ஒவ்வொரு மகன், மகளுக்கு தகப்பன் வெவ்வேறு காலகட்டங்களில் எப்படி தெரிவார்?என் 4 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்! என் 5 வயதில் : என் அப்பா எல்லாம் அறிந்தவர்!என் 10 வயதில் : நல்லவர்தான், ஆனால் சிடுமூஞ்சிக்காரர்!என் 12 வயதில் : நான் சின்னப்பிள்ளையாக இருந்தபோது அப்பா ரொம்ப நல்லவர்!என் 14 வயதில் : எப்பவும் எதிலும் குறை கண்டுபிடிக்கும் ஆசாமி!என் 15 வயதில் : கால நடப்பிலும் புரிந்துகொள்ளாதவர்!என் 18 வயதில் : சரியான எடக்கு மடக்கு பேர்வழிஎன் 20 வயதில் : எங்கப்பா தொல்லையைத் தாங்கவே முடியல; எப்படித்தான் அம்மா இந்த ஆளோட குப்பை கொட்றாங்களோ?என் 25 வயதில் : எதைச் சொன்னாலும் மறுக்கிறவர்!என் 30 வயதில் : என் பையனை கட்டுப்படுத்தறதே கஷ்டமா இருக்கு. அவன் வயசுல இருந்தப்ப எங்க அப்பான்னாலே எனக்கு எவ்வளவு பயம்!என் 40 வயதில் : என்னை என் அப்பா எவ்வளவு கட்டுப்பாடா வளர்த்தார்! நானும் அப்படித்தான் பையனை வளர்க்கப்போறேன்என்...
Wednesday, 27 November 2013
படித்தது / பிடித்தது ....

நண்பனுடன் அவனது வீட்டிற்குச்சென்றிருந்தேன்.. வாசலில் அவனது பாட்டி கயிற்றுக்கட்டிலில் கிடந்தார்.. நண்பன் உள்ளே போய்விட்டான்.. நான் : என்ன பாட்டி நல்லா இருக்கிங்களா..? பாட்டி : நல்லாருக்கேன் ராசா.. நீ ராசா..? நான் : நல்லாருக்கேன் பாட்டி.. இடையே எனது Android தொலைபேசி அழைத்தது.. பேசி முடித்தேன்.. பாட்டி : என்னாய்யா அது டிவி பொட்டி கணக்கா..? நான் : இதுவா பாட்டி.. இது புதுசா வந்துருக்குற ஃபோனு.. சட்டென்று ஞாபகம் வந்தவனாய் அதிலிருந்த Talking Tom-ஐ எடுத்துக்காட்டினேன்.. பாட்டி இதுகிட்ட பேசினா அத அப்புடியே திரும்ப பேசும்.. பாட்டி : என்ன ராசா சொல்றே..? Talking Tom :என்ன ராசா சொல்றே..?...
உழைத்தால் சாதிக்கலாம்!

* நியாயத்தை எடுத்துச் சொல்வதில் கோழையாக இராதீர்கள். உலக நன்மைக்காக சண்டை செய்வதில் வீரராக இருங்கள்.* உங்களை ஏழை என்று நினைக்காதீர்கள். பணம் ஒரு சக்தியல்ல. நன்மையும் தெய்வபக்தியுமே சக்தி. * இந்த உலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.* தனியாக இருந்து கொண்டு பலருடைய பகையை தேடிக் கொள்பவன் அறிவற்ற மூடனைப் போன்றவன். * செல்வம் பெருகிய காலத்தில் ஒருவனுக்கு பணிவு வேண்டும். அதே சமயம், செல்வம் குறைந்து வறுமை வரும் காலத்தில் பணியாத துணிவு வேண்டும்.* கடின உழைப்பு இல்லாமல், பெரிய காரியங்களைச் சாதிக்க முடியாது.- விவேகானந்த...
கீழா நெல்லி சூப் - சமையல்!

