.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 22 December 2013

தூக்கம் வரலையா?

ஓர் இரவு முழுவதும் உங்களால் தூங்காமல் இருக்க முடியுமா? யாராக இருந்தாலும் சான்சே இல்லை என்ற பதில்தான் வரும். ஆனால், உலகில் 7  முதல் 18 சதவீதம் பேர் தூங்க முடியாமல் தவிப்பதாகவும் இவர்களில் 3 முதல் 13 சதவீதம் பேர் தூக்கம் மற்றும் மன அமைதிக்கான  மாத்திரைகளை உட்கொண்டால்தான் உறங்க முடிகிறது என்றும் அறிவிக்கிறது மருத்துவ ஆய்வு. ஒரு நாளில் 7 முதல் 10 மணி நேரம் தூங்கினால், உடல் நல்ல நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். அது குறைந்தாலோ, கூடினாலோ ஏதோ ஒரு  நோய்க்கான அறிகுறியாக இது இருக்கலாம் என்பதை உணர்ந்து உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது. குழந்தைகள் அதிகம் தூங்குவதையோ,  முதியவர்கள் மிகக்குறைவாக தூங்குவதையோ பிரச்னையாக கருதத் தேவையில்லை....

ஸ்கேன் பற்றிய ஸ்கேன் ரிப்போர்ட்

நவீன மருத்துவ உபகரணங்களில் ஸ்கேன் முக்கிய இடம் பெறுகிறது அவற்றின் விபரம் வருமாறு. டெஸ்டா எம்ஆர்ஐ ஸ்கேன்காந்த அதிர்வை உடலில் செலுத்தி தேவைப்படும் பாகங்களை குறுக்கு வெட்டாக துல்லியமாக படம் பிடித்து கட்டிகளை கண்டறிய உதவுகிறது.சிடி ஸ்கேன் தலைப்பகுதியின் உட்பாகங்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை இந்தக் கருவியின் மூலமாக மட்டுமே துல்லியமாக கண்டறியமுடியும். எக்ஸ்ரேயில் தெரியாத தலையின் எலும்பு உள்பாகங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இதன் மூலம் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. இந்த கருவி மிகவும் விலை உயர்ந்தது என்பதால் குறிப்பிட்ட பெரிய மருத்துவமனைகள் அல்லது பெரிய மருத்துவ பரிசோதனை கூடங்களில் மட்டுமே உள்ளன.அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்உடலின்...

இந்திய-தென்னார்ப்ரிக்கா:முதல் டெஸ்ட் போட்டி டிரா

ஜோகன்னஸ்பெர்க்: இந்திய-தென்னார்ப்ரிக்கா அணிகளுக்கிடையே ஜோகன்னஸ்பெர்க்கில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 280 ரன்களும், இரண்டாவது இன்னிங்க்ஸில் 421 ரன்களும் எடுத்தது. தென்னார்ப்ரிக்கா முதல் இன்னிங்க்ஸில் 244 ரன்களும் இரண்டாவது இன்னிங்க்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 450 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி டிராவில்  முடிவடைந்த...

ஆஷஸ் தொடரை இழந்தது இங்கிலாந்து அணி

பெர்த்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம், அந்த அணியிடமிருந்து ஆஷஸ் பட்டத்தை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது.இதுவரை நடைபெற்றுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து மிக மோசமான தோல்வியை தழுவியுள்ளது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 381 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், அடிலெய்டில் 218 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து தோல்வியடைந்தது.இன்று(செவ்வாடய்) அதிகாலை லண்டன் நேரம் சுமார் 6 மணி அளவில் முடிவடைந்த மூன்றாவது போட்டியில் இங்கிலாந்தை 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்று தொடரைக் கைப்பற்றியது.இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் துவக்க ஆட்டக்காராக களமிறங்கிய அணித் தலைவர் அலிஸ்ட்டர்...

நான் ரஜினியை இயக்கவில்லை : கே.எஸ்.ரவிக்குமார்

ரஜினியை நான் இயக்கவில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 'கோச்சடையான்' படத்தினைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை இயக்கப் போவது யார் என்பது பற்றி பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், கே.வி.ஆனந்த், பி.வாசு என பல்வேறு இயக்குநர்கள் இப்போட்டியில் இருக்கிறார்கள். ரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவார் என்று செய்திகள் வெளியாகின. அதற்கு கே.எஸ்.ரவிக்குமார் மறுப்பு தெரிவித்தாலும், தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "விரைவில் சுதீப் ('நான் ஈ' வில்லன்) நடிக்கவிருக்கும் படத்தை இயக்க...

