.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

Friday, 17 January 2014

இந்திய இணைய இணைப்பு வேகம்..!

இந்தியாவில் பிராட்பேண்ட் இணைய இணைப்பின் வேகம், உலகத்தின் சராசரி அதிவேக இணைப்பினைக் காட்டிலும் 78 சதவீதம் குறைவாக உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ தர இருக்கும் 4ஜி இணைப்பினை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். இந்த இணைப்பில் சராசரியாக விநாடிக்கு 49 மெகா பிட்ஸ் வேகம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய 3ஜி வேகத்தைக் காட்டிலும் 12 மடங்கு அதிகமாகும். ரிலையன்ஸ் 4ஜி அதிகபட்சமாக நொடிக்கு 112 மெகா பிட்ஸ் வேகம் தரும். இந்தியாவில், 49Mbps வேகத்தில் டவுண்லோட் செய்திட முடியும் என்பதே ஆச்சரியமான ஒரு தகவலாகும். இருந்தாலும், உலக அளவில், அதன் சராசரியான வேகத்துடன் ஒப்பிடுகையில், இது மிக மிகக் குறைவான...

Thursday, 16 January 2014

ராஜீவ்காந்தியை துப்பாக்கியால் தாக்கிய சிங்கள வீரர்....

ராஜீவ்காந்தியை துப்பாக்கியால் தாக்கிய சிங்கள வீரர் ராஜபக்சே கட்சியில் சேர்ந்தார். 1987–ம் ஆண்டு இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்டனர். அதன் பிறகு ராஜீவ்காந்திக்கு சிங்கள ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படடது. அப்போது 22 வயது சிங்கள வீரர் திடீர்.... தொடர்ந்து இங்கே படிக்கலாம்.... ராஜீவ்காந்தியை துப்பாக்கியால் தாக்கிய சிங்கள வீரர்.....

Wednesday, 15 January 2014

வெற்றியின் விலை சமயோசிதம்....அவசியம் படிக்கலாம்!

இயல்பாகவே குழந்தைகளுக்கு பெற்ற தாயின் மீது பாசம் அதிகம். ஆனால் நியூயார்க் நகரத்தில் மர்கிட்டா ஆண்ட்ருஸ் என்ற 12 வயது பள்ளி மாணவி தனது தாயின் மீது வைத்த பாசம் மிக அதிகம். ஏனென்றால் இவளின் தந்தை இவள் சிறுமியாக இருந்தபொழுதே தாயை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இவளின் தாயார் மிகவும் கடினமாக வேலை செய்து இவளைப் படிக்க வைத்தாள். மேலும் தனது புதல்வியின் கல்லூரிப் படிப்புக்காக கடினமாக உழைத்து சேமித்து வந்தார். ஆனால் பெற்ற தாயின் கனவோ இந்த உலகத்தைச் சுற்றி வரவேண்டும் என்பதே. தனது குழந்தையின் நலன் கருதி தனது ஆசையை அந்த தாய் வெளிக்காட்டாமல் இரவு பகல் பார்க்காமல் பாடுபட்டு சேமித்து வந்தார். தாயின் ஆசையை மர்கிட்டா தெரிந்து கொண்டு எப்படியாவது தனது தாயை உலகச் சுற்றுலா அழைத்துச் செல்லவேண்டும் என்று விரும்பினாள். மர்கிட்டா பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த காரணத்தால் வேலைக்கு போய் உலகச் சுற்றுலா செல்வதற்கான...

Tuesday, 7 January 2014

ஒரு ஊர்ல ஒரு ஊழல் கணக்கு ?

புள்ளி விவரங்கள் பொதுவாக போரடிக்கக்கூடியவை. சமயத்தில் அதுவே சுவாரசியம் கொள்ளச் செய்துவிடுவதும் உண்டு. அக்கப்போர் விவரங்களாக இருக்கும் பட்சத்தில் கேட்கவே வேண்டாம். பக்கத்து வீட்டுக்காரரின் பாஸ்புக் கீழே கிடந்தால் எடுத்து அப்படியேவா கொடுத்துவிடுவோம்? அவசரமாகத் திறந்து ஒரு புரட்டு புரட்டமாட்டேன் என்றால் நீங்கள் மகாத்மா. நானெல்லாம் பாபாத்மா.இங்கே கவனியுங்கள். இது ஒரு புள்ளி விவரம். பக்கத்து வீட்டுக்காரரின் பாஸ்புக் போன்ற ஒன்று. இந்தியாவின் பக்கத்து வீட்டுக்காரர் சம்பந்தப்பட்டது. கடந்த வருடம் மட்டும் சீனாவில் 36,907 அரசு அதிகாரிகள் ஊழல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த முப்பத்தி ஆறாயிரத்தி சொச்சம் பிரகஸ்பதிகளும்...

