இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை
இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்ட தொடக்க விழாவில், முதல்–அமைச்சர் ஜெயலலிதா குட்டிக்கதை சொன்னார்.
வந்தாரை வாழவைக்கும் பூமி...
வந்தாரை வாழவைக்கும் பூமி தமிழ்நாடு. இன்று கூட, பல்வேறு மொழி பேசும் நடிகர், நடிகையர், பின்னணிப்பாடகர்கள்,...
Monday, 23 September 2013
‘‘சினிமா ஒரு அபூர்வ உலகம்’’ நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு!

‘‘சினிமாவில் ஜெயித்தவர்கள் வாழ்க்கையில் தோற்று இருக்கிறார்கள். வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் சினிமாவில் தோற்று இருக்கிறார்கள். சினிமா ஒரு அபூர்வமான உலகம்’’ என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
ரஜினிகாந்த் பேச்சு
சென்னையில் நேற்று இரவு நடந்த சினிமா நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–
‘‘இந்த விழாவை மிக சிறப்பாக நடத்தியதற்காக, முதல்–அமைச்சருக்கு என் நன்றி. என் திரையுலக அண்ணன் கமல்ஹாசனுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. அன்றும் சரி, இன்றும் சரி, நான் கமல் ரசிகன். இரண்டு பேரும் சேர்ந்து ஏழு எட்டு படங்கள் நடித்தோம். கமல் இஷ்டப்பட்டு நடித்தார். நான் கஷ்டபட்டு நடித்தேன்.
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை...
முத்துவீரப்பநாயக்கன் சத்திரம் வீரப்பன்சத்திரமாக மாறியது எப்படி?
கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்ததில் விஜய நகர பேரரசு வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே கன்னியாகுமரி வரை பரவியிருந்தது. கிருஷ்ண தேவராயர் தனது ஆட்சி காலத்தில் தனது பகுதிகளை ஆறு ராஜ்ஜியங்களாக பிரித்து அந்த பகுதிகளை ஆட்சி செய்ய 6 பிரதிநிதிகளை நியமித்தார். மதுரை ராஜ்ஜியத்திற்கு நாகமநாயக்கரை நியமித்தார். நாகமநாயக்கர் விஜய நகர பேரரசிற்கு உரிய வரிப்பணத்தை செலுத்தாமலும், ஆணைக்கு கட்டுப்படாமலும் இருந்துள்ளார்.
இதையடுத்து நாகமநாயக்கரின் மகன் விசுவநாத நாயக்கர் மதுரைக்கு படை எடுத்து சென்று தனது தந்தையை வென்று அவரை விஜய நகரத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து விசுவநாத நாயக்கரை மதுரை நகர பிரதிநிதியாக கிருஷ்ணதேவராயர் நியமித்தார். 1529ம்ஆண்டு முதல் 1682ம்...
வேடந்தாங்கல் என்றால் வேடர்களின் கிராமம்’ வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு அழகான வரலாற்று பின்னணி!
இந்த சரணாலயத்துக்கு சுவாரஸ்யமான வரலாற்று பின்னணியும் உண்டு. இங்கு, 400 ஆண்டுகளுக்கு முன்னிலிருந்தே பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வந்து சென்றுள்ளன. 1700ம் ஆண்டுகளில் கிராம உள்ளூர் பண்ணையார்கள் பறவைகளை வேட்டையாடும் இடமாக இது இருந்துள்ளது. அவர்களைத் தொடர்ந்து, 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் வேட்டையாடி பொழுதை கழிக்க வேடந்தாங்கலை பயன்படுத்திக் கொண்டனர். இந்நிலையில், 1936ம் ஆண்டு உள்ளூர் விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க செங்கல்பட்டு கலெக்டராக இருந்த ப்ளேஸ், வேடந்தாங்கலை பறவைகள் சரணாலயமாக அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 1962ல் இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் வந்தது. வேடந்தாங்கல் என்றால் வேடர்களின் கிராமம்’ என்று அர்த்தம்.
கிராம மக்களின்...
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளை இன்டர்நெட் மூலம் இணைத்து வகுப்புகள் நடத்த திட்டம்!
தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை இன்டர்நெட் மூலம் இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டத்தை உருவாக்க தொடக்கக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறை மூலம், அனைத்து பள்ளிகளுக்கும் லேப்டாப் வழங்கப்பட்டு, கம்ப்யூட்டர் உதவியுடன் பயிலும் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது அனைத்து பள்ளிகளையும் இன்டர்நெட் மூலம் இணைத்து ஒருங்கிணைந்து (கொலாபரேட்டிவ் சிஸ்டம்) பயிலும் திட்டம் உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக பள்ளிகளை தேர்வு செய் வது குறித்து அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து...
மைக்ரோசாப்ட் Surface 2 டேப்லெட் இன்று வெளியீடு!
மைக்ரோசாப்ட் நிறுவனம் டேப்லெடின் அடுத்த படைப்பான Surface 2 மற்றும் Surface Pro 2 இன்று நியூயார்க் நகரத்தில் வெளியிடப்படுகிறது. Surface 2 பார்க்கவும் மற்றும் பணிபுரிவதும் கிட்டத்தட்ட அதன் முந்தைய படைப்புகளை போலவே இருக்கும், ஆனால் இதில் வேகமான TEGRO 4 செயலி(processor) மற்றும் 1080p திரை அம்சங்களை கொண்டுள்ளது.
மைக்ரோசாப்ட் Surface RT மற்றும் Surface Pro tablets புதுப்பிக்கப்பட்டு Surface 2 மற்றும் Surface Pro 2 வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு புதிய சாதனங்களையும் அனுசரிக்கக்கூடிய இரண்டு-கட்ட கிக்ஸ்டேன்ட்(two-stage kickstand), மற்றும் மேம்படுத்தப்பட்ட விவரக்கூற்றுகள் (updated specifications) இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது....
இந்திய சமூக நெட்வொர்க்கிங் தளம் 'Worldfloat' புதிய தேடல் என்ஜின் அறிமுகம்!
இந்திய சமூக நெட்வொர்க்கிங் தளம் இன்டர்நெட்டில் பயனர்களுக்கு(users) செய்திகள், தகவல்கள் மற்றும் படங்களை தேட ஒரு புதிய Worldfloat தேடல் என்ஜின் அறிமுகப்படுத்தியுள்ளது. Worldfloat.com நிறுவனரான புஷ்கர் மஹடா இந்த புதிய அம்சமானது நிறுவனத்தின் பயனர் தளத்தை(user base) விரிவுபடுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் உள்நாட்டு சமூக நெட்வொர்க்கிங் தளத்தின் புதிய வசதி, கூகுள் மற்றும் யாகூ போன்ற உலக தேடல் என்ஜின்கள் போன்று பணிபுரியும் என்றும் புஷ்கர் மஹடா கூறியுள்ளார். மேலும், இது இன்னும் பல கூடுதல் அம்சங்களை கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.இந்த புதிய தேடல் என்ஜின் இந்தியாவில் மட்டுமே இருக்கின்றது. மற்றும், ஆட்டோமேட்டிக் அல்காரிதம்...
ஆகஸ்ட் மாத பிரசாதங்கள் : இனிப்பு சீடை (கோகுலாஷ்டமிக்கு)
சிலபேர் வீட்டுச் சமையல் மிகவும் மணமாகவும் பார்க்கும்போதே பசியைத் தூண்டும் வகையிலும் சுவைத்தால், மீண்டும் சுவைக்கும் ஏக்கத்தை வளர்ப்பதாகவும் பலநாட்கள் அந்த மணம், குணம், சுவையை நினைவில் வைத்துக் கொள்ளும் வகையிலும் அமைந்திருக்கும். சில ஓட்டல்களிலும் இதே போன்ற உணர்வினை அங்கே கிடைக்கும் உணவுப் பொருட்கள் தரும். ஆனால், ஓட்டல்களில் அவை வியாபார நோக்கத்தோடு தயாரிக்கப்படுபவை. வீடுகளில் தயாரிக்கப்படுபவை நம் பெண்களின் உள்ளன்போடு உருவானவை. தான் சமைக்கும் இந்தப் பொருட்கள் தம்மைச் சார்ந்தவர்களுக்கும் இதைச் சாப்பிட வரும் விருந்தினருக்கும் எந்தக் கெடுதலையும் உண்டாக்காதபடியும் நல்ல ஆரோக்கியத்தை வழங்கும்படியும் அமையவேண்டுமே என்ற அக்கறை மணம் நிறைந்திருக்கும்....
