.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 12 August 2013

இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!




தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!


எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்  எல்லாரும் இந்திய மக்கள்,

எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர் – நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் – ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் -

ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப் பவர்க்கு அச்சமும் உண்டோ  என மனத்திற்கு ஊர்சாகமூட்டும் பொன்னாள் சுதந்திரத் திருநாளே!

நெஞ்சு பொறுக்கு திலையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்,

கொஞ்சமோ பிரிவினைகள்?

“தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா – இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!” -என்ற பாரதியின் வரிகளிலே நம்முன்னோர்கள் பெற்ற சுதந்திரத்தின் மதிப்பை அறியலாம்.

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி இரவுஉலகமே உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்தியா சுதந்திரத்தையும் புது வாழ்வையும் பெற்று புதிய சகாப்தம் துவக்கியது. வரலாற்றில் மிகவும் அரிதானதருணம்..

நீண்ட காலம் அடைபட்டுக் கிடந்த ஒரு நாட்டின் மறுமலர்ச்சி  புத்துயிர் பெற்றது..


நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்கவும், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லவும், மக்களின் 

 

சேவைக்காவும், மனிதநேயத்திற்காகவும் அர்ப்பணித்து அயராது உழைக்கும் சக்தியை சுதந்திர தினம் வழங்குகிறது..


அநீதிகளைக் கண்டு, முறைகேடுகளைக் கண்டு கோபம் கொள்ள வேண்டும்;இது நமது நாடு; இதன் ஒவ்வொரு வளர்ச்சியும் தாழ்ச்சியும் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும்..

நமது நாட்டின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு , சமூக வாழ்க்கை முறையை புற்றுநோயைப்போல் பாதித்து வரும் ஊழலை உடனடியாக ஒழிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அரசு, பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் சமூக அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டியது அவசியம்…

கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு’

“நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களைத் தாருங்கள்;இந்தியாவை உயர்த்திக் காட்டுகிறேன்” என்று விவேகானந்தர்கூறினார்.

இளைஞர்களால் ஒரு செயலை எளிதாகவும், சிறப்பாகவும் செய்து முடிக்க முடியும். இதனாலேயே விவேகானந்தர் ஆணித்தரமாகஇளைஞர் சக்தியை நம்பினார்.

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் இந்தியாவை அனைத்து துறையிலும் உயர்த்தி வருகின்றனர்.

இந்த எழுச்சியால், இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது
வளர்ச்சியடைந்த நாடுகளே பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக் கொண்டன.
இந்தியா இதிலிருந்து தப்பித்து சீரான வளர்ச்சி அடைந்து வருவது, உலகநாடுகளை வியப்படையச் செய்தது.

இந்தியர்களின் கடின உழைப்பு தான், வளர்ச்சிக்கு காரணம்.

இந்திய மக்கள்தொகையில் இளைஞர்கள் அதிகரித்திருப்பதே நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 50 சதவீதம் பேர் இளைஞர்கள். இந்த இளமைத் துடிப்பு எந்த நாட்டுக்கும் இல்லை.
நம் நாடு உலகில் உயர்ந்தது என உறுதியாய் நம்புவோம்;

நாட்டைச் சுரண்டும் தீய சக்திகளை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவோம்;
நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்போரை போற்றுவோம்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top