.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 8 December 2013

சட்டச்சிக்கலில் சிக்கிய சிவகார்த்திகேயன்!



மூன்றெழுத்துப் படத்தில் ஹீரோவாக அறிமுகமான அந்த சின்னத்திரையில் இருந்து வந்த நடிகரின் மார்க்கெட் எக்குத்தப்பாக எகிறிக்கொண்டிருக்கிறது.


அதிலும் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான படம் வசூலை வாரி குவித்ததால், இப்போது அவரிடம் கால்சீட் கேட்டு முக்கிய படாதிபதிகளே க்யூவில் நிற்கிற நிலை உருவாகியிருக்கிறது.


அதனால், ஏற்கனவே படத்துக்குப்படம் எகிறிக்கொண்டிருந்த நடிகரின் படக்கூலி தற்போது கேட்போரை தலைசுற்ற வைக்கிற அளவுக்கு உயர்ந்து நிற்கிறதாம்.


இந்த செய்திகளை மேற்படி நடிகரால் டீலில் விடப்படும் படாதிபதிகள் சிலர் லீக்அவுட் செய்து விடுவதும் ஒருபக்கம் நடந்து வருகிறது.


இதனால் நடிகருக்கு தேவையில்லாத சட்டச்சிக்கல் ஏற்படுகிறதாம்.


அதன்காரணமாக, சில நடிகர்கள் வாங்கும் சம்பளத்துக்கு கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே தயாரிப்பாளராகி வருவதைத் தொடர்ந்து, இப்போது இந்த இளவட்ட நடிகரும் விரைவில் படம் தயாரிக்கும் முடிவில் இருக்கிறாராம்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top