உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை. மண்ணின் வில்லன் அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக...
Wednesday, 18 December 2013
லெனோவா வைப் எக்ஸ் ரூ.25.999 விலையில் அறிமுகம்!

லெனோவா தனது முதல் வைப் ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.25.999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. லெனோவா வைப் எக்ஸ் இந்த வாரத்திற்குப் பின் கடைகளில் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட்போனில் பிரீமியம் பாலிகார்பனேட் உடற்பாகங்கள் மற்றும் ஒரு மேம்பட்ட மோல்ட், லேசர் என்க்ரேவ்ட் (engraved) 3D டேக்டில் ஃபினிஸ் (tactile finish) கொண்டுள்ளது. சாதனத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக 6.9mm அளவிடும் சூப்பர் தின் ஃப்ரேம் (thin frame) உள்ளது. இது 121 கிராம் எடையுடையது. லெனோவா வைப் எக்ஸ் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது. வைப் எக்ஸ் முனைகளில் கார்னிங் கொரில்லா கண்ணாடி 3, 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே...
நோக்கியா ஆஷா 502 இந்தியாவில் ரூ.5,739 விலையில் அறிமுகம்!

நோக்கியா நிறுவனம் தனது சமீபத்திய ஃபோனான ஆஷா 502 இந்திய சந்தையில் ரூ.5,739 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நோக்கியா ஆஷா 502 இப்பொழுது நோக்கியாவின் ஆன்லைன் கடைகளில் கடைக்கும். நோக்கியா ஆஷா 502, நோக்கியா ஆஷா ப்ளாட்ஃபார்ம் 1.1 அடிப்படையாக கொண்டுள்ளது மற்றும் ஃபெர்ம்வேர் over-the-air (FOTA) மேம்படுத்தல் ஆதரிக்கின்றது. இது 240x320 (QVGA) பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 3 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. ஆஷா 502 மட்டுமே நோக்கியா ஈசி ஸ்வாப் தொழில்நுட்பத்துடன் இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) வேரியன்ட் வருகின்றது அத்துடன் இரட்டை காத்திருப்பு ஆதரிக்கின்றது. குறிப்பாக, வழக்கமான சிம் அளவுக்கு பதிலாக ஆஷா 502 ஃபோனில் மைக்ரோ சிம் கார்டு துணைபுரிகிறது. இது...
கூகுளில் 2013-ல் தேடப்பட்ட தென்னிந்திய நடிகர்களில் விஜய் முதலிடம்

2013ம் ஆண்டு கூகுள் தேடுதளத்தில் அதிகமாக தேடப்பட்ட தென்னிந்தியத் திரைக் கலைஞர்கள் பட்டியலில் நடிகர் விஜய் முதலிடத்தை பிடித்திருக்கிறார். 2013 கூகுள் இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்டோர் பட்டியலை அறிவித்திருக்கிறது. http://www.google.com/trends/topcharts இணையத்தில் யாரெல்லாம் இடம்பிடித்திருக்கிறார்கள் என்பதை கண்டு கொள்ளலாம். TOP TRENDING பட்டியலில் முதல் இடத்தினை சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் பிடித்திருக்கிறது. TOP TRENDING என்பது கூகுள் இணையத்தில் அதிகமாக பேசி, விவாதிக்கப்பட்டது என்று அர்த்தமாகும். சென்னை எக்ஸ்பிரஸ், ஐபில் 2013, Aashiqui 2, க்ரிஷ் 3, பிக் பாஸ் 7, பால் வால்க்கர், ஜியா கான், ராம் லீலா ஆகியவை முதல் பத்து இடங்களை பிடித்திருக்கின்றன....
இரயில் பயணத்தில்....... ?

