சராசரியாக எல்லா மனிதருக்குமே இருக்கும் ஒரு குணம், கோபம். இந்த உலகில் கோபப்படாத மனிதரே இருக்கமுடியாது. அப்படி கோபம் இல்லாவிட்டால் அவர் மனிதராகவே இருக்கமுடியாது. எல்லோருக்குமே கோபம் வரும். ஆனால் அது வெளிப்படும் முறையில்தான் வித்தியாசம்.சிலபேர் அழுவார்கள், சிலபேர் கையை பிசைவார்கள், பல்லைகடிப்பார்கள், கையை ஓங்கி குத்துவார்கள் (சுவற்றிலோ அல்லது அடுத்தவர் மூக்கிலோ), காச் மூச்சென கத்துவார்கள், கையில் கிடைத்ததை போட்டு உடைப்பார்கள். சரியோ தவறோ, கோபப்படுவது அவ்வளவு நல்ல குணம் அல்ல. ஆனால் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது? 1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக...
Sunday, 17 November 2013
மனிதனின் மனதை ஈர்க்கும் பட்டாம்பூச்சிகள்!

மனிதனின் மனதை ஈர்க்கும் அதிசயங்கள் பல அவற்றில் வணணத்துப்பூச்சிக்கு சிறப்பிடம் உண்டு. பல வண்ணங்களில் சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகள் பார்பவர்களை பரவசப்படுத்திவிடும்.பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன. பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் காணப்படும் நிறங்கள் மிகப்பலவாகும். அதில் காணப்படும் நிறவடிவங்களும் கோலங்களும் அழகு வாய்ந்தவை. பட்டாம்பூச்சிகள் உலகில் பெரும்பாலான இடங்களில் வாழ்கின்றன.ஒரு சில பட்டாம்பூச்சி இனங்கள் ஒராண்டு, ஒன்றரை ஆண்டு வரையும் வாழுகின்றன.சில பட்டாம்பூச்சிகள் வியப்பூட்டும் விதமாக வெகுதொலைவு (3,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவு) பறந்து செல்கின்றன.அந்த அழகு பட்டாம்பூசியைப் பற்றிய ஒரு கூடுதல்...
தோல்வியில் இருந்து மீள...
பொதுவாக தோல்வி என்பது எல்லா வயதினரும் சந்திக்கும் ஒரு துக்கமான விஷயமாகும். ஆனால், இதில் இளம் வயதில், பெண்கள் சந்திக்கும் காதல் தோல்வி அல்லது திருமண முறிவு என்பது சிலரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது.காதல் தோல்வி அல்லது திருமண முறிவு என்ற இரண்டையும் இங்கே ஒரு சேர பார்க்கலாம்.அதாவது, காதலிக்கும் நபர் நம்மை விட்டு விலகிச் செல்லும் போது ஏற்படும் துக்கம் தாங்கிக் கொள்ள இயலாததுதான். ஆனால், அதில் இருந்து வெளியே வந்து, அதனைத் தாண்டியும் உலகம் உள்ளது என்று வாழ்ந்து காட்டி பலரும் நிரூபித்திருக்கிறார்கள்.வாழ்க்கையில் நம் துணை என்று மிகவும் நம்பிய ஒருவர் நம்மை கைவிடும் போது, வாழ்க்கையே இருண்டு போனதாக எண்ணி, அதற்குள்ளே சுற்றி சுற்றி வராமல், அதில் இருந்து வெளியே வரும் வழியைத்தான் ஒருவர் தேட வேண்டும்.அதற்காக அழாமல், ஆறுதல் தேடாமல், அதனை உள்ளத்தில் வைத்து மறைத்து, பார்ப்பவர்களுக்கு தன்னம்பிக்கையோடு...
மனைவியை வசீகரிக்கும் பரிசு!
