.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 2 December 2013

அழகு என்ற வார்த்தைக்குதான் எத்தனை வார்த்தைகள் தமிழில்!

  –அழகு   – அணங்கு, அணி, அந்தம், அபிராமம், அமலம், அம்,  அம்மை, அலரி,- இராமம், இல்லிதம், இலாவண்ணியம், எழில், ஏர், ஐ, ஒண்மை, ஒப்பு,- கவின், களை, காந்தி, காமர், காரிகை, குழகு, கொம்மை, கோலம்,- சந்தம், சவி, சாயல், சித்திரம்,சீர், சுந்தரம், செவ்வி, செம்மை, சேடு,- சொக்கு, சோபம், செளமியம், தகை, தகைமை, தளிமம், தென், தேசிகம்,- தையல், தோட்டி, தோல், நலம், நல்லி, நன்கு, நோக்கம், நோக்கு,- பதம், பத்திரம், பந்தம், பந்துரம்,  பாங்கு, பூ, பை, பொற்பு, பொன், மஞ்சு,- மஞ்சுளம், மணி, மதன், மயம், மனோகரம், மனோக்கியம், மாண்பு,- மாதர், மாமை மாழை, முருகு, யாணர், யெவளனம், வகுப்பு, வடிவு,- வண்மை, வளம், வனப்பு, வாகு, வாமம், விடங்கம், அன்றியும்-...

தமிழின் தனிச்சிறப்பு!

  பூப் பறித்தல்,  பூக் கிள்ளுதல்,  பூக் கொய்தல்என்ற பல சொற்கள் பழக்கத்தில் இருப்பினும்,ஒவ்வொன்றும் ஒரு தனிப் பொருளைப் பெற்றுள்ளது.ரோஜா முதலிய செடிகளில் பூக்கும் பூவை எடுப்பதைப் பூப்பறித்தல் என்று கூறுவர்.தரையில் படர்ந்திருக்கும் கொடிகளில் உள்ள பூவைஎடுப்பதனைப் பூக் கிள்ளுதல் என்று கூறுவர்.மரம், பந்தல் ஆகியவற்றில் உயர்ந்து படர்ந்திருக்கும்கொடிகளில் உள்ள பூவை எடுப்பதைப் பூக் கொய்தல்என்று கூறுவர...

தொடர்முயற்சியே நம் வெற்றிக்கு வழி வகுக்கும்…!

  ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன. அந்த வழியே போன ஒருவன் யானைகளை பார்த்தபடியே சென்றான். ஒரே ஒரு கயிறு மட்டும் தான் யானைகளின் காலில் கட்டி இருக்கிறது, இவ்வளவு பெரிய உருவம் கொண்ட யானை அதை அறுத்து கொண்டு போகாதா என்று வியந்தான். அருகில் இருந்த பாகனிடம் இந்த யானைகள் கயிற்றை அறுத்து கொண்டு போகாதா என்று கேட்டான். இந்த யானைகள் சிறியதாக இருக்கும்போது இந்த கயிற்றால்தான் கட்டினோம். அப்போது அது இழுக்கும்போது இந்த கயிறுகள் அறுக்கவில்லை. யானைகள் பெரிதாக பெரிதாக தன்னால் கயிற்றை அறுக்க முடியாது என்று எண்ணி கயிற்றை அறுக்க முயற்சி செய்வதில்லை என்று பாகன் சொன்னான். அந்த மனிதன் ஆச்சரியப்பட்டான்,இந்த யானைகள் ஒரு நிமிடத்தில் இந்த கயிற்றை...

குளிர்காலங்களில் ஆண்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!!!

நமது உடல் ஆரோக்கியத்திற்கும் நலத்திக்கும் நாம் ஊட்டச்சத்து நிரம்பிய உணவு வகைகளையே உட்கொள்ள வேண்டும். ஒரு நாளிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நாம் உட்கொள்ளும் உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால், நமக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் வியாதிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.குளிர்காலத்தின் வருகையானது நமது உடலில் உள்ள வலிமையான நோய்எதிர்ப்பு மண்டலம் எதிர்கொள்ளும் ஏராளமான நோய்களையும் வியாதிகளையும் வரவழைக்கின்றது. ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் இவை இரண்டும் நாம் குளிர்காலங்களில் எதிர்கொள்ளும் இடர்மிகுந்த நோய்களாகும். இவை குளிர்மாதங்களில் நிலவி வரும் குளிர்ந்த வானிலையின் காரணமாக தடுபற்று வலிமை மிகுந்ததாக செயல்படும். நமது உடலில் உள்ள...

கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்!

 'இன்றைக்கு 'கொலஸ்ட்ரால்’ என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போதுதான் பிரச்னை. நம் உடல் செல்கள் உற்பத்தி செய்வதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொலஸ்ட்ரால் அவசியம். மொத்தக் கொழுப்பும் எல்டிஎல் கொலஸ்ட்ரால், எச்.டி.எல். கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைட்ஸ் என்று பிரிக்கப்படுகிறது. நகர்ப்புற இந்தியர்கள் மத்தியில் நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல். 35 மி.கி என்ற மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகிறது' . . கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்  அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும். 1. கொலஸ்ட்ரால் அளவை அறிந்துகொள்ளுதல்  கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு உள்ளது என்பது தெரிந்தால்தான்,...

