முன்பொருமுறை திருமதி பிக்காட் என்கிற ஆங்கிலேயப் பெண்மணி ஒருவர் ரமணாசரமம் வந்திருந்தார். அங்கு ரமண மகரிஷி சந்தித்து அவரிடம் உணவு முறைகளை பற்றி சில கேள்விகளை எழுப்பினார். அப்போது நடந்த சுவையான உரையாடல் இங்கே, தமிழில்:பிக்காட்: ஆன்ம ஞானம் பெற விழையும் சாதகனுக்கு எந்த வகையான உணவினை பரிந்துரைக்கிறீர்கள்?ரமணர்: சாத்வீக உணவு – அதுவும் குறைந்த அளவில்.பிக்காட்: சாத்வீக உணவு என்றால் என்ன சொல்ல முடியுமா?ரமணர்: ரொட்டி, பழம், காய், பால் போன்றவை…பிக்காட்: வட இந்தியாவில் சிலர் மீன்களை உண்கிறார்களே, அது சரியா?(இந்த கேள்விக்கு பதிலேதும் இல்லை)பிக்காட்: ஐரோப்பியர்களான எங்களுக்கு எங்கள் ஒருவித உணவு பழகிவிட்டது. அதை மாற்றினால், உடலும் அதனால் மனமும் சக்தியிழந்து விடுகிறது. உடல் நலம் பேணுவது அவசியம் அல்லவா?ரமணர்: நிச்சயமாக. உடல் சக்தியிழக்கையில், வைராக்கியம் என்னும் சக்தியை மனம் பெறுகிறதே!பிக்காட்: ஆனால், நாங்கள்...
Sunday, 8 December 2013
புத்தி உள்ளவன் பிழைத்து கொள்வான்.........

ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்.இறக்குமுன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது.முதல் கைதியின் ஆசை:நல்ல பெண்,நல்ல மது ,லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்.மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன.இரண்டாவது கைதியின் ஆசைகள் ;நல்ல பெண்,நல்ல உணவு,ஸ்டாலின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.மூன்றாவது கைதி தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டான்.அப்போது மாம்பழ சீசன் இல்லை.எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.ஆறு மாதத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர்.செர்ரிப் பழம் என்று பதில் வந்தது.அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால்...
அவசர கால முதலுதவி முறைகள்...!

வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம். மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால் :உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்கு முதல் உதவி செய்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை. உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் மசாஜ் செய்யுங்கள்.வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள்....
பாரதி இதைப் பார்த்திருந்தால்..... கவிதை!
பாரதி இதைப் பார்த்திருந்தால் தலைப்பாகையை கழற்றிவிட்டு தண்டவாளத்தில் படுத்திருப்பான் !கோவா கடற்கரை அலைகளில் இருக்கும் கேவலம்மெரினா கடற்கரை அலைகளிலும் கலக்கிறதா ?காதலர் என்ற பெயரில் இந்த சதைப் பிராணிகள் சிலது தற்கொலை செய்து கொள்கின்றன.மரணம் இவர்களால் அசிங்கப்பட்டுப் போகிறது.அலைகள் விளையாடி ஆனந்தம் நிறைந்த மெரினா கடற்கரையா ?காம விளையாட்டுச் சிற்பங்கள் நிறைந்த கஜுராஹோ கோயிலா ? ' காதாலாகி... கசிந்துருகி...கண்ணீர் மல்கி'என்று எழுதியவன் எழுதிய விரல்களை வெட்டிக் கொள்வான...
தொழில்நுட்ப காதல்..!
பெண் அப்பா நான் லவ் பண்றேன்..
அப்பா : பையன் எந்த ஊரு..
பெண்: UK ல இருக்கான்...
அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே.. எப்படி?
பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் ...
WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம் ......
WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்... நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல, அப்புறும் VIBER மூலமா கணவன் மனைவியா வாழறோம் ...
அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும் ...
அப்பா : நிஜமாவா!!!! அப்பறம் என்ன TWITTER மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க...
ONLINEல ஜாலியா இருங்க...
E - BAY 2 ல குழந்தைகளை வாங்கிக்கோங்க...
G MAIL மூலமா அவனுக்கு அனுப்பு...
எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ, அப்போ குழந்தைகளை OLX மூலமா வித்துடு.... அவ்வுளவுதான்....
பெண் : ?????????...
உங்கள் அக்கவுண்டில் பணம் குறைகிறதா? உஷார்!