மனைவிக்கு, கணவர் பரிசுகள் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். மனைவிக்கு மனப்பூர்வமாக தரும் பரிசுகள் மரியாதைக்குரியதாகவும், நேசிப்பின் சின்னமாகவும் என்றும் அவள் நினைவில் நிறைந்திருக்கும்.அந்த பரிசு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்?- உபயோகப்படுத்தக்கூடிய பொருளாக இருக்கலாம்.- நேரடியாக உபயோகம் இல்லாவிட்டாலும், அழகான பொருளாகவும் இருக்கலாம்.மனைவிக்கு தேவையான உபயோகப் பொருளை வாங்கிக்கொடுத்தால், அதை உபயோகப் படுத்தும்போதும் கணவரின் நினைவுவரும். அதனால் மனைவி எப்போதும் தன்னை நினைவில் வைத்திருக்கவேண்டும் என்று விரும்பும் கணவர்கள், அவள் அடிக்கடி பயன்படுத்தும் செல்போனை பரிசாக வாங்கிக்கொடுத்துவிடுவார்கள். ஆனால் அடிக்கடி உபயோகப் படுத்தும் பொருட்கள் சீக்கிரமே பழையதாகி, நாளடைவில் செயலற்றதாக ஆகி விடும். அதனால் தான் வாங்கிக்கொடுக் கும் பரிசு, செயலற்றதாகவே ஆகக்கூடாது என்று கருதும் கணவர்கள், கலைப் பொருட்களை...
இவங்கலாம் இன்னமும் இருக்காய்ங்கயா! ! சொன்னா நம்புங்க..
இவங்கலாம் இன்னமும் இருக்காய்ங்கயா! ! சொன்னா நம்புங்க..1) துப்பட்டாவின் நோக்கம் அறிந்துப் போடற பொண்ணுங்க
2) சரக்க மோந்துப் பார்த்தாலே மயக்கம் போடற பசங்க
3) கை முறுக்கு சுடத் தெரிந்தப் பாட்டிங்க
4) எவ்ளோ பெரிய சிக்கு கோலத்தையும் அசால்ட்டா போடற அம்மாக்கள்
5)அப்பா ஏதாவது கேட்டா நின்று பொறும பதில் சொல்ற பிள்ளைங்க
6) ஒரே ஒரு மொபைல் ,ஒரே ஒரு சிம்கார்ட் , ஒரே ஒரு காதல் இருக்கிற பொண்ணுங்க ,பசங்க
7) மல்லிகைப் பூவையும் கண்ணாடி வளையலையும் நேசிக்கும் பெண்கள்
8) பொண்ணுங்க கிட்ட பேச கூச்சப் படற பசங்க. முறைப் பையன பார்த்தா வெட்கப்படறபொண்ணுங்க.
9) மதிய உணவை ஒன்றாக அமர்ந்துச் சாப்பிடும் குடும்பங்கள்
10)சொந்த மண்ணையும் மொழியையும் மறக்காத மனிதர்கள் என!!
இவங்கலாம் 100 ல 2% தான் இருக்காங்க...
கணவருக்கு சிறுநீரகத்தை தானமளித்து சர்வதேசப் போட்டியில் பதக்கம் வெல்லச் செய்த பெண்!!
காதல் கணவருக்கு தனது சிறுநீரகத்தை தானம் அளித்ததன் மூலம் அவரை சர்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லச் செய்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண். நடுத்தரக் குடும்பம். நல்ல கல்வி. ஐ.டி. நிறுவனத்தில் வேலை. ஐ.டி. நிறுவனத்திலேயே பணியாற்றும் பெண்ணை காதலிக்கும் வாய்ப்பு. காதலித்த பெண்ணுடன் பெற்றோர் சம்மதத்தில் திருமணம். இப்படியாய் மகிழ்ச்சிக் கடலில் நீந்தித் திளைத்தார் ஆர். ஹரிகுமார் (28). ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இடி விழுந்ததுபோல அதிர்ச்சி தரும் செய்தி. உடல் நலம் சற்று பாதித்த நிலையில் மருத்துவமனைக்குச் சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர் ஹரிகுமாரின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாகக் கூறினார். சிறுநீரகம்...
