நம் தினமும் சாப்பிடும் உணவு வகைகள் அனைத்தும் நமக்கு போதுமான ஊட்டச்சத்தை அளிக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல முடியும்.
நாம் சாப்பிடும் உணவில் 20-30% உணவு தான் ஊட்டச்சத்து தரக்கூடிய உணவு, மீதி அனைத்தும் நமக்கு தெரியாமல் நமது உடலை அழித்து கொண்டிருக்கும் உணவு வகைகள்.
சுவை நன்றாக இருப்பதால், நாம் சில வகை உணவுகளை விரும்பிக் சாப்பிடுகிறோம். ஆனால், அவ்வகை உணவுகள் நம் உடலுக்கு பெரிதும் தீங்கு செய்கிறது.
ஊட்டச்சத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, நாம் எல்லா வகையான உணவுகளையும் குறிப்பிட வேண்டும்.
உதாரணமாக, சில வகையான சிறந்த உணவுகள் நமது எடை குறைப்பிற்கு உதவும், வேறு சில நமது அறிவுத்திறனை ஊக்குவிக்கும் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும் உணவுகள்.
இதற்கு மாறாக சிலவகை உணவுகள் மூளைச் செயல்பாட்டை அழிக்கும் உணவாகவே இருக்கிறது.
எனவே இவ்வகையான உணவுகளை குறைவாக உட்கொள்வதினால், அதன்...
Saturday, 19 October 2013
Lenovo அறிமுகப்படுத்தும் Windows 8.1 டேப்லட்!
Lenovo நிறுவனம் Windows 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட தனது புதிய வடிவமைப்பான Miix2 எனும் டேப்லட்டினை அறிமுகம் செய்கின்றது.
8 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட்டின் பார்வைக் கோணமானது 178 டிகிரியாக காணப்படுகின்றது.
மேலும் உயர் ரக கிராபிக்ஸ் மற்றும் வீடியோக்களை இயக்கக்கூடிய தொழில்நுட்பத்தினையும் இந்த டேப்லட கொண்டுள்ளது.
இவை தவிர சேமிப்பு நினைவகமாக 128 GB கொள்ளளவு, 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா போன்றனவும் காணப்படுகின்றன.
இதன் விலையானது 299 டாலர்கள் ஆகும்.
...
கரூர் மாவட்டத்தின் வரலாறு!
இது அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. வரலாற்று புகழ்பெற்ற பழமையான சோழர்கால நகரம். சோழர்களும், மதுரை நாயக்க மன்னர்களும், கடைசியாக ஆங்கிலேயரும் ஆண்டனர். முற்காலத்தில் கரூர் தங்க நகை வேலைப்பாடுகளுக்கும் வைரம் பட்டை தீட்டுவதற்கும் வர்த்தக மையமாக விளங்கியுள்ளது. அந்த நாட்களில் ரோம் நகரிலிருந்து கரூரில் தங்கம் இறக்குமதியாகியுள்ளது. படைப்புக் கடவுளான பிரம்மா இங்குதான் தனது படைப்புத் தொழிலை தொடங்கினார் என்று ஐதீகம். வடக்கே நாமக்கல், தெற்கு திண்டுக்கல், மேற்கே திருச்சி, கிழக்கே ஈரோடு என பல மாவட்டங்களை எல்லையாகக் கொண்டுள்ளது கரூர்.
2000 ஆண்டு பழமைமிக்கது கரூர்.கரூர் காலப்போக்கில் சேர,சோழ,பாண்டிய,கங்க மன்னர்கள்,விஜய நகர நாயக்கர்கள்,மைசூர் அரசர்கள்...
சோழரின் கலைப்பொக்கிஷங்கள் - சுற்றுலாத்தலங்கள்!
சோழரின் கலைப்பொக்கிஷங்கள்
சோழரின் கலைப்பொக்கிஷங்கள்
சொக்க வைக்கும் கட்டடக்கலைக்கு சொந்தக்காரர்களில் சோழமன்னர்கள் முக்கியமானவர்கள். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் ஆகியவை சோழரின் கலைப்பொக்கிஷங்களாக இன்றளவும் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. மூன்றுமே உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டிருப்பது உலகளாவிய பெருமை.
