.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 1 December 2013

நண்டுகள் பலவிதம்!

 

கடலிலோ, நிலத்திலோ வாழும் எந்த நிறத்திலும் இருக்கும் பக்கவாட்டில் நீந்தும், நடக்கும் தன் வீட்டை தானே சுமக்கும் அது என்ன? வேறென்ன? நண்டுதான்! சரியாய் யூகித்தீர்களா…(குட்டி நண்டுகளா!)

* நண்டு தன் பின் நான்கு ஜோடி கால்களை பக்கவாட்டில் வேகமாய் நகர பயன்படுத்துகிறது.* இந்த முதுகெலும்பு எட்டுக்கால் பூச்சி நண்டு பெரும்பான்மையான எதிரிகளிடமிருந்து அதன் ஓட்டினால் பாதுகாக்கப் படுகிறது.* கால்கள் தேய்ந்தோ, உடைந்தோ போனால் நண்டுகள் புதிதாய் வளர்த்து கொள்ளும்.

* அவைகளின் வலிமையான வளை நகங்களை சண்டை போட, மீன்களை கிழிக்க, சிப்பியை பிளக்க, தாவரங்களை உண்ண பயன்படுத்துகிறது.* இந்த ஓடு, “ஆமை ஓடு’ எனப்படுகிறது.* நண்டு தம் ஓட்டை விட பெரிதாகும் போது ஓட்டை உடைத்து திறந்து அவற்றை விட்டு விலகும். அந்த பழைய ஓட்டின் அடியில் புதிய, மிருதுவான ஓடு இருக்கும். இந்த புதிய மிருதுவான ஓடு கடினமாக மூன்று நாட்களாகும்.

* இந்த முதுகெலும்புக்கு கீழே இரண்டு உணர்வான்கள் ஆன்டெனாக்கள் இருக்கும். ஆன்டெனாக்களை சுற்றியுள்ள மெல்லிய முடிகளால் தொட, வாசனையை உணர மற்றும் சுவையை உணர செய்கிறது நண்டு.* நண்டுகள் தம் ஐந்து ஜோடி செதில்களால் சுவாசிக்கும். இவை ஓட்டின் உள்ளே, ஒவ்வொரு காலின் மேற் பகுதிக்கு அருகே இருக்கும்.

* இந்த நண்டு மிக அசிங்கமாய் தோற்றம் அளிப்பதால், அச்ச லிஸ்டில் இந்நண்டு வைக்கப்படுகிறது.

 * இதன் கொடுக்குகளுக்கு மனித விரலையே கட் பண்ணுமளவு பவர் உண்டு.

சிறந்த நண்பர்கள்:


தனியே வாழும் நண்டிற்கு வலுவான சிப்பி கிடையாது. அதனால் அது பழைய நத்தை ஓடுகளில் வாழும். விண்மீன் வடிவ நண்டும் இவ்விடத்தையே வாழ்விடமாக கொண்டுள்ளது. நகரமுடியும் நண்டு சாப்பிடும்போது விழும் உணவை விண்மீன் நண்டு உண்ணும். யாராவது எதிரி அருகில் வந்தால் கொடுக்கால் தாக்கும்.

மேல் தோலும், வலுவான ஓடும் உண்டு!: நண்டுகளுக்கு மேல் தோலும், வலுவான ஓடும் உண்டு. அதோடு ஐந்து ஜோடி கால்களும் உண்டு. இதுபோல அமைப்புடைய ஆயிரக்கணக்கான உயிரினங்கள் உண்டு. இதோ சில் பொதுவகை உயிரினங்கள்….

பெரும்பான்மையான நண்டுகள் 15 செ.மீ., அகலமுடையது. ஆனால், சில நண்டுகள் இவ்வளவை விட சற்று அதிகமாகவோ, குறைவாகேவா இருக்கும். ஜப்பானிய சிலந்தி நண்டுகள் கிட்டத்தட்ட 4 மீட்டர் நீளம் வளரும். பட்டாணி அளவு நண்டுகளும் உண்டு.

ஒருவர் உங்களைத் திட்டி விட்டால்?




ஒருவர் நம்மீது கோபப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

 நீங்களும் பதிலுக்கு அவரை விட அதிகமாகக் கோபப்படுவீர்கள். ஒருவர் உங்களைத் திட்டி விட்டால்….. அவரை விட அதிகமாக, அவரை மோசமாகத் திட்டுவீர்கள் இல்லையா? இது தான் நம்முடைய மனநிலை. இதனால் உங்களுடைய கோபத்திற்குத் தற்காலிக வடிகால் கிடைத்தாலும் இந்த மனநிலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது. பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாத நபர்களிடம் இந்த மாதிரி நடந்து கொள்கிறீர்கள். ஆனால் அலுவலகத்தில் உங்களுக்கு மிகமிகத் தெரிந்த நபர்களிடம் இம்மாதிரி நடந்து கொண்டால் ஏற்படும் விளைவுகளை யோசித்துப் பாருங்கள்.

