.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 26 November 2013

முளைகட்டிய நவதானிய சூப் - சமையல்!

 தேவையானவை: முளைகட்டிய பயறுகள் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, பூண்டு - 2 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - காரத்துக்கேற்ப, கொத்தமல்லி தழை - தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் பால் - 1 கப்  புளிக்காத கெட்டி தயிர் - அரை கப், உப்பு - தேவையான அளவு.செய்முறை:  * வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  * முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும்.  * மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.  * காடாயில் எண்ணெயை காய வைத்து, அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை...

குப்பைமேனி தைலம் தயாரிக்கலாம் வாங்க!

  குப்பை மேட்டில் கூட முளைத்து நிற்கும் செடி குப்பைமேனி. நாம் நடந்து செல்லும் ரோட்டில், கடந்து செல்லும் பாதையில் என எங்கும் காணப் பட்டாலும், நாம் காணாது கடந்து விடுவோம் குப்பைமேனியை. காரணம் இதன் அருமை நமக்கு தெரியாது. விதைக்க வேண்டாம். உரம் போட வேண்டாம். சிறிய மண் பரப்பு இருந்தால் போதும். தானே தழைத்து நிற்கும் சுயம்பு இந்த குப்பைமேனி. Antibiotic Properties கொண்டது குப்பைமேனி. பலவித infectionலிருந்து நம்மை காக்கும். இதில் உள்ள anti inflammatory properties வீக்கத்தை குறைக்கும்.  "தோலில் ஏற்படும் பலவித பிரச்சினைகளுக்கு சிறந்த மருந்து குப்பைமேனி தைலம்." Eczema எனப்படும் ஒருவகை தோல் நோய், சிறு குழந்தைகளுக்கு வரும் கரப்பான், தோலில்...

வாழ்க்கைப் பிரச்சனைகள் – தீர்வுகள்!

மனித உறவுப் பிரச்சனைகள் (Human Relations Problems) மன நிம்மதியைப் போக்கிவிடுகின்றன. வாழ்க்கையில் பிடிப்பினைத் தளர்த்துகின்றன. செயலூக்கத்தினைக் குறைக்கின்றன. சிந்தனைத்திறன், அறிவு (Creativity) ஆகியவற்றைப் பாதிக்கின்றன. இவற்றிற்குக் காரணங்கள் யாவை? தீர்வுகள் யாவை என்பதைப் பார்ப்போம்.காரணங்கள்தன்னைப் புரிதல், மற்றவர்களைப் புரிதல், வாழ்வினைப் பற்றிய தெளிவான நோக்கு- இவைகள் இல்லாத பட்சத்தில் பிரச்சனைகள் உருவாகின்றன.தீர்வுகள்1. உயர்வு மனப்பான்மை (Superiorty Complex) & தாழ்வு மனப்பான்மை (Inferiority complex) கொள்ளாமல் இருக்க வேண்டும். கர்வம் கொண்ட, அகங்காரம் மிக்க, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற, தானே பெரிது என்று எண்ணுகின்ற, மனப்பான்மையை போக்கிக்கொள்வது எப்படி?இந்த உலகில் எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்தையும் தெரிந்துகொள்ளவும் முடியாது. ஒரு உதாரணத்திற்கு, ஒரு...

பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் என்ன செய்யலாம் அருமையான தகவல்!

  கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன் . . . . உலகோர்க் கெல்லாம் காரமா மூலியடா பங்கம்பாளை கொண்டு . . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால் கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம் . . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும் நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா . . . . அன்றான ஆகாசகருடன் மூலி அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம் - சித்தர் பாடல். ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல். பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது...

கடத்தியாவது நடிக்க வைக்கலாம்!