Sunday, 5 January 2014

பெரும்பாலான மக்கள் உண்மை என நினைக்கும் சில பொய்யான விஷயங்கள்!!!

கடந்த 16 ஆம் நூற்றாண்டு வரை எல்லோரும் சூரியனும் கிரகங்களும் பூமியை சுற்றி வருகிறது என எண்ணியிருந்தனர். கடந்த 19 ஆம் நூற்றாண்டு வரை காலரா மற்றும் பிளேக் போன்ற தொற்று நோய்கள் அழுகும் பொருட்களில் உள்ள துகள்கள் காற்றில் கலப்பதால் பரவி வருகின்றன என்று எண்ணியிருந்தார்கள். கடந்த 20 ஆம் நூற்றாண்டு வரை அறுவை சிகிச்சை நிபுணர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக அசுத்த இரத்தத்தை வெளியேற்றுவதன் மூலம் ஆரோக்கியத்தை பாதிக்கும் நோய்களும் வெளியேறலாம் என்று இதை செய்து வந்தனர்.இத்தகைய தகவல்களை உண்மை என்று நம்மை எண்ண வைத்த முன்னோர்கள் இப்போதும் உலகம் உருண்டையாக உள்ளதென்றும், ஐஸ் கிரீம்கள் நம்மை பருமனாக்கும் என்ற தவறான கருத்துக்களை நம்ப வைக்கின்றனர்.பெருமளவில் வளர்ந்து வரும்...

எகிறும் பெட்ரோல், டீசல் விலை மாற்று எரிபொருளாக எத்தனால் வருமா?

ஆண்டுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்வையே அதிர்ச்சியோடு பார்த்தவர்களுக்கு இப்போது வழக்கமாகி விட்டது. குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு ஊடகங்களில் பிரதான செய்தியாக இடம் பிடிக்கிறது. அன்றாடம் வேலைக்கு செல்ல இரு சக்கர வாகனம் அல்லது கார் பயன்படுத்துபவர்களாக இருந்தால் எரிபொருளுக்கென தனியாக பட்ஜெட் போட்டு முன் கூட்டியே சேமிக்க பழகி விட்டனர். மற்ற பொருட்களின் விலைவாசி உயர்வுக்கும் அடிப்படை காரணமாக டீசல் விலை உயர்வு அமைந்து விடுகிறது.கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.47.93க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ரூ.74.74க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்...

Friday, 3 January 2014

செவ்வாய்க் கிரக ஒரு வழிப் பயணத்திற்கு 62 இந்தியர்கள் தேர்வு!

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லாப நோக்கின்றி செயல்படும் மார்ஸ் ஒன் என்ற நிறுவனம் செவ்வாய்க் கிரகத்தில் நிரந்தரமான மனிதக் குடியிருப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதையடுத்து அங்கு குடியேற 62 பேர் இந்தியாவிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செவ்வாய்க் கிரகத்தில் குடியேற விருப்பமுள்ள ஆர்வலர்களுக்கான விண்ணப்பங்களை அந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதற்கு பதில் அளித்து 140 நாடுகளில் இருந்து 2,00,000 பேர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பியிருந்தனர்.இவர்களில் இருந்து ஸ்பேஸ்.காம் அமைப்பு 1,058 பேரைத் தேர்ந்தெடுத்துள்ளது. இவர்களில் 297 பேர் அமெரிக்காவிலிருந்தும், 75 பேர் கனடாவிலிருந்தும், 62 பேர் இந்தியாவிலிருந்தும்,...