‘தூம் 3’ தூள் பறக்கிறது..!

சிகாகோவில் ஜாக்கி ஷெராப் சர்க்கஸ் நிகழ்ச்சியை வங்கி மூலம் லோன் வாங்கி நடத்தி வருகிறார். அவருடைய மகன் ஆமிர்கான். ஒரு கட்டத்தில் வாங்கிய லோனை திருப்பி தர முடியாத நிலையில் வங்கியில் இருந்து சர்க்கஸை நடத்துவதை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் தன் மகன் கண்முன் ஷெராப் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அந்த வங்கி மீது கோபம் கொள்கிறார் ஆமிர்கான். இந்த கோபத்தால் ஆமிர்கான் பெரியவனாக வளர்ந்த பிறகு, அந்த வங்கியின் கிளைகளில் உள்ள பணத்தை கொள்ளையடிக்கிறார். அந்த பணத்தை வைத்து சர்க்கஸை தொடங்கி நடத்தி வருகிறார். அப்படி அவர் கொள்ளை சம்பவங்களை நடத்தும்போது ஒவ்வொரு முறையும் இந்தி மொழியில் ஏதோ எழுதி வைத்து வந்துவிடுகிறார். இந்தி மொழியை வைத்து அவர் இந்தியாவை...

தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறை 68 ஹீரோ 80 ஹீரோயின் அறிமுகம்!

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 150 படங்களை தாண்டிவிட்டது. ரிலீசான படங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த ஆண்டு அறிமுகமான நடிகர், நடிகைகளின் எண்ணிக்கையும் அதிகம். இதில் ஹீரோவாக அறிமுகமானவர்கள் மட்டும் 68 பேர். இவர்களில் கார்த்திக் மகன் கவுதம் (கடல்), சேது (கண்ணா லட்டு தின்ன ஆசையா) ஆகியோர் மட்டுமே அடுத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கவுதம் மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். முக்கியமான இளம் ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். இவர்கள் தவிர மலையாளத்திலிருந்து வந்த நிவின் (நேரம்), சந்தோஷ் (ஆதலினால் காதல் செய்வீர்), ராம் (தங்க மீன்கள்), விக்ரம் ஆனந்த் (நிர்ணயம்), அசோக் ஷெல்வன் (பீட்சா-2) ஆகியோர் தங்கள் நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்தார்கள்.2013ம் ஆண்டு 80 ஹீரோயின்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள்....

அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய்!

நமது சமையலில் முக்கிய இடம்பெறும் தேங்காய், நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தலை முதல் பாதம் வரை மென்மை, பளபளப்பை தாராளமாய் அள்ளித்தரும் தேங்காய், நம்மை தன்னம்பிக்கையுடன் நடைபோட வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.* வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூடிய விரைவில் அவை காணாமல் போய்விடும்.* வெயில் காலங்களில் சூரியஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். முகம் கருப்பாவதை தடுக்கவும் தேங்காய் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில்...

தோல்வி எதனால் ஏற்படுகிறது ?

1.முதலாவதாக, செய்வதில் ஆர்வமும் ஈடுபாடும் உண்மையாக, முழுமையானதாக இருக்க வேண்டும்.சமீபத்தில் டைம்ஸ் நவ் தொலைக் காட்சியில், சச்சின் டெண்டுல்கருடைய பேட்டி ஒன்று, அவர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து இருபது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ஒளிபரப்பானது. வெறும் விளையாட்டு, கொஞ்சம் அதிகமான ஆர்வம் என்பதையும் மீறி, அதுவே அவரது வாழ்க்கையும், தவமுமாகிப் போனதை அந்தப் பேட்டி மிகவும் அழகாகச் சொன்னது. அதன் ஒருபகுதியைக் கீழே பார்க்கலாம்.2.இரண்டாவதாக, ஒரு தெளிவான திட்டம் உங்களுக்கு இருக்க வேண்டும். என்னவாக வேண்டும் என்பதைக் குறித்து ஒரு கனவு, அந்தக் கனவு மெய்ப்பட என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்த தெளிவான பார்வை. நிதியாதாரங்கள் திரட்டுவதும் அதன் ஒரு முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும்.3.மூன்றாவதாக, எல்லாவகையிலும் அது முழுமையானதாக இருக்கவேண்டும் என்று காத்திருக்காமல்,சோதனை ஓட்டத்திற்குத் தயாராக வேண்டும்....