ரம்யா கால்ஷீட் பிரச்னை செய்வதால் அவரைக் கடத்திச் சென்று ஷூட்டிங் நடத்தலாம் என்று கன்னட ஹீரோ சிவராஜ்குமார் தெரிவித்த கருத்தால், நடிகை ரம்யா கொதிப்படைந்துள்ளார். கர்நாடகா இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரம்யா நடிப்புக்கு முழுக்கு போடுவதாக அறிவித்தார். இதனால் இவர் ஒப்புக்கொண்டிருந்த 'நீர் டோஸ்' உள்ளிட்ட சில கன்னடப் படங்களின் ஷூட்டிங் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.'நீர் டோஸ்' படத்தில் பாலியல் தொழிலாளி வேடத்தில் ரம்யா நடிக்க இருந்தார். எம்.பி ஆன பிறகு அப்படி நடிப்பது தனது இமேஜை பாதிக்கும் என்று கூறி நடிக்க மறுத்தார். இதைத் தயாரிப்பாளர் ஜக்கேஷ் ஏற்கவில்லை. ரம்யா மீது பிலிம்சேம்பரில் புகார் அளித்தார். இருதரப்பினரிடமும் பிலிம்சேம்பர் நிர்வாகிகள்...

தமிழர்களால் கைவிடப்பட்டவை!

அம்மி : குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல்.அண்டா : அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்.அடுக்குப்பானை: ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர்.ஆட்டுக்கல் : வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும், குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம்.அங்குஸ்தான்: தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை.ஒட்டியாணம்: பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்து கொள்ளும் பொன்னால்...

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!வசதியாகத்தான் இருக்கிறது மகனே…நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும்  இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது! முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்! இதுவரையில் ஒரு முறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல்  அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது. நீ...

ஒருவேளை இப்படி இருக்குமோ ?

ஆசைதான் துன்பத்திற்கு காரணம் ஆதலால் ஆசையை ஒழிக்க வேண்டும் - புத்தர் எந்த எந்த ஆசைகளை ஒழிக்க வேண்டும் ? உலகில் ஆசைகளை அழித்தவன் ஒருவன் மட்டுமே  - அவனுக்கு பெயர் சடலம்  ஆம் உயிரில்லா உடலில் மட்டும் தான் ஆசை இல்லை.»» ஆசைகளை ஒழிக்கவேண்டும் என்பதே ஒரு ஆசை»» உணவு உண்பதே உயிர்வாழ வேண்டும் என்ற ஆசையில்»» உழைப்பதே குடும்பத்தை காக்கும் ஆசையில்»» பாசம் வைப்பது பாசம் கிடைக்கும் எனும் ஆசையில் இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் ஆசை உள்ளது . ## வைக்கவேண்டிய ஆசைகள்»» பெற்றோரை காக்க ஆசைப்படு»» வறியோர்க்கு வழங்க ஆசைப்படு»» சிறியோரை சீர்படுத்த ஆசைப்படு»» மழலையுடன் விளையாட ஆசைப்படு»» உன் மேல் நீ ஆசைப்படு இப்படி ஆசைப்படவேண்டிய விசயங்கள் நிறைய உள்ளது.கண்டிப்பாக இவை நமக்கு ஆசை தேவை.இவை மேல் நீ ஆசைப்பட்டால் மகிழ்ச்சி உன்னுடன் வாழ ஆசைப்படும்.## வைக்ககூடாத ஆசைகள்»» பிறர் மனைவி மேல் ஆசை»»...

விஜய் சேதுபதியுடன் ஒரு 'ரேபிட் ஃபயர்’ ரவுண்ட்...

''உங்க வெயிட் எவ்வளவு?''  ''ரொம்ப வருஷமா, 85 கிலோ!'' ''பொக்கிஷம்?''  ''என் அப்பாவின் சில புகைப்படங்கள். அப்புறம் 'தென்மேற்குப் பருவக்காற்று’ படம் வெளியான சமயம், என்னைப் பாராட்டி ஒரு சின்னக் குறிப்பு விகடன்ல வந்தது. அதை என் தங்கச்சி லேமினேட் பண்ணிக் கொடுத்தாங்க!'' ''மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கும் சினிமா?''  ''முள்ளும் மலரும்'' ''இப்போ பர்ஸ்ல எவ்வளவு பணம் வெச்சிருக்கீங்க?''   (எண்ணிப் பார்த்துச் சொல்கிறார்) ''250 ரூபா!'' ''உங்க உயிர்த் தோழன்?''  ''சூர்யா... என் பயங்கர தோஸ்த். ஆனா, ப்ளஸ் ஒன் படிக்கும்போது இறந்துட்டான். ப்ச்... அவன் ஞாபகமாத்தான் என் மகனுக்கு 'சூர்யா’னு பேர் வெச்சேன்!''   ''இப்போ...