ஹென்றி ஃபோர்ட் (கார் ஜாம்பவானின் கதை) - வரலாற்று நாயகர்!

எந்த ஒரு நாட்டின் அல்லது நகரத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வர்த்தக விருத்திக்கும் மிக முக்கியமான தேவை நல்ல போக்குவரத்து முறை. நம்மை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தரை வழியாக கொண்டு செல்ல இப்போது பல வகையான பொது போக்குவரவு வழிகள் உண்டு. தனிநபர் போக்குவரத்துக்கான வாகனங்களுள் முக்கியமான ஒன்று கார். அதனை பெருமளவில் பிரபலபடுத்தி கற்காலம், பொற்காலம், என்பதுபோல் உலகுக்கு கார் காலத்தை அறிமுகம் செய்த ஒரு கார் ஜாம்பவானைத்தான் நாம் தெரிந்துகொள்ள இருக்கிறோம். அவர்தான் அமெரிக்காவில் கார் உற்பத்தியில் மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்கி தனது பெயரிலயே உன்னதமான கார்களை உலகுக்குத் தந்த தொழில் பிரம்மா ஹென்றி ஃபோர்ட்.1863 ஆம் ஆண்டு ஜூலை 30ந்தேதி அமெரிக்காவில்...

புயல் கூண்டுகள் குறித்த விளக்கம்!

புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகள் குறித்த விளக்கங்களின் விபரம் பின்வருமாறு :ஒன்றாம் எண் எச்சரிக்கையால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.இரண்டாம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள். நான்காம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பது உள்ளூருக்கான எச்சரிக்கை ஆகும். 5வது எண் கூண்டு, துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும். 6வது புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்...

காதலர் தினத்தில் 'விஸ்வரூபம் 2' ?

  'ஜில்லா', 'வீரம்' படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றன. 'கோச்சடையான்' படத்தை ஜனவரி 26ல் ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.இந்தப் படங்கள் ரிலீஸ் ஆன பிறகு, 'விஸ்வரூபம் 2' படத்தை வெளியிடப் போகிறார்களாம். கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார் உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். 'விஸ்வரூபம்' முதல் படம் ஆஃப்கானிஸ்தானிலும், அமெரிக்காவிலும் நடப்பதாக கதை அமைப்பு பின்னப்பட்டிருந்தது. பட முடிவில் வில்லன் தப்பித்துப் போவதாக காட்டியிருந்தார் கமல். இப்போது அதன் தொடர்ச்சி இந்தியாவில் நடைபெறுகிறதாம். பாடல்களை ஜனவரி மாதத்தின் இடையிலும், படத்தை பிப்ரவரி 14 அன்று வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார் கமல். காதலர்...

ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..!

சித்திரை மாத பௌர்ண மிக்கு தனிச் சிறப்பு உண்டு. அந்த நன்னாளில் ரமணாசிரமத்தில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளில் ஒன்று.ஆசிரமத்தில் உணவு உண்ட பின்னர் ஓய்வடுத்த சோமசுந்தர சுவாமி என்பவர் நீண்ட அறையில் படுத்துக் கொண்டு தன் வயிற்றைத் தடவியபடி ஒளவையாரின் பாடல் ஒன்றைப் பாடினாரராம்”ஒருநாள் உணவை  ஒழியென்றால் ஒழியாய்  இரு நாளைக்கு  ஏலென்றால் ஏலாய்  ஒரு நாளும்  என்னோ அறியாய்  இடும்பை கூர்  என் வயிறே  உன்னோடு வாழ்தல் அரிது”இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ரமண மகரிஷி, வயிறு மனிதனை நோக்கிப் பாடுவதுபோல, அதே பாடலை மாற்றிப் பாடினார்.”ஒரு நாழிகை வயிறு எற்கு  ஓய்வு ஈயாய் நாளும்  ஒரு நாழிகை  உண்பது ஓயாய்  ஒரு நாளும்  என்னோ அறியாய்  இடும்பை கூர்  என் உயிரே  உன்னோடு வாழ்தல் அரிது”பாடலின் பொருள் இதுதான்:”ஓ,...

அரசியல் பன்ச் இல்லாத ஜில்லா!