என்னென்ன தேவை? கீழாநெல்லி - 1 கட்டு (தண்டோடு),
தக்காளி - 2,
சின்ன வெங்காயம் - 5,
பூண்டு - 6 பல்,
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
சீரகத் தூள் - அரை டீஸ்பூன்,
இஞ்சி - ஒரு துண்டு,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை.எப்படிச் செய்வது? கீழாநெல்லிக் கீரையை தண்டோடு நன்கு அலசி, நன்கு இடித்து, அதோடு பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு இடிக்கவும். அதோடு சின்ன வெங்காயத்தை நசுக்கிச் சேர்த்து, மிளகுத் தூள், சீரகத் தூள், உப்புப் போட்டு இரு மடங்கு தண்ணீர் ஊற்றி, நான்கு, ஐந்து விசில் வரும் வரை குக்கரில் வைக்கவும். பிறகு அதை எடுத்து நன்கு மசித்து, வடிகட்டி அதன் சாற்றைக் குடிக்கவும். தொட்டாலே கையோடு வரும் முடி உதிர்வுப் பிரச்னைக்கு இது மருந்து....
தெரிந்துகொள்ளுங்கள் - 2
மொழி வரலாற்றில் ஒரு சில அறிஞர்கள் உருவாக்கும் சொற்களே நிலை பெற்றுவிடுகின்றன. இமகபமதஉ என்ற ஆங்கிலச்சொல் "கலாசாரம்' என்று மொழி பெயர்க்கப்பட்டது. ஆனால் ரசிகமணி டி.கே.சி. அவர்கள் அது வடமொழி சாயலாக உள்ளதென்று அதைப் "பண்பாடு' என்று மொழி பெயர்த்தார். அதேபோல் "பார்லிமெண்ட்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகப் "பாராளுமன்றம்' என்ற சொல்லை பரிதிமாற் கலைஞர் மொழி பெயர்த்தார்.நீருக்கடியில் சுரங்கப்பாதை அமைப்பது இயலாத காரியம். இன்றைய அறிவியல் உலகம் இதை சாதித்துக் காட்டியுள்ளது. ஆனால் கி.மு. 2 ஆயிரத்திலேயே பாபிலோனில் உள்ள யூப்ரட்டீஸ் நதியின் கீழ் 3,000 அடிக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டிருந்தது வியப்பூட்டும் செய்தியாகும்.மிளகாய் என்பது மேலை நாட்டுத் தாவரம். இது வருவதற்கு முன்னால் மிளகைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். மிளகைப் போன்றே காரம் இருந்ததால் தமிழர்கள், அதனை "மிளகுக்காய்' என்றழைத்தார்கள். இதுவே, பின்னாளில்...
நல்ல நண்பர்கள் ?
இதோ எனக்கு தெரிந்தவை நான் அறிந்தவை;; நல்ல நண்பர்களே கிடைக்கவில்லை என்றால் பிழை நண்பர்களில் இல்லை. நம்மனதில்தான்இருக்கிறது.நீங்கள் அறிந்த வரையறை பிழையானதாக இருக்கும். நண்பன் என்பவன் ஆபத்தில் உதவும் மூன்றாவது மனிதனாக மட்டுமின்றி, நீங்கள் வீட்டிற்குள் செல்லும்; போது ஓடி வந்து கால்களைக் கட்டிக் கொள்ளும் உங்கள் ஜுனியராகவோ, கால்களுக்கிடையே இடையே சுற்றிவரும் பூனைக்குட்டியாகவோ, சொன்னதையே சொல்லிச் சொல்லி இன்பம் தரும் கிளியாகவோ, உங்கள் சந்தோசத்தின் போது வாலையாட்டியும், துக்கத்தின் போது தானும் சாப்பிடாமல் உங்கள் முகத்தையே பார்த்துக் கொண்டு நம் கவலையைப் பகிர்ந்து கொள்ளும் நாயாகவோ கூட இருக்கலாம். இவை எல்லாவற்றையும் விட புத்தகங்களை உங்களது நண்பனாக்கிக் கொண்டால் சிறந்த மனிதனாவீர்கள். உங்கள் உள்ளங்கள் பரந்த வெளியாக இருக்கும் போது உங்களைச் சுற்றி நண்பர்கள் மட்டுமே இருப்பர்கள்.நண்பர்கள் செய்யும்...
அப்செட்டில் அனுஷ்கா!