முன்பெல்லாம் ரொக்கமாகப் பணத்தை கையில் வைத்துக் கொள்ள பயப்படுவார்கள். ஆனால் இப்போது டெபிட் கார்டுகளை வைத்திருக்கதான் அதிகம் பயப்பட வேண்டிருக்கிறது. காரணம், சமீப காலமாக பலருடைய பேங்க் அக்கவுன்டில் இருந்து அவர்களுக்குத் தெரியாமல் பணம் சூறையாடப்பட்டு விடுவதுதான்.ஏ.டி.எம். கார்டில் இருக்கும் தகவல்களை 'ஸ்கிம்மர்’ எனும் கருவி மூலம் அபகரித்து, அதைக் கொண்டு போலி கார்டுகளை உருவாக்கி, பணத்தை எடுத்து விடுகிறார்கள் சில சமூக விரோத சக்திகள்.குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் இத்தகைய நவீன கொள்ளைகள் அதிகமாக நடந்து வந்தாலும், மற்ற இடங்களிலும் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.அதனால் பணத்தைப் பறிகொடுப்பதற்கு முன்பாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை...
நடிகர் ரஜினிகாந்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட கன்னடப் பாடல்!

நடிகர் ரஜினிகாந்தின் நண்பரான ராஜ் பகதூர் நடிக்கும் புதிய கன்னடப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தை சிறப்பிக்கும் வகையில் ஒரு பாடல் எழுதப்பட்டுள்ளது. 'பெல்லிடரே பெல்லியபெகு ரஜினிகாந்தரங்கே' என்று தொடங்கும் இந்தப் பாடலில் மற்றவர்கள் மத்தியில் நடிகர் ரஜினி காட்டும் எளிமை, தன்னடக்கம் போன்ற அவரது நற்பண்புகள் போற்றப்பட்டுள்ளன.ரஜினிகாந்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் இயக்குநர் ருஷியால் எழுதப்பட்டு பிரதீப் ராஜால் இசையமைக்கப்பட்டுள்ளது. விஜயப்பிரகாஷ் இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.இதன் சிறப்பம்சமாக இந்தப் பாடலுக்கு ரஜினிகாந்தின் ரசிகர்கள் 1000 பேர் நடனமாடியுள்ளனர் என்று இயக்குநர் ருஷி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் வரும் 12 முக்கிய...
ஜீவாவின் ‘யான்’ படத்தின் ஆடியோ டிச.15-ல் வெளியீடு!

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்குனராக அவதாரம் எடுக்கும் புதிய படம் ‘யான்’. இப்படத்தில் ஜீவா-துளசிநாயர் ஆகியோர் நடித்த வருகின்றனர். நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் படப்பிடிப்புகளை நடத்தி முடித்துள்ள இந்த படம் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளனர்.இந்நிலையில், இப்படத்தின் ஆடியோவை வருகிற 15-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறத...
தமிழில் நடிக்க ஆசைப்படும் அமிதாப் பச்சன்..

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், மலையாளத்தில் கூட, நடித்து விட்டேன். ஆனால், தமிழில் இன்னும் நடிக்கவில்லையே என்ற ஏக்கம் உள்ளது. யாராவது, நல்ல கதை கூறினால், தமிழில் நடிப்பேன் என, கூறியிருந்தார். இதோ, இப்போது, அவரின் ஏக்கம் தீரப் போகிறது. ஜீவா, துளசி நடிக்கும், 'யான்' படத்தில், ஒரு முக்கியமான வேடத்தில், அதாவது சிறப்பு தோற்றத்தில், அமிதாப் நடிக்கப் போவதாக, கோடம்பாக்கத்திலிருந்து, செய்திகள் கசிந்துள்ளன. பாலிவுட்டில், பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரவி கே சந்திரன் தான், இந்த படத்தின் இயக்குனர் என்பதால், அவரின் நட்புக்காக, இந்த படத்தில் நடிக்க, அமிதாப், சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறத...
சட்டச்சிக்கலில் சிக்கிய சிவகார்த்திகேயன்!

