.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 3 October 2013

குழந்தைகளுக்கான இயற்கை மருத்துவம்!

சமீபத்திய ஆண்டுகளில் இயற்கை மருத்துவம் அதிகரித்து வருகிறது. புள்ளிவிவரத்தை ஆராய்ந்த போது மருந்துகளை விட இயற்கை மருத்துவத்தை  அதிகம் பயன்படுத்தியது தெளிவாகிறது.. அனைவருக்கும் உதவும் இயற்கை மருத்துவம் குழந்தைகளுக்கு மட்டும் விதிவிலக்கல்ல. பல பெற்றோர்கள்  குழந்தைகளுக்கு செய்யப்படும் இயற்கை சிகிச்சைகளை மேற்கொள்வதில்லை. பொதுவாக அனைத்து இயற்கை வைத்தியமும் நான்கு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் இயற்கை வைத்தியம். இருமல்குழந்தையின் பிஞ்சு உடல்களை எளிதில் தாக்கும் இருமல். இருமல், சளி வந்ததும் அலையாத விருந்தாளியாக வந்து விடுவது மூச்சு பிரச்சனையும் இவை குழந்தைகளின்...

குழந்தைக்கு கபவாத காய்ச்சலா இயற்கை மருந்து இருக்கு!

குழந்தைக்கு வரும் சுரங்களில் கடுமையானது கபவாத காய்ச்சல். காய்ச்சல் அதிகமாக இருக்கும். சுவாசம் தீவிரமாகவும், நாடி படபடத்துமிருக்கும். அடிக்கடி வறட்சியான இருமலிருக்கும். கோழையும் வெளிப்படும். இருமும் போதே சில சமயம் இழுப்பும் காணும். ஆரம்பத்திலிருந்தே சிகிச்சை செய்து கவனிக்க வேண்யது. இதற்கு வீட்டிலே இயற்கை மருந்து தயாரிக்கலாம் என்னென்ன தேவை? நிலவேம்பு – 15 கிராம் சீந்தில் தண்டு – 15 கிராம் சிற்றரத்தை – 15 கிராம் திப்பிலி – 15 கிராம் கடுக்காய் – 15 கிராம் கண்டங்கத்திரி வேர் – 15 கிராம் பூனைக்காஞ்சொறி – 15 கிராம் கடுகு ரோகிணி – 15 கிராம் பற்பாடகம் - 15 கிராம் கிச்சிலிக் கிழங்கு – 15 கிராம் கோஷ்டம் – 15 கிராம் தேவதாரு – 15 கிராம் சுக்கு – 15...

முயற்சி இனிமை பயக்கும்...(நீதிக்கதை)

  கோபி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வரும் இளைஞன்.   அவன் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் எங்கும் வேலை கிடைக்கவில்லை...அதனால் மனம் சோர்ந்தான். வருத்தத்துடன் காணப்பட்ட அவனை அவன் தந்தை அழைத்துக் காரணம் கேட்க அவனும் சொன்னான். உடனே அவன் தந்தை பக்கத்திலிருந்த ஒரு ஆப்பிள் பழத்தை அவனிடம் கொடுத்து ...அதை கத்தியால் வெட்டச்சொன்னார். அவனும் அப்படியே செய்தான். இரண்டாகப் பிளந்த ஆப்பிளைக்காட்டி ..'இதனுள் எவ்வளவு விதைகள் இருக்கிறது பார்..' என்றார். 'நான்கைந்து விதைகள் இருக்கும்' என்றான். கோபி. 'இந்த விதைகளில் ஒன்றோ....அல்லது பலவோ வேறு ஆப்பிள் மரங்கள் உருவாகக் காரணமாய் இருக்கப் போகின்றன....அல்லது எல்லா விதைகளும்...

உலக மனித வள மூலதன குறியீட்டில் இநதியா பின் தங்குகிறதோ?

