இந்த உலகில் அனைவருக்கும் அம்மா என்றால் மிகவும் பிடிக்கும். ஏனெனில் அவர்கள் தானே இந்த அழகான உலகிற்கு கொண்டு வந்தது. அத்தகைய அம்மாவை ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி மிகவும் பிடிக்கும். இருப்பினும் ஆண்களுக்கு தான் அம்மா என்றால் உயிர். பெண்களுக்கு அப்பா தான் உயிர். வேண்டுமென்றால் அனைத்து வீடுகளிலும் பாருங்கள், பசங்க எல்லோருமே, அவர்களது அம்மாக்களிடமே மிகவும் பாசமாக நடந்து கொள்வார்கள். இவற்றில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பசங்களுக்கு திருமணம் ஆனப் பின்பு தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. ஏனெனில் அப்போது மற்றொரு பெண் அவர்களின் வாழ்க்கையில் நுழைவது தான் காரணம். ஆகவே ஆண்கள் அம்மாவின் மீது மிகவும் பாசம் உள்ளவர்களாக இருந்தால், திருமணத்திற்குப் பிறகு என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று அனுபவசாலிகள் கூறுவதைப் பார்ப்போமா!!!ஆண்கள் பெரும்பாலும் காதலில் விழுகிறார்கள் என்றால், அவர்கள் நிச்சயம்...
Saturday, 9 November 2013
முதல் சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் டிரா!
இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்– நார்வே கிராண்ட் மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென் மோதும் உலக செஸ் போட்டி சென்னையில் இன்று தொடங்கியது. அண்ணாசாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வரும் இப்போட்டியில், விஸ்வநாதன் ஆனந்த் கருப்பு காய்களுடனும், கார்ல்சென் வெள்ளை காய்களுடனும் விளையாடினர்.மொத்தம் 12 சுற்றுகளை கொண்ட இப்போட்டியில், இன்று நடைபெற்ற முதல் சுற்று டிரா ஆனது. ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்த சுற்றில் இரண்டு வீரர்களும் தலா 16 நகர்த்தல்களுக்குப் பிறகு போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இருவருக்கும் தலா அரை புள்ளி வழங்கப்பட்டது. இன்று நடைபெற்ற போட்டியுடன், விஸ்வநாதன் ஆனந்தும் கார்ல்செனும் 29 முறை மோதியுள்ளனர்....
முத்தான முப்பது விஷயங்கள்!
* நமது முன்னோர்கள் கிடைப்பதற்கரிய மற்றும் விலை உயர்ந்த சில அரிய பொருட்களைக் கண்டறிந்து அவைகளைத் திறம்பட பயன்படுத்தி உள்ளனர். அவற்றில் நவரத்தினங்கள் என்ற ஒரு பிரிவு உள்ளது. ஒன்பது வகையான விலை உயர்ந்த அரிய மருத்துவத்தன்மை கொண்டது மட்டுமின்றி மனதிற்கு மகிழ்ச்சியையும் அளிக்கும் ரத்தினங்களையே நவரத்தினம் என்கிறார்கள். இவற்றில் முத்து என்ற நவரத்தினமும் ஒன்று. மணிகளின் அரசன் என முத்து போற்றப்படுகிறது.* பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் முத்தின் பயன்களை உணர்ந்து பயன்படுத்தியுள்ளனர். அக்கால இலக்கியங்களிலும், பாடல்களிலும் முத்தின் மதிப்பு மற்றும் முத்துமாலை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.* பழங்காலத் தமிழ் மகளிர் முத்து மாலை அணிந்துள்ளனர். முத்துக்கள் நிரப்பப்பட்ட சிலம்புகளையும் அணிந்துள்ளனர்.* சிப்பிகளினுள் விழும் நீர்த்திவலை அல்லது திடப்பொருளே உறைந்து உருண்டு முத்து ஆக மாறுகிறது. முத்து உருவாகுதலை...
காமன்வெல்த் மாநாடு : சல்மான் குர்ஷித் பங்கேற்பு
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்றும், இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்ளப் போவதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.தமிழீழ இனப் படுகொலைக்கு காரணமாக இருந்த ராஜபட்சவை காப்பாற்றுவதற்காக இலங்கையில் நடத்தப்படும் இந்தக் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்கக் கூடாது என்றும், காமன்வெல்த் மாநாட்டில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்றும் தமிழகத்தின் சார்பில் அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வாளர்களும் வலியுறுத்தி வரும் நிலையில், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.ஆனால், இந்த மாநாட்டில்...
24 கரட் தங்கத்தில் ஆப்பிள் தயாரிப்புக்கள்!
கைப்பேசி மற்றும் டேப்லட் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் ஆப்பிள் நிறுவனம் மற்றுமொரு புது முயற்சியில் இறங்கியுள்ளது.
அதாவது 7.9 அங்குல அளவுடைய Retina தொடுதிரையினைக் கொண்ட 24 கரட் தங்கத்தினால் ஆன iPad Mini மற்றும் iPad Air சாதனங்களை தயாரித்து அறிமுகப்படுத்தவுள்ளது.
இச்சாதனங்களின் விலையானது ஏறத்தாழ 1500 யூரோக்களாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
...
வேகமாக பரவி வரும் புது வைரஸ்! மக்களுக்கு எச்சரிக்கை...!
இன்றைக்கும் கணனி பயன்படுத்துவோர் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சனை எது என்றால் அது வைரஸ் தான்.
தற்போதைய நிலையில் பீ போன் என்ற புதிய வைரஸ் ஒன்று மிக வேகமாகப் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இது ஏறத்தாழ 20 பெயர்களில் கணனி சிஸ்டத்தில் தங்குகிறது.இந்தியாவில் வைரஸ்களைக் கண்காணிக்கும் Computer Emergency Response TeamIndia (CERTIn) என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.இது ட்ரோஜன் வகை வைரஸ் என்றும், பயனாளரிடம் அவருக்கே தெரியாத வகையில், அவரின் அனுமதி பெற்று மற்ற வைரஸ்களையும் கணனியில் பதிக்கும் தன்மை கொண்டதாக இது உலவுகிறது.டிஜிட்டல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த வல்லுநர்கள் இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க கூடுதல் பாதுகாப்பு வழிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.குறிப்பாக கணனியில் இணைத்து எடுத்து பயன்படுத்தும் ஸ்டோரேஜ் சாதனங்களைப் பயன்படுத்துவதில் அதிகக் கவனம் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.விண்டோஸ்...
பிரைன் லாரா இந்தியா வருகை...! கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு...!

மும்பையில், வரும் 14ம் தேதி தொடங்கும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டல்கர் பங்கேற்கும் 200வது போட்டி, நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இறுதியாட்டத்தை காண்பதற்காக, வெஸ்ட் இண்டிஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரைன் லாரா இந்தியா வந்துள்ளார். கிரிக்கெட்டின் கடவுள் என்று புகழப்படும் சச்சின் டெண்டல்கர், சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் டி 20 போட்டிகளில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டார். இதனைத்தொடர்ந்து, தனது 200-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, கிரிக்கெட் போட்டிகளில்...
அம்மா என்னும் மரியாதையே.......!
“எங்களுடைய மகள் முன்னாடியெல்லாம் ரொம்ப நல்லா இருந்தாள். சொன்ன பேச்சைக் கேப்பாள், ஒழுங்கா படிப்பாள்… யார் கண் பட்டதோ தெரியவில்லை. இப்போதெல்லாம் யாருடைய பேச்சையும் கேட்பதே இல்லை. எதுக்கெடுத்தாலும் எதிர்த்துப் பேசுகிறார். அப்பா, அம்மா என்னும் மரியாதையே சுத்தமா இல்லாமற் போச்சு !என்ன செய்வதென்றே தெரியலை” இப்படி யாராவது பேசினால், உங்கள் மகளிற்கும் பதின்ம வயதாக இருந்தால் கேளுங்கள். பெரும்பாலும் “ஆமாம்” என்பது தான் பதிலாக இருக்கும். அப்படியானால், இது ஒரு வீட்டின் பிரச்சினையில்லை. உலகில் இருக்கும் பல கோடிக்கணக்கான பதின் வயதுப் பெண்கள் இருக்கிறார்கள். பெரும்பான்மை ஆசிய நாடுகளில் கலாச்சாரத்தைப் பேணும் அத்தனை வீடுகளிலும் இப்படி பதின்ம வயது பிள்ளைகளை எப்படி வழிநடத்திப் பெரியவர்கள் ஆகும்வரை கொண்டு செல்வது என்பது வீட்டுக்கு வீடு நடந்து கொண்டு தான் இருக்கிறது.இந்தப் பதின்ம வயதுப்...
எந்தெந்த காய் கனிகளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?
எந்தெந்த காய் கனிகளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?பழங்கள்:
திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்ஆப்பிள்கள் ஒரு மாதம்சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்அன்னாசி (முழுசாக) 1 வாரம்(வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்
காய்கறிகள்:புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள்முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி,ஓம இலை 1-2 வாரங்கள்வெள்ளரிக்காய் ஒரு வாரம்தக்காளி 1-2 நாட்கள்காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம்காளான் 1-2 நாட்கள்அசைவ உணவுகள்:
வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள்சமைத்த மீன் 3-4 நாட்கள்பிரஷ் மீன் 1-2 நாட்க...
பிறப்பு, இறப்பு சான்றிதழ் தமிழில் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா?
சென்னை மாநகராட்சியின் மூலம் பிறப்பு – இறப்பு சான்றிதழ் இலவசமாக வழங்கப்படுகிறது. மாநகராட்சியின் இணைய தளத்தில் இந்த சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரிலும் விண்ணபித்து பெற்றுக் கொள்ளலாம்.இதுவரை பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டன. இனிமேல் தமிழிலும் கிடைக்கும் வகையில் மாநகராட்சி புதிய ஏற்பாட்டினை செய்துள்ளது.
பிறப்பு – இறப்பு சான்றிதழ் தமிழில் பதிவிறக்கம் செய்யும் வசதியை ரிப்பன் மளிகையில் இன்று மேயர் தொடங்கி வைத்தார்.இனி
http://www.chennaicorporation.gov.in/Tamil/index.htm இணையதளத்தில் இன்று முதல் தமிழ் பிறப்பு – இறப்பு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். இதில் பிறந்த மற்றும் இறந்த தேதி மற்றும்...
விஐபிக்களின் உறவினர்களுக்கு விருது : வெளிவந்திருக்கும் புதிய பூதம் !
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெற பரிந்துரைக்கப்பட்டோரின் பட்டியலில், விஐபிக்களின் உறவினர்கள் பலரும் இடம்பெற்றிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பத்ம விருதுகள் பெற முக்கிய பிரமுகர்கள் பலரும் தங்கள் சார்பில் சிலரை விருதுகளுக்கு பரிந்துரை செய்யலாம். அந்த வகையில், சுமார் 1,300 பேரின் பெயர்கள் பத்ம விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதன் விவரம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில், பல்வேறு விஐபிக்கள், தங்களது பிள்ளைகள், உடன்பிறப்புகள், உறவினர்களின் பெயர்களையே பரிந்துரை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.அதாவது, பாரத் ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கர், தனது சகோதரி உஷா மங்கேஷ்கர்,...
மங்கள்யானின் புவி வட்டப் பாதை 3வது சுற்று அதிகரிப்பு!
செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான், புவி வட்டப் பாதையை அதிகரிக்கும் 3வது சுற்றுப் பாதை இன்று காலை துவங்கியது.40,186 கி.மீ. ஆக இருந்த சுற்றுப்பாதை தற்போது 71,363 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோல அடுத்தடுத்து 4 மற்றும் 5வது சுற்றுப் பாதைகள் மூலம், புவி வட்டப் பாதையின் தூரம் அதிகரிக்கப்பட உள்ளத...
ஜிமெயிலில் விளம்பரங்களை தடுப்பது எப்படி!
ஜிமெயிலை பயன்படுத்தும் போது இன்பாக்சில் தோன்றும் விளம்பரங்களை சகித்து கொள்ள வேண்டும் ,அல்லது கண்டும் காணாமல் இருந்தாக வேண்டும். இதைத்தவிர வேறு வழியில்லையா? இருக்கிறது!.ஜிமெயிலில் கூகுலால் தோன்றச்செய்யும் விளம்பரங்களை தடுப்பது சாத்தியம் தான் தெரியுமா? இதற்கு மூன்று சுலபமான வழிகள் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது டெக்ரிசார்ட்ஸ் இணையதளம்.முதல் வழி மிகவும் சுலபமானது. அதாவது எச்.எடி.எம்.எல் வடிவத்தற்கு மாறிவிடுவது. ஜிமெயிலை எச்.டி.எம்.எல் வடிவில் பார்க்கும் வசதி தொடர்பான குறிப்பை நீங்களே கூட அடிக்கடி பார்த்திருக்கலாம். இண்டெர்நெட் இணைப்பின் வேகம் போதுமானதாக இல்லாத நிலையில், மெயிலின் பக்கங்கள் விரைவாக டவுன்லோடு ஆக, இப்படி எச்.டி.எம்.எல் வடிவத்தை பயன்படுத்தி கொள்ளலாம். வழக்கமான கிராபிக்கஸ் மற்றும் கூடுதல் அம்சங்கள் இல்லாமல் மெயிலின் அடிப்படையான விஷயங்களை மற்றும் எச்.டி.எம்.எல் வடிவில் பார்க்க முடியும்.இந்த...
பல்வலிக்கான வீட்டு வைத்தியம்!
நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை கீழே தெரிந்து கொள்ளலாம்.பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும். கடுகு எண்ணை, பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி. கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும்.எலுமிச்சை சாரின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம்.வெங்காயத்தின் ஒரு...
எரிவாயு இணைப்பு கொடுக்கும்போது கவனிக்கப்படவேண்டிய விஷயங்கள் என்ன?
எந்த இடத்தில் எரிவாயு இணைப்பு கொடுக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. கீழ்க்கண்ட முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை சமையலறையில் பின்பற்றினாலே அது எரிவாயுவினால் ஏற்படும் விபத்துகளுக்கான காப்பீடு போலாகும்.
•எரிவாயு சிலிண்டர் வைக்கும் அறை அல்லது சமையலறையில் நல்ல காற்றோட்டம் இருக்கவேண்டும். ஜன்னல்கள் மற்றும் கதவுகள் மூடியிருக்கும் அறையில் எரிவாயு சிலிண்டரை உபயோகிக்கக்கூடாது
•எரிவாயு சிலிண்டர், அதன் அழுத்தத்தினை சரி செய்யும் நாப் அல்லது பட்டன், எரிவாயு செல்லும் இரப்பர் குழாய் போன்றவற்றை எளிதில் கையாளுமாறு எரிவாயு இணைப்பு அமைக்கப்பட வேண்டும்
•தரைமட்டத்தில் எரிவாயு சிலிண்டர் இருக்குமாறு அமைக்கவேண்டும். ஆனால் தரைமட்டத்திற்கு கீழ் அதாவது தரைக்கு கீழ் இருக்கும் தளங்களில் எரிவாயு சிலிண்டர் இருக்குமாறு அமைக்கக்கூடாது.
•சிலிண்டரை அலமாரியில் வைக்கும்போது அதன் தரைத்தளத்திலும் அதன் மேல்தளத்திலும் காற்றோட்டத்திற்கு...
ஆன்டிபயாட்டிக் எடுக்கும் போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா ?