மூன்றெழுத்துப் படத்தில் ஹீரோவாக அறிமுகமான அந்த சின்னத்திரையில் இருந்து வந்த நடிகரின் மார்க்கெட் எக்குத்தப்பாக எகிறிக்கொண்டிருக்கிறது. அதிலும் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான படம் வசூலை வாரி குவித்ததால், இப்போது அவரிடம் கால்சீட் கேட்டு முக்கிய படாதிபதிகளே க்யூவில் நிற்கிற நிலை உருவாகியிருக்கிறது. அதனால், ஏற்கனவே படத்துக்குப்படம் எகிறிக்கொண்டிருந்த நடிகரின் படக்கூலி தற்போது கேட்போரை தலைசுற்ற வைக்கிற அளவுக்கு உயர்ந்து நிற்கிறதாம். இந்த செய்திகளை மேற்படி நடிகரால் டீலில் விடப்படும் படாதிபதிகள் சிலர் லீக்அவுட் செய்து விடுவதும் ஒருபக்கம் நடந்து வருகிறது. இதனால் நடிகருக்கு தேவையில்லாத சட்டச்சிக்கல் ஏற்படுகிறதாம்.அதன்காரணமாக, சில நடிகர்கள்...
சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது !!

இந்த செய்தி பல பேருக்கு தெரிந்திருக்கும் .....!தெரியாதோர்க்கு....தமிழக கலாச்சாரங்களில்முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது. இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது.விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது ... .முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்....இது சரியா தவறா ?!!முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச்...
பேஸ்புக்கில் உங்கள் Profile ஐ யார் யார் பார்த்தார்கள் என அறிய வேண்டுமா..??

என்ன நண்பர்களே...!! தலைப்பைப் பார்த்துவிட்டு வியக்காதீர்கள்.. இப்படி ஒரு வசதி இருக்கிறது எனப் பலர் நம்பி தமது பேஸ்புக் கணக்கையே இழந்திருக்கிரார்கலாம்.
ஏனெனில் இப்படிப் பட்ட apps கள் இருக்கிறதென ஒரு இணையத்தளம் போட்டுவிட்டால்... உடனே வேறு என்ன... வேறு வேறு இணையதளங்களும் copy செய்து... வாசிக்க வரும் மக்களை உசுப்பேத்துவது.
உடனே.. அவர்களும் நம்பி அந்த app ஐ பயன்படுத்துவார்கள். ஆனால் ஒன்றும் வராது பதிலாக அவர்களது account hack செய்யப்படும்.
ஆம்,நண்பர்களே...!! இது போன்ற apps அனைத்துமே hacker களால் உருவாக்கப்படுபவை.
DoorBellஎன்ற app இருக்கிறது ஆனால் அதுவும் உண்மையானதானாதாக இல்லையாம். அதை வேண்டுமானால் நீங்கள் பாவிக்கலாம்... ஆனால்..
Unfaced.comஎன்ற...
உடல் உறுப்புகள் சண்டையிட்டால்?-ஒரு கற்பனை!