அமாவாசையில் குழந்தை பிறக்கக்கூடாது என கூறுவது ஏன்?
திங்கட்கிழமையன்று வரும் அமாவாசை நாளில் புத்திர பாக்யம் வேண்டுபவர்கள் காலை 6 லிருந்து 11 மணிக்குள் அரச மரத்தை சுற்றி வந்து வழிபட வேண்டும். தெய்வங்களை வழிபட உகந்தது என அமாவாசையை சாஸ்திரம் கூறுகிறது.
நல்லடக்கம் செய்யப்பட்டவர்களுக்கும் பித்ருக்களுக்கும் தர்ப்பணம், திதி கொடுப்பதை இந்த நாளில்தான் செய்ய வேண்டும். அமாவாசையில் பிறந்த குழந்தைக்கு சாந்தி செய்ய வேண்டும்.
இல்லையெனில் வாழ்வினில் தவறான வழியை அந்தக் குழந்தை பின்பற்றக்கூடும் என ‘சாந்தி குஸுமாகரம்’ என்ற நூல் கூறுகின்றது.
பிறப்பதை நாம் தடுக்க முடியாதே! ஆனால், பரிகாரம் செய்து நல்வாழ்வு வாழ முடியுமே! நாம் அனுபவிக்கும் சுகத்தில் சாஸ்திர விரோதமான காரியங்களை விலக்க...
இறைவனை வழிபட என்ன வழிகள்?
ஒருவனால் நாள் முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபட முடியாது. பணிபுரியும் நேரத்திலும் பக்தி உணர்வுடன் செயல்பட்டால் மனம் தூய்மை பெறும்.
உயிர்களில் ஏதாவது ஒன்றுக்காவது மகிழ்ச்சியைக் கொடுக்க முடியுமானால், வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறிவிட்டது என்று பொருள். குணத்தையோ, குற்றத்தையோ எங்கு விவாதித்தாலும் அங்கே இருக்கும் ஒவ்வொருவருக்கும் அதில் சிறிதளவாவது பங்கு வந்து சேர்ந்துவிடும்.
எதையாவது அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டால், தனியான இடத்தில் தங்கிக் கண்ணீர் மல்க, இறைவனை வேண்டுங்கள், அவன் உங்கள் மனத்திலுள்ள அழுக்கையும், துயரத்தையும் போக்குவான்.
இறைவனை நேசிப்பதில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை, இறைவனை மட்டும் நேசிப்பவன்...
ஆஸ்கார் விருதை இழந்த விஸ்வரூபம்!
உலகின் மிகப்பெரிய விருதான ஆஸ்கர் விருதினை இழந்துள்ளது விஸ்வரூபம்.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆஸ்கர் விருதுக்கான இந்திய படத்தின் தேர்வு நடந்தது.
இதில் தேசிய விருது பெற்ற குஜராத்தி படமான தி குட் ரோட், பகாக் மில்கா பகாக், இங்கிலீஸ் விங்கிலீஸ், லஞ்ச் பாக்ஸ், பிருத்விராஜ் நடித்த மலையாள படமான செல்லுலாயிட், கமலின் விஸ்வரூபம் உள்பட 22 படங்கள் போட்டியிட்டது.
இறுதி சுற்றுக்கு தி குட் ரோட், பகாக் மில்கா பகாக், விஸ்வரூபம் ஆகிய மூன்று படங்கள் வந்தது.
19 பேரைக் கொண்ட தேர்வு குழு 5 மணிநேரம் தீவிரமாக விவாதித்து, ஆலோசித்து தேசிய விருது பெற்ற குஜராத்தி படமான தி குட் ரோட் படத்தை தேர்வு செய்து அறிவித்தனர்.
இதனால் கடைசி...
கார்த்திக்கு வில்லனாகும் சூர்யா!
சென்னையில் நடந்து வரும் சினிமா நூற்றாண்டு விழாவின் ஒரு நிகழ்ச்சியாக சூர்யாவை பேட்டி கண்டுள்ளார் லிங்குசாமி.