இரண்டாம் உலகம்' படத்தின் ரிசல்ட் அப்படத்தில் கடுமையாக உழைத்த அத்தனை பேருக்கும் படு வேதனையைக் கொடுத்திருக்கிறது.அதிலும் அனுஷ்கா ரொம்பவே அப்செட். இந்த படத்தை தெலுங்கில் 'வர்ணா' என்ற பெயரில் வெளியிட்டிருந்தார்கள்.அங்கேயும் படம் ப்ளாப். இத்தனைக்கும் அனுஷ்கா நடிக்கும் 'ருத்ரம்மா தேவி' படத்தை ஆந்திராவே மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறது.இந்த நிலையில் 'வர்ணா', அனுஷ்காவிற்காவது ஓடியிருக்க வேண்டும். ஆனால் நடந்ததே வேறு.'வர்ணா' ரிசல்ட் அனுஷ்கா நடித்து வரும் 'ருத்ரம்மாதேவி'க்கும் அவர் நடித்து வரும் இன்னொரு படமான 'பாகுபாலி'க்கும் பெரிய தடைக்கல்லைப் போட்டிருக்கிறது.'அருந்ததி' என்று பெரிய ஹிட் கொடுத்தார் அனுஷ்கா.அந்த அளவுக்கு இந்தப் படமும் பேசப்படும்...
இலங்கைத்தமிழரின் திருமணம்!
இலங்கைத் தமிழர்களிடையே காணப்படும் திருமண முறை பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி உள்ளது. தமிழ்ப் பண்பாட்டில் திருமணம் என்பது நிரந்தரமானது. அது ஆயிரங்காலத்துப் பயிர் என்று கூறப்பட்டு திருமணத்தின் முன் பல்வேறு விஷயங்கள் நுணுக்கமாக ஆராயப் படுகின்றன. திருமணம் பேசுவதற்கு முன் சாதி, சமயம், அந்தஸ்து ஆகியன ஒன்றாகவுள்ளனவா என்பது பார்க்கப்படும்.ஏனெனில் ஒரே சூழலில் வாழ்ந்தவர்களுக்கு ஒருவருடன் ஒருவர் ஒத்துப் போவது எளிது என்று கருதப்படுகிறது. இதனால் இவற்றில் மாறுபாடுள்ளவர்கள் அதாவது சாதி, சமய, அந்தஸ்து வேறுபாடுகள் கொண்டவர்கள் காதல் வசப்படும் போது அது பெரும்பாலும் முற்றாகவே பெற்றோராலும் சமூகத்தாலும் நிராகரிக்கப்படுகிறது. இந்த மூன்றுடன் குணநலம், குடும்பப் பின்னணி, சாதகப் பொருத்தம், சீதனம் என்பனவற்றின் பொருத்தத்திலேயே திருமணம் தீர்மானிக்கப்படும்.ஆணுக்கு தொழில், குணம், சுமாரான அழகு என்பன முக்கியமாகக் கவனிக்கப்பட...
கூகுள் பற்றி நீங்கள் அறியாதவை..
இன்று இணையம் பயன்படுத்தும் அனைவரும் முதலில் கற்றுக்கொள்ளுவது கூகுள் பற்றி தான்.கூகுள் நிறுவனத்திற்கு உலகில் உள்ள அனைத்து தகவல்களும் அத்துப்படி. எதனைக் கேட்டாலும் இணையத்திலிருந்து தேடி எடுத்துத் தரும் கூகுள்.
இங்கு கூகுள் நிறுவனத்தைப் பற்றியும், அதன் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் பல ருசிகரமான தகவல்களைக் காணலாம்.
1. கூகுள் தேடுதல் தளத்தில் உள்ள சர்ச் இஞ்சினுக்கு, இந்நிறுவனத்தினை நிறுவிய லாரி பேஜ் மற்றும் பிரின் இட்ட பெயர் பேக்ரப் (BackRub).
2. கூகுள் நிறுவனத்தில், முதல் முதலாக நியமிக்கப்பட்ட அலுவலர் பெயர் கிரெய்க் சில்வர்ஸ்டெய்ன் (Craig Silverstein) ஆவார்.
3. கூகுள் நிறுவனத்தின் முதல் அலுவலகம் இன்டெல் நிறுவன மேனேஜர் வீட்டில் இருந்த கார் ஷெட்டில் இயங்கியது.
4. ஓர் இணைய தளத்தின் தரத்தினை அளக்க பேஜ் ரேங்க் (Page Rank)என்ற அலகினை கூகுள் பயன்படுத்துகிறது.
5. ஜிமெயிலை உருவாக்கிய...
தொண்டைச் சளிக்கு ஓமம்!