அரிப்பு நோயை தடுக்க நாட்டு வைத்தியம்!
கொசுக்களை விரட்டுவதற்கு சருமத்தில் க்ரீம்களை தடவுவதால், ஒருவேளை இன்னும் அதிகமாக கொசுக்கடிக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்படலாம். குறிப்பாக வெப்பம் அதிகமாக இருக்கும் சமயத்தில் தூங்குவதற்கு முயற்சிக்கும் போது, சரும அரிப்பு காரணமாக நாம் சொரிய ஆரம்பிக்கிறோம். உடனடியாக அரிப்பிலிருந்து சுகம் கிடைப்பதற்கு, பாதிக்கப்பட்ட பகுதியை சொரிவதால், அந்த இடத்தில் இன்னும் வீக்கம் அதிகமாகிறது. இதனால் மேலும் சருமத்தில் அரிப்பு அதிகமாகி இரத்தம் வரும் வரை சொரியும் சமயத்தில், அழுக்கான விரல் நகங்களால் சருமத்தில் கீறல் ஏற்பட்டு, நோய்த்தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து உருவாகும். ஆகவே கொசு கடிக்கும் போது, எரிச்சலை உண்டாக்கும் அரிப்பிலிருந்து விடுதலை பெற இதோ சில ஆரோக்கியமான வழி முறைகள் உள்ளன. இவை அதிகமாக நாட்டு மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகின்ற நாட்டு வைத்தியக் குறிப்புகள் ஆகும். இவற்றில் அறிவியல் ரீதியான ஆதாரங்களும் அடங்கியுள்ளன....
வீட்டில் கற்றாழை ஜெல் தயாரிக்கும் முறை!
நன்கு வளர்ந்த கற்றாழையை தேர்வு செய்து கவனமாக மென்மையாக மற்றும் மிக அகலமான கற்றாலைகளை பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்களுக்கு கற்றாலையை நேராக வைத்து அதிலிருந்து வெளியாகும் மஞ்சள் நிற திரவத்தை முழுவதுமாக நீக்கிவிடவேண்டும். பின்னர் கற்றாலையை நன்கு கழுகி முடித்தவுடன் கற்றாலையில் உள்ள ஜெல்லை எடுத்து ஒரு க்யூப்ல போட்டு அடைத்து வைக்க வேண்டும்.அலோ வேரா ஃபேஸ் பேக்தேவையான பொருட்கள்:கற்றாழைமஞ்சள்தேன்பால்ரோஸ் வாட்டர்செய்முறை:மஞ்சள், தேன், பால், ரோஸ்வாட்டர் என அனைத்திலும் ஒரு தேக்கரண்டி சேர்த்து பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் தயாரித்து வைத்துள்ள அலோ வேரா ஜெல்லைப் போட்டு கலந்தால் பேஸ்ட் தயாராகிவிடும். சுமார் 20 நிமிடங்கள்...
தனுஷுடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்!
நடிகர் தனுஷ் தற்போது ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’, கே.வி.ஆனந்த் இயக்கும் ‘அனேகன்’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கும் ‘வேங்கை சாமி’ என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இப்படங்களுக்கு பிறகு தனுஷை வைத்து ‘படிக்காதவன்’, ‘மாப்பிள்ளை’ ஆகிய படங்களை இயக்கிய சுராஜ் இயக்கும் புதிய படமொன்றிலும் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருக்கிறாராம். தனுஷும், காஜல் அகர்வாலும் முதன்முதலாக ஜோடி சேரும் படம் இதுதான்.தனுஷும், காஜல் அகர்வாலும் இணைந்து போஸ் கொடுத்த படங்கள் இணைய தளங்களில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து பெரும் பரபரப்பை...
லிப்ஸ்டிக் நீண்ட நேரம் கலையாமல் இருக்க சில டிப்ஸ்!