சிங்கம் 2 வெற்றியை தொடர்ந்து சூர்யா, லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் லிங்குசாமி, சூர்யாவை பேட்டி கண்டுள்ளார்.
லிங்குசாமி: நீங்கள் அம்மா பிள்ளையா, அப்பா பிள்ளையா?
சூர்யா: வீட்டுக்கு நான்தான் முதல் பிள்ளை. எப்படி எஸ்கேப் ஆயிட்டேன் பார்த்தீங்களா.
லிங்குசாமி: கார்த்தியும், நீங்களும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் யார் வில்லன், யார் ஹீரோ?
சூர்யா: அப்படி ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கோம். சினிமால நான் ஹீரோவா நடிச்சாலும் வீட்டுல நான் ஒரு சைலண்ட் வில்லன்.
கார்த்தி...
நீங்கள் வேகத்தை விரும்புபவரா?
கார் பந்தயத்தை தொலைக்காட்சியில் பார்த்திருப்போம். கார்கள் சென்று கொண்டிருக்கும் வேகம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். அதனை விட ஒரு சில சுற்றுகளுக்குப்பிறகு கார் பழுது பார்க்கும் மையத்திற்கு வந்து சில நொடிகளில் அனைத்து வேலைகளையும் முடித்து, மீண்டும் பந்தய பாதையில் அதி வேகத்துடன் செல்ல ஆரம்பிக்கும்.
அப்படிப்பட்ட கார் பந்தயத்தில் ஒரு சில நொடிகளில் நான்குக்கும் மேற்பட்டவர்கள் காரில் பழுது நீக்கும் வேகம் அனைவரையும், இது எப்படி சாத்தியம்? என்று ஆச்சரியப்பட வைக்கும். வேகத்துடனும், விவேகத்துடனும் பொறியாளர்கள் காரை சரி செய்தால் தான் பந்தய வீரர் வெற்றி இலக்கை நோக்கி விரைவாக செல்ல முடியும். என்பதை இதன் மூலம் உணர்ந்திருப்பீர்கள்.
விறு விறுப்பு...
காலத்தால் செய்த உதவி -நீதிக்கதை.

பிரதீப் நன்கு படிக்கும் மாணவன்.அவனது லட்சியமே நன்கு படித்து டாக்டராக ஆகி ஏழைகளுக்கு இலவச வைத்தியம் பார்க்க வேண்டும் என்பதே.
ஆனால் அவனது குடும்பத்தில் அவன் உடன் பிறந்தவர்கள் ஐந்துபேர்.ஆகவே அவனுக்குத் தேவையானதைத் தரக்கூட அவனது பெற்றோர்களால் முடியவில்லை.
இந்நிலையில் ஒருநாள் சரியான சாப்பாடுக் கூட சாப்பிடாது..பள்ளி பரீட்சைக்குக் கிளம்பினான் அவன்.
வெளியே நல்ல வெயில்..பசி வேறு வயிற்றைக் கிள்ள..தெரு ஓரம் மயங்கி விழுந்தான்.
தெருவில் வந்துக் கொண்டிருந்த மூதாட்டி ஒருத்தி அதைப் பார்த்தார்.உடன்..தன்
கையில் வாங்கி வந்துக் கொண்டிருந்த பாலை ஒரு தம்ளரில் ஊற்றி அவனுக்கு
அளித்தாள்.அதைப் பருகிய பிரதீப் பின் தெம்புடன் தேர்வுக்குச்...
வியக்க வைக்கும் விருதுநகர்! - சுற்றுலாத்தலங்கள்!
வியக்க வைக்கும் விருதுநகர்
உழைப்புக்கும், வர்த்தகத்திற்கும் பெயர் பெற்றது விருதுநகர் மாவட்டம். சமையல் எண்ணெய், பருத்தி, மிளகாய், ஏலக்காய், நறுமணப்பொருட்கள் என பல்வேறு நுகர்பொருட்கள் இந்த மாவட்டத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. சிறப்பு மிக்க விருதுநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பார்க்கத்தகுந்த பல இடங்கள் உள்ளன.
