ஆன்ட்ராய்டு போனுக்கான செயலிகள்(அப்கள்) ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.இவற்றை கூகுலின் செயலிகளுக்கான இணைய கடையில் ( கூகுல் பிலே ஸ்டோர்) பார்க்கலாம்.வாங்கலாம்.இப்போது கூகுலே ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ளது.கூகுலே உருவாக்கிய செயலி இது.
செயலியின் பெயர் ஒன் டே. அதாவது ஒரு நாள். மாற்றத்துக்கான செயலி இந்த செயலி உங்களை ஒரு நாள் கொடை வள்ளலாக்கும் நோக்கம் கொண்டது. நீங்கள் விரும்பினால் ஒவ்வொரு நாளும் கொடை வள்ளலாக்க கூடியது.எப்படி தெரியுமா? இந்த செயலி தன்னார்வ தொண்டு நிறுவங்களுக்கும் உங்களுக்கும் இடையிலான பாலமாக உருவாக்கப்பட்டுள்ளது.உள்ளங்கையில் வந்து நிற்கு இந்த பாலம் வாயிலாக நீங்கள் உங்க்ளை உள்ளம் கவர்ந்த தொண்டு நிறுவனத்திற்கு...
Tuesday, 29 October 2013
இணைய தாக்குதலை தடுக்க புதிய வழி!
வீட்டுக்கு வேலி போடுவது போல கம்புயூட்டருக்கும் பாதுகாப்பு வேலி போட்டு வைக்க வேண்டும்.அதே போல முக்கிய தகவல்களை தாங்கி நிற்கும் இணையதளங்களுக்கும் பாதுகாப்பு வேலி அவசியம்.இல்லை என்றால் கம்ப்யூட்டர் கில்லாடிகள் உள்ளே புகுந்து விளையாடி விடுவார்கள்.கிரிடிட் கார்டு தகவல் போன்ற முக்கிய விவரங்களை இந்த கப்யூட்டர் கொள்ளையர்கள் களவாடி விடும் அபாயமும் இருக்கிறது.பாஸ்வேர்டுகளும் இப்படி பறி போவதுண்டு.
இந்த விபரீதத்தை தடுக்க வங்கிகளில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்படுகளை மிஞ்சும் வகையில் இணைய உலகிலும் வைரஸ் தடுப்பு சாப்ட்வேர்,மால்வேரோடு மல்லுகட்டும் சாப்ட்வேர் பயர்வால் எனப்படும் பாதுகாப்பு வேலி போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இவற்றின் நோக்கம் எல்லாம் ஒன்று தான்.அத்துமீறி நுழைய முயலும் எந்த கப்யூட்டர் கில்லாடியையும் உள்ளே விடாமல் தடுப்பது தான் இவற்றின் பணி.
ஆனால் இந்த சாப்ட்வேர்களின் கண்ணில்...
கம்ப்யூட்டர் சிப்புக்குள் இருக்கும் ஓவியம்!
கலை ஆர்வம் எங்கெல்லாம் மறைந்து கிடக்கிறது என தெரிந்து கொண்டால் ஆச்சர்யமாக இருக்கும். ஆம் கம்ப்யூட்டர் சிப்புக்குள்ளும் கலை ஆர்வத்தை காணலாம் தெரியுமா? இது கம்ப்யூட்டர் உலகம் அதிகம் அறிந்திரதா ரகசிய அதிசயம்.
மைக்ரோசிப்பை கம்ப்யூட்டரின் மூளை என்கின்றனர். அந்த சிப்பின் ஏதோ ஒரு மூலையில் தான் சிப் வடிவமைப்பாளர்களின் நுண் ஓவியங்கள் ஒளிந்திருக்கின்றன. அதாவ்து சிப்பில் இருக்கும் சர்க்யூட்டில் வரையப்பட்ட ஓவியங்கள் .
இப்படி சிப்புக்குள் ஓவியம் இருப்பது அநேகமாக யாருக்குமே தெரியாது.ஏன் என்றால் இந்த ஓவியங்களை வெறும் கண்களால் பார்க்க முடியாது.மைக்ராஸ்கோப் எனப்படும் நுண்நோக்கி வழியே மட்டுமே இவற்றை காணலாம். நகக்கணு அளவிலான இடத்தில் சிப் செயல்பாட்டிற்கு...
எல்.ஜி. வளைந்த திரையுடன் கூடிய ஜி பிளெக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!