Sunday, 29 December 2013

2013 இல் இலங்கை : நிகழ்வுகள், அதிர்வுகள், மாற்றங்களின் தொகுப்பு

2013 இல் இலங்கை : நிகழ்வுகள், அதிர்வுகள், மாற்றங்களின் தொகுப்பு  ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகை, பொதுநலவாய மாநாடுகள், வடக்கு மாகாண தேர்தல், இந்து- இஸ்லாமிய மத மார்க்க ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் என்று இலங்கையின் அரசியல்- ஊடக தளத்தில் தொடர்ந்தும் பரபரப்பும், அதிர்வுகளும், மாற்றங்களும் இடம்பெற்றே வந்திருந்தது. 2013ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் மீது பாரிய அழுத்தங்களை வழங்கியது. அது, சர்வதேச ரீதியில் இதற்கு முன்னர் எதிர்கொள்ளாத அழுத்தமாக இருந்தது. இலங்கை ஊடக பரப்பில் அதிகம் பேசப்பட்ட விடயங்களின் செய்தி தொகுப்பு இது. 4tamilmedia-வுக்காக இலங்கையிலிருந்து சிறப்பு செய்தியாளர்களினால் தொகுக்கப்பட்டது. ஜனவரி:...

உருகுவே நாட்டில்தான் உலகின் எளிமையான ஜனாதிபதி வாழ்கிறார்!

ஜனாதிபதி என்றாலே…நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் வாழ்ந்துக் கொண்டு, கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவழித்து நாடு நாடாக சுற்றுப்பயணம் செய்பவர் என்பதை நாம் அறிவோம். இந்த இலக்கணத்திற்கு நேர்மாறாகவும் ஓர் ஜனாதிபதி வாழ்கின்றார் என்பது பலருக்கு ஆச்சரியமான தகவலாக இருக்கலாம்.இவர் தன மாதாந்திர சம்பளத்தில் 90 சதவீதத்தை அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கிவிட்டு, உருகுவே குடிமகனின் சராசரி சம்பளமான 775 அமெரிக்க டாலர்களை வைத்தே தனது குடும்ப செலவை சமாளித்து வருகிறாராக்கும்!உருகுவே நாட்டின் அதிபர் ஜோஸ் முஜிகா (77). ஜனாதிபதிக்கு அரசு வழங்கும் ஆடம்பர மாளிகையை புறக்கணித்துவிட்டு, புழுதி படிந்த சாலையோரம் உள்ள தனது மனைவிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இவர்...

Wednesday, 25 December 2013

மார்கரட் விட்மேன் - இவரைத் தெரியுமா?

$ ஹியூலெட் பக்கார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. $ இதற்கு முன்பு ஆன்லைன் வணிக நிறுவனமான இ-பே நிறுவனத்தில் பத்து ஆண்டுகள் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார். $ இவர் பணியில் சேரும்போது 4 மில்லியன் டாலராக இருந்த நிறுவனத்தின் வருமானம், 2008-ம் ஆண்டில் வெளியேறும் போது 8 பில்லியன் டாலராக உயர்ந்தது. $ இ-பே தவிர, புராக்டர் அண்ட் கேம்பிள், பெய்ன் அண்ட் கம்பெனி, வால்ட் டிஸ்னி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார். $ இவருக்கு அரசியல் ஆசையும் இருக்கிறது. 2009-ம் ஆண்டில் கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். $ ஹார்வேர்ட் பிஸினஸ் ரெவ்யூ, ஃபோர்ப்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளின் சிறந்த சி.இ.ஓ. பட்டியலில்...

புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் எரிமலைகள்...?

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புவியின் வெப்பத்தை கட்டுக்குள் வைக்கும் திறன் எரிமலைகளுக்கு இருக்கிறது என்னும் ஒரு ஆச்சரிய தகவலை அண்மையில் வெளியான ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் விஞ்ஞானிகள் கணித்ததை விட பூமி குறைந்த அளவே வெப்பமடைந்திருந்ததன் காரணத்தை கண்டறிய முயன்ற விஞ்ஞானிகளுக்கு எரிமலைகள் பூமியை வெப்பமடைதலிலிருந்து காத்திருப்பது தெரியவந்தது.பூமி வெப்பமயமாதலில் முக்கிய பங்கு வகிப்பது வெப்ப வாயுக்கள் எனப்படும் Green house gases தான். இந்த வாயுக்கள் சூரிய வெப்பத்தை உள்வாங்கி பூமியின் வளிமண்டலத்தின் வெப்பநிலையை படிப்படியாக அதிகரிக்கின்றன .இந்நிலையில், வெப்ப வாயுக்களால் பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் வெப்பநிலை மாறுதலை கட்டுப்படுத்தும்...

Tuesday, 24 December 2013

50 ஆயிரம் பேருடன் உலகைச் சுற்றிவரும் கப்பல்!