நாட்டில் உள்ள தொழிலாளர்களின் உழைப்பு திறன் பொருளாதார வளத்தின் அடிப்படையில் நாடுகளை தரம் பிரித்து உலக மனித வள மூலதன குறியீடு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்ட உலக பொருளாதார அமைப்பு (டபிள்யு.இ.எப்.) நியூயார்க் நகரில் 122 நாடுகளின் தரப் பட்டியல் வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் இடம்பெற்றுள்ளதாகவும். சீனா 43வது இடத் திலும் பிரேசில் 57வது இடத்திலும் உள்ளதாகவும் தென் ஆப்ரிக்கா இந்தியாவைவிட பின்தங்கி 86வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஆண்டுதோறும் மனிதவள அறிக்கை என்றவுடனே நம்நாட்டில் முக்கியமாக பேசப்படுவது இந்தியாவுக்கு அது கொடுத்துள்ள இடத்தைப்பற்றித்தான்....

மன அழுத்தத்தை குறைக்கும் ஆரோக்கியமான உணவுகள்!

உணவு என்பது உயிர் வாழ நமக்கான நாடி துடிப்பாக அமைகிறது. ஆனால் அதற்கு ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். உண்ணும் உணவே மருந்தாக அமையும் என்று நம் முன்னோர்கள் சொல்லுவார்கள் அல்லவா? ஆம், அது நூற்றுக்கு நூறு உண்மையாகும். உணவை கொண்டே பல நோய்களை குணப்படுத்தலாம். சொக்லெட் சொக்லெட்களுக்கான உங்கள் ஏக்கத்தை தீர்த்துக் கொள்ளுங்கள். அதில் உள்ள அனான்டமைன் மூளையில் உள்ள டோபமைன் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும். அதனால் மனம் அமைதி பெற்று மன அழுத்தம் நீங்கும். நட்ஸ் நட்ஸில் செலினியம் என்ற கனிமம் உள்ளது. இந்த கனிம குறைபாட்டினால், சோர்வு மற்றும் படபடப்பு ஏற்படும். அதனால் ஒரு கை நட்ஸ்களை உண்டால், மனம் அமைதியாக இருக்கும். கீரை வகைகள் பாப்பாய் என்ற கார்ட்டூன்...

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டா புறப்பட்டது!!!

 இம்மாதம் 28ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ள செவ்வாய் கிரக ஆய்வு செயற்கைக்கோளான ‘மங்கல்யான்’, பெங்களூரில் இருந்து நேற்று கன்டெய் னர் லாரி மூலம் ஸ்ரீஹரிகோட்டா எடுத்துச் செல்லப்பட்டது. ‘இந்த செயற்கைக்கோள் சிறப்பு கன்டெய்னர் லாரியில் வைத்து அனுப்பப்பட்டது’ என்று இஸ்ரோ அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். செயற்கைக்கோள் எடுத்துச் சென்ற கன்டெய்னரின் முன்னும் பின்னும், பாதுகாப்பு வாகனங்கள் சூழ்ந்து சென்றன. ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இன்று மாலை அந்த லாரி சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதால் லாரி மெதுவாக ஓட்டிச் செல்லப்பட்டது. காந்தி ஜெயந்தி பொது விடுமுறை தினம் என்பதால் சாலையில் போக்குவரத்து குறைவாக இருக்கும்....

லாலுக்கு 5 ஆண்டு சிறை!

 கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. முன்னதாக, சிறையில் உள்ள குற்றவாளிகள் 45 பேரும் வீடியோகான்பரன்ஸ் மூலம் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர். பீகாரில் கடந்த 1990ம் ஆண்டுகளில் கால்நடை தீவனங்கள் வாங்கியதில் ரூ.950 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.மாநிலத்தின் பல கருவூலங்களில் இருந்து போலி ரசீதுகள் மூலம் பணம் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக அப்போது பீகாருடன் இணைந்திருந்த ஜார்கண்டில் உள்ள சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் இருந்து, கால்நடை தீவனம் வாங்க போலி ரசீதுகள் மூலம் ரூ.37.7...

