இந்திய சுதந்திர தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் போட்டி ஒன்றை நடத்துகிறது. அதன்படி சமூக நலப் பணிகளுக்காக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த திட்டம் வைத்துள்ள தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு உதவ தாங்கள் வைத்துள்ள திட்டம் பற்றி கூகுள் நிறுவனத்திடம் தெரிவிக்கவேண்டும்.
அதிலும் இந்தியாவில் முறையே பதிவு செய்யப்பட்டுள்ள என்.ஜி.ஓ. அமைப்புகள் மட்டுமே கூகுள் நிறுவனத்திற்கு தங்கள் திட்டத்தை அனுப்பி வைக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படும் 4 என்.ஜி.ஓ.க்களுக்கு தலா ரூ.3 கோடியும், தங்கள் திட்டத்தை நடைமுறைப்படுத்த தொழில்நுட்ப உதவியும் கூகுள் வழங்கும். இந்த...
Thursday, 15 August 2013
தனி மனித ஆற்றலை வெளிக் கொணரச் செய்வதே உண்மையான சுதந்திரம்! – முதல்வர் சுதந்திர தின உரை!
”சுதந்திரம் என்பது பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கல்வி சுதந்திரம், வேலைவாய்ப்பு சுதந்திரம், சிந்தனை சுதந்திரம் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. சமூக, பொருளாதார காரணிகளால் ஒடுக்கப்படாமல் ஒவ்வொரு தனி மனிதருக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக் கொணரச் செய்வதே உண்மையான சுதந்திரத்திற்கான இலக்கணம்.” என்று முதல்வர் ஜெயலலிதா கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை ஆற்றியபோது தெரிவித்தார்.
தமிழக அரசின் சார்பில் சுதந்திர தின விழா, சென்னை கோட்டையில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சாகச செயல் புரிந்த பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருதை...