.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 16 September 2013

பாடகி சின்மயிக்கு கல்யாணம்!

மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இடம் பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. சிவாஜி படத்தில் இவர் பாடிய ‘சஹானா சாரல் தூவுதோ’, எந்திரன் படத்தில் ‘கிளிமஞ்சாரோ’ ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலமானவை. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார்.இதற்கிடையில் நடிகர் ராகுல் ரவீந்திரன், ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கும் ‘வணக்கம் சென்னை’ படத்திலும் நடிக்கிறார். மற்றும் சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.   அதிலும் சின்மயி நடிகர் ராகுல் ரவீந்திரனை காதல் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்றும்...

நாரையும் ஓநாயும் (நீதிக்கதைகள்)

ஒரு காட்டில் ஒரு ஓநாய் இருந்தது.அது மிகவும் கெட்ட குணம் கொண்டது.தினமும் ..பலம் குறைந்த ஏதேனும் விலங்குகளையோ ..பறவைகளையோ கொன்று தன் பசியை தீர்த்துக்கொள்ளும்.ஒரு நாள் அது இறந்த ஒரு மிருகத்தின் உடலை தின்றபோது ..அறியாமல் ஒரு எலும்புத் துண்டையும் சாப்பிட்டது. அந்த எலும்புத்துண்டுஅதனுடைய தொண்டையில் சிக்கிக்கொண்டது.அதனால் ...அவதிப்பட்ட ஓநாயால் எந்த உணவையும் சாப்பிட முடியவில்லை..ஒரு நாரையை அது அணுகி ...அதன் அலகால் எலும்புத்துண்டை அகற்றுமாறும்..அப்படி அகற்றினால் அந்த நாரைக்கு பரிசு தருவதாகவும் கூறியது.சரியென்று நாரையும் தன் நீளமான அலகை ஓநாயின் தொண்டைக்குள் விட்டு அங்கே சிக்கிக்கொண்டிருந்த எலும்பை வெளியே எடுத்துவிட்டது.பின் நாரை ..ஓநாயிடம்...

சாக்லெட் சுவைப்போர் கவனத்துக்கு..!

அனைவரும் விரும்பிச் சாப்பிடுகின்ற சாக்லெட் சம்பந்தமாக நிறைய கற்பிதங்கள் உள்ளன. சாக்லெட் சாப்பிட்டால் பாலுணர்வு தூண்டப்படும் என்றெல்லாம்கூட மேற்குலகில் நம்பப்படுகிறது. ஆனால், இந்த கற்பிதங்கள் எந்த அளவுக்கு உண்மை? பால் கலக்காத சாக்லெட்டைவிட பால் கலந்த சாக்லெட்டில் கலோரி அதிகம் என்பது ஒரு கற்பிதம். இது உண்மையல்ல. பால் கலந்தது என்றாலும் சரி, பால் கலக்காதது என்றாலும் சரி, அவற்றில் கிட்டத்தட்ட ஒரே அளவான கலோரிகள்தான் உள்ளன. நூறு கிராம் சாக்லெட்டில் சுமார் 550 கலோரிகள் இருக்கின்றன. சாக்லெட் சாப்பிட்டால் மைகிரேன் தலைவலி வரும் என்பது மற்றொரு கற்பிதம். சாக்லெட்டில் டைரமைன், ஃபீனைல்எதிலமைன் போன்ற அமினோ அமிலங்கள் இருக்கின்றன. இவற்றால்...

ஹெட்போன் மூலம் இலவச மின்சாரம்!