பெண்கள் உபயோகிக்கும் அழகுப் பொருட்களில் முதன்மையானது தான் லிப்ஸ்டிக். லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கவும், லிப்ஸ்டிக் போடும் போது நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்களையும் பார்க்கலாம்.* லிப்ஸ்டிக் போடும் முன், சிறிது பெட்ரோலியம் ஜெல்லைத் உதட்டில் தடவிய பின் லிப்ஸ்டிக் போட்டால், லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கும்
* நீண்ட நேரம் லிப்ஸ்டிக் இருக்க வேண்டுமானால், இரவில் படுக்கும் முன், லிப்ஸ்டிக்கை ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு தூங்க வேண்டும். பின் காலையில் எழுந்து அந்த லிப்ஸ்டிக்கை போட்டால், அது நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.
* லிப்ஸ்டிக் போட்ட பின் பார்க்க சூப்பராகவும், அதிக நேரம் அது நிலைத்து இருக்கவும், உதடுகளுக்கு சிறிது பவுடர் போட்டு, பின்னர்...
முடி மிருதுவாக இருக்க!
முடி மிருதுவாக இருக்க சீத்தாப்பழ விதைகளைப் காயவைத்து பொடியாக்கி,அதை சீயக்காயுடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
இதை வாரம் இரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டு போல் மிருதுவாக மாறும்.பெண்களுக்குப் உள்ள மிக பெரிய பிரச்னை பேன்தான். இதை ஒழிக்க இரவில் தலையணைக்கு அடியில் செம்பருத்திப் பூ இலைகளை வைத்துப் படுத்து வந்தால் பேன்கள் ஒழியும்.அதேசமயம், இந்த செம்பருத்திப் பூக்களையும் கற்பூரப் பொடி இரண்டையும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலைக்குத் தடவிக் கொண்டால் பேன்கள் ஓடிவிடும்...
சம்பங்கி பூவின் மகத்துவம்!
பூஜைக்கு உகந்த சம்பங்கி பூ. மருத்துவ குணம் நிறைந்த மலர்களில் சற்று வித்தியாசமானது சம்பங்கி பூ. அவ்வளவு சீக்கிரத்தில் வாடாது. இதன் பூ இதழ்களும், தண்டும் அழகு சேர்க்கும் வகையில் தோற்றமுடையது. சம்பங்கி பூஜைக்கு ஏற்ற பூவாக மட்டும் இல்லாமல், பல்வேறு வகைகளில் பலன் தர கூடியதாக உள்ளது. சம்பங்கி பூவின் பலன்களை பார்ப்போம்.சம்பங்கி தைலம்அரை கிலோ தேங்காய் எண்ணெயில், 50 கிராம் சம்பங்கி பூவை போட்டு நன்கு காய்ச்சி இறக்க வேண்டும். காய்ச்சிய எண்ணெய் தான் சம்பங்கி தைலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தைலத்தை உச்சி முதல் பாதம் வரை நன்றாக தேய்த்தால் உடல் வலி தீரும். சம்பங்கி பூவில் பவுடரும் தயாரிக்கலாம். 100 கிராம் சம்பங்கி, 20 கிராம் வெள்ளரி விதை, 20 கிராம் பயத்தம்...
பேசும் கலை - ஜெயிக்கலாம் வாங்க...!
வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.. இது அடிக்கடி என்னுடைய பாட்டி எனக்குச் சொல்லிக்கொடுத்த மந்திர வார்த்தை..நம் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை, நம் எதிரில் இருப்பவர்கள் தெளிவாக புரிந்தகொள்ளும்பொருட்டு வார்த்தைகளாக வெளிப்படுத்துவது என்பது ஒரு கலை. வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளாக தெளிவாக இருக்குமானால், எதிரில் இருப்பவர்கள் நம்முடைய எண்ணங்களைப் புரிந்துகொள்வார்கள்.அதுமட்டுமா? நம்முடைய எண்ணங்களை தெளிவான வார்த்தைகளில் கூறுவதன் மூலம் கேட்பவர் மனதிலும் அந்த வார்த்தைகள் அப்படியே பதிந்துவிடும். அந்த வார்த்தைகளை சொல்லக்கூடிய தருணம், முகபாவம் ஆகியவை முக்கியம்.நம்மைவிட பெரியவர்களிடத்தில் எப்படி பேச வேண்டும். சக தோழர்களிடம் எப்படி பேச வேண்டும். சபையோர்களிடத்தில் எப்படி பேச வேண்டும் என ஒரு வரைமுறையே, வரையறையே இருக்கிறது.பொதுவாக நம்முடைய கருத்தை ஒருவரிடத்தில் சொல்லும்போது தெளிவாக, புன்முறுவல் கலந்து, இயல்பான...
