளிரவுஅர்ப்பணம் -படையல்அலங்காரம் -ஒப்பனைஅலட்சியம் - புறக்கணிப்புஅவசரமாக - உடனடியாக, விரைவாகஅவஸ்தை - நிலை, தொல்லைஅற்பமான - கீழான, சிறியஅற்புதம் - புதுமைஅனுபவம் - பட்டறிவுஅனுமதி - இசைவுஆஆச்சரியம் - வியப்புஆக்ஞை - ஆணை, கட்டளைஆட்சேபணை - தடை, மறுப்புஆதி - முதல்ஆபத்து - இடர்ஆமோதித்தல் - வழிமொழிதல்ஆயுதம் - கருவிஆரம்பம் -தொடக்கம்ஆராதனை -வழிபாடுஆரோக்கியம் - உடல்நலம்ஆலோசனை - அறிவுரைஆனந்தம்...

இப்படியும் சில பழமொழிகள்!

* எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும் * ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும் * ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும் * கார் ஓட டயரும் தேயும் * சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு * சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை * தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும் * தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும் * துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பெரியது * பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல * மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும் * முடியுள்ள போதே சீவிக்கொள் * பழகின செறுப்பு காலை கடிக்காது * மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி * ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்ன...

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது.2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது.3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது.4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது.5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது.6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது.7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது.8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும்...

திருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன் என்று தெரியுமா?

பழங்காலத்தில் மெட்டி அணிவது ஆண்களின் அடையாளமாகவே இருந்து வந்துள்ளது. பின்னாளில் அந்த மெட்டி பெண்களின் சொத்து ஆகிவிட்டது. அதிலும் திருமணமான பெண்கள் தான் மெட்டி அணிய வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல, அதற்கு பின்னால் உள்ள அறிவியலையும் இங்கே கொடுத்துள்ளோம். பெரும்பாலான திருமணமான இந்திய பெண்கள் கால்களில் மெட்டி அணிவார்கள். மெட்டி அணிவது திருமணம் ஆனதற்கு அடையாளம் மட்டுமல்ல, அது அறிவியலும் கூட. பெண்கள் இரு கால்களிலும் மெட்டி அணிவதால், அவர்களின் மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் செயல்படும் என்று இந்திய வேதங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மெட்டி அணிவது திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் நல்ல நோக்கத்தை அளிக்கிறது....

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான்

1.விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்று கண்ணாடியில் பார்க்கும் போது.2.இது வரை ஆண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு, இருபாலர் படிக்கும் கல்லூரியில் நுழைந்ததும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் பெண்களை ஓரக்கண்ணில் பார்க்கும் போது.3.பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல், தான் தானாகவே இருக்கும் போது.4.எவ்வளவு முரடனாக இருந்தாலும் , தன் வீரத்தையும் திமிரையும் ஓரங்கட்டிவிட்டு , பெண்ணிடம் பணிவாய் பேசும் போது.5. சொந்த உழைப்பில் கிடைத்த தன் முதல் மாத சம்பளத்தை கை நீட்டி வாங்கும் போது.6.காத்திருக்க முடியாதென்றுச் சொன்ன காதலியை தன் குடுபத்திற்காக தியாகம் செய்யும் போது.7.தன் தங்கைக்கு தான் இன்னொரு தந்தை என்பதை உணரும் போது.8.இரு சக்கர வண்டியை உர்ர் உர்ர்ர்ர்ர்ர்ர்ர் என உறுமாமல், சிக்னலில் வண்டியை நிறுத்தி விட்டு கண்ணாடியில் தலை முடியை சரி செய்யும் போது.9.வேட்டியை...

குதிகால் வெடிப்பை போக்க சில டிப்ஸ்!

எலுமிச்சை மற்றும் உப்பு ஒரு அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் எலுமிச்சை சாறு, உப்பு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, அதில் பாதங்களை 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு குதிகாலைத் தேய்க்க வேண்டும். இந்த முறையை தினமும் இரவில் தூங்கும் முன் செய்தால், குதிகால் வெடிப்பில் இருந்து விடுபடலாம். வெஜிடேபிள் ஆயில் பாத வறட்சியால் ஏற்படும் குதிகால் வெடிப்புகளை நீக்க, கால்களை நன்கு சுத்தமாக கழுவி, பின் பாதத்தில் வெஜிடேபிள் எண்ணெய் கொண்டு சிறிது நேரம் மசாஜ் செய்து, கால்களுக்கு சாக்ஸ் போட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்து கால்களை கழுவ வேண்டும். இதனை தினமும் பின்பற்றி வந்தால்,...

உலகின் முதல் பாஸ்வேர்டு!

  பாஸ்வேர்டு தான் எத்தனை சிக்கலானதாக இருக்கிறது.இணையத்தில் ஒவ்வொரு சேவைக்கும் ஒரு பாஸ்வேர்டை தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது.சரி பொதுவான ஒரு பாஸ்வேர்டை வைத்து கொள்ளலாம் என்றால், எல்லாவற் றுக்கும் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்துவது ஆபத்தானது என்கின்றனர்.அதே தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பாஸ்வேர்டும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றால் நல்ல பாஸ்வேர்டுக்கான இலக்கணத்திற்கு உட்பட்டிருக்க வேன்டும். இவற்றை அலட்சியம் செய்யலாம் என்று பார்த்தால் அவப்போது படிக்கும் பாஸ்வேர்டு திருட்டு பற்றிய செய்திகள் கலக்கத்தை தருகின்றன. இப்படி பாஸ்வேர்டுகள் பாடாய் படுத்தும் போது,யார் தான் இந்த பாஸ்வேர்டை கண்டுபிடித்ததோ என்று கேட்கத்தோன்றும்...