சிவகாசி:குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் தயாராகும் பட்டாசுகள் உலக அளவில் பிரபலமானவை. தீப்பெட்டி உற்பத்தியும், நவீன அச்சுத் தொழிலும் இங்கு பிரசித்தம். வானத்தில் வர்ணஜாலம் காட்டும் பட்டாசுகள் தயாராகும் முறைகளை இங்கு நேரில் பார்க்கலாம்.
ரமண மகரிஷி ஆசிரமம்:பகவான் ஸ்ரீரமண...
தமிழ் மொழியில் இயங்கும் Galaxy Note 3!
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 3 மற்றும் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்சை இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் நேற்று வெளியிட்டுள்ளது.
இந்த கேலக்ஸி நோட் 3 யை தமிழ் மொழியிலும் இயக்கலாம். இதன் முக்கிய சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்றாகும்.
சாம்சங் கேலக்ஸி நோட் 3யின் விலை ரூ. 49,990 ஆகும். கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 22,990 ஆகும்.
5.7இன்ஞ் 1080p சூப்பர் அமோலெட் பேனல் கொண்ட கேலக்ஸி நோட் 3, 1.9GHZ எக்ஸ்னோஸ் ஆக்டா கோர் பிரசாஸர் உடன் வந்துள்ளது.
13 மெகாபிக்சல் கமெரா, 2 மெகாபிக்சல் Front கமெரா உள்ளன. ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் கொண்டுள்ள கேலக்ஸி நோட்3யில் 3ஜிபி ராம் உள்ளது.
கேலக்ஸி நோட்3யில் 4k வீடியோக்களை படம்பிடிக்கலாம். இது 32ஜிபி...
வேகம் கூடிய இணைய உலாவி வெளியிட்டது மைக்ரோசொப் ( IE 11 )!
இயங்குதள உற்பத்தியில் முன்னணியில் திகழும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால்...
HP அறிமுகப்படுத்தும் புதிய மடிக்கணனி!
கணனி உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் HP நிறுவனமானது தற்போது Spectre 13 Ultrabook எனும் புதிய மடிக்கணனியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
15 மில்லி மீற்றர்கள் தடிப்புடைய இக்கணினி யானது 13.3 அங்குல IPS தொடுதிரை தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளது.
மேலும் இவற்றில் Core i7 Processor பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரதான நினைவகமாக 8 GB RAM காணப்படுகின்றது.
Windows 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கணனிகளில் சேமிப்பு நினைவகமாக 256 GB தரப்பட்டுள்ளது.
இவற்றின் விலையானது 999.99 டொலர்களாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
...
இந்தி மொழி பேசாத பகுதியில் உள்ள மாணவர்கள் இந்தி பயில உதவித்தொகை!
வயது : அந்தந்த வகுப்புகளில் சேருவதற்கான வயது வரம்பு
கல்வித் தகுதி
1. 10ம் வகுப்பு/மெட்ரிக்குலேஷன்/உயர்நிலைப்பள்ளி தேர்வில் தேர்ச்சி
2. பிளஸ் 2 அடிப்படையிலான 12ம் வகுப்பு/இன்டர்மீடியேட்/ பல்கலைக்கழகத்துக்கு முந்தைய/பட்டப்படிப்பு தேர்வில் தேர்ச்சி
3. பி.ஏ.,/பி.எஸ்சி.,/பி.காம்( தேர்ச்சி அல்லது ஹானர்ஸ்) அல்லது இணையான தேர்வில் தேர்ச்சி
4. எம்.ஏ., இந்தி/எம்.லிட்.,(இந்தி)/ பி.எச்.டி.,க்கு முந்தைய/ பி.எச்டி., (இந்தி) டிகிரி படிப்பில் சேருவதற்கான தகுதி
மற்றவை
இந்தியை தாய்மொழியாக கொண்டிராத, இந்தி மொழி பேசாத மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள்(ஆந்திரா, அசாம், குஜராத், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, ஒரிசா, பஞ்சாப், சிக்கம், தமிழ்நாடு, திரிபுரா, மேற்கு வங்கம், அந்தமான் நிகோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், சட்டீஷ்கார், தத்ரா மற்றும்...
நீங்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம்...
சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், அடுத்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலைத் தேர்வு பயிற்சி வகுப்பிற்கு சேர்க்கை நடக்க இருக்கிறது.
