.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 18 December 2013

புதுக்குறள்.....?




                                            ******புதுக்குறள் *******


1.அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-
ருசிக்காதே மனைவி சுட்ட தோசை...

2.முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்...

3.கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும்
 செய்வது அரசியல்வாதிக்கியல்பு...

4.யாகாவாராயினும் Password காக்க காவாக்கால்
 சோகாப்பர் hack செய்யப்பட்டு.

5.விரும்பிய மனம் விரும்பா விடின்
 துரும்பா இளைப்பார் தூய காதலர்..

6.ரன் எடுத்து ஆடுவாரே ஆடுவார்...
மற்றெல்லாம் டக்கெடுத்து பின் செல்பவர்

7.மாவினால் சுட்ட வடை உள்ளாறும் ஆறாதே
 வாயினால் சுட்ட வடை

8.மொக்கை போடுதல் எல்லார்க்கும் எளிது
 அரியவாம் கடலைபோ டுதல்

9.பீடியால் சுட்ட புண் உள்ளாறும்
 ஆறாதே லேடியால் கெட்ட மனம்

10.கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை தன் திருமணத்தன்று
 தாகசாந்தி செய்ய மறுக்கும் நண்பனுக்கு

11.போடுக கடலை போடுக போட்டபின் பில்லுகட்டுக அதற்குத் தக...

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top