ஒரு நாள் உடல் உறுப்புகளுக்குள் தங்களுள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவைகளுக்குள் நடந்த உரையாடல்.ஆள் காட்டி விரல்: நான் இல்லன்னா ஒரு மனிதனால் ஒரு பொருளையோ அல்லது ஒரு நபரையோ சுட்டிக் காட்ட முடியுமா?மோதிர விரல்: இது என்ன பெரிய விஷயம்! மனிதன் என்மேல்தான் மோதிரம் போடுகிறான். அதனால் நான் அவனுக்கு அழகைக் கூட்டுகிறேன். மனிதனுக்கே தெரிகிறது, யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று. அதனால் எனக்கு தங்க மோதிரம் மாட்டி அழகு பார்க்கிறான். ஏன் உங்களில் ஒருவருக்கு மோதிர விரல் என்று பெயர் இல்லை?சுண்டு விரல்: டேய்! மோதிரம் போடுவதெல்லாம் ஒரு பெரிய விஷயமாடா? மனிதனை படைத்தவர் கடவுள். அவரை கை கூப்பி வணங்கும்போது நான்தான் முதலில்...
அழித்த மொபைல் டேட்டா திரும்ப வேணுமா?

தற்போது மொபைல் என்பது ஒரு குட்டி கம்பியூட்டர் போலவே இயங்க ஆரம்பித்து விட்டது எனலாம்.
போன், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்னவாகும்? நம் அன்றாட வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும் அல்லவா?
சில போன்களில் பி.சி. சூட் என்ற சாப்ட்வேர் தரப்பட்டு, அதன் மூலம் நம் தகவல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றிப் பின் மீண்டும் பெற்று...
ஆன்மிகக் கதைகள்!
எதனை நீ அதிகம் நினைக்கின்றாயோ, முடிவில் நீ அதுவே ஆகிவிடுகின்றாய்.
ஆசிரியர் ஒருவர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள் ஆர்வத்தோடு உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒரு மாணவன் மட்டும் பாடத்தைக் கவனிக்காது ஏதோ சிந்தனையில் இருந்தான். ஆசிரியர் அவனைக் கண்டார். அவன் ஏதோ கற்பனை உலகத்தில் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டார். எனவே அவனை தன்னருகில் வரச் சொன்னார். " பாடத்தைக் கவனிக்காமல் அப்படி என்ன சிந்தனையில் ஆழ்ந்திருந்தாய்" எனக் கேட்டார். அதற்கு அம் மாணவன் தனது வீட்டில் அழகிய காளை ஒன்று இருப்பதாகவும், அதன் நினைவே தனக்கு எப்போதும் இருப்பதாகவும் கூறினான். ஆசிரியர் அதற்கு அவனிடம்"அதோ எதிரில் தெரியும் குன்றில் அமர்ந்து உன் அழகிய காளையைப் பற்றி எண்ணியபடி இரு" என்று கூறினார். அம் மாணவனும் தொடர்ந்து ஏழு நாட்கள் அக்குன்றின் மேல் அமர்ந்து காளையை எண்ணியபடி இருந்தான். சாதாரணமாக...
ஒத்த பழமொழிகள்!
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.· முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை.· அடி மேல் அடி வைத்தால் அம்மியும் தகரும்.· கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.· எறும்பூரக் கல்லும் தேயும்.தூக்கணாங் குருவி கூட்டைப் பார்த்திருப்பீர்கள்.அது ஒரு மரத்திலோ,செடியிலோ அல்லது கிணற்றிலோ தொங்கிக்கொண்டிருக்கும்.அதை அந்த குருவி எப்படி கட்டுகிறது? காற்று அடிக்கும்போது கூடு ஆடும்.ஆனால் விழுந்துவிடாது.அவ்வளவு பலமாகஎப்படி அந்த தூக்கணாங் குருவி கட்டுகிறது?அது ஒவ்வொரு புல்லாக எடுத்துவந்து மிகவும் நுணுக்கமாக கட்டும்.சிறு பிழை ஏற்பட்டால் கூட அந்த கூடு கீழே விழுந்துவிடும்.மீண்டும் மீண்டும் அந்த கூடு கீழே விழுந்தாலும் குருவி தன் முயற்சியை கைவிடுவதில்லை.அதுவும் மீண்டும் மீண்டும் புற்களை எடுத்து வந்து கூடை கட்ட ஆரம்பிக்கும்.இறுதியில் ஒரு உறுதியான கூடு கிடைக்கும்.தூக்கணாங் குருவி கூடுஅதை விடுங்கள்.ஒரு பாறையில் விழுந்த ஆல மரத்தின்...
இறைவன் கொடுத்த வாழ்க்கை...?
இறைவன் கொடுத்த வாழ்க்கையில் இனிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன அது போன்று கசப்பான சம்பவங்களும் நிகழ்கின்றன. கசப்பும் இனிப்பும் கலந்த வாழ்க்கையை மனிதன் அனுபவிக்கிறான். மனிதன் இதிலிருந்து தப்பிக்க இயலாது. கடவுள் மனிதனை படைக்கிறான். இவற்றில் ஒரு சிலரை ஏழையாகவும், வேறு சிலரை பணக்காரனாகவும், ஒரு சிலரை அழகாகவும், மற்றவரை குரூரமாகவும் என்று பல கோணங்களில் படைக்கிறான். இந்த வாழ்க்கை மனிதனின் வேண்டுகோளின்படி அமையவில்லை. முற்பிறவியில் செய்த கர்மாவின் படி மனிதனுக்கு வாழ்க்கை அமைகிறது.வாழ்க்கை என்பது போராட்டம். மனிதனும் வாழ்க்கையில் சளைக்காமல் போராடுகின்றான். கடைசி மூச்சு வரை மனிதன் போராட்டங்களை எதிர் கொள்கிறான். இந்த போராட்டங்களைக் கண்டு மனிதன் மனம் தளர்ந்து விடவில்லை. மனிதன் மனப்பக்குவத்தோடு போராட்டத்தை சந்திக்கிறான். இவைகளில் சில போராட்டத்திற்கு தீர்வு காண்கிறான்.வாழ்க்கை என்பது பந்தயம். இந்தப் பந்தயத்தில்...
ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சிந்தனை துளிகள்....