ஒரு நாள் தந்தையும் , அவரின் 14 வயது மகனும் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர்.அந்த சிறுவன் ஜன்னலின் வழியே வெளியே எட்டி பார்த்து,"மேகம் நம் கூடவே வருகிறது", என அவர் தந்தையிடம் கூறினான்.அதற்கு தந்தையும், "ஆமா "என்று சொன்னார் .கொஞ்ச நேரம் கழித்து," அப்பா மரம்,செடியெல்லாம் நம்மை கடந்து செல்கின்றன !!!" என்று சொன்னார். அதற்கும் தந்தை "ஆமாம்" என்று சொன்னார்.இதை கவனித்து கொண்டிருந்த எதிரில் இருந்த தம்பதியினர்,"இவனை கொஞ்சம் மருத்துவ மனையில் சென்று காண்பிக்க கூடாதா? ... நீங்களும் அவன் சொல்வதை சரி என்று ஒப்புக்கொள்கிறீர்களே .. இது தவறு இல்லையா" என்று கேட்டனர்.அதற்கு அந்த தந்தை சொன்னார்,"ஆமாம்! நாங்கள் மருத்தவமனையில் காட்டி விட்டு தான் இப்போது...
சாகித்ய அகாடெமி விருது பெறுகிறார் தமிழ் எழுத்தாளர் ஜோ டி குரூஸ்

2013-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமி விருது, தமிழில் கொற்கை நாவலை எழுதிய எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பெற்றிருக்கிறார். எழுத்தாளர்களுக்கான உயரிய கவுரமாக கருதப்படும் சாகித்ய அகாடெமி விருது பெறுபவர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து 2011 டிசம்பர் வரை வெளியான புத்தகங்கள் இந்த ஆண்டு விருதுக்கான பரிந்துரைக்கு ஏற்கப்பட்டிருந்தன. இந்த முறை கவிஞர்களே அதிக விருதுகளைப் பெற்றுள்ளனர். பெங்காலி, உருது, சமஸ்கிருதம் உள்ளிட்ட 8 மொழி கவிஞர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். தமிழில் புதினத்திற்கான விருதை எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பெற்றிருக்கிறார். நெய்தல் நில மக்களின் வாழ்க்கையை ஒட்டி அவர் எழுதிய கொற்கை என்கிற நாவலுக்காக இந்த விருது அவருக்கு...
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது...?
ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை இங்கு சொல்கிறேன்..ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன.நிறம்:ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என fair complexion உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.முக தோற்றம்:ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் மீசை க்கு முக்கியத்துவம்...
‘அச்சம் தவிர்’ விறுவிறுப்பு...சினிமா விமர்சனம்..!,

நடிகர் : சரத்குமார்
நடிகை : சனுஷா
இயக்குனர் : ஓம்கர்
இசை : ஜோஸ்வா ஸ்ரீதர்
ஓளிப்பதிவு : விஸ்வாஸ் சுந்தர்
நிவாஸ், ஜீவா, யாசர் ஆகிய மூன்று பேரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இவர்களின் நட்பு கல்லூரி வரை தொடர்கிறது. படிப்பு மற்றும் தொழில் முறையில் இவர்களின் ஈடுபாடு வெவ்வேறாக இருந்தாலும் எண்ண ஓட்டம் ஒரே மாதிரியாகதான் இருக்கும்.
முதலில் ஒரு போலீஸ் ஸ்டேசனில் இருந்து ஒரு ரவுடியை காப்பாற்றுகிறார்கள். பிறகு அவன் மூலம் துப்பாக்கி வாங்குகிறார்கள். மூன்று நண்பர்களில் ஒருவரான யாசருக்கு கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். யாசரின் நண்பர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன். இவர் மேட்ச் பிக்சிங் மூலம் போலீசிடம் மாட்டிக்கொள்கிறார்....
அற்புதமான விளக்கம் மனைவிக்கு.....?