செல்பேசிகள் மற்றும் எம்பி3 பிளேயர்களில் கேட்பதற்குப் பயன்படும் ஹெட்போன் மூலம் சூரியசக்தி மின்சாரம் தயாரித்து, அவற்றின் மின் தேவையை நிறைவு செய்யலாம் என்று புதிய ஆராய்ச்சி சொல்கிறது. இந்த புதிய கண்டுபிடிப்பு 2014-ம் ஆண்டு விற்பனைக்கு வரலாம். ஹெட்போனின் இரண்டு பக்கங்களின் மேற்பரப்பில் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் மின்கலங்கள் பொறுத்தப்பட்டிருக்கும். இந்த ஹெட்போன்களை மாட்டிக்கொண்டு நீங்கள் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தால், உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் மின்சாரம் உற்பத்தி ஆகிக் கொண்டிருக்கும் என்கிறார் இதைக் கண்டுபிடித்த பிரிட்டனைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஆண்டர்சன். ஏற்கெனவே அமெரிக்காவில் மனிதர்கள் நடப்பதை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் கருவி விற்பனையில் உள்ளது. மனிதர்களின் காலணிக்குள் இருக்கும் இந்த சின்னஞ்சிறு கருவி, நடக்கும்போது ஏற்படும் அழுத்தத்தை பயன்படுத்தி மின்சாரம்...

பாஸ்வேர்டை பாதுகாக்க ஒர் எளிய வழி!

வங்கி கணக்குத் தொடங்கி சமூக வலைதளம் வரை பெரும்பாலான இணையதளங்கள் இன்று பயனீட்டாளர் பெயரையும் பாஸ்வேர்டையும் கேட்டகாமல் உங்களை உள்ளே அனுமதிப்பதில்லை. அதனால், எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய எண்களையோ நபர்களின் பெயர்களையோ பாஸ்வேர்டாக உருவாக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. இப்படியிருக்கையில், உங்கள் பாஸ்வேர்டை தாக்காளர்கள் (ஹேக்கர்) அறிந்துகொள்வதும் மிகவும் எளிது. உங்களுடைய தனிப்பட்ட விவரங்களைத் தெரிந்துக்கொண்டாலே போதும், அவற்றைக்கொண்டு சாஃப்ட்வேர் மூலம் யூகித்தறியும் படலத்தை அரங்கேற்றினால் உங்கள் பாஸ்வேர்டு தாக்காளர் கையில். நம்முடைய பாஸ்வேர்டும் எளிதில் நினைவில் கொள்ளக்கூடியதாகவும் இருக்கவேண்டும். அதேசமயம், அது திருட்டும்போகக்...

நடிகர் பரத் – ஜெஸ்லி திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆலபம்!

நடிகர் பரத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (14.09.2013) அன்று சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.விழாவில் திமுக தலைவர் டாக்டர் மூ.கருணாநிதி கலந்து கொண்டு வாழ்த்தினார் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த். திரைப்பட நடிகர்,நடிகைகள்,இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். #gallery-1 { margin: auto; } #gallery-1 .gallery-item { float: left; margin-top: 10px; text-align: center; width: 33%; } #gallery-1 img { border: 2px solid #cfcfcf; } #gallery-1 .gallery-caption { margin-left: 0; } ...

Bharath Rathna M S Subbulakshmi Queen of Music1916 2004) - இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த தினம் இன்று 16.09.2013

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த தினம் இன்று 16.09.2013 எம். எஸ். சுப்புலட்சுமி என்ற மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (செப்டம்பர் 16, 1916 - டிசம்பர் 11, 2004) புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்றவர். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் பாடியுள்ள இவர், உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று நிகழ்ச்சிகள் பல நடத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையிலும் இவர் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்...

விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற செனட் தேர்தலில் விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அஸாஞ்சே கட்சி தோல்வியடைந்ததுடன், அவர் போட்டியிட்ட விக்டோரியா பகுதியிலும் தோல்வியை தழுவியுள்ளார்.மேலும் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களின் ஆதரவைப் பெற்ற செக்ஸ் கட்சிக்கு கிடைத்த ஆதரவை விட குறைவான வாக்குகளை பெற்று அஸாஞ்சே கட்சி தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.   விக்கிலீக்ஸ் அதிபரான ஜூலியன் அஸாஞ்சே, அமெரிக்க வெளியுறவுத்துறையின் ரகசியத் தகவல்களை அம்பலப்படுத்தி உலகையே பரபரப்பில் ஆழ்த்தி பிரபலமடைந்தார்.இதையடுத்து அவருக்கு கடும் எதிர்ப்புகளும், மிரட்டல்களும் வந்தன. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் அவர் மீது செக்ஸ் புகார்கள் கிளம்பின. இதையடுத்து லண்டனில் உள்ள போர்ச்சுகல்...