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில்:
தஞ்சைப் பெரிய கோவில், தஞ்சைப் பெருவுடையார் கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகும். கட்டிய புதிதில் ராஜ ராஜேஸ்வரம்...
சோனி நிறுவனம் எக்ஸ்பெரிய சி ஸ்மார்ட்போன் ரூ.21.490 விலையில் அறிமுகம்!
சோனி நிறுவனம் இந்திய சந்தையில் அதன் சமீபத்திய phablet, எக்ஸ்பெரிய சி ரூ.21.490 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனத்தின் எக்ஸ்பெரிய சி வாங்கிய தேதியிலிருந்து 6 மாதங்களுக்கு ஆக்சிடென்டல் டேமேஜ் கவர் உடன் வருகிறது என்று தெரிவித்துள்ளது.
எக்ஸ்பெரிய சி ஸ்மார்ட்போன் வாங்கியதை தொடர்ந்து முதல் இரண்டு மாதங்களுக்கு, 1GB இலவச தரவு அணுகல்(data access) ஏர்டெல் உடன்-இணைந்து சோனி வழங்குகின்றது. இந்த மாத தொடக்கத்தில், சாதனம் சில ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் ரூ.20.490 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
எக்ஸ்பெரிய சி அம்சங்கள், மீடியா டெக் MTK6589 Quad-core செயலி, 1.2GHz, 5 அங்குல டிஎஃப்டி எல்சிடி qHD (540x960 பிக்சல்) காட்சி மற்றும் ஆண்ட்ராய்டு...
Kobo நிறுவனம் இந்தியாவில் இ வாசகர் டேப்லட் அறிமுகம்!
கனடா-தலைமையிடமாக கொண்ட மின் வாசிப்பு சேவை நிறுவனமான Kobo இந்திய சந்தையில் மின்னணு(electronic) வாசிக்க உகந்ததாக நான்கு புதிய டேப்லட் சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சாதனங்கள் ரூ.14,000 முதல் ரூ.8,000 வரை விலையுடையதாக இருக்கும். மேலும், mobi மற்றும் இ பப்ளிஷிங் உட்பட அனைத்து முக்கிய இ புக்ஸ் ஃபார்மேட்ஸ்(formats)-க்கும் ஆதரவு அளிக்கும். நிறுவனம் இந்த புதிய சாதனங்களை நாடு முழுவதும் விற்பனை செய்ய Crossword, WHSmith மற்றும் Croma உடன் இணைந்துள்ளது.
Kobo Touch, Kobo Glo, Kobo Arc மற்றும் Kobo Aura HD என்று பெயரிடப்பட்டுள்ளது புதிய சாதனங்களில் Wi-Fi மட்டுமே துணைபுரியும், இதில் மொபைல் நெட்வொர்க் துணைபுரிவதில்லை. இந்த...
நுரையீரல் புற்று நோய் : டீடெய்ல் ரிப்போர்ட்!
நாய் நன்றியுள்ள பிராணி, செல்ல பிராணி, மோப்பம் பிடிக்கும், குற்றவாளிகளை அடையாளம் காட்டும், வேலை செய்யும், வீட்டை காக்கும் இப்படிதான் சொல்கின்றனர். ஆனால், மனிதர்களின் மூச்சுக்காற்றை வைத்து நுரையீரல் புற்றுநோயை கூட கண்டுபிடித்து விடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும?
நாய்களை வைத்து ஜெர்மனியில் உள்ள சில்லர்ஹோகி மருத்துவமனை விஞ்ஞானிகள் பல ஆண்டாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மனிதர்களை பாதிக்கும் நோய்களை மருத்துவக் கருவிகள் மூலம் கண்டறிவது போல், நாய்கள் மூலம் நோய் பாதிப்பை கண்டறிய முடியுமா என்பது குறித்து ஆராய்ந்த போது மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத வாசனையை கூட மோப்ப ஆற்றலால் நாய்கள் கண்டுபிடிக்கின்றன. சரியான பயிற்சி அளித்தால்...