ஒருவருக்கு புதிதாக திருமணம் நடந்தது. அவர் தனது அழகான மனைவியோடு கடல் வழியாக படகொன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்நேரத்தில் வானம் முழங்கியது. மின்னலும் மின்னியது. கடலலைகள் பெரு அலைகளாக மாறி மாறி வந்தன. அந்நேரத்தில் மனைவி பயந்து கொண்டாள்.எவ்விதமான பயத்தையும் உணராமல் அமைதியாய் புன்னகையோடு கணவன் தனதருகில் அமர்ந்திருப்பதை உணர்ந்தாள். கணவனைப் பார்த்து மனைவி கேட்டாள் "உங்களுக்கு பயம் இல்லையா" என்று. கணவன் எதுவுமே கூறாமல் மௌனமாக இருந்தபடி அருகிலிருந்த கத்தியொன்றை எடுத்து அவள் கழுத்தருகில் வைத்தான். ஆனால் அதற்கு அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்.மனைவியைப் பார்த்து கணவன் கேட்டான் "இந்த கூரிய ஆயுதமான கத்தியை உன் கழுத்தில் வைத்திருக்கிறேன், நீ எதற்காக...
இசைக்கு மருந்தென்றே பெயர்!

‘நாள் பூராவும் ஓய்வின்றி வேலை செய்துவிட்டு வீடு திரும்புகிறீர்கள், வந்தவுடன் உங்களுக்கு விருப்பமான ஒலிநாடாவை வைத்துக் கேட்கிறீர்கள். சட்டென்று உள்ளுக்குள் ஒரு புத்துணர்வு முளைத்து, மனம் ‘ரிலாக்ஸ்’ ஆகிறது. இதமான இசை, மன, உடல் ரீதியான பாசிடிவ் மாறுதல்களை ஏற்படுத்துகின்றது’ என்கிறார்கள் வல்லுநர்கள். ஆனாலும் இது புதிய கண்டுபிடிப்பு இல்லை. பழங்காலத்திலிருந்தே தத்துவ ஞானிகள் பிதாகரஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்கள் இசைக்குள்ள மருத்துவ குணம், நோய் வராமல் தடுப்பது போன்ற பிற குணநலன்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஏன்? பைபிள் பழைய வேதாகமத்தில், தாவூத் அரசர் வயலினின் நரம்பு மீட்டலில் வியாதி குணமடைந்ததாகக் குறிப்பு உள்ளது.சில குறிப்பிட்ட ஸ்வரங்கள்,...
புதுக்குறள்.....?

******புதுக்குறள் *******
1.அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-ருசிக்காதே மனைவி சுட்ட தோசை...2.முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்கமூஞ்சியில் குத்தி விடல்...3.கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும் செய்வது அரசியல்வாதிக்கியல்பு...4.யாகாவாராயினும் Password காக்க காவாக்கால் சோகாப்பர் hack செய்யப்பட்டு.5.விரும்பிய மனம் விரும்பா விடின் துரும்பா இளைப்பார் தூய காதலர்..6.ரன்...
தாய் மடியில் தலைவைத்த காலம் வருமா ?
வயல்வெளி பார்த்துவறட்டி தட்டிஓணாண் பிடித்துஓடையில் குளித்துஎதிர்வீட்டில் விளையாடிஎப்படியோ படித்த நான்ஏறிவந்தேன் நகரத்துக்கு !சிறு அறையில் குறுகிப் படுத்துசில மாதம் போர்தொடுத்துவாங்கிவிட்ட வேலையோடுவாழுகிறேன் கணிப்பொறியோடு !சிறிதாய்த் தூங்கிகனவு தொலைத்துகாலை உணவு மறந்துநெரிசலில் சிக்கிகடமை அழைக்ககாற்றோடு செல்கிறேன்காசு பார்க்க !மனசு தொட்டுவாழும் வாழ்க்கைமாறிப் போகுமோ ?மௌசு தொட்டுவாழும் வாழ்க்கைபழகிப் போகுமோ ?வால்பேப்பர் மாற்றியேவாழ்க்கைதொலைந்து போகுமோ ?சொந்த பந்தஉறவுகளெல்லாம்ஷிப் பைலாய்சுருங்கிப் போகுமோ?வாழ்க்கைதொலைந்து போகுமோமொத்தமும்!புரியாதுபுலம்புகிறேன்நித்தமும்!தாய் மடியில் தலைவைத்துநிலவு முகம் நான் ரசித்துகதைகள் பேசிகவலைகள் மறந்த காலம்இனிதான் வருமா ?இதயம் நனைத்தஇந்த வாழ்வுஇளைய தலைமுறைக்காவதுஇனி கிடைக்குமா ?சொந்த மண்ணில்சொந்தங்களோடுசோறு திண்பவன்யாரடா ?இருந்தால் அவனேசொர்க்கம் கண்டவனட...
இந்திய தொழில்நுட்பம்!