உண்மையே பேசவேண்டும்.(நீதிக்கதைகள்)

  கந்தன் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லாமல் ..எதற்கெடுத்தாலும் பொய்யைச் சொல்லி...மக்களை ஏமாற்றி வந்தான். அதனால் ...அவனது தந்தை,,,அவனிடம் ...வீட்டிலிருந்த ஆடுகளை மேய்க்கும் வேலையைக் கொடுத்திருந்தார். ஆடுகளை....ஊருக்கு வெளியே இருந்த காட்டுப்பகுதிக்கு ஓட்டிச் சென்றான் கந்தன். ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்க..சற்றே தள்ளி அமர்ந்திருந்த கந்தன் 'புலி வருது புலி வருது காப்பாத்துங்க...' எனக் கத்தினான். அருகாமையில் பக்கத்து வயல்களில் வேலை செய்துகொண்டிருந்த மக்கள் அவனைக் காக்க ஓடி வந்தனர்.ஆனால் வந்ததும்தான் கந்தன் பொய் சொல்லியிருக்கிறான் என்று உணர்ந்தனர்....ஏமாந்த அவர்களைப் பார்த்து கந்தன் சிரித்தான். அடுத்த நாளும்..கந்தன் முந்தைய நாள்...

நிமிர்ந்து நில் படத்தில் வில்லனாக ஜெயம்ரவி!

நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடித்திருக்கிறார். போராளி வெற்றிக்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கி வரும் திரைப்படம் நிமிர்ந்து நில். இதில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அதாவது 24 வயது இளைஞன் மற்றும் 48 வயது நடுத்தர வயது மனிதன் என இரண்டு கேரக்டர்கள்.  அவருக்கு ஜோடிதான் அமலாபால். சரத்குமார் சிபிஐ அதிகாரியாக வருகிறார். இவர்களுடன் சூரி, தம்பி ராமையா, பஞ்சு சுப்பு, கோபிநாத் உட்பட பலர் நடிக்கின்றனர். வாசன் விஷுவல் வெஞ்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் தயாரிக்கிறார்.  இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகி வருகிறது. தெலுங்கில் ‘ஜண்டாபாய் கப்பிராஜூ’ என்ற...

அதிரடி மாற்றம் : மோடியை புகழ்ந்து தள்ளும் அத்வானி!

மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடிக்கு எதிராக கொடி பிடித்த பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, இன்று பொதுக்கூட்டம் ஒன்றில் மோடியை புகழ்ந்து தள்ளியுள்ளார். சட்டீஸ்கர் மாநிலம் கர்பாவில் நடைபெற்ற பேரணியின் முடிவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அத்வானி, குஜராத் மாநிலம் உள்கட்டமைப்பிலும், மின்சார வசதியிலும் அதிக முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக ஏன் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நியமித்திருப்பதற்கு இதுவே உதாரணமாகும் என்று கூறிய அத்வானி, குஜராத்தின் மேம்பாட்டுக்காக நரேந்திர மோடி ஏராளமான பணிகளை செய்துள்ளார் என்று கூறினார். ...

மிஸ் அமெரிக்கா அழகி போட்டி: இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் தேர்வு!

மிஸ் அமெரிக்கா அழகி போட்டி: இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் தேர்வு     நியூயார்க்கில் நடைபெற்ற மிஸ் அமெரிக்கா அழகி போட்டியில் முதன் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த அழகி நீனா டவ்லுரி வயது (24 ) மிஸ் அமெரிக்காவாக தேர்ந்தெடுக்கபட்டார். 2014-ம் ஆண்டிற்கான மிஸ் அமெரிக்கா அழகி போட்டிகள் அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் அட்லாண்டிக் நகரில் நடந்தது. பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 52 அழகிகள் கலந்து கொண்டனர். இதில் அமெரிக்காவின், மிஸ் நியூயார்க் அழகி , நினா தவுலுரி (24) , ‘மிஸ் அமெரிக்கா’ பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்தார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இதன் மூலம் இப்பட்டத்தை வென்ற முதல் இந்திய வம்சவாளி...

