.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 5 December 2013

கண்களால் நாம் எவ்வளவு தூரம் பார்க்க முடியும்!

  கடற்க்கரையில் நாங்கள் நின்று கொண்டு பார்த்தால், கடலும் வானமும் சேர்கின்றது அல்லவா? அதன் தூரம் 2.5 மைல்கள் தூரம். நீங்கள் உயரத்திற்குப் போகப் போக இன்னும் தொலைவுக்குப் பார்க்கலாம். காரணம் பூமி உருண்டையாக இருப்பதால். 20 அடி உயரத்திலிருந்து உங்களால் பார்க்கக் கூடிய தூரம் 6 மைல்கள்.300 அடி உயரத்திலிருந்து உங்களால் பார்க்கக் கூடிய தூரம் 23 மைல்கள்.350 உயரத்திலிருந்து உங்களால் பார்க்கக் கூடிய தூரம் 80 மைல்கள்.16.000 (விமானம்) உயரத்திலிருந்து உங்களால் பார்க்கக் கூடிய தூரம் 165 மைல்கள்.இதுவே இப்படி என்றால் நீங்கள் கொஞ்சம் அண்ணாந்து பார்த்தால் அதன் கதையே வேறு, சுமார் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் மைல் தொலைவில் உள்ள சந்திரனைப் பார்க்க முடியும்!...

பகிர்ந்துகொள்ள !! - 5

ஒரு ஆங்கிலேயன் , ஒரு புகை வண்டியிலிருந்து வெளியே வந்தான். அவனை அழைத்துக் கொண்டு செல்ல, அவனுடைய மனைவி காரில் வெளியே காத்துக்கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் , அவள் ,” என்ன நடந்தது ? ஏன் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள் ? “ என்று கவலையோடு கேட்டாள்.அவன்,” ஒன்றும் கேட்காதே, எவ்வளவு நீண்டதூர பிரயாணம். மேலும் நான் ரயில் போகும் திசைக்கு எதிர்திசையில் உட்கார்ந்து விட்டேன் . அது எனக்குத் தலைவலியை ஏற்படுத்திவிட்டது,.” என்றான்அவள் “ நீங்கள் யாரிடமாவது கேட்டு, இடத்தை மாற்றி உட்காந்திருக்கலாமே. உங்களுடைய நிலைமையை விளக்கிச்சொல்லி இருக்கலாமே ? “அவன் , “ நான் அப்படித்தான் நினைத்தேன் ஆனால், என் முன் சீட்டில் ஒருவரும் இல்லை , நான் யாரிடம் கேட்பது? “ என்றா...

பகிர்ந்துகொள்ள !! - 4

ஹென்றி ஜீக்லண்ட் என்பவன் ஒரு பெண்ணைக் காதலித்துக் கடைசியில் கை விட்டு விட்டான். மனமுடைந்த அவள் தற்கொலை செய்துகொண்டாள். இதனால் கோபமடைந்த அவளது சகோதரன் தன் சகோதரியின் காதலனைக் கொன்றுவிடுவது என்று தீர்மானித்தான். அவனைத் தேடிப் பிடித்துத் துப்பாக்கியால் சுட்டான்.அவன் இறந்துவிட்டான் என்று சகோதரன் நினைத்துத் தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அந்தக் காதலன் இறக்கவில்லை. சகோதரன் சுட்ட குண்டு காதலனின் முகத்தை லேசாக உரசிச் சென்று அருகிலிருந்த மரத்திற்குள் பாய்ந்துவிட்டது.பல வருஷங்களுக்குப் பிறகு அந்தக் காதலன் ஜிக்லண்ட் குண்டு பாய்ந்திருந்த அந்த மரத்தை வெடிமருந்து வைத்துத் தகர்க்க தீர்மானித்தான். அந்த வெடிமருந்து வெடித்தபோது மரத்தில் தங்கியிருந்த குண்டு சிதறி ஜீக்லன்டின்தலைக்குள் பாய்ந்தது. அந்த இடத்திலேயே அவன் மரணமடைந்தான்.சகோதரன் அன்று கொல்ல முடியாததை மரம் நின்று கொன்றுவிட்டத...