இந்தியா சைனாவைப் போல் ஒரு பெருமைமிகு செயலில் இறங்கியுள்ளது அதுதான் சூப்பர் கம்யூட்டர் ஆராய்ச்சி. இந்த தொழில்நுட்பமானது சூப்பர் கம்யூட்டர் PARAM yuva-II, ஆகும்.
இது ஒரு புதிய 500-teraflop/s veesion ஆகும். இந்த PARAM yuva-வின் computing பவரானது 54 teraflop/s to 254 teraflop/s ஆகும்.இந்த தொழில்நுட்பத்தின் மூலம் உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் மதிப்பு உயரும்.அமெரிக்கா முதன் முதலில் GPS ஐ(Global Positioning System) இராணுவத்தின் பயன்பாட்டிற்காக கண்டுபிடித்தது. அதனை தொடர்ந்து சைன, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் கண்டுபிடித்தன.
தற்பொழுது வளர்ந்து வரும் நாடுகள் தரவரிசையில் அதிவேக வளர்ச்சியில் இருக்கும் இந்தியா 2014- ஆம்...
ஓர் வரலாற்று அதிசயம்...?

இன்றைய மனித சமூகம் இதுவரை விடைகாண முடியாமற் போன பலவிடையங்கள் புவியில் உண்டு. அதில் ஒன்று தெற்கு இக்கிலாந்தில் காணப்படும் கற்தூண்கள், இற்றைக்கு 5000 வருடங்களுக்கு பழமை வாய்ந்த ஒரு வரலாற்று சின்னம். எகிப்தின் பிரமிட்டுக்கள் வளர்ச்சியுற்ற காலப்பகுதியில் இது இப்பகுதியில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் எனப்படுகின்றது. வரலாற்றில் பல சமூகங்களும் இப்பணியில் குறிப்பிடத்தக்களவு பங்கு கொண்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்களால் பல...
மில்லியன் கணக்கான மணித்தியாலங்கள் செலவு செய்யப்பட்டு இச்செயற்றிட்டம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது.அதிகபட்டசம் ஒவ்வொன்றும் 4 டன் எடையுடைய 82 வரையான நீல பளிங்கு கற்கள் ஏறக்குறைய 240...
தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க....!

தலை முடி நன்கு வளர...தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொடர்ந்து 3 மாதங்கள்)இது அனுபவத்தில் கண்டது.
முருங்கைகீரை சூப் செய்யும் முறை:
முருங்கைகீரை - 2 கப்
வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு
முதலில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்ணீரில் இறங்கி விட்டிருக்கும்.
அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக...
சிறுமியின் பொறுமையும் நற்பண்பும்!
ஒரு ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழை பெய்யவே இல்லை.அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது.மக்கள் பசியால் வாடினார்கள்.நல்ல உள்ளம் படைத்த செல்வர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் ஒன்று கூடி வந்தனர்.ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியை பொருத்து கொள்கிறோம்.சிறுவர்கள்,குழந்தைகள் என்ன செய்வார்கள். நீங்கள்தான் எதாவது உதவி புரிய வேண்டும் என வேண்டினார்கள்.இரக்க உள்ளம் படைத்த அந்த பெரியவர் “இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம்.ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு செய்கிறேன்.என் வீட்டிற்கு வந்து எடுத்துச்செல்லுங்கள் என்றார்.”மாளிகை திரும்பிய பெரியவர் தன் வேலைக்காரனை அழைத்தார்.”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்துக்கொள்.ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும்.கூடவும் கூடாது.குறையவும் கூடாது” என்று கட்டளையிட்டார்.வேலைக்காரனும் அப்ப்டியே ஆகட்டும் ஐயா என்று கூறினான்.வேலைக்காரன் அனைவருக்கும்...
"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!" - பழமொழி விளக்கம்!