"தோரணம்" பற்றிய அறிய தகவல்.!

  தோரணம் தமிழர்கள் நிகழ்வுகளைக் குறிக்கும் பண்பாட்டு அடையாளமாக செய்யும் ஒரு அலங்கார அமைப்பாகும். இதை தென்னங் குருத்தோலை என்பவற்றால் செய்வார்கள். இவற்றில் செய்யப்படும் மடிப்புக் கட்டமைப்பு குருவிகள் எனப்படும். சிலவேளைகளில் தோரணத்துடன் மாவிலைகளையும் சேர்த்துக் கட்டுவர். இது மாவிலை தோரணம் எனப்படும். தோரணங்கள் பொதுவாக இரண்டு வகைகளாக வகுக்கப்படும். 1. மங்கள தோரணம்.2. அமங்கள தோரணம் மங்கள தோரணம்: மாவிலை தோரணம், சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலான மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படுபவை மங்கள தோரணங்கள் எனப்படும். இவை நான்கு குருவிகளைக் கொண்டதாகக் காணப்படும்.  குருவிகளின் தலை மேல் நோக்கியும் வால் கீழ் நோக்கியும் இருக்கவேண்டும். அமங்கள...

பிரசவத்திற்குப் பின் வயிற்றுச் சதையை குறைக்க சில எளிய வழிகள்!!!

பெண்களுக்கு குழந்தைப்பேறு ஒரு சந்தோஷமான விஷயம் என்றால் அந்த சந்தோஷ நிகழ்வுக்குப் பின்பு வயிற்றுச் சதையை கட்டுப்படுத்துவது மற்றொரு சவாலான விஷயம். புதிதாக தாய்மைப் பேற்றை அடைந்த எல்லா பெண்களும் பிரசவத்திற்குப் பிறகு வயிற்றுப் பகுதியில் சேர்ந்த சதையை எப்படி குறைப்பது என்று கவலைப்பட ஆரம்பித்துவிடுகின்றனர்.வயிற்றுச்சதை என்று பார்க்கும் போது இரண்டு வகை கொழுப்புத்திசுக்களால் இந்த சதை உருவாகிறது. ஒன்று வயிற்றின் உள் உறுப்புகளை சூழ்ந்து சேர்ந்திருக்கும் கொழுப்பு, மற்றொன்று தோலுக்கடியில் சேகரமாகியிருக்கும் கொழுப்பு. வயிற்றின் உள்ளே சேகரமாகியிருக்கும் கொழுப்பை நம்மால் பார்க்கவோ உணரவோ முடியாது. ஆனால் இது மிக அபாயகரமானது. அதே சமயம் தோலுக்கு அடியிலுள்ள கொழுப்பை நம்மால் தொட்டுணர்ந்து பார்க்க முடியும். மேலும் உள்ளே உள்ள கொழுப்பின் அளவு அதிமாகும் போது, அது தோலுக்கு கீழ் உள்ள கொழுப்பையும் புறந்தள்ளி வயிற்றை...

'ஐ' படத்தில் பவர்ஸ்டார் இல்லையா?

  சமீபத்தில் போலீஸ் விசாரணைக்காக அந்தமான் வரைக்கும் போய் வந்தார் பவர்ஸ்டார் சீனிவாசன்.இந்த ட்ரிப் அவருக்கு எவ்வளவு மன உளைச்சலைக் கொடுத்திருக்கும்? என்று தெரியவில்லை.விசாரணை முடிந்து சென்னை திரும்பி, பிணையில் ரிலீஸ் ஆகி, என்று பல கட்டங்களை தாண்டிய பவர் ஸ்டாரை மீண்டும் அதே அந்தமானுக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள் ஒரு படத்திற்காக .'நாலுபேரும் ரொம்ப நல்லவங்க' என்ற படத்திற்காகத்தான் இந்த விசேஷ ட்ரிப். இசைஞானி இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராசனின் மகன் ஜோ இயக்கும் படம் இது.ஒரு குடும்பத்திடம் பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பி தராத டெரர் கேரக்டரில் நடிக்கிறாராம் பவர் ஸ்டார். கதைப்படி இவரை அந்தமான் சிறையில் அடைக்கிறார்கள் . அதற்காக, செல்லுலார் சிறையில்...