எல்.ஜி. நிறுவனமானது வளைந்த திரையுடன் கூடிய ஜி பிளெக்ஸ் ஸ்மார்ட்போன் தொடர்பான தகவல்களை அறிவித்துள்ளது. இதுவரை உறுதிப்படுத்தப்படாமல் இருந்த எல்.ஜி.யின் வளையக் கூடிய ஸ்மார்ட் போன் தொடர்பான தகவல் தற்போது வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் எல்.ஜி. வெளியிட்டுள்ள தகவலின் படி ஜி பிளெக்ஸ் ஸ்மார்ட் போனானது நெகிழ்ச்சியான 6 அங்குல ஓ.எல்.ஈ.டி. திரையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் எ 177 கிராம்கள் என்பதுடன் 2.26GHz குவாட் கோர் ஸ்னாப்ட்ராகன் 800 ப்ராசசர் மூலம் ஜி பிளெக்ஸ் ஸ்மார்ட் போன் இயங்குகின்றது. இதுதவிர 2GBரேம், 13- மெகாபிக்சல் கேமரா போன்ற வசதிகளை இது உள்ளடக்கியுள்ளது.
'மல்டிடாஸ்கிங்' செயற்பாடுகளுக்காக திரையை இரண்டாக பிரிக்கக்கூடிய...
மசாஜ ஏன்? யார்?எப்போ?எப்படி?பண்ணலாம்!
இன்றைய சூழ்நிலையில் அதிகப்படியான வேலைப்பளு, வேகமான வாழ்க்கை மற்றும் உறவுகளில் பிரச்சனை போன்றவற்றால் முதலில் வருவது மன அழுத்தம என்னும் நோய்தான்.இத்தகைய மன அழுத்தத்தை ஆரம்பத்திலேயே சரியாக கவனித்து, அதனை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடாவிட்டால், உடல் நிலையானது இன்னும் மோசமாகிவிடும். குறிப்பாக இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்றவையும் சீக்கிரமே வந்துவிடும்.
ஆகவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு ஒருசிறந்த நிவாரணிகளில் முக்கியமானது மசாஜ்.மசாஜ்களில் நிறைய வகைகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு இடத்திலும் மசாஜானது வித்தியாசப்படும். பொதுவாக அனைத்து வகையான மசாஜ்களும் மன அழுத்தத்தைப் போக்கக்கூடியவைதான்.எனவே மன அழுத்தத்தில் இருந்து விடுபட நினைத்தால் ஒரு...
தன் கையே தனக்கு பாஸ்வேர்டு.
பாஸ்வேர்டு தொடர்பான பரிசோதனை முயற்சிகளில் ஒன்றாக அறிமுகமான டைனாஹான்டு முறை புழக்கத்திற்கு வராமலே காணாமல் போய்விட்டது. இருந்தாலும் இந்த பாஸ்வேர்டு முறையை அறிந்து கொள்வது தப்பில்லை.
டைனாஹான்டு பாஸ்வேர்டு முறை வித்தியாசமானது ,சுவாரஸ்யமானது என்பது மட்டும் இதற்கு காரணமல்ல. சிறந்த பாஸ்வேர்டை உருவாக்குவதற்கான தேடல் எத்தனை தீவிரமானதாக இருக்கிறது,எந்த எந்த திசைகளில் எல்லாம் நடந்து வருகிறது இவை எல்லாவற்றையும் மீறி இது எத்தனை சவாலானதாக இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடியது என்பதற்காகவே இந்த முறையை தெரிந்து கொள்ளலாம்.
பாஸ்வேர்டு என்ற பெயரில் ஏதோ சொற்கூட்டத்தை சமர்பிக்கும் தேவை இல்லாமல், ஒருவர் தனது கையெழுத்தையே பாஸ்வேர்டாக பயன்படுத்துவது தான்...
பக்தி, காதலுக்கு சாட்சி சாஞ்சி - சுற்றுலாத்தலங்கள்!
பக்தி, காதலுக்கு சாட்சி சாஞ்சி
பக்தி, காதலுக்கு சாட்சி சாஞ்சி
புத்தம் சரணம் கச்சாமி... என்று பல நாடுகளில் பரவிக்கிடக்கும் புத்தமதத்துக்கு பூர்வீகம் இந்தியாதான். இதற்குச் சான்றாக நாடெங்கிலும் பழங்கால சின்னங்கள், கல்வெட்டுக்கள், ஓவியங்கள் நிறைய உள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை சாஞ்சி ஸ்தூபி மற்றும் அதைச்சுற்றியுள்ள கலையம்சம் மிக்க கட்டிடங்கள். மத்தியப்பிரதேச மாநிலம் ரெய்சன் மாவட்டத்தில் உள்ள சாஞ்சி கிராமத்தில் இந்த ஸ்தூபி உள்ளது. கிராமத்தின் பெயராலேயே ஸ்தூபியும் அழைக்கப்பட்டு வருகிறது. போபாலில் இருந்து சுமார் 46கி.மீ தொலைவிலும், பெஸ்நகர் மற்றும் விதிஷா ஆகிய ஊர்களில் இருந்து 10கி.மீ தொலைவிலும்...