"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"
நேர் விளக்கம்
நாய் துரத்தும் போது அதை துரத்த கல்லைத் தேடும் போது கல்லைக் காணவில்லை. பிறகு கல் கிடைக்கும் போது பார்த்தால் நாயைக் காணவில்லை.
அறிந்த விளக்கம் :
உங்களுக்கு தேவைப்படும் போது, தேவையான பொருள் கிடைக்காமல், தேவையற்ற போது அது கிடைக்கும்.
அறியாத விளக்கம் :
இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.
இதன் விளக்கம்,
நாயகன் = கடவுள்
"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".
கல்லால் செதுக்கப் பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்க மாட்டீர்கள். அதையே...
பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை....

பகவத்கீதை சொல்லும் வாழ்க்கைவாழ்க்கை ஒரு சவால் அதனைச் சாதியுங்கள்வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக் கொள்ளுங்கள்வாழ்க்கை ஒரு சாகசப்பயணம் அதனை மேற்கொள்ளுங்கள்.வாழ்க்கை ஒரு துயரம் அதனை தாங்கிக் கொள்ளுங்கள்வாழ்க்கை ஒரு கடமை அதனை விளையாடுங்கள்வாழ்க்கை ஒரு வினோதம் அதனை கண்டறியுங்கள்வாழ்க்கை ஒரு பாடல் அதனைப் பாடுங்கள்வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.வாழ்க்கை ஒரு பயணம் அதனை முடித்துவிடுங்கள்வாழ்க்கை ஒரு உறுதிமொழி அதனை நிறைவேற்றுங்கள்வாழ்க்கை ஒரு காதல் அதனை அனுபவியுங்கள்வாழ்க்கை ஒரு அழகு அதனை ஆராதியுங்கள்வாழ்க்கை ஒரு உணர்வு அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.வாழ்க்கை ஒரு போராட்டம் அதனை எதிர் கொள்ளுங்கள்.வாழ்க்கை ஒரு குழப்பம் அதனை விடைகாணுங்கள்.வாழ்க்கை...
ஒரு அழகான நாளில்... ?

கடை தெரு ஒன்றில் கண் தெரியாத பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுத்து கொண்டிருந்தார்.அவர் அருகில் ஒரு பலகையில்,"எனக்கு கண் தெரியாது, உதவி செய்யுங்கள் " என்று எழுதி வைத்திருந்தார். இதை பார்த்து அவ்வழியில் செல்வோர் அவருக்கு உதவி செய்தனர்.அவ்வழியில் சென்ற ஒரு நபர் அந்த பலகையில் இருந்த வாசகத்தை அழித்து விட்டு , வேறொரு வாக்கியத்தை அதில் எழுதி விட்டு சென்று விட்டார்.அடுத்த நாள் பிச்சைக்காரருக்கு ஏராளமானோர் உதவி செய்தனர்.பிச்சைக்காரருக்கு மிக்க மகிழ்ச்சி. எனவே அதில் என்ன வாக்கியம் இருக்கிறது என தெரிந்து கொள்ள அவ்வழி சென்ற ஒருவரிடம் ,"இந்த பலகையில் இருக்கும் வாக்கியத்தை எனக்கு வாசித்து காட்ட முடியுமா?" என கேட்டார்.அந்த நபர் வாசித்தார்,"இந்த நாள்...
வெற்றி ....?
“நாம் அறிவாளியாவது என்பது வேறு. பிறரை முட்டாளாக்குவது என்பது வேறு”. இரண்டும் ஒன்றாகி விட முடியுமா? நீங்கள் எத்தனைபேரை வேண்டுமானாலும் சுலபமாக முட்டாளாக்கிவிட முடியும். ஆனால் நீங்கள் அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை. முயற்சி, திறமை இப்படி எவ்வளவோ அதற்குத் தேவை.இதற்கு சொல்வேந்தர். சுகிசிவம் கூறும் உதாரணம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் பத்து வயதுப் பெண் தனது முப்பத்துஐந்து வயது அப்பாவிடம் வந்து நின்றாள். விழிகளை அகல விரித்தபடி அப்பாவிடம் ஒரு புதிர் போட்டாள். “அப்பா.. ஒரு குட்டிக் குரங்கு… தனியா மரத்துல உட்கார்ந்து இருக்கு… அந்த மரத்துக்குக் கீழே திடீர்னு வெள்ளம் வந்துடுச்சு… காட்டாத்து வெள்ளம்… திரும்பின பக்கம் எல்லாம் ஓடுது… அந்தக் குட்டிக் குரங்குக்கு நீந்தத் தெரியாது.. பயங்கர வெள்ளம் கீழே… அது எப்படித் தப்பிக்கும் சொல்லுங்கள்?” என்று அப்பாவை அசர வைத்தாள் மகள்.அரைமணி நேரம் மாறி ...
யோகா,யோகா என்று சொல்கிறார்களே, யோகா என்றால் என்ன..?