இலவசமான அழகான பத்து எழுத்துருக்கள் (fonts)
கணினி வைத்திருக்கின்ற எல்லோருக்குமே அழகான எழுத்துருக்கள் என்றால் பிடிக்கும். Graphic Desinging செய்கின்றவர்களுக்கு எழுத்துருக்கள் இன்றியமையாதவை. கீழே தரப்பட்டிருக்கின்ற எழுத்துருக்கள் எல்லாம் இலவசமானவை. உடனே தரவறிக்கிக் கொள்ளுங்கள்.
Petita
Lavenderia
Hagin Caps
Znikomit
ChunkFive
Cantible
Code
Homestead
Riesling
Signeric...
தொடாமலே மின்சாதனங்களை இயக்கும் நவீன சுவிட்ச்!
கையால் தொடாமலேயே மின்சாதனங்களை இயங்கச் செய்யும் புதுமையான சுவிட்சை கண்டுபிடித்துள்ளார் கிராமத்து பொறியாளர் ஹரிராம்சந்தர். இவர் வடிவமைத்துள்ள இந்த டச்லெஸ் சுவிட்ச், இன்பிரா ரெட் (அகச்சிவப்பு கதிர்) தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இளம் பொறியாளர் திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அம்பலவாணபுரத்தைச் சேர்ந்த இளம் பொறியாளர் ஹரிராம்சந்தர். 23 வயதாகும் இந்த பி.டெக். (எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன்) பட்டதாரிக்கு பள்ளியில் படிக்கின்ற காலம்தொட்டே விஞ்ஞானத்தின் மீது ஓர் ஈர்ப்பு. இத்தனைக்கும் அவரது பெற்றோர் ஒன்றும் படித்தவர்கள் கிடையாது. அவரது மறைந்த தந்தை முருகன், சாதாரண மில் தொழிலாளிதான். தாயார் முத்துலட்சுமி வீட்டை கவனித்து...
வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி?
வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறு, மிளகு, சின்ன வெங்காயம், சீரகம் கலந்து நீர்விட்டு கொதிக்க வைத்து பிறகு சிறிது எண்ணெய் விட்டு தாளித்து சூப் போல் செய்து அருந்தி வந்தால் கீழ்கண்ட நோய்களுக்கு கண்கண்ட மருந்தாகும். மது, புகை போன்ற தீய பழக்கங்களால் அடிமைப் பட்டவர்களின் கல்லீரல் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும். ஈரல் பாதிப்பினால் கண் பார்வைக் கோளாறு, காமாலை நோய் தாக்கும். இதற்கு எல்லாம் வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும்.சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி பயங்கரமான வலி ஏற்படும். இந்த கற்களை அகற்ற வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும். வாழைத் தண்டில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும்...
முருங்கைப்பூ சாதம்!
என்னென்ன தேவை?
முருங்கைப்பூ - 2 கப்,
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
கடுகு - 1 டீஸ்பூன்,
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
வடித்த சாதம் - 2 கப்,
மஞ்சள் தூள் - சிறிது,
உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
முருங்கைப்பூவை நன்கு அலசவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு, முருங்கைப்பூ எல்லாவற்றையும் போட்டு நன்கு கிளறவும்.