வீட்டில் சுபநிகழ்ச்சிகளில் வாழைமரம் கட்டுவது ஏன்?

  சுபநிகழ்வு நடக்கும் வீட்டுக்கு அடையாளமே வாசலில் வாழை மரம் கட்டுவது தான்.இதை எதற்கோ அழகுக்காக கட்டுவதாகவும், மணமக்கள் குடும்பம் வாழையடி வாழையாக தழைக்க வேண்டும் என்றும் சொல்வார்கள். இது ஆன்மிக காரணம்.அறிவியல் காரணமும் இதற்கு உண்டு.!தாவரங்கள் காற்றில் இருக்கும் கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு, ஆக்சிஜனைப் பரவச் செய்கின்றன. சுபநிகழ்வுக்கு ஏராளமான விருந்தினர்கள் வருவார்கள். அவர்கள் விடும் மூச்சுக் காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடு காற்றில் கலக்கும்அத்துடன் கூடி நிற்பவர்களின் உடல் உஷ்ணம், வியர்வை நாற்றமும் சேர்ந்து கொள்ளும். அங்கு கட்டப்பட்டிருக்கும் மாவிலைத் தோரணங்களும், வாழை மரங்களும் காற்றில் பரவியிருக்கும் கிருமிகளை அழிப்பதோடு, உஷ்ணத்தையும்...

புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்!

எதைச் செய்தாலும் ஏன்? எதற்கு? என்றும், அதனால் நமக்கு என்ன பயன் என்றும், தெளிவுபடுத்திக் கொண்டால் அந்தச் செயலை சிறப்பாக செய்ய முடியும். செயல் செய்வதற்கும் ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகும். அந்த வகையில் நூல்களை ஏன் படிக்கவேண்டும்? என்பது பற்றி சில விளக்கங்களைப் பார்ப்போம்.நூல் படிப்பதறகும் தொலைக்காட்சிபார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம்ஒரு உதாரணத்திறகு ‘ஒரு அரசன் குதிரையில் வேகமாக ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருக்கின்றான். அப்பொழுது-மேற்கண்டதைப் படிக்கும்போது ஒரு அரசனையும், ஒரு குதிரையையும், ஒரு காட்டையும் மனம் கற்பனை செய்யும். அந்த செயல் நிகழ்வது போல் மனத்திரையில் காட்சிகள் விரியும். இவ்வாறு நிகழும்போது மனிதனுடைய வலது மூளை சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கும். வலது மூளை கற்பனை சக்திக்கும், ஆக்க அறிவிற்கும் (Creativity) காரணமாக இருப்பதால், படிப்பதால் நன்மை விளைகிறது.மேற்கண்ட காட்சியை...

பூண்டு சூப் - சமையல்!

தேவையானவை: முழுப்பூண்டு – 2 ...  வெங்காயம் – ஒன்று   தண்ணீர் – அரை லிட்டர்   சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்   பால் – ஒரு கப்   கெட்டித் தயிர் – சிறிதளவு   ஆலிவ் ஆயில் – ஒரு டேபிள்ஸ்பூன்  மிளகுத் தூள், உப்பு – தேவையான அளவு. செய்முறை: *பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். * வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். * கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி சூடாக்கி, உரித்த பூண்டு சேர்த்து நன்கு வறுக்கவும். * இதில் சிறிது எடுத்து தனியே வைக்கவும். * நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். * சோள மாவு சேர்த்து வறுத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டிஇல்லாமல் கிளறி, தண்ணீரை சேர்த்து...

அரச மரம் - அனைத்து பயன்களும் ஒரே கட்டுரையில்!