பதில்:யோகா என்பது உடல் பயிற்சி அல்ல.உங்கள் உடலை முறுக்கிக் கொள்வது,மூச்சைப் பிடித்துக் கொள்வது,தலையில் நிற்பது,இவையெல்லாம் யோகா அல்ல.யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள்.அதாவதுஉடல்,மனம்இவைகளை ஒன்றிணைக்கும் செய்யும் பயிற்ச்சியே யோகா பயிற்ச்சி ஆகும்.மற்றும்,யோகா என்றால்,நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும்,நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்,நாம் செய்யும் ஒவ்வொரு செயலும்,நாம் உள்ளே இழுக்கும் ஒவ்வொரு மூச்சும்,நம் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும்,நம்முடைய வளர்ச்சியின் ஒரு செயல்முறையாக இருக்க வேண்டும் என்பதுதான்.அப்படி இருந்தால் அதுதான் யோகா.எனவே யோகத்தின் செயல்முறையில் இல்லாதவர்கள் என்று இந்த உலகில் யாருமே இல்லை.கேள்வி..யோகா என்பது எல்லோருக்குமானதா..?இல்லை...
மனைவி பாராட்ட வேண்டுமா?

குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வராமல் இருக்க கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்க வேண்டும். கணவர் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மனைவியும் ஒரு பெண் அவருக்கும் உணர்ந்து அவரிடம் அன்பாக நடத்து கொள்ள வேண்டும். தினமும் வேலையில் நடக்கும் விஷங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். மனைவி தான் விட்டு கொடுத்து போக வேண்டும் என்று நினைக்காமல் சில விஷயங்களை மனைவிக்காக விட்டு கொடுத்து பாருங்கள் குடும்பம் மிகவும் சந்தோஷமாக இருக்கும். • மனைவியைக் கவுரவமாக நடத்துங்கள். • வெளியில் எங்கே போகிறீர்கள், எப்போது திரும்புகிவீர்கள் என்பதைச் சொல்லிவிடுங்கள்• ஆடம்பர செலவுகளைக் குறையுங்கள் • மனைவிக்கு அவசர செலவுகளுக்கு சிறிது பணம் கொடுங்கள் • உங்கள் பிரச்சனைகளை...
வரலாற்று குறிப்பில் இருந்து...

நாடு சுதந்திரம் அடந்தபின் ஒருநாள் நள்ளிரவு டில்லியில் வெளிநாட்டுச் செய்தியாளர், அம்பேத்கர் அவர்களைச் சந்திக்க வந்தார். அப்போது அம்பேத்கர் படித்துக் கொண்டிருந்தார். காந்தி,நேரு இருவரையும் சந்திக்கச் சென்றோம் அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள், நீங்கள் இந்த நள்ளிரவிலும் படித்துக்கொண்டிருக்கிறீர்களே” என்று செய்தியாளர் வியந்து கேட்டார். "அவர்கள் சமுதாயம் விழித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள். என்னுடைய சமுதாயம் தூங்கிக் கொண்டிருக்கிறது. எனவே நான் விழித்துக் கொண்டிருக்கிறேன்" என்று அம்பேத்கர் பதில் கூறினார...
வெளி நாட்டு வாழ்க்கை....