பதட்டத்தை வெல்ல நினைப்பவர்களுக்கு!

     பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது, அதனை எப்படித் தவிர்க்கலாம் என்று அறிய வேண்டும்.    சிறு குழந்தைகளை நாம் எப்படி நடத்துகிறோமோ, அவர்களுக்கு என்ன கற்றுத்தருகிறோமோ அதுதான் பொதுவாக அவர்களது குண நலங்களுக்கு அடிப்படையாகிறது. எனவே சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுதே அவர்களைப் பலருடன் பழகவும், பல சூழல்களைக் கையாளவும் கற்றுக்கொடுத்துவிடுவதும், குழந்தைகளை மட்டம் தட்டி, கேலி செய்யாமல் தட்டிக்கொடுத்து வளர்ப்பதும் மிகவும் அவசியம். சிறு குழந்தைகளாக இருக்கையில் பிறருடன் பேச, பழக வெட்கப்படும் குழந்தைகளை அப்படியே விட்டுவிடாமல், மெள்ள மெள்ளப் பலருடன் பழக வாய்ப்பினை உண்டாக்கி, பயிற்சி...

மூன்று வகையன குணங்கள்....?

மூன்று வகையன குணங்கள்  1. சத்துவ குணத்தின் இலட்சணங்கள்.2. ரஜோ குணத்தின் இலட்சணங்கள் .3.  தமோ குணத்தின் இலட்சங்கள் சத்துவ குணத்தின் இலட்சணங்கள்.எப்போது இந்த மனித சரீரத்தில் எல்லாப் புலன்களிலும் அந்தக்கணமெனும் உள்ளத்திலும் தூய்மையும் பகுத்தறிவும் வளர்கின்றனவோ, அந்நிலையில் சத்துவ குனப் வளர்வதை உனர்ந்துகொள்ள வேண்டும்.ரஜோ குணத்தின் இலட்சணங்கள்: மனிதரின் அந்தக்கரணத்தில் ( உள்மனம்) பண  ஆசையும், செயலாற்றும் முனைப்பும், சுக போகங்களுக்காகவும் சொத்துக்கள் சேர்க்கவும்.புதுப்புதுக் காரியங்களைத் தொடங்குவதும், மன அமைதி இன்மையும், தீவிர ஆசையும் எப்போது அதிகரிக்கின்றனவோ, அப்போது ரஜோ குணம் தலை தூக்குவதை உணர்ந்து கொள்ள வேண்டும்.தமோ குணத்தின் இலட்சங்கள் :எப்போது புலன்களிலும் அந்தக்கரணத்திலும் உணர்வுத் தூய்மை இல்லாதிருக்கிறதோ, எக்காரியத்தையும் முறையாகச் செய்ய மனம் ஈடுபடுவதில்லையோ, செய்ய வேண்டிய...

வெற்றிலை போடுவது ஏன்?

பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும். தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது. மனித...

அம்பிகாபதி - அமராவதி?

கம்பரின் ஒரே மகன் அம்பிகாபதி. மூன்றாம் குலோத்துங்கச் சோழன் மகள் அமராவதியும் அம்பிகாபதியும் ஒருவரை ஒருவர் விரும்பினர். இஃது அரசியல் சிக்கலாக உருவெடுத்தது. எனவே, குலோத்துங்கனுக்கும் கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கும் நடுவே இடைவெளியைத் தோற்றுவித்தது.“எப்பொழுதும் தன் மகளின் மேல் நினைவாக இருக்கும் அம்பிகாபதி, சிற்றின்பச் சாயல் ஒரு துளியும் கலங்காமல் இறைவன் மீது நுாறு பாடல்கள் ஒரே முறையில் தொடர்ந்து பாடி முடிக்கவேண்டும். இந்தச் சோதனையில் வெற்றி பெற்றால் அம்பிகாபதிக்கு அமராவதியை மணமுடிப்பது பற்றிச் சிந்திக்கலாம்” என்று குலோத்துங்கன் அம்பிகாபதிக்கு சோதனை வைத்தான்.குறித்த நாளில் அனைவரும் கூடினர். அம்பிகாபதி சிற்றின்பம் கலங்காமல் பாடல்கள் தொடர்ந்து பாடிக்...