  'ஜில்லா' பொங்கலுக்கு வெளியாகிறது என அறிவித்த பின்னர் இன்னும் ஸ்பீடாக பட வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.பாடல் காட்சிகளை ஜப்பான், ஹைதரபாத்தில் ஷூட் செய்த பின்னர்,  இப்போது பொள்ளாசியில் ஷூட் செய்து இருக்கிறார்கள்.பசுமையான வயல்வெளிகள், தென்னை மரத் தோப்புகள், சோலைகளுக்கு நடுவில் விஜய் பாடுவதாக படத்தின் ஓப்பனிங் பாடல் இருக்கிறதாம்.பொள்ளாச்சி விஜய்க்கு ரொம்ப ராசியான இடமும் கூட.'வேட்டைக்காரன்', 'வேலாயுதம்' உட்பட பல படங்களின் பாடல் காட்சிகள் பொள்ளாச்சியில் ஷூட் செய்யப்பட்டவைதான். இப்போது 'ஜில்லா' படத்திற்கு செம மாஸ், க்ளாஸாக விஜய்யுடன் 80 நடனக்கலைஞர்களும், 1000 ஜூனியர் ஆர்டிஸ்ட்களும் பங்கேற்றுள்ளனர்.அந்தப் பாடலுக்கு நடனம் அமைத்தவர்...

குளிர்காலங்களில் வீட்டில் வெதுவெதுப்பான சூழ்நிலையை உருவாக்க சில வழிகள்!!!

குளிர்காலம் வந்தாலே நமது உடல் நலத்தை பராமரிப்பதோடு நமது வீட்டையும் வீட்டில் உள்ள பொருட்களையும் பராமரிக்க வேண்டும். ஏன்னெனில், நம்மை போலவே நமது வீடும் குளிர்காலத்தை உணரும் தன்மையை கொண்டது. அதனால், இந்த குளிர்காலங்களில் நமது வீட்டில் உள்ள பொருட்களை தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும்.குளிர்காலங்கள் குளிர்ந்த காற்றை வீசி நாம் வெளியில் செல்லுவதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கச் செய்கின்றது. எதை தொட்டாலும் சில்லென்று இருப்பதால் ஒரே இடத்திலேயே இருக்கச் செய்கின்றது. இன்றைய மாடர்ன் வீடுகளில் உள்ள ஹால் மற்றும் படுக்கை அறைகளில் சிறந்த முறையில் அறையை வெப்பமாக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், சில சந்தர்ப்பங்களில் இந்த வெப்பமாக்கும் கருவிகள் இல்லாத நிலையில் நமது வீட்டை வெப்பமாக வைப்பதற்கு வேறு வழிகளை நாடவேண்டி வரும்.இயற்கையான முறையில் நமது வீட்டை வெப்பமாக வைப்பதற்கான வழிகளை கண்டறிவது...

கணவன் / காதலன் இருவரிரிடமும் அன்பை வெளிபட ...

உலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சேர்ந்து இருக்கும் நேரத்திலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆதரவாக இருக்க வேண்டியது மிக அவசியம்.கணவனும் மனைவியும் மனம் ஒத்து இருத்தலும் இருவருக்கும் இடையில் புரிதலும் அரிதாகிவருகிறது! சின்னச் சின்ன விசயங்களில் உருவாகும் புரிதலின்மைகள் வளர்ந்து பூதங்களாகி இருவருக்கிடையில் ஒத்துப்போகாத நிலையில் போய் முடிகிறது.இந்த நிலைக்கு பல காரணிகள் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமான அன்பை சொல்லத்தெரியாததுதான். நான் உன்னைக் காதலிக்கிறேன், உன் மீது அன்பாக இருக்கிறேன் என்று நாம் தினமும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ஆயினும் அவற்றைச் சொல்ல சின்னச்சின்ன வழிகளை நாம் கையாள வேண்டும்!!எல்லாம் தெரிந்ததுதான் புதிதா என்ன இதெல்லாம்? என்று அலுப்புப் படாமல் புத்துணர்ச்சியுடன் இவற்றைக் கடைப்பிடித்தால்...

நண்பர்களே! உங்களோடு ஒரு நிமிடம்!!!!

வணக்கம்! மீண்டும் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி.ந்ண்பர்களே! உங்களோடு ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...இப்பதிவை பதிவு செய்வதன் காரணம்:ஒரு தீய நண்பனின் செயலால் பாதிக்கப்பட்ட பெண்னிண் அவல நிலையும், அக்குடும்பத்தின் மன உளைச்சலையும் அறிந்த போது, "யாருக்கும் இதுபோன்ற நிலை எற்பட‌க்கூடாது" என்ற அக்கறையின் காரணமாகவேகும்........நாள்_1: * நண்பனின் அலைபேசியில்(Mobile Phone) தவறிய அழைப்பு பார்த்தவுடன், திரும்ப அழைத்த போது, ஒரு பெண்ணின் குரல்....தவறுதலாக தனது Cell Noன் பத்து இலக்க எண்ணின் கடைசி எண்ணை மாற்றி அழைத்தால் அழைப்பு வந்தாக‌ சொல்லவும்,அவனும் இயல்பாக பேசி வைத்து விட்டான்..அடுத்து இரண்டுநாட்கள் கழித்து:* இம்முறை வேண்டுமென்றே, அவன் வேறு எண்ணில் இருந்து Missed Call கொடுக்கவும், அப்பெண்னிடம் அழைப்பு (call) வரவும் பேசும் போது தவறுதலாக தன் நணபன் நினைத்து Missed Calல் விட்டதாக் குறிப்பிட்டு,...