பகிர்ந்துகொள்ள !! - 3

மிகவும் சமத்தான பையன் ஒருவன் நேர்காணலுக்குச் சென்றபோது, அவனை நேர்முகம் செய்தவர் சற்றே கர்வத்துடன் கேட்டார். "உனக்கு சுலபமான 10 கேள்விகள் கேட்கலாமா அல்லது கடினமான ஒரே கேள்வி கேட்கலாமா?" மாணவன் சற்றே கர்வத்துடன் சொன்னான், "கஷ்டமான ஒரே கேள்வி கேளுங்கள்" "வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன?" "3000 மில்லியன் பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன" என்றான் இமை கொட்டாமல். அவர் கேட்டார், "அதெப்படி சொல்கிறாய்? உன்னால் நிரூபிக்க முடியுமா?" அவன் அமைதியாகச் சொன்னான் "நீங்கள் ஒரே ஒரு கேள்விதானே கேட்க ஒப்புக்கொண்டிர்கள்?" நேர்முகம் செய்தவர் ??...

பகிர்ந்துகொள்ள !! - 2

ஒரு ஆராய்ச்சியாளர் தவளையை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அவர் அதைத் "தாவு" என்று சொன்னால் அது தாவும்படி பழக்கியிருந்தார்.ஆராய்ச்சியில் அதன் கால்களில் ஒன்றை வெட்டிவிட்டு, தாவு என்றவுடன் தவளை மூன்று கால்களால் கஷ்டப்பட்டுக் குதித்தது.அடுத்து இன்னொரு காலை வெட்டிவிட்டு, தாவு என்றவுடன் அப்போதும் கஷ்டப்பட்டு குதித்தது.மூன்றாவது காலை எடுத்ததும் மிகுந்த வலியுடன் ஒற்றைக்காலால் குதித்து எப்படியோ தாவியது.கடைசியாக நாலாவது காலையும் அவர் வெட்டிவிட்டு, தாவு என்றார்.நகரவே முடியாமல் தவளை பரிதாபமாக விழித்தது. தவளை அசையவே இல்லை. அவர் தன் ஆராய்ச்சி முடிவில் எழுதினார்,"நான்கு கால்களையும் எடுத்து விட்டால் தவளைக்குக் காது கேட்காது"இப்படித்தான் பிரச்சினைகளின் உண்மையான காரணங்களைப் புரிந்து கொள்ளாமல் சிலர் தவறான முடிவுகளுக்கு வந்துவிடுகிறார்கள்....

பகிர்ந்துகொள்ள !! - 1

புதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. "இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை" என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.ஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது. "சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா?" என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்."என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே" என்று மனைவி கேட்க, "அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி" என்றான் கணவன்....

பேயாவது பிசாசாவது!

சின்ன வயதிலிருந்து எவ்வளவு பேய் கதைகள் கேட்டிருப்போம். எக்ஸார்ஸிஸ்ட், ஓமன் என எவ்வளவு ஹாலிவுட் படங்கள் பேய்களை அவிழ்த்து விட்டிருக்கிறது. எவ்வளவு பகுத்தறிவுடன் இருந்தாலும் பலருக்கும் மனதில் எங்காவது பேய் பயம் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது. இரவில் கடும் இருளில் தனியாக செல்லும் போது எங்காவது ஒரு ஒநாய் ஊளையிட்டால் இதயத்துடிப்பு எகிறும். இதற்கு காரணம் நமக்கு வேண்டப்பட்ட சிலர் சொன்ன பல விஷயங்களை ஏன் எதற்கு என்று அலசிப் பார்க்காமல் அப்படியே மனம் ஏற்றுக்கொள்வதால் தான்.பேயாவது பிசாசாவது என்று சொல்பவர்களைக் கூட நம்பவைக்க விஞ்ஞான முலாம் பூசிய பேய் ஆராய்ச்சிகளும், graphics மற்றும் Trick photos களும், "1862-ல் ஒரு கார் விபத்தில் இறந்து போன பெண்ணின் ஆவி " என் தொடரும் உண்மை போன்ற கதைகளும் நிறைய உலா வந்து கொண்டுதான் இருக்கிறது. போதாக்குறைக்கு சாமி வந்து ஆடுபவர்கள், பேய் வந்த பெண்கள் என இன்றும் பார்க்கிறோம்....

சிந்தனைக்கு!