வெளி நாட்டு வாழ்க்கை....
தெரியாத ஊர்...அறியாதமொழி...புதிதான சூழல்...புரியாத சுற்றம்...அனைத்தும் தாண்டி நாம் அன்றாடம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே...முதலில் வெளிநாட்டில் வாழ்வோரெல்லாம் தகுதியானவர்கள் இல்லை பிறர்க்கு வாழ்க்கையை கற்றுகொடுக்கவும் தகுதியானவர்கள்...இங்கே முடிந்தால் சாப்பிடுவோமே தவிர மூன்றுவேளையும் சாப்பிடுவது இல்லை...முடிவெட்டினால் கூட ஒட்ட வெட்டுவோமே தவிர ஒருபோதும் விட்டு வெட்டியதில்லை...இது எங்களின் கஞ்சதனமில்லை நான் அசிங்கமானாலும் பரவாயில்லை என் குடும்பம் அழகாக இருக்கவேண்டுமென்ற அபூர்வ குணமே....அது போல வெளிநாட்டு வாழ்க்கை சில பிரிவை தந்தாலும் பொருத்துக்கொள்வோம் ஏனென்றால்...
விபத்தில் துண்டான கையை, காலில் வளர்த்து மீண்டும் பொருத்திய டாக்டர்கள் !

சீனாவில் தொழிற்சாலையில் துண்டான கையை, காலில் ஒட்ட வைத்து வளர்த்து பின்னர் அதை வாலிபருக்கு மீண்டும் பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். சீனாவின் ஹூனான் மாகாணத்தில் ஷாங்டே என்ற ஊரை சேர்ந்தவர் ஜியாவோ வெய் (20). இவர் அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்கிறார். கடந்த நவம்பர் 10ம் தேதி தொழிற்சாலையில் வேலை செய்த போது எதிர்பாராத விதமாக ஜியாவோ வெய்யின் வலது கை இயந்திரத்துக்குள் சிக்கி துண்டானது. வலியில் அலறி துடித்தவரை, சக தொழிலாளர்கள் மீட்டனர்.
மணிக்கட்டு வரை துண்டாகி இயந்திரத்துக்குள் விழுந்திருந்திருந்த துண்டனை எடுத்து கொண்டு ஷாங்டேவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது கையை காப்பாற்றுவது...
உண்மை வரிகள்.....?
உண்மை வரிகள்.....
1. ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை..கைக்குழந்தையாக இருந்தாலே போதும் !2. நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய் என எவரேனும் கேட்டால், நேர்மையாக இருப்பதே இங்கு சாதனை தான் என சொல்ல வேண்டியுள்ளது..3. பெண்கள் அதிகம் கேள்வி கேட்பவர்கள் என்பதை ஔவையாரின் பெயரிலிருந்தே அறியலாம் =How ? Why ? யார் ?4. பெண்களுடைய தைரியங்களுக்கு ஆண்கள் “அகராதி” யில் திமிர் எனப் பெயருண்டு..5. ஸ்பென்சர் பிலாசா ல 1998ரூ பில்லுக்கு 2000ரூபாய் தருகிர நாம், பிச்சைகாரனுக்கு 1 ரூபாய் தர தயங்குகிரோம்.6. மெசேஜ் அனுப்பினா உடனே ரிப்ளை அனுப்புறது கஸ்டமர்கேர் மட்டும் தான்..7. இலங்கையில் எண்ணை கிணறு இருந்து இருந்தால் இன்று ராஜ பக்சே தூக்கில் போட பட்டு இருப்பார் அமெரிக்காவால் .8. இலவசத்தை நம்பி ஒட்டு போடும் மக்களுக்கு விலை ஏற்றத்தில் ரோஷம் வருவது என்பது பிச்சைகாரன் சுடுசோற்றை...