கைபேசி நாகரீகத்தை நெறிப்படுத்தக் குறள்...?

குறள் : 1: நோக்கக் குழையா நுண்ணலைக் கைபேசிதாக்காதே தகவல் தரும்.பொருளுரை: நோக்கினாலும் குழையாத நுண்ணலைக் கைபேசி, நுண்ணலைகள் தாக்காதே தகவலைத் தரும்.2: காணாது தொலையும் கைபேசி; கண்டபின்னும்நாணாதே மெல்ல நகும்.பொருளுரை: எங்கோ தொலைத்து விட்ட கைபேசி கிட்டினாலும் அதற்கென நாணாதே ஒலிக்கும்.3: இனிதே மொழி இயம்பினும் நெடு அண்மைமெலிதே கொல்லும் செவி.பொருளுரை: எத்தனை தான் இனிய மொழியினைக் கொடுப்பினும் கைபேசியை காதிற்கு அண்மையில் நெடு நேரம் கொண்டு கேட்டால், நாளடைவில் செவி கெடாமல் என்ன செய்யும்?4: அன்புசால் மொழியே ஆயினும்; ஓட்டலில்இன்மை அது கைபேசி உரை.பொருளுரை: அன்பொடு பேசும் மொழிதானே என்று ஆகினும் வண்டி ஓட்டுகையில் கைபேசி உரையாடுதலால் நன்மை என்று ஏதுமில்லை;...

சிந்தனைகள் சில........?

நம்பிக்கை இன்றி மனிதனால் எதுவும் செய்ய முடியாது...நம்பிக்கை இருந்தால் எல்லாமே சாத்தியம்...உங்களுக்கு எது செய்யப்பட கூடாது என்று விரும்புகிறிர்களோ...அதை மற்றவர்களுக்கு செய்யாதிர்கள்...சிந்திக்காத மனிதன் தனக்கு மட்டும் துரோகம் செய்வதில்லை...மற்றவர்களுக்கும் துரோகம் செய்கிறான்...உற்சாகத்தோடு யாரும் பிறப்பதில்லை...உற்சாகத்தைத் தன்னுடைய இயல்பாகஆக்கிக் கொள்பவர்களே உயர்கிறார்கள்...உன்னதமானவன் வாழ்வின் விபத்துக்களை அழகுடன்பெருமிதத்துடன் ஏற்றுக்கொண்டுஅந்த சூழலில் சிறப்பானதைச் செய்கிறான்...உலகெல்லாம் அறியாமையில் மூழ்கி கிடந்தால்மட்டுமே தான் ஒரு அறிஞ்சனாக பிரகாசிக்க முடியும்என்பது மிகவும் இழிவு நிலை கொண்ட எண்ணம் ...உங்களை நீங்களே தூய்மையாகபிரகாசமாக...

மொபைல் நம்பர் தெரியாமல் மறைக்க?

 ஒரு மொபைல் நம்பரிலிருந்து  நண்பர்களின் மொபைல்களுக்கு அல்லது மற்றவர்களின் அலைப்பேசிக்கு அழைக்கும்பொழுது அந்த மொபைல் நம்பர் நண்பர்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்கு இப்போது டெக்னிக் (Mobile Number Hiding Technical) வந்துவிட்டது.அதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல் போனுக்கு அழைக்கும்போது அவரின் மொபைல் போனில் உங்களுடைய மொபைல் நம்பர் தெரிவதற்குப் பதில் Private Number என்று மட்டும் வரும்.  உங்களுடைய மொபைல் நம்பர் அவருடைய செல்போனில் தெரியாது.உங்களுடை மொபைல் நம்பர் 9865072896 எனில் அதனுடன் *67 என்ற எண்ணையும் உங்கள் மொபைல் எண்ணுடன் சேர்த்து டயல் செய்யுங்கள்.இது ஒரு யுனிவர்சல் கோட். அதனால் உங்களது மொபைல் எண்  *67 9865072896 என்று...

கையெழுத்து குணத்தைக் காட்டிக் கொடுக்கும்?