சிறிய ஊனத்துடன் பிறந்து வளர்ந்த குழந்தை ஒன்று, விளையாட்டுப் பந்தயம் ஒன்றில் பங்கேற்ற பின் வீடு திரும்பியது. அது வெற்றி பெற வாய்ப்பில்லை என்று கருதி விபரம் கேட்காமலேயே ஆறுதலாய்ப் பேச ஆரம்பித்ததார் அப்பா.  ” அதாவது,மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டால் உனக்கு ஒரு விஷயம் குறைவுதானே” என்று ஆரம்பித்தார். போட்டியில் வென்றிருந்த குழந்தை சொன்னது…. ...“இல்லை அப்பா! எனக்கு எல்லாமே அதிகம்தான்!  நான் ஊனம் என்பதனாலேயே, ஜெயிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகம். அதனாலே என் உழைப்பு அதிகம். என் ஆர்வத்தை அறிந்ததால் இந்த சமூகத்தில் எனக்கு ஆதரவும் அதிகம்”. பலவீனத்தை பலமாக்குவது நம்மிடம்தானே இருக்கிறது...

ஆரோக்கியமாக வாழ...!

 * தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்;பற்களையும் சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள். * தினமும் நன்றாக தூங்குங்கள். மாதத்தில் ஒரு முறையாவது கண்ணாடி முன் நின்று, உங்கள் உடலை பாருங்கள்.அப்படி பார்த்தால், உடலில் ஏற்படும் சுருக்கங்கள், படைகள்போன்றவைகளை கண்டறியலாம். * உணவில் பச்சை காய்கறிகளையும், பழ வகைகளையும் தேவையான  அளவு சேருங்கள். * முடிந்த அளவு வாகன பயணங்களை மேற்கொள்ளாதீர்கள்;அதிகமான தூரம் நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். * தினமும் குறைந்தது, 50 முறை உட்கார்ந்து எழுவது நல்லது.அப்படி செய்தால் இடுப்பு அழகுப்படும்; தொந்தியும், வயிறும் குறையும். * குளிக்கும் போது எப்போதும் குதிகாலையும், கால் விரல்களையும் தேய்த்து கழுவுங்கள். * படுக்கைக்கு அருகிலும்,...

பெரியவருக்கு பரம திருப்தி !! குட்டிக்கதைகள்!

வயதான ஒருவரின் வீட்டிற்கு முன்னால் தினசரி இரவு, இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.அவருக்கு அது மிகத் தொந்தரவாக இருந்தது. ஒரு நாள் இளைஞர்கள் சப்தம் போட்டுக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது பெரியவர் அவர்களிடம் போய்,”நான் ஓய்வு ஊதியம் வாங்குபவன். எனக்குப் பிடித்தமான கிரிக்கெட்டை நீங்கள் எல்லோரும் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.நீங்கள் தினசரி விளையாடினால் நான்உங்களுக்கு வாரம் ஐம்பது ரூபாய் கொடுக்கிறேன்,” என்றார்.இளைஞர்களுக்கு மிகவும் ஆச்சரியம்! தாங்கள் விருப்பத்துடன் விளையாடுவதற்குப் பணமா!அவர்கள் தினசரி விளையாடினார்கள்.ஒரு வாரம் முடிந்தவுடன் பெரியவர் அவர்களிடம் ஐம்பது ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்தார்.இரண்டாவது வாரம் அவர்கள் பணம் கேட்ட பொது, திடீரென செலவு வந்து விட்டதாகக் கூறி இருபது ரூபாய் தான் கொடுத்தார்.மூன்றாவது வாரம் ஓய்வு ஊதியம் இன்னும் வரவில்லை எனக்...

துன்பம்‏!

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் - ஸ்காட்லாந்து பொன்மொழி துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும். - கவியரசு கண்ணதாசன் உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது. - வால்டேர் அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல் - நெப்போலியன் ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்.  - ஆஸ்கார் ஒயில்ட் பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் -...

கணவன், மனைவி நகைச்சுவை?

கணவன், மனைவி நகைச்சுவை , "என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..." "யோவ்... பேங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?" "நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!...

சிந்தனைக்கு!

நேர் வழியில் அடைய முடியாததை, ஒரு நாளும் குறுக்கு வழியில்அடைந்து விட முடியாது! நாம் செல்லும் மார்க்கம் நல்லதாக இருந்தால், நம்முடைய இலக்கும் தானாகவே நல்லதாகிவிடும்! பிறந்த குழந்தைக்கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கிறது! சமத்துவம் என்பது சமமாக நடத்தப்படுவது அல்ல, சம வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்வது...

குழந்தைகளை நிறைய சாப்பிடவைக்க என்ன வழி?