டிசம்பரில் தொடங்கும் பயிற்சி வகுப்புகளில், தங்கும் வசதியுடன் 200 மாணவர்களுக்கு முழுநேரப் பயிற்சியும், தங்கும் வசதியின்றி 100 மாணவர்களுக்கு பகுதி நேரப் பயிற்சியும் வழங்கப்படும்.
எத்தனை இடங்கள்?
300 இடங்கள் கொண்ட இம்மையத்தில், ஆதிதிராவிடர் 123, அருந்ததியர் 24, பழங்குடியினர் 3, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 54, பிற்படுத்தப்பட்டோர் 72, பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) 9, மாற்றுத் திறனாளிகள் 9, இதர வகுப்பினர்களுக்கு 6, இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தகுதிகள்
பட்டப்படிப்பு படித்த 21 வயது பூர்த்தியடைந்த, 30 வயதுக்கு மேற்படாத இதர பிரிவினர் விண்ணப்பிக்க...
ஐ படத்திற்காக 3வது பாடல் ரெடி!
ஷங்கரின் ஐ படத்தில் தனது மூன்றாவது பாடலை எழுதியுள்ளார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.
அந்நியன் படத்திற்கு பிறகு ஷங்கர் - விக்ரம் கூட்டணயில் உருவாகி வரும் திரைப்படம் ஐ.
இப்படத்தில் விக்ரமுடன், எமி ஜாக்சன், சந்தானம், சுரேஷ் கோபி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துவருகிறார்.
தற்போது இளைஞர்களின் தனது புதுபுது டெக்னாலாஜி வரிகளால் கவனம் ஈர்த்த மதன் கார்க்கி இதில் பாடல் எழுதி வருகிறார்.
தற்போது இப்படத்திற்காக இவர் எழுதிய மூன்றாவது பாடல் பதிவு செய்யப்பட்டது. அப்பொழுது ஷங்கர் மற்றும் ரஹ்மான் மதன் கார்க்கியை...
அற்புதமான இணையதளங்கள்! உங்களுக்கு இதோ!
தொழில்நுட்ப வளர்ச்சி நம் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது.
இன்று இன்டர்நெட் மூலம் நாம் பல விடயங்களை தெரிந்து கொள்கிறோம். கல்லூரிக்கு போகாமல் ஒன்லைனிலே படித்து பட்டதாரி ஆகும் கலாச்சாரமும் அதிகரித்துவிட்டது.
ஒன்லைன் மூலம் பல தரப்பட்ட விடயங்களை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. பல விடயங்களை நாம் கற்றுக்கொள்வதற்க்கு இதில் பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
ஒரு சில விடயங்களை நீங்கள் ஒன்லைனில் இலவசமாகவும் கற்றுக்கொள்ளலாம் அவைகள் பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை.
* நீங்கள் போட்டோகிராபியில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்களா அதை பற்றி அடிப்படையில் இருந்து தெளிவாக கற்றுக்கொள்ள ஆசை படுகிறீர்களா www.photo.net என்ற இணையதளத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.
போட்டோகிராபியில் இன்னும் பல புதுமைகளை தெரிந்துக்கொள்ள www.deepreview.com மற்றும் photography tutorials போன்றவைகளை பயன்படுத்தலாம்.
*...
தீக்காயங்களினால் ஏற்படும் தழும்புகளை நீக்க!
உடல் அழகைக் கெடுப்பதில் முக்கிய பங்கினை வகிக்கும் தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும்.
இவ்வாறு ஏற்படும் தழும்புகளை நீக்குவது மிகவும் கடினமான ஒரு செயல். நிறைய பெண்கள் வேலை செய்யும் போது இந்த மாதிரியான தழும்புகளைப் பெறுவார்கள்.
அதிலும் சமைக்கும் போது சூடான எண்ணெய் படுவது, துணியை இஸ்திரி போடும் போது சூடு வைத்துக் கொள்வது போன்றவற்றால் தான் தழும்புகளைப் பெறுகிறார்கள். இத்தகைய தழும்புகளை நன்கு தெளிவாக தெரியும்.
இதனை போக்க எத்தனை க்ரீம்கள் கடைகளில் விற்றாலும் அதைப் பயன்படுத்தினால் எந்த ஒரு பலனும் இருக்காது.
