.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 26 November 2013

ஒருவேளை இப்படி இருக்குமோ ?

ஆசைதான் துன்பத்திற்கு காரணம் ஆதலால்
 ஆசையை ஒழிக்க வேண்டும் - புத்தர்

 எந்த எந்த ஆசைகளை ஒழிக்க வேண்டும் ?

உலகில் ஆசைகளை அழித்தவன் ஒருவன் மட்டுமே

 - அவனுக்கு பெயர் சடலம்

 ஆம் உயிரில்லா உடலில் மட்டும் தான் ஆசை இல்லை.

»» ஆசைகளை ஒழிக்கவேண்டும் என்பதே ஒரு ஆசை
»» உணவு உண்பதே உயிர்வாழ வேண்டும் என்ற ஆசையில்
»» உழைப்பதே குடும்பத்தை காக்கும் ஆசையில்
»» பாசம் வைப்பது பாசம் கிடைக்கும் எனும் ஆசையில்

 இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் ஆசை உள்ளது .

 ## வைக்கவேண்டிய ஆசைகள்

»» பெற்றோரை காக்க ஆசைப்படு
»» வறியோர்க்கு வழங்க ஆசைப்படு
»» சிறியோரை சீர்படுத்த ஆசைப்படு
»» மழலையுடன் விளையாட ஆசைப்படு
»» உன் மேல் நீ ஆசைப்படு

 இப்படி ஆசைப்படவேண்டிய விசயங்கள் நிறைய உள்ளது.
கண்டிப்பாக இவை நமக்கு ஆசை தேவை.
இவை மேல் நீ ஆசைப்பட்டால் மகிழ்ச்சி உன்னுடன் வாழ ஆசைப்படும்.

## வைக்ககூடாத ஆசைகள்

»» பிறர் மனைவி மேல் ஆசை
»» பிறர் பொருள் மேல் ஆசை
»» தகுதிக்கு மேல் பொருள் வாங்கும் ஆசை
»» மது, மாது, போதை, பேதை மேல் ஆசை.
»» இயற்கைக்கு புறம்பான செயல்களில் ஆசை

 ஒருவேளை புத்தர் கூறியது நல்லவைகளை ஆசைப்படு , தீயவைகளை ஆசைப்படாதே என்று இருக்குமோ?

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top