எல்லா பெற்றோர்களுக்குமே தங்கள் குழந்தைகள் நிறைய சத்துள்ள உணவுவகைகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வளரவேண்டும் என்ற ஆசை சற்று அதிகமாகவே இருக்கும்.அதற்காக தனக்கு உணவில்லாவிட்டாலும் பரவாயில்லை, குழந்தைகளுக்கு எவ்வளவு செலவானாலும் சத்தான உணவழிக்க வேண்டும் என பாடுபடுகிறார்கள். ஆனால் குழந்தைகளோ பெற்றோர் கொடுக்கும் உணவு வகைகளை தீண்டுவதே இல்லை.எதைக் கொடுத்தாலும் வேண்டாம் என அடம்பிடித்து சாப்பிட மறுக்கிறார்கள்.இது பெற்றோருக்கு மிகுந்த மன வேதனையை அளிப்பதோடு குழுந்தையை அடித்தல், குழந்தை சாப்பிடாததால் அதனுடன் பேசாமல் இருத்தல் போன்ற எதிர்மறை விளைவுகளையும் உண்டாக்குகிறது.ஏன் குழந்தைகள் சாப்பிடுவதில்லை என்பதை தெரிந்துகொள்ள ஒரு உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்.· குழந்தைகளுக்கு மிக அதிக உணவு தேவையில்லை. உதாரணமாக ஒரு பெரிய சாக்லெட் சாப்பிட்டால் அதற்கு மதிய உணவு தேவைப்படாது.எனவே மதிய உணவு கொடுத்தால் அதை சாப்பிட மறுப்பதில்...

கட்டை விரலின் மகத்துவம் - கட்டுரை!

 புகைப்படம், வாக்காளர் அட்டை, கடவுச்சீட்டு. குடும்ப அட்டை, நிறுவனத்தில் பணிபுரியும் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமை – எத்தனையோ விதங்களில் அடையாள நிரூபணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், கட்டை விரல்தான் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட நம்    அடையாளம். உன்னையே நீ மறந்தாலும் ( மூளைச் சிதைவு நோயில் இது சாத்தியம் ) உன்னை உலகுக்கு அடையாளம் காட்டுவது உன் விரல் ரேகைதான்.கட்டைவிரலில் சாதாரண கொப்பளம் வந்தாலும் கூட,நாம்   சேமித்து வைத்த  நம்    பணத்தை வங்கியில் இருந்து எடுக்க முடியாது. கட்டைவிரல் சரியில்  லை என்றால் கையெழுத்தும் சரியாக இருக்காது. அந்தக் கட்டை விரல் வெட்டுப்பட்டால்தான் பிற விரல்களின் ரேகைகள் தேவைப்படும் நம் . கட்டை விரலை இழப்பது நம்   அடையாளத்தை இழப்பதாகும்.ஏல்லோர்க்கும் தங்களை நேசிப்பதே மிகப் பெரிய விசயமாக இருக்கும். ‘ நாட்டை, குடும்பத்தை,...

ப்ராண சக்தி! கட்டுரை!

 உயிரின் மூலப்பொருள்.பிரபஞ்சம் ஆற்றல் வடிவமானது. பிரபஞ்சத்தின் ஆற்றல் பல வடிவங்களில் இருந்தாலும். அதன் மூலத்தன்மை ஒன்று தான். ஈஷாவாசிய உபநிஷத் இதை மிகவும் எளிய வடிவில் விளக்குகிறது. ஆற்றலுக்கு அழிவில்லை என்கிறது விஞ்ஞானம்.ஆற்றலே அனைத்தும் என்கிறது மெய்ஞானம். பிரபஞ்சத்தில் பஞ்சபூதங்கள் தனியே பிரிந்திருக்கிறது. சூரிய மண்டலத்தில் ஓர் பகுதியில் இவை ஒன்றிணையும் பொழுது அந்த இடத்தில் உயிர்களின் தோற்றம் நடைபெறுகிறது. பஞ்சபூத ஆற்றல் ஒருங்கிணைந்து பூமியை இயக்குகிறது. பஞ்சபூதத்தின் இயக்கம் உயிர் சக்தியாக மாற்றம் அடையும்பொழுது உடலின் வடிவத்திற்கு உருமாறுகிறது. இவற்றை விரிவாக கூற வேண்டுமாயின் பஞ்சபூதங்கள் ஐந்து விதமான பிராணசக்தியாக பிறப்பு எடுக்கிறது.இந்த...

Internet chat உஷார்!

