.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 12 August 2013

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு!

ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில்...இது எப்படி சாத்தியமானது ? ? ?கோயில் எப்படி கட்டப்பட்டது ????            தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில்  அல்லது தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படும் இது இந்து சமயக் கோயில் மேலும் தமிழரின் பாரம்பரியச் சின்னம் ஆகும். 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில்...

உலகின் மிக பெரிய வழிபாட்டு தளம்!

உலகின் பெரிய வழிபாட்டு தளம் என்ற பெருமை பெற்ற கோவில்  "கம்போடியா" நாட்டில் உள்ள "அங்கோர் வாட்"(ANGKOR WAT) கோயில்.   இந்த கோவிலை கட்டியது யார் தெரியுமா? "இரண்டாம் சூரிய வர்மன்" என்னும் தமிழ் மன்னன். இரண்டாம் சூர்யவர்மன் கம்போடியாவை  கைப்பற்றியவுடன்(1113 – 1150) இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயல்பட்டது.  .  "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது "! !.   இந்த கோயிலை ஒரு கலை பொக்கிசம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின்...

இதுவா அம்மா உன் தேசம்? சுதந்திர தின கவிதை!

அறுபத்திஐந்து வயது  அன்னை  இன்று அரங்க சூதாடடத்தில்  பலியாடு!அண்ணல் கண்ணன்வரும் வரைக்கும் அக்கிரமக்காரர்களின் விளையாட்டு. அரசியல்வாதிகள் அளக்கும் பேச்சில் அடிக்கடி வருவது திருநாடு!ஆயினும் மக்கள்  வறுமைக்கோட்டில் அலைந்து கையில் ஏந்துவதென்னவோ திருவோடு! ஒருமைப்பாடு என்பது எல்லாம் ஒடுங்கிப் போனதில் வந்தது குறைபாடு.ஓசைபடாமல் சத்திய தர்மம் ஓடிச் சென்றதென்னவோ சுடுகாடு! வழிப்பறி கொள்ளை படுகொலைகள் வீதி நடுவினில் மதுக்கடைகள் அடிக்கடி நடக்கும் அராஜகங்கள் அடியோடு புதையும்  முழு நிஜங்கள். தர்மத்தலைமையை கைகேயியைப்போல் துரத்தி் அனுப்புவர் வனவாசம்.தாயே உன்னைக்காணக்கண்ணும் பனிக்கிறதே இதுவா அம்மா உன் தேசம்? ஊழல்செய்யும் பேர்களுக்கு உற்சாகமாய்   தருவர் பரிவட்டம்!உண்மைபேசும்  அப்பாவிகளோ அழிந்தே போவார் தரைமட்டம். ஒடுங்கி அடங்கிக் கைகுவித்தே ஒருநாள் கேட்பான்...

இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்! எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்  எல்லாரும் இந்திய மக்கள், எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர் – நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் – ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப் பவர்க்கு அச்சமும் உண்டோ  என மனத்திற்கு ஊர்சாகமூட்டும் பொன்னாள் சுதந்திரத் திருநாளே! நெஞ்சு பொறுக்கு திலையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால், கொஞ்சமோ பிரிவினைகள்? “தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா – இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!” -என்ற பாரதியின் வரிகளிலே நம்முன்னோர்கள் பெற்ற சுதந்திரத்தின் மதிப்பை அறியலாம். 1947ம்...

மனதில் உறுதி வேண்டும்! சுதந்திர தினம் - சிறப்புக் கட்டுரை!

    ஆகஸ்டு 15, 2013, இந்தியாவின் 67 வது சுதந்திர தினம். ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் போது அனைத்துத் தலைவர்களும் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, சுதந்திரதின சிறப்பு உரையாற்றுவது வழக்கம். பாரதப் பிரதமர் திரு மன்மோகன் சிங், இந்தியாவின் 67 வது தனது சுதந்திர தின சிறப்பு உரையை ஆற்ற இருக்கிறார். மற்ற தலைவர்களின் உரையைவிட, பிரதமரின் சுதந்திரதின சிறப்பு உரைக்கு மதிப்பு அதிகம் என்பதை அனைவரும் அறிவோம். அடிமைத் தளத்திலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நமது நாட்டின் வளர்ச்சியைப் பற்றி நாம் சிந்திக்கத் தவறுவதில்லை. செயற்கைக்கோள் அனுப்புவதில் நாம் மற்ற நாடுகளின் கவனத்தை நம் பக்கம் திருப்பி...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top