 புவியில் வாழும் உயிர்களுக்கு உயிர் கொடுப்பது மரங்கள்தான். மரங்கள்தான் சூரிய ஒளியிலிருந்து வெப்பத்தை உள்வாங்கி, குளோரோபில் மூலம் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. இதனாலேயே தாம் நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். அப்படி நம் முன்னோர்கள் வழிபட்ட மரங்களுள் அரச மரமும் ஒன்று. இன்று குளக்கரை, கோவில்களில் அரச மரம் இல்லாத கிராமங்களை நாம் காண முடியாது. நீண்ட காலம் வாழும் அரச மரங்கள் தெய்வமாக போற்றப்படுகின்றன. வேம்பை பெண் தெய்வமாக வணங்குவார்கள். அரச மரத்தை ஆண்தெய்வமாக வணங்குவர். பெரும்பாலும் அரச மரம் இருக்கும் இடமெல்லாம் பிள்ளையார் சிலை இருக்கும்.புத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக நாம் அறிவோம்....

ஆண்களுக்கும் வந்துருச்சுப்பா 'பிரா'...!!

பெண்களுக்கே உரிய பிரா ... இனிமேல் ஆண்களுக்கும் கிடைக்கப் போகிறது.. அதுவும் எப்படி.. புஷ் அப் பிரா... ஆம், ஆண்களுக்காகவே பிரத்யேகமான பிராவை அறிமுகப்படுத்தியுள்ளனர்.பேஷன் துறையினர்தான் இந்த லந்துக்...கார வேலையில் இறங்கியுள்ளனர்.ஆண்கள் மத்தியில் இது வித்தியாசமான ஆச்சரியத்தையும், சிலரது எதிர்ப்புகளையும் ஒரு சேர பெற்றுள்ளதாம்.பெண்களுக்கு மட்டும்தானா...பெண்களுக்கான பிரத்யேக உள்ளாடைதான் பிரேசியர் எனப்படும் பிரா. பெண்களின் தனிச் சிறப்பான உள்ளாடையாகவும் காலம் காலமாக திகழ்கிறது.ஆண்களுக்கு முண்டா பனியன்.. கை வச்ச பனியன் ஆண்களைப் பொறுத்தவரை முண்டா பனியன், கை வச்ச பனியன் என்று வரிசைப்படுத்தியுள்ளனர்.ஆண்களுக்கும் வந்தாச்சுப்பா பிரா ஆனால் இப்போது ஆண்களுக்கும்...

நமமை போலவே செயல்படும் ரோபோக்கள் தயார்!

உலகில் ரோபோட் என்றழைக்கப்படும் முதல் இயந்திர மனிதன் கலிபோர்னியாவிலுள்ள ஸ்டாண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 1968-இல் பிறந்தான்.வீட்டு வேலை செய்யும் சிறிய ரோபோ என்னும் இயந்திர மனிதனின் உயரம் மூன்றடி. எடை – இருபத்தி இரண்டரை கிலோ ஆகும்.போலீஸ் ரோபோ என்ற ஒன்று உண்டு. அதன் எடை 87 கிலோ. உயரம் ஒன்றரை மீட்டர். பெயர் ஞடஈ-2.மனிதனுக்கு உள்ள அத்தனை உறுப்புக்களையும் கொண்ட ரோபோவுக்கு “லெனின் கிரேடு’ என்று பெயர். இது ரோபோ இயல் மற்றும் பொறியியல் சைபர்னடிக்ஸ் கழகத்தில் உள்ளது.அயர்லாந்து அருகே அட்லாண்டிக் கடலில் ஏர்இந்தியா ஜெட் விமானம் வெடித்துச் சிதறியபோது கடலில் மூழ்கிய பொருள்களைக் கண்டெடுத்த ரோபோவின் பெயர் “ஸ்கார்ப்’.2050,ம் ஆண்டுக்குள் சிவப்பு விளக்கு ஏரியாக்களில்...

கடலின் அடியில் ஹோட்டல் – இதுதான் டாப்!

சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வர,அமெரிக்காவின் ஃப்ளோரிடா , மாலத்தீவு மற்றும் ஸ்வீடனை அடுத்து – கடலின் அடியில் தங்கும் ஹோட்டல் வரிசையில் இது தான் இப்ப நம்பர் 1 ஆப்ரிக்காவில் உள்ள பெம்பா தீவில் இந்தியன் ஓஷன் கடற்பரப்பில் அமைந்துள்ள மான்ட்டா ரிஸார்ட் தான் ஹாட் டெஸ்டினேஷன். மூன்று அடுக்குகள் கொண்ட இந்த ஹோட்டலில் கீழ் பகுதி பெட்ரூம் எட்டு கண்ணாடிகள் கொண்டது அதனால் 24 மணி நேரமும் பெரிய சிறிய அத்தனை வகை மீன்களும் சுற்றி கொண்டே இருக்கும். அதுக்கு அடுத்த தளத்தில் வரவேற்ப்பறை அதுவும் தண்ணீரில் மூழ்கி இருக்கும். அதை தாண்டி மேலே வந்தால் தண்ணீருக்கு மேல் இருக்கும் மொட்டை மாடி உண்மையிலெ சூப்பர் ஹோட்டல் தாங்க....

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் குரலில் தயாரான அனிமேஷன்!

டீச் எயிட்ஸ்’ அமைப்பின் சார்பில் எச்ஐவி தொற்று விழிப்புணர்வு குறித்த அனிமேஷன் படம் திரையிடும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. தமிழில் உருவாக்கப் பட்டிருக்கும் இந்த அனிமேஷன் படத்தில் நடிகர்கள் சூர்யா, சித்தார்த், நடிகைகள் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் குரல் கொடுத்திருக்கிறார்கள்.டிசம்பர் 1 ம் தேதி உலக எயிட்ஸ் தினமாக அனுசரிப்பதை முன்னிட்டு இந்த அனிமேஷன் படக்காட்சியை, ‘டீச் எயிட்ஸ்’ அமைப்பு தமிழ்நாடு முழுக்க கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் திரையிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவெடுத்துள்ளது. இது குறித்த நிருபர் சந்திப்பில் தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் இணை இயக்குநர் லீலாகிருஷ்ணன் பேசும்போது ‘‘தமிழ்நாட்டில் வரும் 2015 ஆம் ஆண்டுக்குள் எயிட்ஸ்...

சுடு தண்ணீர் ஷவரில் குளிக்க வேண்டாமே!!!

சுடு தண்ணீரில் குளித்தால், உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும் தான். அதிலும் உடலில் தசை வலி இருக்கும் போது சுடு தண்ணீரில் குளித்தால், அந்த வலி பறந்தே போகும். அதிலும் சுடு தண்ணீர் வரும் ஷவரில் குளித்தால், அருமையாக இருக்கும். ஆனால் அந்த சுடு தண்ணீரை தலைக்கு ஊற்றினால், கூந்தல் தான் அதிகம் பாதிக்கப்படும்.ஆகவே குளிர்காலத்தில் தண்ணீர் அதிக குளிர்ச்சியுடன் இருக்கிறது என்பதற்காக, சுடு தண்ணீரில் தான் அதிகம் குளிப்போம். ஆனால் உண்மையில் அவ்வாறு குளித்தால், கூந்தல் உதிர்தல் அதிகமாகும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.மேலும் எதற்கு சுடு தண்ணீரில் குளிக்கக் கூடாது என்று பல காரணங்களை நிபுணர்கள் கூறுவதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…சூடான நீரில்...

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா..குட்டிக்கதைகள்!

  ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... இது ஜப்பானில் நடந்த உண்மை கதை !ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த...

திருமணம் முடித்த கையோடு புகுந்த வீட்டில் கைதட்டல் வாங்க......

திருமண ஷாப்பிங், பியூட்டி பார்லர் என்று குஷியாக இருக்கும் புதுப்பெண்கள், அடுத்த மாதம் முதலே ஒரு குடும்பத்தைக் கட்டி ஆளும் பொறுப்புக்கு பதவி உயர்வு பெற்றுவிடுவார்கள். குறிப்பாக முன்பின் அறிமுகமில்லாத வீட்டின் நிதி நிர்வாகம் அவர்கள் கைக்கு வரும். கணவரின் சம்பளம், இன்ஷூரன்ஸ், லோன், வரி என்று அவற்றை ஆரம்பம் முதலே திறம்பட திட்டமிட்டு, புகுந்த வீட்டில் கைதட்டல் வாங்க இங்கே அணிவகுக்கின்றன அத்தியாவசியமான நிதி ஆலோசனைகள்... தனிக்குடித்தன தயாரிப்புகள்!திருமணம் முடித்த கையோடு, ஃபர்னிச்சர் முதல் பாத்திரங்கள் வரை வாங்க வேண்டியிருக்கும். தனிக்குடித்தனம் என்றால், இது கட்டாயம். இப்படி வாங்கும்போது, நீண்டகாலத்துக்கு பயன்தரும் வகையில் யோசித்து வாங்குவது நல்லது. வீட்டுக்கு வந்து போகும் பெற்றோர், உறவினர்களுக்கு ஏற்றபடியும், குழந்தைகள் வளரும்வரை அவர்களின் சேட்டைக்குஈடுகொடுக்கும் விதமாகவும் ஒவ்வொரு பொருளையும் வாங்கினால்,...