ஆனால் அத்தகைய தழும்புகளைப் போக்க சில இயற்கை முறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால், தெளிவாக தெரியும் தழும்புகளை சற்று மங்க வைப்பதோடு, மறையவும் வைக்கலாம்.
அதற்கான சில வழிமுறைகளை காண்போம்.
* சிட்ரஸ் பழங்கள் தீக்காயங்களை நீக்குவதற்கு ஒரு சிறந்த பொருள். அதிலும் எலுமிச்சை...
டோனியின் புதிய ‘ஹேர் ஸ்டைல்’
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திரசிங் டோனி நேற்றைய போட்டியின் போது வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அவர் இந்திய அணியில் இடம்பெறும் போது நீண்ட தலைமுடியுடன் இருந்தார். இந்த நீண்ட ஹேர் ஸ்டைல் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பையும் கவர்ந்தது. இந்தியா உலக கோப்பையை வென்ற பிறகு டோனி மொட்டை தலையுடன் காட்சி அளித்தார். தற்போது அவர் வெளிநாட்டு பாணியில் தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார். காதுக்கு மேல் இருபக்கமும் மழித்துவிட்டு நடுவில் மட்டும் கொத்தாக முடி வைத்துள்ளார். நேற்றைய போட்டியில் அவ்வப்போது ஹெல்மெட்டை கழற்றும்போது இந்த புதிய ஹேர் ஸ்டைல் தென்பட...
10ம் வகுப்பு எக்சாம்! இனி நோ டென்சன்.......
பத்தாம் வகுப்பு போர்டு எக்சாம் பீவர் ஒன்பதாம் வகுப்பிலேயே துவங்கிவிடும். கண்ணில் விளக்கெண்ணை யை ஊற்றிக் கொண்டு 24 மணி நேரமும் படிக்க வேண்டும் என பார்ப்பவரெல்லாம் வெறுப்பேற்றும் அளவுக்கு அட்வைஸ் சொல்வார்கள். இனி அந்த மாதிரியாக மாணவர்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவக் கல்வி முறை நடப்பில் உள்ளது. அடுத்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை ஆய்வுகள் மூலம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் வகுத்து வருகிறது.
மத்திய பாடத் திட்டத்தில் உள்ளது போல் மாணவர்களின் கற்றல் திறனுடன் அவர்களது தனித்திறன்களையும் வளர்க்கும் விதமாக பாடத்திட்டம் மற்றும்...
'ஜில்லா'விற்காக பதித்த வைர வரிகள்!
விஜய்யின் ஜில்லா படத்திற்காக ஒரு பாடல் எழுதியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.
முருகா படத்திற்கு பிறகு இயக்குனர் ஆர்.டி.நேசன், விஜய்யை வைத்து இயக்கும் படம் ஜில்லா.
இப்படத்தில் இளைய தளபதியுடன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ், மஹத், சூரி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு தாமரை, யுகபாரதி, மதன் கார்க்கி, ஆகியோர் பாடல் எழுதியுள்ளனர்.
தற்போது இவர்களோடு தனது வைர வரிகளைப் பதிக்க களமிறங்கியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.
சமீபத்தில் இந்த படத்திற்காக, கவிப்பேரரசு செதுக்கிய 'சானு நிகம்' எனும் மெலோடிப் பாடலை பதிவு செய்த இமான் தனது எல்லையில்லா மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.
சூப்பர்...
தெய்வீக திருவண்ணாமலை! சுற்றுலாத்தலம்!
தெய்வீக திருவண்ணாமலை
திருவண்ணாமலை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலைநகராட்சி ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது.
ஸ்ரீ அருணாசலேசுவரர் திருக்கோவில்.
திருவண்ணாமலையில் இருக்கும் ஸ்ரீ அருணாசலேசுவரர் திருக்கோவில். மற்ற இடங்களில் நாம் மலைமேல் சுவாமி இருப்பதாக கேள்வி பட்டிருப்போம், ஆனால் இங்கு மலையே சுவாமியாக இருப்பது தான் விசேஷம். இந்த மலையின் சுற்றளவு 14 கிலோ மீட்டர். இந்த மலையானது கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்...