01. எனக்கென தனித் திறமைகள் எதுவும் கிடையாதப்பா. ஆனால் எதையோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் என மட்டும் எனக்குத் தெரியும்.
02. அவ்வப்போது என்னை பைத்தியம் பிடிக்க வைக்கும் ஒரே கேள்வி. நான் பைத்தியமா? இல்லை மற்றவர்களா?
03. அறிவியல் அற்புதமானது தான். ஆனால் அதுவே பிழைப்பாய் இருக்காதவரை.
04. ரொம்ப முக்கியமானது என்னவென்றால் கேள்வி கேட்பதை நிறுத்த கூடாது.
05. கடவுள் முன் நாம் எல்லாரும் சம அளவு அறிவாளிகள்,சம அளவு முட்டாள்கள்.
06. கற்பனாவளம் அறிவைவிட மிக முக்கியமானதாக்கும்.
07. A-யை வெற்றி யென நான் கொண்டால் என் சூத்திரம் A = X + Y + Zஅதாவது இங்கு X உழைப்பையும் Y விளையாட்டையும் Z வாயை மூடிக்கொண்டு கம்னு இருத்தலையும் குறிக்கும்.
08. ஒரே நேரத்தில் யாரும்...
சாபமாகும் வரங்கள்!

தீயதை நல்லதாக்கிக் கொள்ளவும், நல்லதைத் தீயதாக்கிக் கொள்ளவும் முடிந்த விசேஷத் தன்மை மனிதனுக்கு மட்டுமே உண்டு. எத்தனையோ பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளையும், குறைபாடுகளையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு முன்னேறி சரித்திரம் படைத்த சாதனையாளர்களை நாம் கண்டிருக்கிறோம். அதே போல் எத்தனையோ சாதகமான சூழ்நிலைகளையும், அனுகூலமான அம்சங்களையும் அலட்சியப்படுத்தி வீணடித்து பாழாய்ப் போனவர்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால் தனிப்பட்ட மனிதர்களாய் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாழாய்ப் போவதைப் பார்க்கிற போது ஏற்படாத பெரும் வருத்தம், ஒரு தலைமுறையில் கணிசமான நபர்கள் சீரழிவதைப் பார்க்க நேர்கிற போது நம்மிடம் ஏற்பட்டுத் தங்கி விடுகிறது.இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் இணையற்ற அற்புதங்கள்...
அம்மா-பாசத்தின் தெய்வம் - அவசியம் படிக்கவும்!