அம்மா ஒரு பென் ட்ரைவ்!

    சொல்லுங்க... சொல்லுங்க... உங்கம்மாவுக்கு என்ன தெரியும்!நான்கு வயதுக் குழந்தை: அம்மாவுக்கு எல்லாம் தெரியும்... அம்மாதான் கடவுள்!...எட்டு வயது மடி புள்ள: அம்மாவுக்கு நிறையத் தெரியும்... அம்மாதான் குரு!12 வயது கைப்புள்ள: அம்மாவுக்கு ஓரளவுக்குத் தெரியும்... அம்மா ஒரு நபர்!16 வயது பருவ புள்ள: அம்மாவுக்கு ஒண்ணும் தெரியாது... அம்மா ஒரு எதிரி!20 வயது வாலிபப் புள்ள: அம்மா பழம் பஞ்சாங்கம்... அம்மா ஒரு அசடு!24 வயது கல்யாணப் புள்ள: அம்மாவுக்கு கொஞ்சம் தெரியும்... அம்மா ஒரு அட்வைசர்!30 வயது குடும்பப்புள்ள: அம்மாகிட்ட கேட்டுச் செய்யலாம்... அம்மா ஒரு ஆதரவு!50 வயது ரெண்டுங்கெட்டான்: அம்மா சொல்றதுதான் சரி... அம்மா ஒரு தீர்க்கதரிசி!60 வயது பெரிசு!...

பெற்றோர்களுக்கு சிறந்த மகனாக இருப்பதற்கான 10 சிறந்த வழிகள்!!!

'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்' என்பது வள்ளுவர் வாய்மொழி. தன்னுடைய மகன் சிறந்தவனாக இருக்க வேண்டும் என்று எண்ணுவதே ஒவ்வொரு பெற்றோர்களின் கனவாகவும் இருக்கும் என்பது தான் இதன் வெளிப்படையான பொருள். அன்னையின் வயிற்றில் சிறு துளியாக உதித்த பொழுதிலிருந்தே, உங்கள் மேல் அவர்கள் பொழிந்த அளவற்ற அன்பையும், பாசத்தையும் அவர்களுக்கு திரும்ப கொடுக்க வேண்டியது மகனாகப் பிறந்த ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். கருவாக உருவான நாளிலிருந்தே பெற்றோர்கள் உங்களை கவனிக்கத் தொடங்கி விடுகிறார்கள். உங்களுக்காக அவர்களுடைய ஓய்வு நேரங்கள், தூக்கம் மற்றும் சுகங்கள் என பலவற்றையும் அவர்கள் தியாகம் செய்திருப்பார்கள்.சிறந்த மகனாக இருப்பதை அவர்களுக்கு செய்யும் கடமையாகவோ, கடனை திரும்ப அடைக்கும் செயலாகவோ கூட நினைக்க யாருக்கும் அருகதை இல்லை என்பது மிகவும் முக்கியமான விஷமாகும். சிறந்த மகனாக இருப்பது வழக்கம்...

எப்படி? எப்படி? எப்படி?