ஒரு மரம் சுமார் 50 ஆண்டுகள் வெட்டப்படாமல் இருந்தால், அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

   ஒரு மரம் நாட்டுக்குச் செய்யும் சேவை மதிப்பு சுமார் 30 லட்சமாகும். பத்து ஏர்கண்டிசனர்கள் 24 மணிநேரம் ஓடுவதால் ஏற்படும் குளிர்ச்சியை ஒருமரம் தனி நிழல் மூலம் தருகின்றது. சுமார் 20 பேருக்குத் தேவையான பிராண வாயுவை ஒரு ஏக்கரில் வளரும் மரங்கள் தருகின்றன. பிராண வாயுவின் மதிப்பு - 4.00 இலட்சம் ரூபாய் காற்றைச் தூய்மை செய்வது - – 7.00 இலட்சம் ரூபாய் மண்சத்தைக் காப்பது - 4.50 இலட்சம் ரூபாய் ஈரப்பசையைக் காப்பது - 4.00 இலட்சம் ரூபாய் நிழல் தருவது - 4.50 இலட்சம் ரூபாய் உணவு வழங்குவது - 1.25 இலட்சம் ரூபாய் பூக்கள் முதலியன - 1.25 இலட்சம...

தக்காளி தோசை - 2 - சமையல்!

தேவையானவை: பச்சரிசி - ஒன்றே கால் கப், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், தக்காளி - 4, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10, பெருங்காயம் - பாதி சுண்டைக்காய் அளவு, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: பச்சரிசியையும், உளுத்தம்பருப்பையும் கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். மிளகாயையும் தண்ணீரில் ஊறவிடவும் (ஊறினால் சீக்கிரம் அரைபடும்). தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும். சீரகம், பெருங்காயம், ஊறிய மிளகாய் ஆகியவற்றை முதலில் அரைத்துக் கொண்டு, பின்னர் பச்சரிசி, தேங்காய், உளுத்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும். அரைபட்டதும் தக்காளியையும் போட்டு நன்றாக ஆட்டவும். பின்னர் உப்பு சேர்த்து,...

ஷூ அளவை அறிய ஒரு செயலி!

  ஷூ அளவை கண்டறிந்து சொல்வதற்காக என்றே புதிய செயலி அறிமுகமாகி இருக்கிறது.  நம் ஷூ அளவு நமக்கு தெரியாதா?  இதற்கெல்லாம் ஒரு செயலியா ?  என்று கேட்பதற்கு முன் இணையம் மூலம் ஷூ வாங்கவோ அல்லது வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் போது ஷூ வாங்கவோ முற்படும் நிலையை கற்பனை செய்து பாருங்கள்.  உள்ளூரிலேயே ஷூக்களின் அளவு நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது. அப்படி இருக்க வெளிநாடுகளில் சொல்லவா வேண்டும்.  ஒவ்வொரு நாட்டிலும் ஷூக்களுக்கு ஒரு அளவை பின்பற்றலாம் தானே.  எனில் இணையம் மூலம் வெளிநாட்டு ஷூவை வாங்கும் போது உங்கள் ஷூவின் அளவு அந்நாட்டு கணக்கில் எந்த அளவு வருகிறது என தெரிந்து கொள்வது அவசியம் தானே. அதை தான் இந்த...

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…உண்மை விளக்கம்!

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…என்பது  ஐந்து பெண் மக்களைப் பெறுவதைக் குறிக்கவில்லையாம்..! கீழ்கண்ட விபரப்படிக்கான ஐந்து பேரைக் கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட  அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும்  என்பதுதான் உண்மையான அர்த்தம்… 1) ஆடம்பரமாய் வாழும் தாய், 2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை, 3) ஒழுக்கமற்ற மனைவி, 4) ஏமாற்றுவதும் துரோகமும்  செய்யக்கூடிய உடன்  பிறந்தோர் மற்றும் 5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்  என்பதாகும்...

‘கிச்சன் கெபினட்’ பிறந்த விதம்!

அரசாங்கத் தலைவர்களின் அதிகார பூர்வமற்ற ஆலோசகர்கள்  வட்டம் ‘கிச்சன் கெபினட்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தை 1832 இல் உருவானது. அப்போது அமெரிக்க   ஜனாதிபதியாக ஆண்ட்ரூ ஜாக்சன் என்பவர் இருந்தார். அவர் தனது நெருங்கிய நண்பர்கள் மூன்று பேருடன் அடிக்கடி  அதிகாரப்பூர்வமில்லாத தனிப்பட்ட கூட்டங்களை நடத்துவார். அந்த நண்பர்கள் வெள்ளை மாளிகையின் பின் கதவு வழியாக   நுழைந்து சமையலறை வழியாக மாளிகைக்குள் வருவார்கள். அதிலிருந்து அமெரிக்க ஜனாதிபதியின் நெருங்கிய நட்பு  வட்டத்தை ‘கிச்சன் கெபினட்’ என்று பத்திரிகையாளர்கள்  குறிப்பிடத் தொடங்கினார்கள். பின்னர் படிப்படியாக உலகம் முழுவதும் அதிகாரப்பூர்வமற்ற  அரசியல் ஆலோசகர்களைக் குறிக்கும் வார்த்தையாக இது மாறியத...