ஒவ்வொரு சாப்பாட்டுக்குப் பிறகும் சுமார் 2 - 2 1/2 மணி நேரத்திற்கு மூக்கிலிருந்து நீராக வடிகிறது. தொண்டையில் கபம் கட்டிக் கொள்கிறது. சீரணமும் தாமதமாகிறது. தும்மலுடன் கபம் வெளியேறுகிறது. இது எதனால்? இது மாற என்ன சாப்பிடலாம்?சீரகம், பெருஞ்சீரகம், ஓமம், கிராம்பு, ஏலக்காய் விதை இந்த ஐந்தையும், ஒரு தளிர் வெற்றிலையின் நடுநரம்பும், கீழ்ப்பகுதியையும் நீக்கிவிட்டு, அதில் சுருட்டி, ஒவ்வொரு சாப்பாட்டுக்குப் பிறகும் வாயில் அடக்கி நன்றாக மென்று சாப்பிடவும்.சாப்பாட்டுக்குப் பிறகு, கபம் உற்பத்தியாவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, கொழகொழப்பு, நிலைத்ததன்மை போன்ற குணங்கள் நிறைந்த கபம் எனும் தோஷமானது, உணவிற்குப் பிறகு...
விறு விறு வேகத்தில் விக்ரம் பிரபு!

அறிமுகமான 'கும்கி' படத்தில் நடித்து ஆஹா என பெயர் வாங்கினார் விக்ரம் பிரபு. தற்போது விக்ரம் பிரபு நடித்த 'இவன் வேற மாதிரி ' டிசம்பர் 13ல் ரிலீஸ் ஆகிறது. 'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்கிய சரவணனின் அடுத்த படம் என்பதால் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தை அடுத்து விக்ரம் பிரபு இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் 'அரிமா நம்பி' படத்தில் ப்ரியா ஆனந்துடன் நடிக்கிறார்.'தூங்கா நகரம்' கௌரவ் இயக்கும் 'சிகரம் தொடு' படத்தில் மோனல் கஜ்ஜாருடன் டூயட் பாடிக்கொண்டிருப்பவருக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன. 'கழுகு', 'சிவப்பு' படங்களை இயக்கிய சத்யசிவா அடுத்து இயக்கும் 'தலப்பாகட்டி' படத்தில் விக்ரம் பிரபுதான் ஹீரோ. 'ஹரிதாஸ்' இயக்குநர்...
தெரிந்துகொள்ளுங்கள் - 1
* இரண்டாம் உலகப் போர் ஆறு ஆண்டுகள் நடைபெற்றது.* ஆறு கி.மீ. வேகத்தில் வீசும் காற்றுக்குப் பெயர்தான் தென்றல்.* கரடியின் கர்ப்பகாலம் ஆறு மாதங்கள்.* வைரத்துக்கு ஆறு பட்டைகள் தீட்டப்படுகின்றன.* நீரைவிட ஆறு மடங்கு அடர்த்தி உள்ளது இரத்தம்.* கழுகால் ஆறு கி.மீ. தூரம் வரை சிறகுகளை அசைக்காமல் பறக்க முடியும். * தமிழ்நாட்டில் முதன்முதலில் பெண்கள் பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.* தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் சொந்த ஊர் உத்தமதானபுரம் (தஞ்சை மாவட்டம்).