இந்த கதை உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.கள்ளிப்பட்டு என்னும் ஊரில் இருந்தது அந்த அரசினர் பள்ளி. அங்கு ஐந்தாம் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். மாணவர்கள் அனைவரும் சிறப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். அப்போது “ஐயா” என்று ஒரு குரல் கேட்டது.பெண்-ஒற்றைக் கண்ணுடன்ஆசிரியர் திரும்பிப் பார்த்தார். வகுப்பறையின் வாசற்படிக்கு அருகே முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அவளை பார்க்கவே அருவருப்பாக இருந்தது. ஏனெனில் அவளுக்கு ஒரு கண் இல்லை. அவளைப் பார்த்ததும் மாணவர்கள் அனைவரும் பயந்துவிட்டனர். வகுப்பு ஆசிரியர் கூட பயந்தவராய் அவளைப் பார்த்து,“யாரும்மா நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்டார். “ஐயா, என் மகன்...
பெற்றோருக்கு....!

1. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.3. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!6. பெரும்பாலான...
இறைநம்பிக்கையே வாழ்க்கை!
மதமும், மதம் சார்ந்த சிந்தனைகளும் மனித இனத்தில் இன்று, நேற்று உருவானவை அல்ல. மனிதனுடைய கலாச்சார மாற்றத்தினூடாக விளைந்தவையே மதங்களும் அவை சார்ந்த நற்சிந்தனைகளும்.இன்று சில நாடுகளில் மதங்களைப் பிரதிநிதிப்படுத்துகிறோம். என்று கூறிக் கொண்டு தவறான செய்கைகளில் ஈடுபடும் சில மனிதர்களினால் மதங்களை மிகவும் இழிவாக விமர்சனம் செய்யும் நிகழ்வுகள் தலைதூக்கியுள்ளன.ஆத்திகவாதிகள், நாத்திகவாதிகள் இருபாலருமே மனிதர்கள்தான். அவர்களின் மன உணர்ச்சிகள் சாதாரண மனித உணர்ச்சிகளுக்கு உட்பட்டவையே. அதற்காகத் தவறு செய்யும் மனிதன் சந்தர்ப்பவசத்தால் மதத்தைப் பிரதிநிதிப்படுத்தும் ஒருவராக இருந்து விட்டால் அது அந்த மதத்தின் குற்றமல்ல.மதங்களின் பெயரைச் சொல்லி ஏமாற்றும் பேர்வழிகள் செய்வது சரி எனபதல்ல நமது நிலைப்பாடு. அத்தகைய சிலரை வைத்துக் கொண்டு இறை நம்பிக்கை கொண்டவர்களை அதுவும் குறிப்பாக ஒரு மதத்தைத் தாக்கிப் பலரின் மனங்களை...
ஆப்பம் - சமையல்!

தேவையானவை:
பச்சரிசி - 1 கப், புழுங்கலரிசி - 1 கப்,உளுத்தம்பருப்பு - கால் கப், வெந்தயம் - 1 டீஸ்பூன், ஜவ்வரிசி - 3 டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் - கல்லில் தடவ தேவையான அளவு,தேங்காய் (துருவியது) - 1 மூடி, சர்க்கரை - அரை கப்.
செய்முறை:
அரிசி, பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைத்து ஆட்டி, உப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் ஜவ்வரிசியில் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, ஜவ்வரிசி வேகும்வரை காய்ச்சி, ஆறியதும் மாவுடன் கலந்து வைக்கவும் (12 மணி நேரம்). காலையில் நன்கு மாவை கலக்கி விடவும். தேங்காயைத் துருவி, மிக்ஸியில் போட்டு, முதலில் கெட்டிப்பால், பிறகு தண்ணீர்பால் என மொத்தம் இரண்டரை டம்ளர் எடுக்கவும். சர்க்கரை...
எது பக்குவப்பட்ட சிந்தனை?