மின்னஞ்சலில் நண்பர்களுடன் அரட்டை (சாட்) அடிப்பது என்பது எல்லோருக்குமே மிகப் பிடித்தமான விஷயம்தான். அதுவும் ஒரு குழுவாக அரட்டை அடிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியே தனிதான்.நமக்குத் தெரிந்த, பழகிய நண்பர்களுடன் அரட்டை அடிப்பது என்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நாம் எல்லோரும் தெரிந்த நண்பர்களுடன் மட்டுமா அரட்டை அடிக்கின்றோம். இல்லையே...சாட்டில் புதிதாக எத்தனை நண்பர்களை பிடிக்கின்றோம். அவர்களுடன் மணிக்கணக்காக அரட்டை அடிக்கின்றோம். அதையும் தாண்டி அவர்களை சந்திப்பது, அவர்களுடன் ஊர் சுற்றுவது, டேட்டிங் என எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறது உலகம்.சரி இதெல்லாம் நல்ல நண்பர்கள், நல்ல நபர்களுடன் பழகும்போது சரி.... ஏதாவது ஓரிடத்தில் சரியில்லாமல் போகும்போது என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதையெல்லாம் தவிர்க்க வேண்டாமா? அது நம் கையில்தான் இருக்கிறது.அதற்கு என்னென்ன தேவை.......

இது நிஜமல்ல .. ஆனால் ?

உலகில் பல கலைகள் உண்டு அதில் உள்ள சிறந்த கலைகளில் ஒன்றாக விளங்குவது ஓவியக்கலை.      ஓவியக்கலைகளிலும் பல பரிமாணங்கள் வந்துவிட்டன. இதில் 2டி பெயிண்டிங், 3டி பெயிண்டிங் என பல புதுமைகள் உருவாகியுள்ளன.      சிங்கபூரை சேர்ந்த கெங் லியி ஒரு சிறந்த ஓவியர் மற்றும் மேஜிக் நிபுணரும் கூட. இவரது 3டி பெயிண்டிங் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது.      இவர் வரைந்த 3டி பெயிண்டிங் ஓவியங்கள் நிஜமா இல்லை ஓவியமா? என்று எண்ணும் அளவுக்கு தத்ரூபமாக உள்ளது.   ...

இணையத்தில் பின்னப்படும் பூதாகர மாயவலைகள்!

  எந்த ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அதை முதலில் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்பவர்கள் கெடுமதி படைத்தவர்கள் தான். அவர்களது கிரிமினல் மூளைதான் அந்தத் தொழில் நுட்பத்தின் சாத்தியக்கூறுகளை முழுவதுமாக ஆராய்ந்து முதலில் புரிந்துகொள்ளும். இணையமும் சமூக வலைத்தளங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இணையத்தை வணிகத்துக்காக முதலில் பயன்படுத்திக்கொண்டவர்கள் போர்னோ படங்களை விற்றவர்கள்தான். எண்ணற்ற ஆபாச வலைத்தளங்கள் உருவாகின. ஒரு கட்டத்தில், அதிக ஹிட்கள் பெறும் முதல் இருபது தளங்கள் அனைத்துமே போர்னோ தளங்களாக இருந்தன. பின்னர், கிரெடிட் கார்டு மூலம் மாதாமாதம் சந்தா பெறும் தளங்களாக ஆனவையும் இவைதான். அதன் பின்னர்தான் நியாயமான வணிக நிறுவனங்கள் பலவும் தம் பொருள்களை...

iOS சாதனங்களில் அழிந்த தரவுகளை மீட்பதற்கான மென்பொருள்!

  கணனிகள் மற்றும் ஏனைய மொபைல் சாதனங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகள் அழிந்துபோகுமிடத்து அவற்றினை மீட்டு எடுப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.இவ்வாறு iOS சாதனங்களில் அழிந்து போகும் தரவுகளை மீட்டு தருவதற்கென Leawo iOS Data Recovery எனும் மென்பொருள் காணப்படுகின்றது.இதன் மூலலம் இழக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், அழைப்புக்கள் தொடர்பான தகவல்கள் போன்றவற்றினை மீட்டுக்கொள்ள முடியும்.மேலும் இந்த மென்பொருளானது iPhone 5, iPad 4, iPad mini, iPod touch 5 போன்றவற்றிலும் iOS 6.1 இயங்குதளத்திலும் கொண்ட செயற்படக்கூடியதாக இருக்கின்றது.  தரவிறக்கச் சுட்ட...

விளையாடுவதற்கு இதோ சுவாரஸ்யமான ஓர் கேம்.