* தமிழ்நாட்டில் பத்திரிகை காகித நிறுவனம் உள்ள ஊர் } காகிதபுரம், திருச்சி மாவட்டம்.* சென்னை மாவட்டத்தில் முதன்முதலில் பட்டம் பெற்றவர் சி.வி.தாமோதரம் பிள்ளை என்பவர்.* டில்லியை ஆண்ட கடைசி மன்னன் பிருதிவிராஜ் சவுஹான்.* ஆங்கிலத்தில் பல நாடகக் காவியங்களைப் படைத்த...
வந்தே விட்டது நமக்கான பேட்டரி ஹெலிக்காப்டர் ! வீடியோ!
வோலோகாப்டர் விசி 200……. கடைசியில் வந்தே விட்டது பேட்டரி ஹெலிக்காப்டர் – குழந்தைங்க விளையாடறது இல்லை உண்மையிலே இரண்டு பேர் போற ஹெலிக்காப்டர். சுத்தமா சத்தமே கேட்காது – புகை மாசு கிடையாது. செங்குத்தாக மேலே எழும்பும் கீழே இறங்கும். இதை வீடியோ கேம் ஜாய் ஸ்டிக் மாதிரி வச்சி ஆப்பரேட் பண்ணினா ஓகே இபபோதைக்கு 1 மணி நேர சிங்கிள் சார்ஜ்ல போறது போல பண்ணியிருக்காங்க. அடுத்து 6 மணி நேரம் வரை பறக்க வைக்க ரெடி பண்றாங்க.
இதில் அதிக செலவு வைக்கும் பொருட்களும் இல்லை – அதே சமயம் லைட் கார்பன் பாடியில செஞ்ச இது அனேகமா 5 லட்சத்துக்குள்ளத்தான் ஆகும்னு நல்ல தெரிஞ்சவங்க சொல்றாங்க என்ன ஹாட்டு மேட்டர் தானே….. இந்த வீடியோக்களை பாருங்க…...
பெண்கள் வாயாடிகள் ஆவது நல்லது!
பெண்களுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. ஏதேனும் சக தோழியைக் கண்டால் உற்சாகமான உரையாடலை சட்டென ஆரம்பித்து விடுகிறார்கள். கடைவீதி, அலுவலகம், ஆலயம் ஏன் சுட்டெரிக்கும் தார் ரோடு என்றால் கூட இந்த உரையாடல் தடைபடுவதில்லை.நலமா எனத் தொடங்கும் உரையாடல் குழந்தைகள், வீடு, வேலை, மாமியார், நண்பர்கள் என கிளை விட்டுப் பரந்து விரிந்து பொழுது போவதை அறியாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்.பெண்களின் உரையாடல் பெரும்பாலும் வறட்டு உரையாடலாய் இருப்பதில்லை. சிரிப்பும், கேலியும், கிண்டலும், உற்சாகமும் என உலகத்தின் மிக முக்கியமான பணி உரையாடல் என்பது போல அவர்கள் அதில் ஒன்றி விடுவார்கள்.ஆண்கள் பலருக்கும் இந்த கலை வாய்ப்பதில்லை. “நலமா ?” என ஆரம்பிக்கும் உரையாடல் “நல்லா இருக்கேன்” என்ற பதிலைக் கேட்டபின் எப்படித் தொடர்வது என தெரியாமல் நொண்டியடிக்கும்.அதனால் எழுகின்ற பொறாமையோ என்னவோ “ இந்தப் பெண்களே இப்படித்தான், யாரையாவது பார்த்தால்...
ஆர்யாவுக்கு ஜோடியான ஸ்ருதி!

