.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 2 December 2013

ஒவ்வொன்றும் ஒருவிதம்!

 

புகழ்பெற்ற நாவலாசிரியர் அலெக்சாண்டர் டூமாஸ் விசித்திரமான மன இயல்புகளையும், வியப்படையச் செய்யும் கொள்கைகளையும் உடையவர். இவருடைய வாழ்க்கை மிகவும் சுவையானது.


-
இவர் எழுதும் காகிதம், மை, பேனா போன்றவைகளில்கூட சில பழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தார்.


-
நாவல் எழுதுவதானால் அதற்கென்றே பிரத்தியேகமாக உள்ள பேனாவினால் நீலநிறக் காகிதத்தில் மட்டுமே எழுதுவார். கவிதைகளை எழுதுவதற்குத் தனியாக சில பேனாக்களை வைத்திருப்பார். பத்திரிகைகளுக்கு எழுதும் கட்டுரைகளை ரோஜா நிறம்கொண்ட காகிதத்திலும், கவிதைகளை மங்களகரமான மஞ்சள் நிறக் காகிதத்திலும்தான் எழுதுவார்.

-

ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பேனா உண்டு. எந்தச் சூழ்நிலையிலும் நீலநிற இங்க் – மையைப் பயன்படுத்தவே மாட்டார். ஏனென்றால், நீல நிற மை மனக்குழப்பத்தை – தடுமாற்றத்தை ஏற்படுத்தும் என்பது இவருடைய ஆழ்ந்த நம்பிக்கை. இவர் எழுதிய நூல்கள் 1,200.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top