வெண்மையான பற்கள் வேண்டுமா? இதோ உங்களுக்கான தீர்வு!

   தொழில்நுட்ப வளர்ச்சியானது தற்போது மூலை முடுக்கு எங்கும் ஆக்கிரமித்து நிற்கின்றது. தற்போது இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக முப்பரிமாண பிரிண்டிங் முறையில் பற்தூரிகை(Toothbrush) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி வெறும் ஆறு செக்கன்களில் பற்களை மிகவும் துல்லியமான முறையில் சுத்தம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் நாக்கினை சுத்தம் செய்யும் டங் கிளீனராகவும் இது செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றது....

3வது முறையாக உடைந்தது நயன்தாராவின் இதயம்!

மன இறுக்கம், முகத்தில் சுருக்கம். மீண்டும் அதே கலக்கம். நயன்தாராவை பற்றி கோலிவுட்டார் திரும்ப பேச ஆரம்பித்துவிட்டார்கள். பிரபு தேவாவுடன் காதல் முறிந்தபோது எப்படி இருந்தாரோ அப்படித்தான் இப்போது இருக்கிறார். ஆனால் பிரபுதேவாவுடன் உறவு முறிந்து, சில மாதங்கள் சோகமாக இருந்தாலும் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியிருந்தார். ஆனால் இப்போது நயன்தாராவுக்கு என்ன ஆனது என தெரியவில்லை. பழையபடியே யாருடனும் அதிகம் பேசுவதில்லை. மீடியாவை தவிர்க்கிறார். ஷாட் முடிந்ததும் அரட்டை அடிக்காமல் தனியாக இருக்கவே விரும்புகிறார் என்கிறது ஸ்டுடியோ சரவுண்டிங். சிம்புவுடன் காதல் முறிந்த பிறகு, உடைந்து போன அவரது இதயத்தை ஒட்ட வைத்தவர் பிரபு தேவா. திருமணம் வரை இவர்கள் காதல்...

QR கோட்டினை சுயமாகவே உருவாக்கும் Google Docs!

  சில இரகசியத் தரவுகள் உட்பட இணையத்தளங்களை மொபைல் சாதனங்கள் மூலம் விரைவாக பயன்படுத்துவதற்கு QR கோட் உதவிபுரிகின்றது. இந்த QR கோட்டினை உருவாக்குவதற்கு விசேட மென்பொருட்கள், ஒன்லைன் இணையத்தளங்கள் காணப்படுகின்றன. அதேபோன்று கூகுளின் பிரபல சேவைகளுள் ஒன்றான Google Docs இலும் QR கோட்டினை சுயமாகவே உருவாக்கிக்கொள்ளும் வசதி காணப்படுகின்றது. இதனை விளக்கும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது, அதனை இங்கே காணலாம்...

ஆஸ்கர் விருது போட்டிக்கு விஸ்வரூபம் தேர்வாகாதது ஏமாற்றமா? கமல் பதில்!!

விஸ்வரூபம் படம் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகாதது ஏமாற்றமா என்பதற்கு பதில் அளித்தார் கமல்ஹாசன். இந்திய படங்கள் ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்பதற்கான தேர்வு சமீபத்தில் நடந் தது. இதில் இந்தி உள்ளிட்ட மற்ற மொழிப்படங்களுடன் கமலின் விஸ்வரூபம் படமும் பங்கேற்றது. ஆனால் குஜராத் மொழியில் உருவான தி குட் ரோட் இந்தியா சார்பில் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்க தேர்வானது. விஸ்வரூபம் தேர்வாகவில்லை. இந்நிலையில் மும்பையில் நடந்த பட விழா ஒன்றில் கமலுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. பின்னர் அவரிடம் விஸ்வரூபம் படம் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகாதது குறித்து கேட்டதற்கு பதில் அளித்தார். அவர் கூறும்போது, இதுவரை என்னுடைய படங்கள் 7 முறை ஆஸ்கர் போட்டிக்கு சென்றுள்ளது....