  இன்று ஒட்டுமொத்த பாலிவுட்டும் ஆவலாக இருப்பது அடுத்த மாதம் வெளியாக இருக்கும் தூம் 3 படத்துக்காக தான் அதன் முந்தைய இரண்டு பாகங்கள் மிகப்பெரும் வெற்றி பெற்றதே இதற்கு காரணமாகும். தூம் 3யை வைத்து தற்போது புதிதாக ஒரு பைக் ரேஸ் கேம் ஒன்று வந்துள்ளது இதை அதிகளவில் தற்போது டவுன்லோட் செய்யப்பட்டு வருகிறது இணையத்தில். உண்மையில் இந்த கேம் மிகவும் சுவாரசியமாகவே போகிறது இதோ அந்த கேமை இலவசமாக டவுன்லோட் செய்ய லிங்க கடைசில் கொடுக்கப் பட்டுள்ளது உங்களுக்காக. மேலும் இந்த படங்களை பார்த்தாலே உங்களுக்கு அந்த கேம் விளையாட வேண்டும் என்று நிச்சயம் தோன்றும் இதோ..... இதோ அந்த கேமை இலவசமாக டவுன்லோட் செய்ய இதை                                      ...

சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி மின்சாரம்: ஜப்பானின் புதிய முயற்சி!

  சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி மின்சாரம் கொண்டு வர ஜப்பான் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. ஜப்பானில் கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டதில் புருஷிமா அணுஉலை வெடித்து சிதறியது. அதனால் அங்குள்ள அணுமின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன.எனவே, நாட்டின் மின் தேவைக்கு விஞ்ஞானிகள் மாற்று வழியை உருவாக்க முயற்சி செய்கின்றனர். இந்த வகையில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை தீவிரப்படுத்த உள்ளனர்.பூமியை பொறுத்தவரை எப்போதும் சூரிய ஒளி கிடைப்பதில்லை. பகலில் மட்டுமே கிடைக்கிறது. மோசமான தட்ப வெப்பநிலை மேக மூட்டம் இருந்தால் அதையும் முழுமையாக பெற முடியாது.எனவே, சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரித்து...

'மங்காத்தா 2' மனது வைப்பாரா அஜித்?

  'மங்காத்தா 2'விற்கு தயாரிப்பாளர், இயக்குநர் என அனைவருமே, அஜித்தின் சம்மதத்திற்காக காத்திருக்கிறார்கள். அஜித், த்ரிஷா, பிரேம்ஜி, வைபவ், அஞ்சலி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்க, வெங்கட்பிரபு இயக்கிய படம் 'மங்காத்தா'. தயாநிதி அழகிரி தயாரிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. படம் வெளியாகி வரவேற்பைப் பெற்று, வசூலை அள்ளியது. அதனைத் தொடர்ந்தே, 'மங்காத்தா 2'க்கான பேச்சுகள் தொடங்கின. 'மங்காத்தா' படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி, " 'மங்காத்தா 2'விற்கான கதை தயாரா இருக்கு. ஆனால், அஜித் இப்போது தொடர்ச்சியாக படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்."என்று தெரிவித்தார். இயக்குநர் வெங்கட்பிரபு, "‘மங்காத்தா 2’ இயக்க நான் தயாரா தான் இருக்கேன். ஆனால்,...

சிம்பு படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

  கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றி வருகிறார். சூர்யா உடனான படம் டிராப் ஆனதைத் தொடர்ந்து, சிம்பு நடிக்கும் படத்தினை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். இப்படத்தினை முடித்துவிட்டு அஜித் நடிக்கும் படத்தினை பிப்ரவரி 15ம் தேதி முதல் இயக்க திட்டமிட்டு இருக்கிறார். சிம்பு - கெளதம் மேனன் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அடையாறு சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்றது. ஆனால், படத்தின் நாயகி, இசையமைப்பாளர் உள்ளிட்ட தகவல்கள் எதையும் படக்குழு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், சிம்புவிற்கு ஜோடியாக பல்லவி சுபாஷ் என்ற புதுமுக நடிகை நடித்து வருகிறார் என்று படக்குழு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து...

டிசம்பரில் வெளியாகும் 14 படங்கள்!