எல்லோரும் ஒரே மாதிரியாக எழுதலாம். ஆனால், அவர்களின் கையெழுத்து மாறுபட்டே இருக்கும். கையெழுத்தைக் கொண்டு அவர்கள் குணத்தைக் கண்டு விடலாம் என்கிறார்கள் கையெழுத்து பரிசோதக நிபுணர்கள்.பெரிய எழுத்தாக எழுதுகிறவர்கள், பொதுவாகப் பேரார்வம் மிக்கவர்கள். அதிக நம்பிக்கை உள்ளவர்கள். அதிகாரப் பிரியர்கள்.சிறிய எழுத்தாக எழுதுகிறவர்கள், எந்த வேலையும் திட்டவட்டமாக ஒழுங்காகச் செய்வார்கள். ஆனால், தன்னம்பிக்கை இல்லாதவர்கள் இவர்கள்.எழுத்துக்களை வலப்பக்கமாகச் சாய்த்து எழுதுகிறவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். வாழ்வதிலே இன்பம் காண்கிறவர்கள்.எழுத்துக்களை இடப்பக்கம் சாய்த்து எழுதுபவர்கள் பயந்த சுபாவமுடையவர்கள். நடந்து போன விஷயங்களைப் பற்றி நினைத்து அங்கலாய்ப்பவர்கள்.எழுத்துக்களை...

தந்தைக்கு மகள் எழுதிய கடிதம் - முழுசா படிங்க?

ஓரு தந்தை தனது இளம்வயது மகளின் அறையை கடந்து செல்லும்போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு சந்தேகித்து உள்ளே சென்றார்.எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.அப்போதுதான் தலையணையி்மேல் ஒரு காகித உறையிருப்பதைப் பார்த்தார்.அது என்னெவென்று எடுத்துப் பார்த்தார். அதன்மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது.பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது:அன்புள்ள அப்பா, மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என் காதலன் டிமோத்தியுடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன்.உங்களுடனும் அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு தர்மசங்கடமான...

காதலின் வயது எது???

வாழ்க்கை என்றால் என்ன என்ப... தைபுரிந்து கொள்ள இயலாத வயதில் உனக்குஎதற்கு காதல்!!! கல்வி கற்கும் வயதில் நீ ஏன் காதலை பற்றி கனவு காண்கிறாய்?கொஞ்சம் சிந்தி! முதலில் நீ உன் காலில் நிற்கத்தக்கதகுதியைபெற்றுக் கொள்... அதற்கு பின் தாராளமாய் நீ காதலி அப்போது புரியும் வாழ்க்கைபயணம் என்பது எத்தனை கரடுமுரடான தென்று.உங்கள் கருத்துக்கள் வரவேற்கதக்கது....

உன்னால் முடியும் என்று நம்பு!

மா மேதை அப்துல் கலாமின் கனவு                  அது 1950 வருடங்களில் நிகழ்ந்த சம்பவம்... தமிழ்நாடுமுழுவதும் சூறாவளியாகப் பயணம் செய்து மக்களைத் தன்னுடைய சாதுர்யமான பேச்சினால் கவர்ந்து கொண்டி ருந்தார் அண்ணா. அவருடைய எரிதழலும், தென்றல் காற்றும் கலந்த அறிவார்ந்த பேச்சு மக்களிடையே ஒரு பெரிய எழுச்சியையே ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளி மாணவர்களாகிய நாங்களும் மகுடிக்கு அடங்கிய பாம்பு போல் அந்த வசீகரப் பேச்சில் கட்டுண்டு கிடந்தோம்.அவரை எப்படியாவது எங்களுடைய பள்ளி விழாவுக்கு அழைத்து வந்து பேச வைக்க வேண் டும் என்கிற ஆசை தணியாத தாகமாய் மாறியது. ஒருநாள் நானும் சக மாணவர்கள் சிலரும் சென்னைக்கு ரயில் ஏறி விட்டோம். அறிஞர் அண்ணாவின் வீட்டைக் கண்டுபிடித்து அவரைச் சந்தித்தும் விட்டோம். மிக எளிமையான வீட்டில்,...

வர்மக்கலை! அதிசயம்!

வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது. டிராகன் டி. ஜெய்ராஜ் அவர்களின் வர்மக்கலை மர்மங்கள் 108 விளக்கப் படங்களுடன் இக் கலையை விளக்குகின்றது.வர்மம் என்றால் என்ன?உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top