காற்றில் கலந்து வரும் ஆரோக்கியம்!

நாம் ஒவ்வொருவரும் உயிர்வாழ நல்ல சுத்தமான காற்று அவசியம் தேவை நல்ல பிராணவாயு நிறைந்த காற்றை சுவாசித்தால்தானே, அதை நம் உடல் ஏற்று, ரத்தம் சுத்தமடைந்து, அதிலுள்ள கழிவுகளை கரியமில வாயுவாக மாற்றி, நம் உடலானது நம் நாசிகள் மூலம் வெளியேற்ற முடியும்!ஆனால் மக்கட்தொகை பெருகி, ஜனநெருக்கம் அதிகம் ஆகும் பொழுது அத்தனை மக்களும், உயிர் வாழ் பிராணிகள்,மிருகங்கள் அனைத்தும் சேர்ந்து மூச்சு விடும் பொழுது வெளியேற்றும் கரியமில வாயு, காற்றில் கலந்து அந்த பகுதியில் உள்ள காற்று மாசு படாதா! என்று எண்ணத் தோன்றும். இங்குள்ள செடி கொடிகளும், மரங்களின் இலைகளும் சுவாசிக்கின்றன. ஆனால் அவைகள் காற்றில் உள்ள கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு, நல்ல பிராணவாயுவை வெளியிடுகின்றன. இதனால்...

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு (நீதிக்கதை)

ஒரு தந்தைக்கு நாலு பிள்ளைகள் இருந்தனர்.அவர்கள் தங்களுக்குள் அவ்வப்போது சண்டைப் போட்டு வந்தனர்.அதனால் மனம் வருந்திய தந்தை...அவர்களிடையே எந்த வழியில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்று யோசித்தார். பின் ஒரு நாள் அவர் தன் பிள்ளைகளிடம் ஒரு கட்டு சுள்ளி விறகுகளைக் கொண்டு வரச் சொன்னார். பின்னர் ஒவ்வொரு பையனிடமும் அந்தக் கட்டைக் கொடுத்து அதை துண்டுகளாக உடைக்கும்படியாகக் கூறினார்.மகன்கள் நால்வரும் தனித்தனியாக தங்கள் பலத்தை உபயோகித்து சுள்ளிக் கட்டை உடைக்க முயன்றனர். ஆனால்...அதை அவர்களால் உடைக்க முடியவில்லை... பின்னர் தந்தை அந்தக் கட்டை அவிழ்த்து.....சுள்ளிக் குச்சிகளைத் தனித்தனியே எடுத்து ஒடிக்கக் கொடுத்தார்.....அவர்கள் சுலபமாக...

ஜெயலலிதாவுடன் துக்ளக் சோ திடீர் சந்திப்பு!

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, துக்கள் ஆசிரியரும் அரசியல் விமர்சகருமான சோ ஞாயிற்றுக்கிழமை திடீரென சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் நீடித்த சந்திப்பின் போது பிரதமர் வேட்பாளராக மோடியின் பிறந்தநாள்யொட்டி (17ம் தேதி) அவருககு,அட்வான்ஸ்’ பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது   இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழகத்தில் அரசியல் கூட்டணி அமைப்பதற்கான மறைமுக பேச்சுவார்த்தைகளை இங்குள்ள அரசியல் கட்சிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. அதே சமயம், அதிமுக தனித்துப் போட்டியிடும் என்று ஜெயலலிதா ஏற்கெனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதற்கிடையில் குஜராத் முதல்வர் நரேந்திர...

எம்.எஸ். சுப்புலட்சுமி ஒரு சகாப்தத்தின் முடிவு!

'பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்' என்று சொல்வார்கள். பரணியில் பிறந்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைத் தரணியை ஆளத்தான் செய்தார். நான்மாடக்கூடலிலே தோன்றி எட்டுத் திக்கும் தமிழோசை பரவச் செய்த இசை இமயம் டிசம்பர் மாதம் 12ம் தேதி அதிகாலையில் உலகை விட்டு நீங்கியது. கடும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். திடீரென்று அவருக்கு மூச்சுத் திணறல்...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top