ஒரு வாட் பல்பை எரிய விட்டால் இன்டர்நெட் கனெக்சன்! -சீன கண்டுபிடிப்பு!
இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஒரு பல்பை போட்டால் ‘லைபை’ வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு விலை யில் அள்ளிக்குவிக்கும் சீனா தான் இப்போது இந்த ‘பலப்’ மூல்ம் இன்டர்நெட் வசதியையும் கண்டுபிடித்துள்ளது.
ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டால் போதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும். லைட்டை ஆப் செய்து விட்டால் இன்டர்நெட்டுக்கான ‘லைபை’ போய் விடும். ஒரு பல்பு எரியவிட்டால் நான்கு கம்ப்யூட்டர் வரைக்கும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.
விநாடிக்கு 150...
நகத்திலேயே தெரியும நம் உடலின் ஆரோக்கியம்!
உலகம் முழுவதும் பலர் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி கழுவுவது, முடியை பிடித்து இழுத்து கொண்டே இருப்பது ஆகியவையும் மனநல பாதிப்பின் வெளிப்பாடுதான். காரணமில்லாத அச்சம், தவறான எண்ணங்கள் மனதில் எழுவதால் சிலர் இதுபோன்று செய்கின்றனர். இதை மனநல பாதிப்பில் சேர்க்கலாம் என அமெரிக்க மனநல சங்கத்தை சேர்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் எப்போதாவது நகம் கடிப்பவர்கள் கூட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறிவிட முடியாது. இந்த பழக்கத்தால் வலி ஏற்படும் அளவுக்கு ஒருவர் நடந்துகொண்டால் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கருதலாம் என்று தெரிவிகிறார்கள். இது மட்டுமல்லாமல் நகம் கடிப்பதால் நோய் தொற்று ஏற்பட்டு...
பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை - 5...!

பதினைந்தாம் நூற்றாண்டு உலக வரைபடம்:
உலக புகழ் பெற்ற கொலம்பஸ் உலக வரைபடம் கி பி 1490 இல் வரையப்பட்டது. அது
வரை கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளின் தொகுப்பாக வரையப்பட்ட புகழ் பெற்ற உலக
வரைபடம்.
கி பி 1493 இல் வெளியிடப்பட்ட உலக வரைபடம் ஆசியா,ஆப்ரிக்கா,ஐரோப்பா கண்டங்களை தெளிவாக காணலாம்.
கி பி 1436 இல் Andrea Bianco என்ற இதாலியரால் வெளியிடப்பட்ட உலக வரைபடம்.
கி பி 1482 இல் ஜெர்மனியை சேர்ந்த Johannes de Armsshein என்பவரால் வெளியிடப்பட்ட வரலாற்று புகழ் பெற்ற உலக வரைபடம்.
கி.பி 1448 இல் ஜெர்மானியர்களால் வரையப்பட்ட உலக வரைபடம்
கி பி 1402 இல் கொரியர்களால்(Korea) வெளியிடப்பட்ட உலக வரைபடம் மேலும் ஆசிய...
சிங்கமும்,மானும்,முயலும்....(நீதிக்கதை)

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது.ஒரு நாள் அதற்கு இரை கிடைக்காததால் மிகவும் பசியுடன் இருந்தது.
அப்போது...அருகில் இருந்த புதர் ஒன்றில் முயல் ஒன்று
தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தது.அதை பிடித்து உண்ணலாம் என்று
நினைத்தபோது ....
சிறிது தூரத்தில் கொழுத்த மான் குட்டி மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தது.
உடனே முயலை பிடிப்பதை விட்டுவிட்டு ...மான் குட்டியை பிடிக்க விரைந்தது.முயலும் முழித்துக்கொண்டு நடப்பதைப் பார்த்தது.
சிங்கம் ஓடி வந்த சப்தத்தைக்க்கேட்டு மான்குட்டி விரைந்து ஓடியது.
நெடுந்தூரம் ஓடியும் மானை பிடிக்க முடியாத சிங்கம் முயலையாவது சாப்பிடலாம் என எண்ணித் திரும்பியது.
முயலோ...சிங்கம்...