உங்களை விட கீழ்நிலை வேலையில், இருப்பவர்களிடம் இவ்வாறு நடந்தால்….. அவரால் நேரடியாக உங்களைப் பழிதீர்க்க முடியாது. அதனால் அவருக்குத் தெரிந்தவர்களிடத்திலெல்லாம் உங்களைப் பற்றி மோசமாகச் சொல்லி பழிதீர்த்துக் கொள்வார்கள். இதனால் உங்களுடைய மதிப்புப் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இன்றைய சூழலில் பெரும்பாலான ஊழியர்கள் வேலை பார்க்கும் இடங்களில், எதிர்மறையான எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மன அமைதியை இழந்து தவிக்கிறார்கள். இதுபோன்றநிலையில், வேலை பார்க்கும் இடங்களில் மனஅமைதியை இழக்காமல் இருக்கவேண்டுமானால் ஒன்று தங்களின் அமைதியின்மைக்குப் பிறரையோ, சூழ்நிலையையோ குறைகூறுவதைத் தவிர்க்க வேண்டும். மற்றொன்று எதிர்மறையான அம்சங்களுக்கு அழுத்தம் கொடுப்பது என்ற இரண்டு செயல்களில் ஏதாவது ஒன்று உங்களிடம் காணப்பட்டாலும் அதைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.

மேலதிகாரிகளுடன் நல்லுறவு கொள்ளவேண்டும். பணியிடத்தில் சில விரும்பத்தகாத சூழ்நிலை உருவாகும்போது அச்சூழ்நிலை பற்றி அவ்வப்போது மேலதிகாரியிடம் அதுகுறித்தத் தகவல் அளித்து வரவேண்டும். உங்கள் பணியை பற்றிய உண்மை உங்களைவிட அவருக்குத்தான் நன்றாகத் தெரியும். இந்நிலையில் மேலதிகாரியுடனான தகவல் பரிமாற்றம் இல்லையெனில் 50% தவறுகளுக்கு அப்பணியாளர் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும்.

உங்கள் அதிகாரியுடன் முழுமையான நல்லுறவுக்கு மனதைத் தயார்படுத்திக் கொள்ள தவறவேண்டாம். முதுகுக்குப் பின்னால் குத்துவது, இரட்டை வேடம் போடுவது, வதந்திகளைப் பரப்புவது, வம்பு பேசுவது போன்றகுணங்களை முழுமையாக விட்டொழிக்க வேண்டும். இதனால் இன்று உங்களால் விமர்சிக்கப்படுபவர் இன்னொரு நாள் உங்களுக்குப் பாடம் கற்பிக்கும் நிலையை தவிர்த்திட இது வகைசெய்யும். உணர்ச்சிவசப்படும் நிலையை முழுமையாக குறைத்துக் கொள்ள வேண்டும்.

நம்மோடு அலுவலகங்களில் பணிபுரியும் அனைவரும் அடிப்படையில் மனிதர்கள் தான். அதன்பின்தான் அலுவலகத்தில் சக ஊழியர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். எப்போதும் பிரச்சனைகளைத் தனித்தனியாக பிரித்துப் பார்த்து, அதை சரிசெய்ய முயற்சித்தால் எதிர்மறைஎண்ணங்கள் குறைவதற்கு வாய்ப்பு உண்டு.

மனோபாவத்தை மாற்றநீங்கள் தயாரா?


எதிர்மறைமனோபாவத்தை ஒருவர் வெளிப்படுத்தும் போது கீழ்க்கண்ட கேள்விகளைத் தங்களுக்கு தாங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

இந்த நபர் எனக்கு முக்கியமானவரா?


இதற்கு முன் இதே போன்றஒரு மனோபாவத்தை என்னிடம் வெளிப்படுத்தி இருக்கிறாரா?


அவரின் இந்த எதிர்மறை மனோபாவம் என்னை எந்த அளவிற்குப் பாதிக்கிறது?


இந்த நபரின் எதிர்மறை மனோபாவம் மாறும் வரை பொறுத்துப் பார்க்கலாம் என்னும் அளவிற்கு தன்னுடைய நேரத்தைச் செலழிக்கத் தயாராக இருக்கிறீர்களா?