கேடு நினைக்கக்கூடாது (நீதிக்கதை)

ஒரு காட்டில் ...ஆடுகள் கூட்டம் கூட்டமாக போய் மேய்வது வழக்கம்.
அவ்வப்போது ...வழி தவறிப்போகும் ஆடுகளை ஓநாய் ஒன்று கொன்று உணவாக்கிக்கொள்வது வழக்கம்.
ஒரு நாள் அப்படி ஆடுகள் மேய்ந்துக் கொண்டிருந்த போது ...நரி ஒன்று அவற்றின்
மீது பாய்ந்து ஆட்டுக்குட்டி ஒன்றை வாயில் கவ்விக் கொண்டு ஓட்டம்
பிடித்தது.
அதைப்பார்த்த ஆடுகள் ...'மீண்டும் திருட்டு ஓநாய் வந்து ஆட்டைக் கவ்விக்கொண்டு ஓடுகிறதே!' எனக் கூச்சல் போட்டன.
ஆட்டுக்குட்டியை கவ்விக் கொண்டு ஓடிய நரி ஓநாயைப் பார்த்து 'ஓநாயே உன் மீது
இன்று எந்த தவறும் இல்லாதபோதும் அந்த ஆடுகள் உன் மேல் பழியை
சுமத்துகின்றனவே' என்றது.
அதற்கு ஒநாய்.....'ஆடுகள் சொல்வதிலும் உண்மை உள்ளது.நான்...
கெட்டப் பழக்கங்களை விடவேண்டும்........(நீதிக்கதை)

ரமேஷ்...தன் நண்பர்களை கேலி செய்வது....அவர்களுடன் சண்டையிடுவது..சரியாக
படிப்பதில்லை..பொய் சொல்வது என கெட்டப்பழக்கங்கள் அதிகம் கொண்டவனாகத்
திகழ்ந்தான்.
அன்று அவனது தந்தை...ரமேஷின் பள்ளி ஆசிரியரைப் பார்த்து....'ரமேஷிடம் இருக்கும் கெட்டப் பழக்கங்களை போக்குவது எப்படி..' என்றார்.
அதற்கு ஆசிரியர்...'இன்று மாலை அவனை என்னை சந்திக்கச் சொல்லுங்கள்' என்றார்.
மாலை ரமேஷ் ஆசிரியரைப் பார்க்க வந்தான்.
ஆசிரியர் அவனை அழைத்துக்கொண்டு மரங்கள் நிறைந்த தோப்பிற்குள் சென்றார்.
ரமேஷிடம் ஒரு சிறிய செடியைக் காட்டி அதைப் பிடுங்கச்சொன்னார். ரமேஷ் அதை வேருடன் பிடுங்கினான்.
பின்னர் சற்றே வளர்ந்த செடியை பிடுங்கச்சொன்னார்.ரமேஷும் சற்று கஷ்ட்டப்பட்டு அந்த செடியை...
இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-08

வேத காலம்
ஹிந்து மதத்தின் வரலாறு பற்றி கடந்த பதிவில்
பார்த்தோம். ஹிந்து மதம் உருப்பெற்று செழிப்படைந்தது வேதகாலத்தில் தான். வேத
காலத்தின் வரலாறு மற்றும் வேதங்கள் பற்றி இனி விரிவாக பார்க்கலாம். வேதகாலம்
என்பது மனிதன் முழுமையான நாகரிகம் அடைந்தபிறகு உருவான காலமாகும். அதாவது உலோக
காலத்திற்கு...
அரியலூர் மாவட்டத்தின் வரலாறு!
அரியலூர் மாவட்டம் ஒரு புதிய மாவட்டம், இது ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 2007 நவம்பர் 23 முதல் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
இம்மாவட்டம் அரியலூர், செந்துறை மற்றும் உடையார்பாளையம் ஆகிய மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு சிமெண்ட் ஆலைகள் அதிகம் உள்ளன. இந்த மாவட்டத்தின் பெருஞ்சிறப்பு கங்கைகொண்ட சோழபுரம். தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த இராஜராஜசோழனின் மகன் இராஜேந்திர சோழன் பெரிய கோயிலை போன்றே கட்டிய கோயில்.
இம்மாவட்டத்தின் மற்றொரு பெருஞ்சிறப்பு.
திருக்கோயில்கள் அருள்மிகு ஆலந்துறையார்(வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர், அரியலூர்
அருள்மிகு...