வயதானாலும் அழகைக் கூட்டலாம்!

தலைப்பைப் பார்த்ததும், ‘இதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை’ என நினைக்கவேண்டைம். 25 பிளஸ்சில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும்  அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இவை. முதுமைத் தோற்றத்துக்கு எதிரான உங்கள் போராட்டமும் முயற்சிகளும், 25 வயதிலிருந்தே தொடங்கப்பட வேண்டியது அவசியம்.20களின் தொடக்கத்தில்,  சருமத்தின் செல்கள், மீள்தன்மையையும் ஈரப்பதத்தையும் இழக்கத் தொடங்கும். சருமத்தில் அது வரை இருந்த மிருதுத்தன்மை மாறி, ஒருவித வறட்சியையும் மெலிதான கோடுகளையும் பார்க்கலாம். சருமத்தின் அழகுக்கும்  பூரிப்புக்கும் காரணமான எலாஸ்டின் மற்றும் கொலாஜன் என்கிற இரண்டு புரதங்களின் சுரப்பும் குறையத் தொடங்கும். கூடிய வரையில் வெயிலில் செல்வதைத் தவிர்ப்பதும்,...

'புத்தி இல்லையேல் என் செய்வது' (நீதிக்கதை)

ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான்.அவன் கடுமையாக அவன் வயலில் உழைத்து தக்காளி பயிரிட்டு வந்தான். தக்காளி அமோகமாக விளையும்..அதில் சில சொத்தை தக்காளிகளும் இருக்கும்...அவற்றை அவன் ...தன் வீட்டில் இருக்கும் மாடுகளுக்கும்,ஆடுகளுக்கும் உணவாக போட்டு வந்தான். அவனது உழைப்பு,செய்கை,குணம் எல்லாவற்றையும் பார்த்த இறைவன் அந்த ஆண்டு அவன் வயலில் விளைந்த தக்காளி முழுவதையும் சொத்தை தக்காளியாக இல்லாமல் நல்லவைகளாகவே வளர அருளினார். அதைப்பார்த்த விவசாயி மிகவும் கவலைப்பட்டான் .ஊரார்..;ஏன் கவலையாக இருக்கிறாய்....? இந்த வருடம் தான் தக்காளிகள் நன்றாக விளைந்திருக்கிறதே..?' என்றனர். ;என் வயலில் விளைந்த சொத்தை தக்காளிகளை ஆடுகளுக்கும் மாடுகளுக்கும்...

அபார்ஷன் பயத்திலிருந்து விடுபட...

தாய்மை என்பது ஒரு வரம். திருமணமான ஒவ்வொரு பெண்ணும் தாய்மைக்காக தவம் இருக்கின்றனர். கடந்த காலகட்டங்களில், ஒரு பெண் 10  குழந்தைகளைக் கூட எந்த பிரச்னையுமின்றி எளிதாக ஈன்றெடுத்தாள். ஆனால் இன்றோ மரபணு பிரச்னை, மாறி வரும் உணவுப்பழக்கம், ஓய்வில்லாத  வேலை, மன அழுத்தம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணங்களால் கருவுற்றதில் இருந்து குழந்தையை பெற்றெடுக்கும் வரை பல்வேறு இன்னல்களை  சந்திக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களில் பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்பவர்களாகத்தான் இருக்கின்றனர். இதில், வேலைப்பளு,  டென்ஷன், சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமை, ஓய்வின்மை, தூக்கமின்மை போன்ற காரணங்களால் 20 சதவீதம் பேருக்கு...

கல்லில்கண்ட கலைவண்ணம் அஜந்தா - சுற்றுலாத்தலங்கள்!

      கல்லில்கண்ட கலைவண்ணம் அஜந்தா கல்லில்கண்ட கலைவண்ணம் அஜந்தா கல்லிலே கண்ட கலைவண்ணமாக காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றன அஜந்தா குகைகளும், அதனுள்  தீட்டப்பட்டுள்ள ஓவியங்களும்!. குகைகளைக் குடைந்து உருவாக்கப்படும் கோவில்களுக்கு குடைவரைக்கோவில்கள் என்று பெயர். அஜந்தாவும் இந்த ரகம்தான். மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் இருந்து 107 கி.மீ தொலைவில் உள்ள அழகான கிராமம் அஜந்தா. இங்கிருந்து 12கி.மீ தொலைவில் காணப்படும் குடைவரைக்-கோவில்களும், ஓவியங்களும் அமைந்துள்ள இடம் கிராமத்தின் பெயரால் அஜந்தா குகைகள் என அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் புத்தமதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தியும், புத்தரின் வாழ்க்கை வரலாற்று...

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-09

உபநிடதங்கள்   வேத காலத்திற்கு பிறகு உபநிடதங்கள் தோன்றின. இவை வேதங்களின் கிளை நூல்கள் எனவும் கூறப்படுகிறது. உபநிடதங்கள் பண்டைய இந்தியாவின் தத்துவ நூல்கள் மேலும் இவை இந்துக்களின் ஆதார நூலாகவும் விளங்குகிறது. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இவ்விலக்கியத்தில் யோகம், தத்துவம் போன்றவற்றைப் பற்றியே விவாதிக்கப் படுகிறது. பெரும்பாலும் குரு - சீடன் இடையே நடைபெறும் உரையாடலாக இவை அமைந்துள்ளன. இந்து சமய நூல்களில் இவை மிக உன்னதமான மதிப்பு பெற்றவை.               நான்கு வேதங்களுக்கும் சாகைகள் என்று பெயருள்ள பல கிளைகள் உள்ளன. எல்லா கிளை நூல்களும் தற்காலத்தில் காணப்படவில்லை. ஒவ்வொரு வேதத்தின்...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top