“உலகின் அழகற்ற நாய்” உயிரிழந்தது!

  அமெரிக்காவின் நியூஜெர்ஸி யைச் சேர்ந்த கரேன் குவிக்லிக்கு சொந்தமான நாய் எல்வுட் (8). சைனீஸ் கிரெஸ்டட், சிகுவாகுவா ஆகிய நாய் இனங்களின் கலப்பி னமான எட்வுட், 2007-ம் ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற உலகின் மிகவும் அழகற்ற நாய் என்ற போட்டியில் பங்கேற்று பட்டத்தை வென்றது.அதன் பின் அதன் புகழ், அமெரிக்கா மட்டுமின்றி பிரேஸில், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் பரவத் தொடங்கியது. அந்த நாய்க்கு ஏராளமானோர் ரசிகர்களாக மாறி னர்.இந்த உலக பேம்ஸான் எல்வுட் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தது. இறப்புக்கான காரணம் தெரியவில்லைஎப்போதும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் எல்வுட், சற்று மூடிய கண்களுடனும், தலையில் விசித்திரமான வெள்ளை முடிக் கற்றைகளுடன் வலம் வந்தது....

ஒருவரின் செயலுக்குரிய பரிசு எது?

மலைக்கு மேல் இருக்கும் தனது வீட்டுக்கு அடிவாரத்தில் இருந்து இரண்டு பானைகளில் தண்ணீர் சுமந்து செல்வான் அந்தக் குடியானவன். ஒரு பானையில் மட்டும் சில ஓட்டைகள் இருந்தன. இதனால் வழிநெடுக நீர் ஒழுகி, வீட்டை அடைவதற்குமுன் பாதியளவு நீர் குறைந்து விடும். முதலாளிக்கு நன்றாகப் பணியாற்ற முடியவில்லையே என்ற வருத் தத்தில் கண்மூடிக் கிடந்தது அந்தப் பானை. ஒருநாள் கண்களை திறந்த பானை, வழிநெடுக பச்சைப்பசேலென புற்களும் பூச்செடிகளுமாக வளர்ந்து நிற்பதைக் கண்டு மகிழ்ந்தது. ‘அட... இந்த அற்புதத்தை உருவாக்கியது யார்?’ என்று பானை கேட்க... ‘வழிநெடுக விதையைத் தூவி வைத்தேன். நீதான் நீரூற்றி தோட்டத்தை உருவாக்கினாய்’ என்றான் குடியானவன். கடவுளின் படைப்பில் எதுவும் வீணாகு வதில்லை. எவரையும் வீண் என விலக்க முடியாது. ஒவ்வொருவரும் ஏதோவொரு மகத்தான காரியத்தைச் செய்யவே படைக்கப்பட்டிருக்கி றோம். அந்தக் காரியம் என்ன? அதைச் செயல்படுத்துவது...

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க!

ஆறு அணில்கள் நாவல்பழக் கொட்டைகளைப் பொறுக்கி ஒரு பெரிய  கூடையில் போட்டன.  அணில்கள் மிகமிக வேகமாக வேலை செய்ததால் கூடையில் போட்ட  ஒவ்வொரு நிமிட முடிவிலும் அந்தக் கொட்டைகள் இரட்டிப்பாகின.  பத்தாவது நிமிட முடிவில் அந்தக் கூடை முழுதும் நிரம்பி விட்டது.  அந்தக் கூடையை அரை அளவு மட்டும் நிரப்பும்போது,  அந்த அணில்கள் எவ்வளவு நேரம் எடுத்திருக்கும்?...

நாற்பது லட்சம் சம்பளம் கேட்கிறாரா ப்ரியா ஆனந்த்?

  இயக்குநர் மணி நாகராஜ் இயக்கும் படம் 'பென்சில்'. ஜி.வி பிரகாஷ் இதில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். 'பென்சில்'  கதை, ஒரு புதுமுகத்துக்கானது. ஜி.வி., ஸ்கூல் பையன் கேரக்டருக்கு பக்கா பொருத்தமா இருப்பதால் ஹீரோவாக நடிக்கிறாராம். ஹீரோயினாக நடிக்கும்படி,  முதலில் ப்ரியா ஆனந்தைத்தான் கேட்டார்கள். ஆனால், அவர் படத்தில் நடிக்கவில்லை. ப்ரியா ஆனந்த் கால்ஷீட் கிடைக்காததால், வேறு ஹீரோயினை நடிக்க வைக்க முயற்சி எடுத்தார்கள். அதற்குப் பிறகே , ஊதா கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யா 'பென்சில்' படத்தில் நடிகக்க் கமிட் ஆனார். ஆனால், ப்ரியா ஆனந்த் நடிக்காததற்கு கால்ஷீட் தேதி காரணம் இல்லையாம். சம்பளம்தான் காரணமாம். 'வணக்கம் சென்னை' படத்தில் நடிக்கும் வரை ப்ரியா...

