.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 8 December 2013

பாரதி இதைப் பார்த்திருந்தால்..... கவிதை!


பாரதி இதைப் பார்த்திருந்தால்
 தலைப்பாகையை கழற்றிவிட்டு
 தண்டவாளத்தில் படுத்திருப்பான் !


கோவா கடற்கரை
 அலைகளில் இருக்கும் கேவலம்
மெரினா கடற்கரை
 அலைகளிலும் கலக்கிறதா ?


காதலர் என்ற பெயரில்
 இந்த சதைப் பிராணிகள் சிலது
 தற்கொலை செய்து கொள்கின்றன.
மரணம் இவர்களால்
 அசிங்கப்பட்டுப் போகிறது.


அலைகள் விளையாடி
 ஆனந்தம் நிறைந்த
 மெரினா கடற்கரையா ?
காம விளையாட்டுச்
 சிற்பங்கள் நிறைந்த
 கஜுராஹோ கோயிலா ?


 ' காதாலாகி... கசிந்துருகி...
கண்ணீர் மல்கி'
என்று எழுதியவன்
 எழுதிய விரல்களை
 வெட்டிக் கொள்வான்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top