அறிவது எப்படி; புரிவது எப்படி; உணர்வது எப்படி; தெளிவது எப்படி; பார்ப்பது எப்படி; கேட்பது எப்படி; கவனிப்பது எப்படி; தேர்ந்தெடுப்பது எப்படி இருப்பது “இலக்கைக் குறிப்பது எப்படி?” – என்று!“வாழ்க்கை” – என்கிற பயணத்தில் நாம் அடைய வேண்டிய இடம் எது? அதனைக் குறித்த பிறகு – அதனை அடைவதற்கான வழித்தடம் எது? அந்த வழியில் நாம் கடக்க வேண்டிய மைல் கற்கள் எவை? என்பதைத் தெள்ளத் தெளிவாகக் கண்டுபிடித்து – அமைத்துக் கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.இலக்கைக் குறிப்பதன் அவசியமென்ன என்கிறீர்களா? “இதுதான் நான் அடைய விரும்பும் இடம்” என்று குறித்தால்தான் நமது கவனம் அந்த இடத்தை நோக்கிக் குவியத் தொடங்கும். மனிதனுக்கு மிகச் சிரமமான காரியம் எது தெரியுமா? மனதை ஒன்றின் மீது குவிப்பது தான். அது மட்டும் சாத்தியமாகிவிட்டால் மனிதனால் இயலாதது என்பதே இருக்காது.மனித இனத்தின் மிகப்பெரிய துயரம் என்னவெனில் மனிதர்களின் கவனச் சிதறல்...

எலுமிச்சை -பெயர் காரணம்!

  எலுமிச்சை இதை  தேவக்கனி,  இராசக்கனி  என்றும் கூறுவார்கள். எல்லா பழங்களையும் எலி கடித்து விடும்.  ஆனால்  எலுமிச்சையை மட்டும் எலி  தொடவே தொடாது.  எலி மிச்சம் வைத்ததாதல்தான்,  இந்தப் பழத்திற்கு எலிமிச்சை  என்பது மருவி, என்ற பெயர் வந்ததெனக் கூறுவர...

மொபைல் நம்பர் தெரியாமல் மறைக்க!

  ஒரு மொபைல் நம்பரிலிருந்து  நண்பர்களின் மொபைல்களுக்கு அல்லது மற்றவர்களின் அலைப்பேசிக்கு அழைக்கும்பொழுது அந்த மொபைல் நம்பர் நண்பர்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்கு இப்போது டெக்னிக் (Mobile Number Hiding Technical) வந்துவிட்டது.அதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல் போனுக்கு அழைக்கும்போது அவரின் மொபைல் போனில் உங்களுடைய மொபைல் நம்பர் தெரிவதற்குப் பதில் Private Number என்று மட்டும் வரும்.  உங்களுடைய மொபைல் நம்பர் அவருடைய செல்போனில் தெரியாது.உங்களுடை மொபைல் நம்பர் 9865072896 எனில் அதனுடன் *67 என்ற எண்ணையும் உங்கள் மொபைல் எண்ணுடன் சேர்த்து டயல் செய்யுங்கள்.இது ஒரு யுனிவர்சல் கோட். அதனால் உங்களது மொபைல் எண்                      ...

மாணவர்களும் மன ஆற்றலும்!

இயற்கை சமுதாயம், மனம் என்ற முக்கோணத்துக்குள் வாழ்ந்து வரும் மனித வாழ்வில் மகிழ்ச்சியான பருவம் மாணவப் பருவம்.பொதுவாகவே குழந்தைகள் மனதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களால் எதிர்மறை எண்ணங்கள் (Negative Thoughts) சிறுவயது முதலே ஆழ்மனதில் பதிந்து விடுகின்றன. அதனால், பள்ளி இறுதி மற்றும் கல்லூரி செல்லும் பருவத்தில் இலக்குகளை நிர்ணயிக்க, அவற்றை அடைய மிகவும் சிரமப்படுகின்றனர்.‘Critical Mass Theory’ யின்படி கைதவறி ஓடை நீரில் விழுந்த கிழங்கை, எடுத்துத் தின்ற குரங்கு பெற்ற சுவை மண்ணில்லாமல் இருந்ததால், மகிழ்ச்சி தர, அந்த எண்ணம் பல நூறு மைல்களுக்கு அப்பால் வசித்த குரங்கு கட்கும் உள்ளுணர்வாய் சென்றடைந்ததை நாம் அறிவோம். அதுபோல் பெரும்பாலும் பெற்றோர் விருப்பப்படி எதிர்கால படிப்பைத் தேர்வு செய்கிறோம்.விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்தை விரும்பு என்பதற்கேற்ப, தேர்வு செய்த பாடத்திட்டத்தில் ஆர்வம் கொண்டு,...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top