உங்களுக்கு, ஒரு உண்மை தெரியுமா? ஒவ்வொரு நாள் விடியலும் உங்களுக்கு இரண்டு விஷயங்களை உணர்த்தும் ஒன்று வயதில் ஒரு நாள் அதிகரிக்கிறது. இரண்டு ஆயுளில் ஒரு நாள் குறைகிறது.வயதில் ஒரு நாள் அதிகரிப்பதும், ஆயுளில் ஒரு நாள் குறைவதும் மனிதனுக்கு பக்குவத்தையும், பக்குவப்பட்ட சிந்தனையையும் தந்தாக வேண்டும். பக்குவப்பட்ட சிந்தனை என்பது எது?குடும்பத்திற்காக என்ன செய்திருக்கிaர்கள்? உங்களுக்காக என்ன செய்திருக்கிaர்கள்? என்று சிந்தித்துப் பாருங்கள். குடும்பத்திற்காக செய்ய வேண்டியதை பெரும்பாலானவர்கள் தவறாமல் செய்து விடுகிறார்கள். உழைப்பது, சம்பாதிப்பது, மனைவி, பிள்ளைகளை கவனிப்பது எல்லாமும் குடும்பத்திற்காகச் செய்வது. உங்களுக்காக என்பது உங்கள் மறுபிறப்பின் நலனுக்காக...
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த கொத்தவரங்காய் சாப்பிடுங்க...

பழங்காலத்தில் மூதாதையர்கள் உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற மூலிகை செடிகளின் இலை, வேர், காய், பழம், பட்டை, மற்றும், விதைகளைப் பயன்படுத்தினர். பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள், தன்வந்திரி, மூலனார், நாகர்ஜுனா, போன்றவர்கள் அறிவுத் திறனாலும் அனுபவத்தாலும் பல மூலிகைகளைக் கண்டு பிடித்து ஏடுகளில் எழுதிவைத்துள்ளனர். சுமார் 4000 வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில் மூலிகை மருத்துவத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. ஆயுர் வேதமருத்துவத்தில் 341 மருந்துச் செடிகள் பற்றி எழுதப்பட்டுள்ளது. தற்போது இது நடைமுறையில் உள்ளது. நம் நாட்டில் சுமார் 2000 முதல் 7000 வகை மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளன. இவற்றில் 700 முதல் 1000 வரை மூலிகைச் செடிகள் நாட்டு மருந்துகள் தயாரிப்பிலும்...
உழைப்புக்கேற்ற; வேலைக்கேற்ற; உங்களுக்கேற்ற; உணவு!

'உடல் ஆரோக்கியத்துக்கு சரிவிகித உணவை, சரியான நேரத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், இரவு நேரம் கண் விழித்து வேலை பார்ப்பவர்கள், நீண்ட நேரம் நின்றபடி வேலை பார்ப்பவர்கள், வெப்பம் மிகுந்த இடத்தில் வேலை பார்ப்பவர்கள் என்று பலருக்கும் தங்களுக்கு ஏற்ற உணவு எது என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது. இவர்களுக்கான உணவுப்பழக்கம் எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்து, ஊட்டச் சத்து நிபுணர்களான தாரிணி கிருஷ்ணன் மற்றும் ஷைனி சந்திரன் அளிக்கும் ஆலோசனைகள். இரவுநேரப் பணியில் ஈடுபடுபவர்கள்:இவர்களுக்கு சோர்வு, தூக்கம் தொடர்பான பிரச்னைகள், வயிற்றுப் புண் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். காரணம்...
வாயுத் தொல்லையை ஏற்படுத்தும் காய்கறிகள்!!!