நரைமுடியை கருமையாக்க சில வழிகள்!

பொதுவாக நரைமுடியை 30-40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம். ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அழுத்தம் போன்றவற்றால் இளமையிலேயே முடியானது எளிதில் வெள்ளையாகிறது. அதுமட்டுமின்றி ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்களால் முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுவதோடு வழுக்கை தலைக்கும் ஆளாகின்றனர். இஞ்சி நரை முடியை கருமையாக்க வேண்டுமானால் இஞ்சியைத் துருவி, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை நரை முடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால் நரைமுடி பிரச்சனையில்...

Jolla அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி!

Jolla எனும் நிறுவனமானது தனது முதலாம தலைமுறை ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.5 அங்குல அளவு மற்றும் 960 x 540 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 1.4 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Snapdragon Processor, பிரதான நினைவகமாக 1 GB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. 141 கிராம் நிறையுடைய இப்புதிய கைப்பேசியில் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா போன்றனவும் காணப்படுகின்றன.  இவற்றில் காணப்படும் 2100 mAH மின்கலமானது 3G வலையமைப்பு தொடர்பாடலின்போது தொடர்ச்சியாக 8 மணித்தியாலங்களுக்கு மின்னை வழங்கக்கூடியவாறு இருக்கின்றது.  மேலும் இதன்...

ஆட்டிப் படைத்த அமெரிக்கா: முடங்கி போன காரணம் இதுதான்!

அமெரிக்க அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள் கதவடைப்பு நேற்று இரண்டாவது நாளாக அமலானது. ஒபாமாவின் பெடரல் அரசு அலுவலங்கள், சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் பல லட்சம் ஊழியர்கள் பாதி நாளில் நேற்று வீடு திரும்பி விட்டனர். அரசு வெப்சைட்கள் ‘இருட்டு’ மயமானது. யெல்லோஸ்டோன், அலாக்ரடஸ் போன்ற தேசிய பொழுதுபோக்கு பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் போன்றவையும் இழுத்து மூடப்பட்டன.ஆளும் ஜனநாயக கட்சி, எதிர்க்கட்சியான குடியரசு இரண்டுமே பரஸ்பரம் பிடிவாதமாக தங்கள் நிலையில் இருப்பது மட்டுமின்றி, இனி சமரசத்துக்கு இடமே இல்லை என்று அதிபர் ஒபாமா திட்டவட்டமாக இருப்பதால், 1995ல் இருந்தது போன்று இல்லாமல், ஒரு வாரத்துக்கும் மேலாக கதவடைப்பு நீடிக்கும் என்று தெரிகிறது. அண்மையில்...

Smart Phone களுக்கு போடுகின்ற Lock’ஐ கணனியில் போட வேண்டுமா?

Android Phone களுக்கு போடுகின்ற லொக்கை (Lock) எமது கணனியிலும் போடலாம். இந்த Lock ஆனது Android போன்களுக்கான lock ஆகும். அதிகமானோருக்கு இந்த Android Lock பற்றி தெரியும். ஆனால் கணனிகளுக்கு இவ்வாறான Lock போடுவது பற்றி அநேகமானோருக்கு தெரியாமல் இருக்கலாம். இந்த Lock இல் நிறைய விடயங்கள் இருக்கின்றன. அதை Settings பகுதியில் சரி செய்து கொள்ளலாம். இந்த lock இன் Password ஐ மூன்று தடவை தவறுதலாக கொடுத்ததால் Alarm ( அலாரம் ) அடிக்கும். ஒரு நிமிடத்தின் பின்னர் நின்றுவிடும். இதற்கு Key கொடுப்பது எளிது. Key கொடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தவறுதலாக கொடுங்கள் பின்னர் தானாக License Active ஆகிடும். தரவிறக்கச்சுட்ட...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top