வாழ்கையின் வெற்றிக் கோட்பாடுகள்!

* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகா கையாளுங்கள்.* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.* விட்டுக் கொடுங்கள்.* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடதிர்கள்.* குறுகிய மனப்பான்மையை விட்டோளியுங்கள்.* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் தாழ்த்தி நினைத்து கவலைப்படதிர்கள்.* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படதிர்கள்.* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதிர்கள்.* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி...

41 நாட்களில் நிறைவடைந்த லிம்கா சாதனை படம்!

  ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண் குழந்தைகள் நடித்ததன் மூலம் ´என்ன சத்தம் இந்த நேரம்’ படம் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.தமிழில் புதிய முயற்சி என பலராலும் பாராட்டை பெற்ற ‘ஆரோகணம்’ படத்தை தயாரித்த ‘ஏ.வி.ஏ.புரொடக்ஷன்ஸ்’ ஏ.வி.அனூப் மீண்டும் பெரும் பொருட்செலவு செய்ய, ‘அலையன்ஸ் பிக்சர்ஸ்’ புரொடக்ஷன் கிருஷ்ணா பலராமராஜா நிர்வாக தயாரிப்பில் உருவாகியிருக்கிற படம் ‘என்ன சத்தம் இந்த நேரம்’. இந்த படத்துக்கு கதை,திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் குருரமேஷ்.பல வெற்றிப்படங்களை இயக்கி இயக்குனராக மட்டும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும்‘ஜெயம்’ராஜா இந்த படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.இயக்குனர் ஜெயம் ராஜாவை நடிகராக்கியது...

மரவள்ளிக் கிழங்கு தோசை - 1 - சமையல்!

  தேவையானவை: புழுங்கலரிசி - 1 கப், மரவள்ளிக் கிழங்கு - சிறியதாக 1, காய்ந்த மிளகாய் - 6, சீரகம் - 1 ஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: மரவள்ளிக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, 3 முறை பால் போக நன்கு கழுவிக் கொள்ளவும். புழுங்கலரிசியை கழுவி, 2 மணி நேரம் ஊற வைக்கவும். மிளகாய், உப்பு, பெருங்காயம், சீரகம் ஆகியவற்றை அரைத்து, அதோடு கிழங்கையும் சேர்த்து அரைக்கவும். பின்னர் ஊறிய அரிசியையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். (ஆட்டுரல் இல்லாதவர்கள் கிரைண்டர் அல்லது மிக்ஸியில் அரைக்கலாம்) ஆட்டிய மாவை தோசை ஊற்றும் பக்குவத்தில் வைத்துக் கொண்டு மெல்லிய தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி...

ஆண்கள் பெண்களை வெறுக்கும் சில காரணிகள்!

சில பெ‌ண்களை பெ‌ண்களு‌க்கே‌ப் ‌பிடி‌க்காது.. ஆ‌ண்களு‌க்கு‌ப் ‌பிடி‌க்குமா? எ‌ன்று கே‌ட்பா‌ர்க‌ள்... ஆனா‌ல் அத‌ற்கு ‌பிடி‌‌க்கு‌ம் எ‌ன்பதுதா‌ன் ப‌தி‌ல். ஒரு பெ‌ண் பெ‌ண்ணை‌ப் பா‌ர்‌க்கு‌ம் ‌விதமு‌ம், ஒரு ஆ‌ண் பெ‌ண்ணை‌ப் பா‌ர்‌க்கு‌ம் ‌விதமு‌ம் மாறுபடு‌கிறது.சில‌ர் பா‌ர்‌த்து‌ப் ‌பிடி‌த்தது‌ம் காத‌லி‌க்க‌த் துவ‌‌ங்‌கி‌விடுவா‌ர்க‌ள். அ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்‌க‌ள் காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கிய ‌பிறகுதா‌ன் அ‌ந்த‌ப் பெ‌ண்ணை‌ப் ப‌ற்‌றி பு‌ரி‌ந்து கொ‌ண்டு மன‌ம் பேத‌லி‌த்து‌ப் போவா‌ர்க‌ள்.முத‌ல் வகை...எ‌ப்போது‌ம் எதையாவது ஒ‌ன்றை சொ‌ல்‌லி ந‌ச்ச‌ரி‌ப்பூது. எந்த ஒரு மனிதரும் அதிகம் பார்த்துப் பயப்படுவது இந்தப் பெண்ணைத்தான். இந்தப் பெண் சளசளவென்று புகார் மழை பொழிபவளாகவும், எப்போது திருமணம் செய்துகொள்ளலாம் என்று நச்சரித்துக் கொண்டே இருப்பவளாகவும் இருப்பாள். அவள் ஓர் உறவுக்குள் விழுந்து, பாதுகாப்பாக உணர்ந்தபின்,...