'முன் தினம் பார்த்தேனே', 'தடையறத் தாக்க' படங்களை இயக்கிய மகிழ்திருமேனி தற்போது புதிய படத்தை இயக்குகிறார். இதில் ஆர்யாவும், ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்கள். படத்துக்கு 'வாடி வாசல்' என டைட்டில் வைத்திருக்கிறார். 'வாடிவாசல்' என்பது ஜல்லிக்கட்டின் போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடமாகும். அதிரடி ஆக்ஷன் மற்றும் பொழுதுபோக்கு படமான இப்படம் நடுத்தர குடும்பத்தினரின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்குமாம். ‘நான் அவன் இல்லை’, ‘அஞ்சாதே’, ‘மாப்பிள்ளை’, ‘போடா போடி’ ஆகிய படங்களை தயாரித்த ஹித்தேஷ் ஜபக் இப்படத்தைத் தயாரிக்கிறார்.'வாடி வாசல்' படப்பிடிப்பு விரைவில் கோவாவில் தொடங்க இருக்கிறது....
அன்புக்கு நான் அடிமை - கவிதை!

அன்புக்கு அடிமையாகாத ஜீவன்கள்
உலகில் எதுவுமே...இல்லை...!
மிருகத்தை மனிதன்
மிருகமாக பார்க்கிறான்....
மனிதனை மிருகங்கள்...
பல நேரம்...
அன்பாகவே பார்க்கின்றது...!
எந்த உயிரினமும்...
தன்னிடம் அன்பு காட்டும் வரை..
அன்பையையே ..
அதுவும் வெளிப்படுத்துகிறது...!
...
கின்னஸ் ரிக்கார்ட் விக்கிபீடியா புகைப்பட போட்டியில் முதலிடம் பெற்ற தஞ்சை கோவில்!
உலகத்தின் மிகப் பெரிய புகைப்பட போட்டியாக கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் செய்துள்ளவிக்கிபீடியா நடத்திய “இந்திய நினைவுச் சின்னங்கள்-2013′ என்ற புகைப்படப் போட்டியில் “சாஸ்த்ரா’ பல்கலைக்கழகத்தின் எம்.டெக். மெடிக்கல் நானோ டெக்னாலஜி இறுதியாண்டு மாணவர் கார்முகில்வண்ணன் முதல் பரிசு வென்றார்.
கட்டற்ற தகவல் களஞ்சியமான விக்கிபீடியா உலகம் முழுவதும் 300 மொழிகளை தன் சேவையை வழங்கி வருகிறது.
விக்கிபீடியா என்பது ஏதாவது ஒரு தகவலை அறியும் இடம் என பெரும்பாலானவர்கள் நினைத்து கொண்டு இருக்கலாம்.
இது உண்மை என்றாலும் விக்கி பீடியாவில் மேலும் பயனுள்ள வசதிகளும் அடங்கி உள்ளது. அவைகள் என்னென்ன எப்படி உபயோகிப்பது என கொஞ்சம் பார்க்கலாம்.
1. விக்சனரி:
நாம் தற்பொழுது...
சாம்சங்கின் சூப்பர் டெக்னிக்: விழி பிதுங்கிய ஆப்பிள்!

அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
சாம்சங் நிறுவனம் தனது ஆன்ட்ராய்டு போன்களில், ஆப்பிள் போனின் தொழில்நுட்பத்தை காப்பியடித்து விற்பனை செய்து வருவதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.பதிலுக்கு ஆப்பிள் நிறுவனம்தான் தங்கள் தொழில்நுட்பத்தை திருடி பயன்படுத்தி வருவதாக சாம்சங் நிறுவனம் வாதாடியது.கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், சாம்சங் நிறுவனம் காப்புரிமை விதிமுறைகளை மீறி விட்டதாகவும் அதனால் ஆப்பிள் நிறுவனத்துக்கு 100 கோடி டொலர்(6,200 கோடி) அபராதமாக அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.இதனையடுத்து கடந்த...
அகத்திக்கீரை சூப் - சமையல்!

தேவையான பொருட்கள் :
அகத்திக்கீரை - 1 கட்டு
துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
பச்சரிசி - 2 ஸ்பூன்
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 2
கிராம்பு - 3
பட்டை - 1 சிறு துண்டு
உப்பு, சீரகம் - 1/4 ஸ்பூன்
மிளகுத்தூள் - தேவையான அளவு
செய்முறை :
• அகத்திக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• சின்ன வெங்காயத்தை தோல் உரித்து கொள்ளவும்.
• தக்காளியை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• மேலே உள்ள எல்லா பொருட்களையும் (உப்பை தவிர)குக்கரில் போட்டு 4 தம்ளர் தண்ணீர் சேர்த்து 5 முதல் 6 விசில் வரும் வரை வைக்கவும்.
• பிரஷர் அட்ங்கியதும் ஒரு கரண்டியால் நன்றாக மசிக்கவும். பின் மேலும்...
நாகரிகம், அநாகரிகம் ஆநாகரிகம்!

"நம் திரைப் படங்களிலும் தொலைக்காட்சியிலும், நகைச்சுவை என்ற பெயரில் பின்பக்கத்தில் உதைப்பது, கஷ்கத்தைச் சொறிவது, ஒருவர்மேல் ஒருவர் துப்பிக் கொள்வது போன்ற அநாகரிகமான காட்சிகள் இப்போது மலிந்து வருகின்றன. எமிலிபோஸ்ட் மாதிரி பொதுவாழ்வில் நாகரிக நடைமுறைக்கு வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன
பொது வாழ்வில் நடத்தையை நாகரிகம், அநாகரிகம், ஆநாகரிகம் என மூன்று வகையாகப் பிரித்துக் குறிப்பிட்டிருக்கிறார்
உதாரணம்: 1.பொது இடத்தில் மூக்கை, காதை, பல்லை நோண்டாமல் இருப்பது நாகரிகம். நோண்டுவது அநாகரிகம். நோண்டுவது மட்டுமின்றி, விளைவை உருட்டி ஆராய்வது ஆநாகரிகம்!
2.புருவம், காது, மூக்கு உரோமங்களைச் சீராக வெட்டி வைத்திருப்பது நாகரிகம். வெட்டாமல், காடாக வளர்ப்பது...
சொத்து ஆவணங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்களும்!