6 மெழுகுவர்த்திகள்! திரைவிமர்சனம்!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு எப்படியாவது தமிழ் சினிமாவில் வெற்றி நாயகர்கள் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் '6 மெழுகுவர்த்தி' படத்தை தயாரித்து, நடித்துள்ளார் ஷாம்.
ஷாம்- பூனம் தம்பதியர் தங்களின் ஒரே மகனின் 6வது பிறந்த நாளை கொண்டாடி விட்டு கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு மகனை தவற விடுகிறார்கள்.
தொலைந்து போன மகனை தேடி அலைகிறார்கள். கிடைக்காத சூழ்நிலையில் காவல் துறையில் தகவல் தெரிவிக்கிறார்கள்.
காவல்துறையினர் இரண்டு நாட்களாக தேடியும் கிடைக்காததால், குழந்தைகளை கடத்தும் கும்பல்களிடம் அழைத்துச் செல்லும்படி ஒரு கான்ஸ்டபிளிடம் சொல்லி அனுப்பி வைக்கிறார் காவல்துறை ஆய்வாளர்.
அங்கு சென்று விசாரித்தபோது ஷாமின் மகனை கடத்தல் கும்பல்...
கர்ப்பமாக இருக்கும் போது தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்!
ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பம் அடைந்து ஒரு குழந்தையை பெற்று எடுத்தால் தான் முழுமை பெறுகிறாள். ஆனால் அது லேசுபட்ட விடயமல்ல.
கருவுற்று ஒரு குழந்தையை பெற்று எடுப்பதற்குள் ஒரு பெண் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் பல உள்ளன. அவைகளை எல்லாம் ஒரே பட்டியலில் வகைப்படுத்தி விட முடியாது.
அவைகளை தெரிந்து கொண்டால், கர்ப்ப காலத்தில் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டு உங்களுக்கே வியப்பு ஏற்படும்.
ஆனால் அவைகளை கண்டு பயப்பட தேவையில்லை. அவைகளில் பலவகைகள் சாதாரண மாற்றங்களே. இதனைப் பற்றி மேலும் அறிய விலாவரியாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு போதுமான நீர்ச்சத்து கிடைக்க அதிகமாக தண்ணீர் குடித்தாக வேண்டும். அப்படி அதிக அளவில் நீரைக் குடிப்பதனால், தண்ணீரை பார்த்தாலே அலுப்புத்...
மருதநாயகத்தை தூசு தட்டுகிறார் கமல்?
1997ல் கமல் தொடங்கிய படம் மருதநாயகம். 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரன் முகமது யூசுப்கான் என்கிற மருதநாயகத்தை பற்றிய அந்த வரலாற்றுப்படத்தை தனது கனவு படமாகவும் சொன்னார் கமல். அதனால் இங்கிலாந்து நாட்டு ராணியை சென்னைக்கு அழைத்து வந்து பிரமாண்டமாக படத்தை தொடங்கினார். ஆனால் பின்னர் ஏற்பட்ட பைனான்ஸ் ப்ராப்ளம் காரணமாக அப்படத்தை கிடப்பில் போட்டார் கமல்.
ஆனால் விஸ்வரூபம் படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தையும் தற்போது இயக்கி வருகிறார் கமல். இந்த பாகத்துக்கு...
கமல் இஷ்டப்பட்டு நடித்தார். நான் கஷ்டபட்டு நடித்தேன். - ரஜினி!
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினை நேற்று தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் என திரையுலகங்கள் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியினை அமர்களப்படுத்தினர்.மேலும் தமிழ் திரையுலக பிரபலங்களான ரஜினிகாந்த், கமலஹாசன், இளையராஜா, சிவக்குமார், விஜய், அஜித், விக்ரம் மற்றும் பல திரையுலக பிரபல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.இந்த விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார், இந்த விழாவை மிக சிறப்பாக நடத்தியதற்காக, முதல் அமைச்சருக்கு என் நன்றி. என் திரையுலக அண்ணன் கமல்ஹாசனுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி.அன்றும் சரி, இன்றும் சரி, நான் கமல் ரசிகன். இரண்டு பேரும் சேர்ந்து ஏழு எட்டு படங்கள் நடித்தோம். கமல் இஷ்டப்பட்டு நடித்தார். நான் கஷ்டபட்டு...