கண்டுபிடிப்புகளும் - கண்டுபிடித்தவர்களும்!

  • இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுபவர் - வில்டன் ஸர்ஃப்• (WWW) World Wide Web – எனும் இன்டர்நெட் தாரக மந்திரத்தை உருவாக்கியவர் திமோத்தி ஜான் பெர்னர்ஸ்-லீ• World wide Web எனபதன் துவக்க கால பெயர் - என்க்வயர்• கணினி வழி தகவல் பரிமாற்றத்தில் “புன்னகை தவழும் முகம்” எனபதைக் குறிக்க    எனும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இதை முதன்முதலாக (1982)ல் பயன்படுத்தத் துவங்கியவர் - ஸ்காட் இஃபால்மன் எனும் பேராசிரியர்.• கூகுள் தேடுபொறியை உருவாக்கியவர்கள் - லாரிபேஜ், ஸ்ர்ஜி ஃப்ரின்• உலகின் முதல் மடிக்கணினி - டைனாபுக் என்ற பெயரால் அழைக்கப்பட்டது• பிரபல விக்கிபீடியா வெப்சைட்டை உருவாக்கியவர் - ஜிம்மி வேல்ஸ்• பிரபலமான பேஜ் மேக்கர் எனும் பப்ளிஷிங்...

ஏலியன்ஸ் உண்மையா அல்லது பொய்யா ?

வேறு கிரகங்களிலிருந்து நம் பூமிக்கு வரும் மனிதர்களைப் பற்றி பல கதைகளும் ஃபிக்ஸன் மூவிகளும், விஞ்ஞான கட்டுரைகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது. என் சிந்தனையிலும் அப்படி வேற்றுக் கிரகவாசிகள் அடிக்கடி வந்து போவதுண்டு ஆனால் அவர்கள் முற்றிலும் வேறு பட்டவர்கள். பொதுவாக வேற்றுக்கிரக வாசிகள் என்றால் பெரிய ஓவல் தலையும் நீல முட்டைக் கண்களும் நீண்டு மெலிந்த கை கால்களும் கொண்டவர்கள். வேறு கிரகங்களிலிருந்து பறக்கும் தட்டு போன்ற வாகனங்களில் வான் வழியே வந்து இறங்குவார்கள் என்று தான் எண்ணுகிறோம். இது முழுக்க ஏதோ ஒரு ஓவியரின் கற்பனை தான். வேற்று உயிரினங்கள் மனிதச் சாயலுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. மனித சாயல் வருவதற்கு பூமியின் பல பருவமாற்றங்களை மனிதன் தாண்டி பரிணமத்தின் மூலம் பக்குவப்பட வேண்டியிருந்தது. எனவே இது போன்ற சத்தியக்கூறுகள இன்னொரு கிரக உயிருக்கு அமைவது மிக மிக அபூர்வம். வேற்று கிரக...

பொன்மொழிகள்!

  1. கோட்டையுள்ள நகரைக் காட்டிலும் வலிமையுள்ளது இதயம்.  - இங்கிலாந்து 2. இதயம் பொய் சொல்லாது.  - ஹாலந்து 3. மறைத்து வைக்கப்பட்டுள்ள மனிதனின் செல்வம் இதயம். - பல்கேரியா 4. இதயத்தின் மகிழ்ச்சியை முகத்தின் நிறத்தில் காணலாம்.  - இங்கிலாந்து 5. காயம்பட்ட இதயத்தைக் குணப்படுத்துவது  கடினம்.  - கதே 6. இதயத்தின் சாட்சியம் அதிக வலிமை உள்ளது.  - துருக்கி 7. தன் இதயத்தை அறிந்து கொண்டவன்  கண்களை நம்ப மாட்டான். - சீனா 8. ஏழைக்கும் ஒரு இதயம் உண்டு.  - அமெரிக்கா 9. வறுமையில்தான் மனம் திரும்பிப் பார்க்கும்.- இத்தாலி 10. மனமிருந்தால் மலையையும் சாய்க்கலாம்....

பிறந்த நாளிலேயே பறக்கும் ஒரே பறவையினம்..

  ஆஸ்திரேலியாவின் “மாலிபவுல்’ என்னும் பறவை ரொம்ப வினோதமானது. இந்தப் பறவைக்கு பெற்றோர் யார் என்றே தெரியாது.ஏனெனில், தாய்ப்பறவை முட்டைகளை மண்ணுக்குள் போட்டு மூடிவைத்து விட்டு சென்று விடும்.குஞ்சுகளோ பொரிந்து வெளியே வந்தவுடன் அப்படியே பறக்க ஆரம்பித்து விடும்.அந்த அளவிற்கு அதற்கு இறகுகள் வளர்ந்து விடுகின்றன.இதனால் அதன் பெற்றோர் யாரென்றே அந்தப் பறவைக்கு தெரிவதில்லை. தாய்ப்பறவையும் தனது முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வந்ததா என்று காண வருவதில்லை.பொறுப்பில்லாத மம்மி. இந்தப் பறவை பற்றிய இன்னொரு விசேஷமான தகவல். பிறந்த நாளிலேயே பறக்கும் ஒரே பறவையும் இதுதான...

அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்?

பட்டங்கள் கொடுப்பது பற்றி அமெரிக்க அரசியல் சட்டம் என்ன சொல்கிறது?அரசியல் சட்டம் ஆர்ட்டிகிள் 1, பிரிவு 9:8“அமெரிக்க அரசு எந்த பட்டத்தையும் யாருக்கும் வழங்க கூடாது. அமெரிக்க அரசில் பணியாற்றும் யாரும் எந்த வெளிநாட்டு மன்னர், அரசிடமும் எந்த பட்டத்தையும் பெறக்கூடாது…”அமெரிக்க தேச தந்தையர் அன்றைய காலகட்ட ஐரோப்பாவில் “பிரபு, மை லார்ட், ஹிஸ் எக்சலன்சி” என அழைக்கும் மரபை கடுமையாக வெறுத்தார்கள். தாமஸ் பெயின் அது குறித்து கூறுகிறார்:“பட்டங்களும், அடைமொழிகளும், மைலார்ட் என்பதுபோன்ற விளிப்புகளும் அப்படி அழைக்கபடுபவரை பீடத்தில் வைத்து, அந்த ஆபாச விளிப்புகளில் மயங்கிய மக்கள் அவரை எந்த கேள்வியும் கேட்கமுடியாமல், விமர்சிக்க இயலாமல் செய்துவிடுகிறது”அமெரிக்க ஜனாதிபதியை எப்படி விளிப்பது என்றும் ஒரு விவாதம் எழுந்தது. “ஹிஸ் ஹைனஸ், பிரசிடெண்ட் ஆஃப் தெ யுனைடெட் ஸ்டேட்ஸ்” என அழைக்கவேண்டும் என ஒரு சாரார் கூறினர்....

ஒவ்வொன்றும் ஒருவிதம்!

  புகழ்பெற்ற நாவலாசிரியர் அலெக்சாண்டர் டூமாஸ் விசித்திரமான மன இயல்புகளையும், வியப்படையச் செய்யும் கொள்கைகளையும் உடையவர். இவருடைய வாழ்க்கை மிகவும் சுவையானது. -இவர் எழுதும் காகிதம், மை, பேனா போன்றவைகளில்கூட சில பழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தார். -நாவல் எழுதுவதானால் அதற்கென்றே பிரத்தியேகமாக உள்ள பேனாவினால் நீலநிறக் காகிதத்தில் மட்டுமே எழுதுவார். கவிதைகளை எழுதுவதற்குத் தனியாக சில பேனாக்களை வைத்திருப்பார். பத்திரிகைகளுக்கு எழுதும் கட்டுரைகளை ரோஜா நிறம்கொண்ட காகிதத்திலும், கவிதைகளை மங்களகரமான மஞ்சள் நிறக் காகிதத்திலும்தான் எழுதுவார்.-ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பேனா உண்டு. எந்தச் சூழ்நிலையிலும் நீலநிற இங்க் – மையைப் பயன்படுத்தவே மாட்டார். ஏனென்றால்,...

UNESCO அறிவித்த உலக நாடுகளின் சிறப்புக் கல்வித்தரம்!

1. பிழையின்றிப் படித்தல் – நியூசிலாந்து 2. குழந்தைப் பருவத்தில் கல்வி ஈடுபாடு – இத்தாலி 3. கணிதக் கல்வி – நெதர்லாந்து 4. விஞ்ஞானக் கல்வி – ஜப்பான் 5. பன்மொழிகளிலும் கல்வியறிவு – நெதர்லாந்து 6. கலை சம்பந்தப்பட்ட கல்விகள் – அமெரிக்கா 7. உயர்நிலைப் பள்ளிகளில் கல்வித்தரம் – ஜெர்மனி 8. ஆசிரியர் பயிற்சி – ஜெர்மனி 9. மேல்நிலைக் கல்வி – அமெரிக்கா 10. முதியோர் கல்வி – ஸ்வீடன...

சைவம் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?

  சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச் சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே: நச்சுக்களை அகற்றுபவை: நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை.உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு.அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரத சத்து இருக்கும் அளவுக்கு நார்சத்து இருப்பதில்லை. எலும்புகளை வலுவாக்குபவை: இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள...

இதுதான் தாம்பூலம்!

  “இதுதான் தாம்பூலம்”… வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மட்டும் தாம்பூலம்  அல்ல… தரமான தாம்பூலம் என்பது  -ஒரு பாக்கு ஐந்து வெற்றிலை சிறிது கஸ்தூரி பச்சைக் கற்பூரம் சங்கச் சூரணம் இரண்டு கிராம்பு சிறிது ஜாதிக்காய் மூன்று வால் மிளகுஇந்தக் கலவை முறையில் சேர்த்துப் போட்டுக்  கொள்வதுதான் தரமான தாம்பூலம் ஆகும...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top