தற்போது ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கையினால், உடல் நிலை சரியில்லாமல் நிறைய பேர் தினமும் மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர்.சொல்லப்போனால் அது ஒரு அழையா விருந்தாளியைப் போல், அனைவரிடமும் வந்துவிடுகிறது. அவ்வாறு உடல் நிலையை தேற்றுவதற்காக மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது, அந்த மருந்து உடலில் நன்கு வேலை செய்ய வேண்டுமென்றால், ஒரு சில உணவுகளை சாப்பிடக் கூடாது. ஏனென்றால் அவ்வாறு சாப்பிட்டால், உடலில் அந்த மருந்துகள் சரியாக வேலை செய்யாமல் போய்விடும். இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளங்களேன்…ஆல்கஹால்-மருந்து மாத்திரைகளுக்கு ஆல்கஹால் முற்றிலும் ஒரு எதிரி. ஏனெனில் அந்த ஆல்கஹால், மாத்திரைகளில் உள்ள மருந்துகளின் தன்மையை குறைத்துவிடுகின்றன. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள நோய்கள் விரைவில் குணமாவது தடைப்பட்டு, நீண்ட நாட்கள் அந்த நோயை உடலில் வைத்துக் கொள்ள நேரிடும்....
முக பள்பளப்புக்கும் முதுமையை துரத்துவதற்கும் கூட உதவும் தண்ணீர்!
நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட்டு நீண்ட நாட்கள் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்க தண்ணீர் மிகவும் இன்றியமையாததாகும்.
எப்படியெனில், தண்ணீர் அதிகம் பருகினால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் எடுத்துச் செல்வதோடு மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு உறுப்புகள் பாதுகாப்பட்டு நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு உடலின் வெப்பமும் சீராக இருக்கும்.மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீராக உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது.
எனவே தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஆகவே தான், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு...
எல்லா நெஞ்சு வலியும் மாரடைப்பின் அறிகுறி அல்ல...
சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று எல்லோருக்கும் நெஞ்சு வலி வருகிறது. மற்ற வலிகளைக் கண்டு பயப்படுகிறோமோ இல்லையோ, நெஞ்சு வலி என்றால் துடித்துப் போகிறோம். காரணம், நெஞ்சுவலியை மக்கள் எப்போதும், மாரடைப்பின் அறிகுறியாகப் பார்ப்பதுதான். ‘‘எல்லா நெஞ்சு வலிகளும் மாரடைப்பின் அடையாளமில்லை...’’ என்கிறார் வலி நிர்வாக சிறப்பு சிகிச்சை நிபுணர் குமார்.‘‘மாரடைப்பினால் வரும் நெஞ்சு வலியானது, முதலில் நெஞ்சின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கும். மயக்கம், படபடப்பு, அதிக வியர்வை, வலி இடது கைக்குப் பரவுவது, நெஞ்சைப் பிசைகிற மாதிரியோ, அழுத்துகிற மாதிரியோ வலிப்பது, மூச்சுத் திணறல், அரிதாக சில நேரம் கழுத்திலும் வலி போன்றவை இருக்கும். ஆனால்,...
லெனோவா நிறுவனம் ஐடியாபேட் ஃப்ளெக்ஸ் 2 நோட்புக் ரூ.42.250 விலையில் அறிமுகம்!
லெனோவா நிறுவனம் டச்ஸ்கிரீன் கொண்ட ஐடியாபேட் ஃப்ளெக்ஸ் 2 நோட்புக் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனத்தின் இந்த புதிய மாடல் 10 புள்ளி மல்டி டச் கொண்ட உலகின் முதல் டூயல் மோட் நோட்புக் ஆகும். இந்த புதிய ஐடியாபேட் ஃப்ளெக்ஸ் 2 நோட்புக் விலை ரூ.42.250 ஆகும்.புதிய மாடல் விண்டோஸ் 8 இயக்கத்தளம் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 300 டிகிரி வரை சுழற்ற முயன்ற டிஸ்ப்ளே கொண்டுள்ளது. புதிய லெனோவா ஐடியாபேட் ஃப்ளெக்ஸ் 2 1366x768p தீர்மானம் கொண்ட ஒரு 14 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் நிறுவனத்தின் AccuType கீபோர்டு உடன் வருகிறது. அதை 4GB ரேம் உடன் நான்காவது தலைமுறையின் இன்டெல் கோர் i3 ப்ராசசர் (வரை i7) உடன் வருகிறது. மற்றும் விருப்பத்தேர்வு 2GB என்விடியா...