கடைசியாக தேங்காய்த் துருவல் போட்டு இறக்கவும். இதை வடித்த சாதத்துடன் சேர்த்துக் கிளறி இறக்கவும். கண்கள் குளிச்சி பெறும...
கூடாத ஆமைகள்!
ஆமை புகுந்த வீடு உருப்படாது' என்பார்கள் முன்னோர். சீனர்களோ ஆமையை அதிர்ஷடத்திற்குரியது என்று வளர்க்கிறார்கள்.
எந்த ஆமை கூடாதது? ஆமைகளில் இருவகை.
அதில் எந்த ஆமை இருக்க வேண்டியது? 'கல்லாமை, இல்லாமை' கூடாது!
அழுக்காறாமை, பொய்யாமை பிறனில் விழையாமை போன்ற ஆமைகள் இருக்க வேண்டியது!வள்ளுவர் மிக எரிச்சல் படும்போது 'பாவி' என்ற சொல்லைப் பயன்படுத்துவார். 'வறுமை என்ற ஒரு பாவி'. 'அழுக்காறு என ஒரு பாவி' என்றார். அந்த பாவி நம் செல்வத்தை அழிக்கும்; நரகத்தில் நம்மைச் சேர்க்கும்!இந்த (ஆமை) பொறாமை எப்படியோ நம் மனதில் வந்து புகுந்து விடுகிறது. நம் வீட்டு மின்சாரம் தடைப்பட்டு எதிர்வீட்டில் விளக்கு எரிந்தால் பொறாமை. நம் பிள்ளை தேர்வில் தோற்று எதிர் வீட்டுப்பிள்ளை தேர்ச்சி பெற்றால் பொறாமை!
அண்ணனுக்கு ஆண் குழந்தைகளாகப் பிறந்து தம்பிக்கு பெண் குழந்தைகளாகப் பிறந்தால் பொறாமை!
நாம் வயதான காலத்தில்கூடச் சுறுசுறுப்பாக...
சிறுநீர் கல் ஏற்படாமல் தவிர்க்க சூப்பர் டிப்ஸ்!
சிறுநீரகக் கல் என்பது இப்போது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் சகஜமான ஒரு விஷயமாகி விட்டது. வேலை காரணமாக பெண்களும் இப்போது அதிக நேரம் தண்ணீர் குடிக்காமல் மறந்து விடுகின்றனர். அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தாலும், தவறான உணவுப் பழக்கங்கள் என்று உள்ளதால் அவர்களுக்கும் சிறுநீரகத்தில் கல் வர வாய்ப்புள்ளது. கால்சியம் அதிகமாக உள்ள பால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்ளும் போது, அது நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் கீரை வகையில் உள்ள ஆக்சலேட் அமிலத்துடன் சேர்ந்து பி.எச்.8 போன்ற உப்பாக மாறுகிறது. அது வயிறு, சிறு மற்றும் பெருங்குடல்களில் முழுவதும் உறைந்து ரத்தத்தில் சேரும்போது சிறுநீரகத்தில் வடிகட்டப்படுகிறது. கால்சியம் என்ற பொருள் உடலின் எலும்புகளில்...
கர்ப்ப கால சர்க்கரை நோயை தடுப்பது எப்படி?
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் மருத்துவரின் பரிந்துரை, ஆலோசனை இல்லாமல் எந்தவித மாத்திரைகளையும் சாப்பிடக் கூடாது. திட்ட மிட்ட உணவு முறையால் சர்க்கரை நோய் வருவதை தடுக்கலாம். இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்கலாம். நொறுக்கு தீனி சாப்பிடுவதைப் போல உணவை பிரித்து சாப்பிட்டு பழக வேண்டும். முதல் குழந்தை தரித்தபோது, சர்க்கரை நோய் இல்லாமல் இருந்து, 2வது குழந்தையை தரிக்கும்போதும் சர்க்கரை நோய் வராது என்று சொல்ல முடியாது. சர்க்கரை நோய் வரலாம். முதல் பிரசவத்திற்கு பிறகு உடல் பருமன் பிரச்னையும் ஏற்படலாம். இதனால் சர்க்கரை நோய் வந்துவிடலாம். எனவே, உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்றவை மேற்கொண்டு சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்...
ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தை கைவிட சீனா முடிவு!
கடந்த 43 ஆண்டுகளாக இருந்து வந்த, ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தை கைவிட சீன அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சீனத் தம்பதிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உலக மக்கள் தொகை யில் முதல் இடத்தில் உள்ளது சீனா. கடந்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சீனாவில் 18.5 கோடி பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்.
2015ல் முதியவர்கள் எண்ணிக்கை 22.1 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5.1 கோடி முதியவர்கள் கவனிக்க ஆள் இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனாவில் கடந்த 1970 முதல் ஒரு குழந்தை குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டது. கிராமப்புறங்களில் தம்பதிக்கு பிறகும் முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் 2வது...
இன்டர்நெட்டை கலக்கும் கூகுள் விளம்பரம்(google adsense)!
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்த நண்பர்கள் இருவர் மீண்டும் சந்திப்பது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம் இன்டர்நெட்டை கலக்கி வருகிறது. இரண்டே நாளில் இதுவரை 27 லட்சம் பேர் அதை பார்த்துள்ளனர்.கூகுள் நிறுவனம் தனது சர்ச் இன்ஜினை பிரபலப்படுத்துவதற்காக எடுத்த விளம்பரம் அது. டெல்லியில் வயதான தாத்தா, தனது பேத்தியிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
ஒரு புத்தகத்தில் இருக்கும் பழைய பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவைக் காட்டி, அதில் இருக்கும் தனது பால்யகால நண்பனான யூசுப்பை பற்றி பேசுகிறார். லாகூரில் வசித்ததையும் நண்பனுடன் சேர்ந்து பட்டம் விட்டது பற்றியும், தான் வசித்த வீடு முன்பு மிகப் பெரிய இரும்பு கேட்டுடன் கூடிய பார்க் இருந்ததையும்...
கூகுள் நிறுவனம் மாணவர்களுக்காக கல்வி அப்பிளிக்கேஷன் வெளியீடு!
கூகுள் நிறுவனமானது தனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயற்படக்கூடிய அப்பிளிக்கேஷன்களை பயனர்கள் பெற்றுக்கொள்ளும்பொருட்டு கூகுள் பிளே ஸ்டோர் சேவையினை வழங்கி வருகின்றது. தற்போது இச்சேவையில் கல்வி தொடர்பான மற்றுமொரு சேவையை இணைக்கவுள்ளது.
Google Play for Education எனும் இச்சேவை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். மாணவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட அப்பிளிக்கேஷன்களை இங்கிருந்து பதிவிறக்கம் செய்து ஆண்ட்ராய்டு சாதனங்களில் நிறுவி பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த அப்பிளிக்கேஷன்களை கிளவுட் முறையில் சக மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வசதி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளத...
மோட்டோரொல்லா நிறுவனம் மோட்டோ 'ஜி' ஸ்மார்ட்போன் அறிமுகம்!
மோட்டோரொல்லா நிறுவனம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 179 அமெரிக்க டாலர் விலை கொண்ட குவாட் கோர் ப்ராசசர் கூடிய ஸ்மார்ட்போனை மோட்டோரொல்லா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பெயர் மோட்டோ 'ஜி' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் 8 ஜி.பி. மெமரியுடன் கூடிய மாடல் விலை 179 அமெரிக்க டாலர்களாகவும், 16 ஜி.பி. மெமரியுடன் கூடிய மாடல் விலை 199 அமெரிக்க டாலர்களாகவும் உள்ளது. கூகிள் உரிமை கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான மோட்டோரொல்லா அடுத்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில், இந்திய சந்தையில் மோட்டோ 'ஜி' ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.மோட்டோ 'ஜி' ஸ்மார்ட்போன் அம்சங்கள்: 720x1280 பிக்சல் தீர்மானம் கொண்ட 4.5-அங்குல HD...