பாடசாலைகள், வைத்தியசாலைகள், விமான நிலையம், ஆடம்பர விடுதிகள், பூங்காக்கள் ஆகியவற்றுடன் 50 ஆயிரம் பேர் பயணிக்கக் கூடிய இராட்சதக் கப்பல் அமெரிக்காவிலிருந்து உலகத்தைச் சுற்றிவரத் தயாராகவுள்ளது.Free...dom Ship என்ற பெயருடைய இந்தக் கப்பல் மிதக்கும் உலகம் என அழைக்கப்படுகிறது.அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றினால் ஆடம்பர வர்க்கத்தினருக்காக இவ்வாறானதொரு கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து உலகத்தை சுற்றி வரவுள்ளதாக Freedom Ship இன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதில் 25 அடுக்கு மாடிகள் உண்டு. இங்கு குடியிருக்கும் 50 ஆயிரம் பேருக்கு மேலதிகமாக 30 ஆயிரம் விருந்தினர்கள் பயணிக்கக் கூடிய...

நாஸ்ட்ரடாமஸ் - இந்தியா மட்டும்தான் வல்லரசு நாடாகத் திகழும்!

21 ஆம் நூற்றாண்டில் உலகில் இந்தியா மட்டும்தான் வல்லரசு நாடாகத் திகழும்! அதிலும் தென்னாட்டிலிருந்தே மிகச்சக்தி வாய்ந்த ஆட்சி அமையும்! - நாஸ்ட்ரடாமஸ்(Nostradamus)இவருடைய 500 ஆண்டுகளுக்கு முன் எழுதி வைக்கப்பட்ட உலகப்புகழ் பெற்ற தீர்க்க தரிசனம் நிறைவேறுமா?!இவரைப் பற்றிச் சில தகவல்கள்.நாஸ்ட்ரடாமஸ் ஒரு புரியாத புதிர் ( Nostradamus )..!இந்தியர்களில் சித்தர்களும், ஞானிகளும், ரிஷிகளும், சோதிட நிபுணர்களும் வருங்காலத்தைக் கணித்து வைத்ததைப் போலவே மேல்நாட்டினரும் கணித்திருந்தனர்.அவர்களில் மிகவும் புராதனமானவர் இம்ஹோட்டெப் (Imhotep). இவர் நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் தோன்றியவர். எகிப்தியப் பேரரசன் ஜோஸரின் மதிமந்திரி; பொறியியல் வல்லுனர்;...

Monday, 23 December 2013

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போகும் இந்தியர் பாபி ஜிண்டா!?

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 2016ம் ஆண்டு நடக்க உள்ளது இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு அமெரிக்க இந்தியர் பாபிஜிண்டால் போட்டியிட உள்ளார்.இந்த ஜிண்டாலின் பெற்றோரான அமர் மற்றும் ராஜ் ஜிண்டால், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தவர்களை தற்போதைய சர்ச்சையின் போது(ம) முன்னிலைப் படுத்தப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.வரும் 2016ம் ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில், அமெரிக்க இந்தியரான பாபி ஜிண்டால் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. குடியரசு கட்சியின் முக்கிய தலைவரும், தற்போதைய லூசியானா மாநில கவர்னருமாக பாபி ஜிண்டால் உள்ளார்.சமீப காலமாக லூசியானாவில் கல்வி உதவி தொகை வழங்குதல், வருமான...

பழைய நாடுகளும் அவறின் புதிய பெயர்களும்?

1.டச்சு கயானா --- சுரினாம்.2.அப்பர் வோல்டா --- புர்க்கினா ஃபாஸோ3.அபிசீனியா --- எத்தியோப்பியா4.கோல்டு கோஸ்ட் --- கானா5.பசுட்டோலாந்து --- லெசதொ6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா7.வட ரொடீஷியா --- ஜாம்பியா8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட்11.சாயிர் --- காங்கோ13.சோவியத்யூனியன் --- ரஷ்யா14.பர்மா --- மியான்மர்15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்16.சிலோன் --- ஸ்ரீலங்கா17.கம்பூச்சியா --- கம்போடியா18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான்19.மெஸமடோமியா --- ஈராக்20.சயாம் --- தாய்லாந்து21.பார்மோஸ --- தைவான்22.ஹாலந்து --- நெதர்லாந்து23.மலாவாய் --- நியூசிலாந்து24.மலகாஸி --- மடகாஸ்கர்25.பாலஸ்தீனம்...