2013ம் ஆண்டில் ரிலீஸுக்குத் தயாராக கிட்டத்தட்ட 40 படங்கள் இருக்கின்றன. ஆனால், அத்தனை படங்களையும் ரிலீஸ் செய்ய போதுமான தியேட்டர்கள் கிடைப்பதில்லை. ஆனாலும், கடைசி மாதம் என்பதால் பெரிய மற்றும் சிறு பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்துவிட வேண்டுமென்று தீயாய் வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி, இந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 14 தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. டிசம்பர் 6ல் 'ஈகோ', 'கல்யாண சமையல் சாதம்', 'தகராறு', 'வெள்ளை தேசத்தின் இதயம்' ஆகிய நான்கு படங்கள் வெளியாகின்றன. 'கல்யாண சமையல் சாதம்' படத்தில் பிரசன்னா- லேகாவாஷிங்டனும், 'தகராறு' படத்தில் அருள்நிதி- பூர்ணாவும் நடித்துள்ளனர்.டிசம்பர் 13ல் விக்ரம்பிரபு நடித்த 'இவன்வேற மாதிரி',  நித்யாமேனன் நடித்த 'மாலினி 22 பாளையங்கோட்டை', ஓவியா நடித்த 'மதயானைக்கூட்டம்' ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன. 'எங்கேயும் எப்போதும்' சரவணன் 'இவன் வேற...

ரொம்ப சுலபம் இ காமர்ஸ் செய்வது!

செல்லிஸ் என்று ஒரு இணைய தளம் இருக்கிற‌து.எல்லோரையும் இ காமர்சிற்கு அழைத்து வரும் இணையதளம் இது.இ காமர்ஸ் என்றால் இனையம் மூலம் பொருட்களை வாங்குவது மட்டும் அல்ல இணையம் மூலம் பொருட்களை விற்பனை செய்வதும் தான்.ஆம் இந்த தளம் இணையம் மூலம் பொருட்களை விற்பனை செய்வதை மிகவும் சுலபமாக்கும் நோக்கோத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.அதை அழகாக நிறைவேற்றியும் தருகிற‌து.இணையம் மூலம் பொருட்களை விற்பனை செய்வதென்றால் அதற்கென தனியே இணையதளம் அமைக்க வேண்டும்,அதிலும் பொருட்களை காட்சிபடுத்தும் வசதி மற்றும் பணம் செலுத்துவதற்கான வசதி கொண்ட தளத்தை அமைக்க வேண்டும்,இதெல்லாம் சாமான்ய இணையவாசிகளுக்கு சாத்தியமில்லை என்று மலைப்பாக இருக்கலாம்.ஆனால் இதெல்லாம் எதுவும் தேவையில்லை.செல்லிஸ்...

உணவில் எந்த அளவிற்கு உப்பு சேர்ப்பது நலம்?

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள், அந்த வகையில் நாம் உண்ணும் உணவிற்கு ருசி உண்டாக்குவதில் உப்பு பெரும் பங்கு வகிக்கிறது.இருப்பினும் உப்பை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, உணவில் சேர்த்தால் தான் அது உடல்நலத்துக்கு ஏற்றதாக இருக்கும். அளவிற்கு மீறி சேர்க்கும் போது அதன் விளைவாக உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.இது பற்றி இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் உணவில் அதிக அளவில் உப்பு சேர்ப்பதால் வயிற்று புற்றுநோய், நெஞ்சுவலி, இருதய கோளாறு போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.உப்புசத்து குறைவான ரொட்டி(பிரட்), தானியங்களை காலை உணவில் சேர்க்கலாம். கடல்மீன், சிப்ஸ் ஆகியவற்றில்...

அலுவலகம் செல்பவர்களுக்குச் சில யோசனைகள்!

நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் எல்லோராலும் ரசித்து, நிதானமாய்ச் சாப்பிட முடிகிறதா? அலுவலகம் செல்பவர்கள் தினமும் பேருந்திலும், மற்ற வாகனங்களிலும் சென்று நெரிசலில் சிக்கித் திணறி அலுவலகம் செல்கின்றனர். அங்கு பணிகளை முடித்துவிட்டு, அப்பாடா என்று வீடு திரும்பினாலும் அவர்களால் நிம்மதியாக உணவருந்துவது என்பது கடினம்தான். அவர்கள் வாழ்க்கை இயந்திரத்தனமானதுதான்! ஆயினும் உழைத்தால்தானே உயர முடியும்! உழைப்புக்கு உடல் நலம் ஏற்றதாக இருக்க வேண்டாவா? உடல் ஒத்துழைக்க நன்கு சாப்பிட வேண்டுமே?அலுவலகம் செல்பவர்களுக்குச் சில யோசனைகள்காலை உணவைத் தவிர்க்காதீர்!பெரும்பாலும் காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில், காலை உணவைத் தவிர்ப்பது பலரின் பழக்கமாகிவிட்டது. காலை வேளையில்தான் உங்கள் சக்தி முழுமையாய் இருக்கும். அந்த வேளையில் சக்தியளிக்கக்கூடிய உணவை நீங்கள் அளிக்காவிட்டால், அன்று...