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இருநபர்களுக்கு இடையிலா ன கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சி யின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படு ம் வகையில் முக்கியத்துவம் பெற்று விட்டது..எனவேதான், இத்தகைய பரிமாற்றங் களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடு த்து வருகிறது. மன்னராட்சி காலத் தில் இருந்தே சொத்து பரிமாற்றங்க ளை ஆவணத்படுத்துவது தொடர்பான பணிகள் நடை பெற்றுள்ளன..கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங் கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன. இதற்கான சட்ட பாதுகாப்பை...
ஒரு சிகரெட் உங்களிடம் பேசுகிறது!

புகையிலைக்கு குட்பை ……
ஒரு சிகரெட் பேசுகிறது
வெளுத்த என் உடல் பார்க்க அழகுதான்,
ஆனால் என் உடல் முழுதும் விஷம்,
வெளியில் தெரியாத விஷ்ம்.
அணுஅணுவாக அழிப்பேன் உங்களை,
அதில் எனக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி,
நானும் ஒல்லி
என்னை நாடுபவனும் ஒல்லியாவான்,
என் நட்பைப் பெற.
நான் முதலில் இன்பத்தைக் கொடுத்து
ஏமாற்றுவேன்,
என் வசமாவான் அவன்.
நானில்லாமல் அவனில்லை
என்ற நிலை வந்ததும்
அவனை வதைக்க ஆரம்பிப்பேன்.
விட்டில் பூச்சி விளக்கில் விழுவதுபோல்
என்னிடம் மாட்டுவார்கள்.
பின் தொலைந்தார்கள்,
புகை புகையாக வெளியே ஆனால்
உள்ளே புதைகிறார்கள் புகைக்குள்,
ஆனால் என்னிடம் ஒரு நல்லகுணம்.
முதலிலேயே.... என்னை நாடாதீர்கள்.
அபாயம்! என்று எச்சரிக்கை
விடுக்கிறேன்.
நல்லவனைக்...
ஏன் வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடிக்காதன்னு சொல்றாங்க தெரியுமா?
அக்காலத்தில் எல்லாம் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வேண்டுமானால், பெயிண்ட் பிரஷ் தான் பயன்படுத்துவோம். ஆனால் தற்போது மிகவும் எளிமையான முறையில் வீட்டில் பெயிண்ட் அடிக்க ஸ்ப்ரே போன்ற ஒரு கருவி வந்துள்ளது. இப்படி வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தால் நல்லதல்ல என்று பலர் சொல்வதை கேட்டிருப்பீர்கள். ஏன் என்று தெரியுமா?அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று வீட்டின் சுவற்றிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தால், அது சீக்கிரம் போவதோடு, உடலுக்கு தீங்கையும் விளைவிக்கும். இங்கு அந்த ஸ்ப்ரே பெயிண்ட்டை எதற்கு பயன்படுத்த வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் ஸ்ப்ரே பெயிண்ட் அடிப்பதை தவிர்த்திடுங்கள்.ஏன் வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடிக்காதன்னு சொல்றாங்க தெரியுமா?* வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தால், அதிலிருக்கும் கெமிக்கல்களின் நாற்றம் அவ்வளவு எளிதில் நீங்காமல் இருப்பதோடு,...
அனைத்து கணவன் மனைவிக்கு சமர்ப்பணம்...கவிதை!

அனைத்து கணவன் மனைவிக்கு சமர்ப்பணம்...
சொந்தம் இன்றி தொலைவில் நின்றாள்..
சொந்தம் கொண்டு தோளில் சாய்ந்தாள்.
பந்தம் தந்து, பாசம் தந்து, நேசமாக மனதில் நின்றாள்.
எந்தன் நெஞ்சை வென்று சென்றாள் - பின்
எதற்கும் இல்லை ஈடு என்றாள்..
என்னை விட்டு நீங்கி செல்லா, பிள்ளை தந்து
எனக்கும் ஒரு தந்தை என்ற பெயரை தந்தாள்..
எந்தன் உயிர் போகும் வரை
உந்தன் உயிர் நான் தான் என்றாள்.
எந்தன் தாயை நானும் கண்டேன் உந்தன் வடிவில்..
ஏனோ நானும், உந்தன் தந்தை போல, மாறிவந்தேன்.
மங்கை உன்னை கண்டபின்பு மாந்தனாக மாறிவந்தேன்
மண்ணாக மாறிவிட்டேன்..
உன் கண்ணாக ஆகி விட்டேன்...
மாறாத காதல் கொண்டு,
தீராத ஆசைக்கொண்டு மணவாளன்...