காய்கறிகளே நமது தினசரி உணவுகளில் மிகுதியான அளவில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டத்தையும் இயற்கையான முறையில் தருபவை. காய்கறிகள் எத்தகைய நற்பண்புகளை பெற்றிருந்தாலும் அதில் ஒரு சில பக்க விளைவுகள் உள்ளதை நாம் மறுக்க முடியாது. சில காய்கறிகள் நமக்குத் தேவையான ஊட்டச்சத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் அதிக அளவு வாய்வு பிரச்சனையை உண்டாக்கி, கீழ் வயிற்றை உப்பச் செய்கிறது. இதனால் உணவிற்கு பின் வயிறு உப்பிய நிலையில் இருந்து, பின்னர் அடிக்கடி வாய்வை வெளிவரச் செய்கிறது.சிலருக்கு இத்தகைய வாய்வு பிரச்சனை அதிகமாகும் போது அது வலியை ஏற்படுத்துகிறது. சர்க்கரையை பல வடிவங்களில் கொண்டுள்ள காய்கறிகள் தேவையான அளவை விட அதிக அளவு வாய்வை உண்டாக்குகின்றன. இராஃபினோஸ், லாக்டோஸ்,...
துளசி மல்லி கஷாயம்

துளசி மல்லி கஷாயம் துளசி - 2 கைப்பிடி, சுக்கு - 1 துண்டு, வெள்ளை மிளகு - 20, ஏலக்காய் - 5, தனியா - 2 டேபிள்ஸ்பூன்,காய்ந்த திராட்சை - 20, பனங்கல்கண்டு அல்லது பனைவெல்லம் - தேவைக்கேற்ப.
சுக்கு, வெள்ளை மிளகு, தனியாவை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அத்துடன் துளசியும் காய்ந்த திராட்சையும் சேர்த்து, 3 டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். அது பாதியாக சுண்டியதும், வடிகட்டி, பனங்கல்கண்டோ, பனைவெல்லமோ சேர்த்துப் பரிமாறவும்.பொதுவாக தூதுவளைதான் கபம் போக்கும். வெயில் காலத்தில் தூதுவளையின் சூட்டைத் தவிர்க்கவே இங்கே துளசி சேர்த்திருக்கிறோம். உணவின் மூலம் ஏற்படும் மந்தம் நீக்கி, தொற்று வராமல் காக்கும் கஷாயம் இது. மாலை 6 முதல் 9 மணிக்குள் குடிக்கலாம்....
குற்றவாளிகளும் கோடீஸ்வரர்களும் நிறைந்த மாநிலங்களவை!

மாநிலங்களவை உறுப்பினர்களில் 38 எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 15 பேர் கொடூர குற்றங்களுக்கான வழக்குகள் உள்ளது என்றும் இதில் 67 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் எனவும் ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் 12 பேர் நியமன உறுப்பினர்கள். 6 இடங்கள் காலியாக உள்ளன. எஞ்சியுள்ள 227 எம்பிக்களின் சொத்து மதிப்பு மற்றும் குற்ற பின்னணி குறித்த விவரங்களை ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தமுள்ள 227 எம்பிக்களில் 67 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். இவர்களின் சராசரி சொத்து...
பொருளாதாரம் ஈட்டும் பெண்களா? பொழுதை போக்கும் பெண்களா?

பெண்கள் எப்போதும் வினோதமானவர்கள், இயற்கையாய் கடவுள் பெண்களை சற்றே குறைவான உடல் சக்தியுடன் படைத்த காலத்தில் இருந்து சாட்டிலைட்டை இயக்கும் தற்கால பெண்மணிகள் வரை நீங்கள் பார்த்தால் எவ்வளவு பரிணாம மாற்றங்கள். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்க்கு என அடக்கி வாசித்த ஆண் வர்க்கம் இதை செய்தது மூன்று காரணங்களுக்காக. பெண்கள் சமைந்த உடன் வெளியே அனுப்பினால் என்னவாகும் என்ற பதபதைப்பு. இரண்டாவது பெண் ஒரு படி பார்க்கும் மாப்பிளையை விட படித்திருந்தால் கல்யாண்ம் அமையாது. மூன்றாவது பெண் படித்து இந்த பெண் என்ன சாதிக்க போகிறாள். அடுப்படி தானே இவளுக்கு நிரந்தரம் என்ற நினைத்தமையால் ஒரு மூன்று நான்கு ஜெனரேஷனில் படிப்பு என்பது ஆரம்ப கல்வியோடு முடிந்து போனது. ...