மசாலா பொருட்களின் மகத்துவம்!

 நமது நாட்டில் பயன்படும் மூலிகைகளும், மசாலா பொருட்களும் நமது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பவனவாகவும் சாப்பிட்ட பின் திருப்தி உணர்வை ஏற்படுத்துபவனாகவும், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுபவனாகவும் உணவின் தரத்தை மேம்படுத்துபவனாகவும் அமைந்துள்ளதாக பல்வேறு ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தி உள்ளன. உடலின் எடையை குறைப்பதற்கு உதவுகின்ற சில மூலிகைகளையும் மசாலா பொருட்களையும் பார்க்கலாம். வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடுகளை தூண்டி சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதனால் நமது உடலானது கொழுப்பினை எரிக்கும் திறனை கட்டுப்படுத்துகிறது. மஞ்சளுக்கு உடல் எடையை குறைக்கும் திறன் அதிகம் உண்டு. அதிலும் கொழுப்பு திசுக்கள் உருவாவதை குறைக்க உதவுகிறது. இதன் மூலம்...

கல்லெறிந்தவனுக்கும் கருணை!

அந்த நாட்டுக்கு மகான் ஒருவர் வந்தார். அவரை தரிசிக்க பெரும் கூட்டம் திரள்கிறது என்பதை அறிந்த அந்த நாட்டு மன்னனுக்குப் பொறாமை. 'பண பலமும் அதிகார பலமும் கொண்ட தன்னை விட, அந்த மகான் எந்த விதத்தில் உயர்ந்தவர்?' என்று எண்ணியவன், இது பற்றி அறிய மாறு வேடத்தில், மகானின் இருப்பிடத்துக்குச் சென்றான். அங்கு, மரத்தடியில் அமர்ந்து அருளாசி வழங்கிக் கொண்டிருந்தார் மகான். அப்போது, திடீரென்று பறந்து வந்த கல் ஒன்று மகானின் நெற்றியை பதம் பார்த்தது. கூட்டத்தினர் கல்லெறிந்தவனைப் பிடித்து, தண்டிக்க முற்பட்டபோது, மகான் தடுத்தார்.''ஏனப்பா என் மேல் கல்லெறிந்தாய்?'' என்று அவனைப் பார்த்துகேட்டார் மகான். அவன், ''பழம் பறிப்பதற்காகக் கல் எறிந்தேன். அது, தங்கள் மேல் விழுந்து விட்டது!'' என்றான்.அவனை ஆறுதலுடன் அணைத்துக் கொண்ட மகான், சுற்றி இருப்பவர்களைப் பார்த்துக் கூறினார்: ''பாருங்கள்... தன் மேல் கல்லெறிந்தவனுக்கு,...

இந்தியாவை ஜெயிக்க முடியாதுங்கோ!- பாக். கிற்கு பிரதமர் சவால்!

காஷ்மீரை மையமாகக் கொண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்நேரமும் 4வது முறையாக போர் நடைபெறும் என்றும் தனது வாழ்நாளுக்குள் காஷ்மீரை இந்தியாவில் இருந்த பிரித்து தனிநாடாக அமைக்க வேண்டும் என்பதே தனது கனவு எனவும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்ததையுடுத்து என் வாழ்நாளில், இந்தியாவுடன் போரிட்டு பாகிஸ்தான் ஜெயிக்க வாய்ப்பு இல்லை என்று இந்தியா பிரதமர் மன்மோகன்சிங் சவால் விட்டுள்ளார்.      நேற்று காஷ்மீரின் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு பகுதியில் ஆசாத் ஜம்மு-காஷ்மீர் கவுன்சிலின் பட்ஜெட் கூட்டத்தில் பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் உரையாற்றினார். அப்போது அவர்,”காஷ்மீரை மையமாக கொண்டு இந்தியா,பாகிஸ்தான் நாடுகளிடையே எந்நேரமும் 4வது முறையாக அணுஆயுத...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top