Wednesday, 18 December 2013

ஓர் வரலாற்று அதிசயம்...?

இன்றைய மனித சமூகம் இதுவரை விடைகாண முடியாமற் போன பலவிடையங்கள் புவியில் உண்டு. அதில் ஒன்று தெற்கு இக்கிலாந்தில் காணப்படும் கற்தூண்கள், இற்றைக்கு 5000 வருடங்களுக்கு பழமை வாய்ந்த ஒரு வரலாற்று சின்னம். எகிப்தின் பிரமிட்டுக்கள் வளர்ச்சியுற்ற காலப்பகுதியில் இது இப்பகுதியில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் எனப்படுகின்றது. வரலாற்றில் பல சமூகங்களும் இப்பணியில் குறிப்பிடத்தக்களவு பங்கு கொண்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்களால் பல... மில்லியன் கணக்கான மணித்தியாலங்கள் செலவு செய்யப்பட்டு இச்செயற்றிட்டம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது.அதிகபட்டசம் ஒவ்வொன்றும் 4 டன்    எடையுடைய 82 வரையான நீல பளிங்கு கற்கள் ஏறக்குறைய 240...

Monday, 16 December 2013

மம்மிக்கள் பற்றிய சில உண்மைகள்!

உலகின் மிகப் பெரிய மம்மி கண்காட்சி லாஸ் ஏஞ்சலில் உள்ள கலிபோர்னியா அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கிறது. இக்கண்காட்சியில் குழந்தைகள் மற்றும் விலங்குகளின் மம்மிக்கள் இடம்பெற்றுள்ளன.கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் மம்மிக்கள் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இக்கண்காட்சியில் மொத்தம் 140 மம்மிக்கள் இடம்பெற்றுள்ளன,இம்மம்மிக்கள் 7 நாடுகளிலுள்ள 20 அரும்பொருள்காட்சியகங்களிலிருந்து கொண்டுவரப்பட்டவையாகும்.விஞ்ஞானிகள் முதல் முறையாக மம்மியில் டி.என்.ஏ ஆய்வு மற்றும் ஸ்கேனிங் செய்து அவை எவ்வகை திரவங்களால் உடல் சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது எனும் கடும்முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வின் மூலம் அந்த குறிப்பிட்ட மம்மியின் வயது மற்றும் இறப்பிற்கான காரணம் பற்றி அறியலாம்.மம்மிக்கள் பற்றிய சில உண்மைகள்* ஒரு இறந்த உடல் பாடம் (மம்மி) செய்யப்பட்டால் அதன் பிறகு அந்த உடல் அழுகுவது தடுக்கப்படுகிறது....

Saturday, 14 December 2013

சஹாரா கண்...

சஹாரா கண்... மொரீஷியானா பாலைவனத்தில் காணப்படும் 25 மைல் அகலமான பள்ளம் ஒன்று வானமார்க்கமாக பார்க்கும்போது....  கண் போன்று தோன்றுவதால், சஹாரா கண் என்ற பெயர் அதற்கு வந்தத...

ஸ்பாட்டட் லேக்...

ஸ்பாட்டட் லேக்... கொலம்பியாவில் உள்ள ஸ்பாட்டட் ஏரியில், கோடையில் முக்கால்வாசி    தண்ணீர் ஆவியாகி விடுமாம். இதனால் ஏரியில் உள்ள உப்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் மட்டும் உள்ளேயே தங்கி விடுமாம். இதன் காரணமாக, நல்ல சீசன் காலத்தில்,  ஏரித்தண்ணீரில் மின்னலாய் காணப்படும் புள்ளிகளாலேயே ஏரிக்கு ஸ்பாட்டட் ஏரி என்று பெயர். ...

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு…!!

திகிலூட்டும் உண்மைகண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும், அங்கு போகும் மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள். இந்த மர்ம தீவு பற்றிய விஷயங்கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற "துர்கானா ஏரி" கென்யாவில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு, பல்வேறு நதிகளில் இருந்து நீர் வருகிறது. இங்கு நிலவும் கடும் வெப்பத்தால், ஒரு பகுதி ஆவியாகிறது. மீதமுள்ள நீர், அதிக உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. கென்யாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடங்களில்...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top