.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 2 December 2013

நண்பர்களே! உங்களோடு ஒரு நிமிடம்!!!!

வணக்கம்! மீண்டும் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி.
ந்ண்பர்களே! உங்களோடு ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...

இப்பதிவை பதிவு செய்வதன் காரணம்:
ஒரு தீய நண்பனின் செயலால் பாதிக்கப்பட்ட பெண்னிண் அவல நிலையும், அக்குடும்பத்தின் மன உளைச்சலையும் அறிந்த போது, "யாருக்கும் இதுபோன்ற நிலை எற்பட‌க்கூடாது" என்ற அக்கறையின் காரணமாகவேகும்........

நாள்_1:

* நண்பனின் அலைபேசியில்(Mobile Phone) தவறிய அழைப்பு பார்த்தவுடன், திரும்ப அழைத்த போது, ஒரு பெண்ணின் குரல்....
தவறுதலாக தனது Cell Noன் பத்து இலக்க எண்ணின் கடைசி எண்ணை மாற்றி அழைத்தால் அழைப்பு வந்தாக‌ சொல்லவும்,
அவனும் இயல்பாக பேசி வைத்து விட்டான்..
அடுத்து இரண்டுநாட்கள் கழித்து:

* இம்முறை வேண்டுமென்றே, அவன் வேறு எண்ணில் இருந்து Missed Call கொடுக்கவும், அப்பெண்னிடம் அழைப்பு (call) வரவும் பேசும் போது தவறுதலாக தன் நணபன் நினைத்து Missed Calல் விட்டதாக் குறிப்பிட்டு, அப்படியே தன் தேன்னொழுகும் பேச்சில் ம்யக்கி விட்டான்.
(அவன் இயல்பே அப்படித்தான்!யாரையும் பேசி மடக்குவதில் கில்லாடி)

* நாட்கள் செல்லச் செல்ல...
நல்ல நட்புடன் பழக ஆரம்பிததிருக்கிறான்..
மெல்ல மெல்ல அப்பெண்னிண் பேச்சிலிருந்து நண்பர்க்ள்,பெற்றொரின் நிலை, சொந்தபந்தம், சொத்து விபரம் உட்பட எல்லாவற்றினையும் தெரிந்து கொண்டான்..

* மேலும், அப்பெண்னிண் photo ஒன்றை வாங்கிய‌தும், பேசியவற்றை அனைத்தையும் Record செய்தும், அப்பெண்னிற்கு Gifts அனுபுவதுமாகவும் மாதங்கள் சென்று கொண்டிருந்தன..

பின்,
ஒருதடவை தன் பணக்க்ஷ்டத்திலிருப்பதால்,தனக்கு உதவி செய்ய கேட்கவும்,
அப்பெண்ணும் நம்பி வீட்டிற்க்கு தெரியாமல் சில ஆயிரங்களை கொடுத்திருக்கிறாள்....

அடுத்து வந்த பிற‌ந்த நாளில், அவளிடம் காதலை கூறி விட்டு,,
தான் படிப்பு முடித்துவிட்டு, வேலை கிடைத்த பின்பு வீட்டை விட்டு வெளியே வந்து இருவரும் ஒடிப்போகலாம் என்று முடிவு செய்திருக்கின்ற‌னர்....

இப்படியாக காத்திருந்த‌ இந்த ஜோடி நேரம் பார்த்து ஓடிவிட்டது.....

எல்லாம் முடிந்த போது,பின்புதான் அப்பெண்ணுக்கு தெரிந்திருக்கிறது....

இதெல்லாம் வெறும் "பணம்,காமம் " இரண்டிற்காக நாடத்தப்பட்ட நாடகம் என்று!!!!!

காரியம் முடிந்த பின்பு, அவன் வெளிநாட்டிற்றிற்க்குச் சென்று விட்டான்....
அப்பெண்னிண் நிலையோ அந்தோ பரிதாபம்..

இப்பொழுது வீட்டிற்க்கும் செல்ல முடியாமல் தன் வாழ்க்கையை தொலைத்து விட்டு, திசையும் திக்கும் தெரியாமல் இருந்த அப்பெண்ணுக்கு மறு வாழ்வு கிடைக்க போர‌டியும் பலனில்லை...

வேறு வழியின்றி கோழைகளும், வாழ வ்ழி தெரியாமல் தவிப்போரும் எடுக்கும் துணிச்சல் முடிவான தற்கொலை செய்ய எத்தனித்தப்போது தற்செயலாக எங்களால் அப்பெண்ணை காப்பாற்றி ,
நானும்,எனது நண்பர்கள் தீபக்,அரவிந்த்,பாஸ்கர் முயற்சியால் இப்பொழுது பெண்கள் காப்பகம் ஒன்றில் சேர்த்து விட்டு,எங்களாலான சிறு வேலையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம்.

நண்பன் செய்த தவறுக்கு எங்களால் ஆன மறு உதவி செய்துள்ளோம்.

நண்பர்களே! சகோதார்களே!!
* காதல் என்ற பெயரில் காமவேஷம் போடாதீர்கள்..

*பொதுவாகவே பெண்களின் குணமே மென்மையானது தான். அதை பயன்படுத்தி நம்ப வைத்து ஏமாற்றம் செய்வது போன்றவை கீழ்தரமானவை..

பாவ மன்னிப்பு கூட கொடுக்க இலலாதவை...
* அப்பெண்னை பெற்றோருக்கும் எவ்வளவு வேதனையும், வலியும் இருந்திருக்கும்.....

*உங்கள் நண்பாகளே ஆனாலும், தவறிழைக்கும் போது ஒரு போதும் உடந்தையாக செயல் படாதீர்கள்!

இறுதியாக அப்பெண் எங்களிடம் கூறியதாவது:
" தலைவலியும், வயிற்றுவலியும் தனக்கு வந்தால் தெரியும்! என்பார்களே..

அது போல், ஒரு பெண்னின் வேதனையும்,கஷ்டம் அவனுபவித்தால்
தானே அவனுக்கு புரிந்திருக்கும்"

உண்மைதான் நண்பர்களே!!!

" வாழ்க்கையில் காணும் எல்லா பிரச்சினைகளும் நமக்கு வேடிக்கை தான்.
அது நமக்கு நடக்காதவரையில்!!!"

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top