அவருடைய எதிர்மறை மனோபாவத்தை மாற்றுவதற்கான முயற்சியைச் செய்து பார்க்கத் தயாராக இருக்கிறீர்களா?



மேற்கண்ட கேள்விகளில் ஏதாவது ஒன்றிற்கு ‘இல்லை’ என்றபதில் உங்களிடமிருந்து வந்தால் அந்த இடத்தை விட்டு அமைதியாக வந்துவிடுங்கள். தயவு செய்து உங்களுடைய ஆத்திரத்தை, கோபத்தை வெளிப்படுத்தி விடாதீர்கள். அது தான் உங்களுக்கு நல்லது. மேற்கண்ட கேள்விகளுக்கு ஆமாம் என்று பதில் கூறினால் இரண்டாவது படிக்குச் செல்லுங்கள்.

உண்மையான காரணத்தைக் கண்டறியுங்கள்:

அந்த நபரைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அவர் திடீரென இவ்வாறு நடந்து கொண்டதற்கான காரணத்தைக் கண்டறிய முயற்சி செய்யுங்கள். ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகத்தான் உங்களிடம் அவ்வாறு நடந்து கொண்டாரா? என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் நிலையை விளக்குங்கள். ஆனால் சமயம் பார்த்து இதனைச் செய்ய வேண்டும். பொறுமையாக இருங்கள். உங்களின் அமைதி, மௌனம் நிச்சயமாக அவரைச் சோதிக்கும்.

நீங்கள் கொஞ்சம் பொறுமையாக நடந்து கொண்டால்….. எவ்வளவு உயர் பதவிகளில் இருப்பவர்கள் கூட அவர்களுடைய கோபம் தணிந்தவுடன், மனநிலை மாற்றம் ஆனவுடன் உங்களிடம் அவ்வாறு நடந்து கொண்டதற்கு வருந்துவார். உங்களை அழைத்துப் பேசுவார். அவ்வாறு பேசத் தயாராகும் போது நீங்கள் இயல்பாக அவரை வரவேற்பது போல, உற்சாகப்படுத்துவது போலப் பேசவேண்டும். உங்களின் உண்மையான விளக்கத்தை இப்போது கூறலாம். இப்படியெல்லாம் நடக்கும் என்றநம்பிக்கை உங்களுக்கு இருந்தால் மூன்றாவது படிக்குச் செல்லுங்கள்.

மனநிலையை மாற்றுங்கள்:

இப்போது அவரது மனநிலையை உங்களுடைய நேர்மறைச் சிந்தனையால் மாற்றமுயற்சியுங்கள். பிரச்சனையைத் தெளிவாகப் பேசிவிடுங்கள். உங்களின் மேல் தவறுகள் இருந்தால் தாராளமாக மன்னிப்புக் கேளுங்கள். மீண்டும் நடக்காது என்பதை நிச்சயப்படுத்துங்கள். உங்களிடம் தவறு இல்லையென்றால் அது போன்றசூழ்நிலைக்கு யார்? அல்லது எது காரணம்? என்பதைக் கண்டறியுங்கள். ஏனென்றால் புரிதலின்மை (Misunderstanding) என்பது பெரும்பாலான உறவுகளைப் பிரிக்கிறது. இதனை சரியான புரிதல்கள் (Understanding) மூலம் தான் தீர்க்க முடியும். மனம் விட்டுப் பேசுவதன் மூலமும் கேள்விகள் கேட்டு உண்மைகளைக் கண்டறிவதன் மூலம் தான் அதைச் சரி செய்ய முடியும். ஆனால், அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். உங்களைப் பற்றி ஒருவருக்குத் தவறான அபிப்ராயம் ஏற்படுகிறது என்றால் அதை மாற்றவேண்டியது உங்களின் கடமை. ஆனால் அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை என்று நீங்கள் நினைத்தால் அது நிச்சயமாய் ஏதாவது ஒரு விதத்தில் உங்களைப் பாதிக்கும்.

பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுங்கள்

o பிரச்சனைகளைக் கண்டறிந்த பிறகு அதற்கானத் தீர்வுகளைக் கண்டறியுங்கள்.

o என்ன செய்தால் ஏற்பட்ட இழப்புகளைச் சரிசெய்ய முடியும் என்று எண்ணிப் பாருங்கள்

o அதற்கு ஒத்து வருகிறாரா? என்று ஆராய்ந்து பாருங்கள்.

o இருவரும் ஒத்துக்கொள்ளும் அளவிற்கு ஒரு முடிவினை நோக்கிச்செல்லுங்கள்.

o ஆனால், தீர்வு காணாமல் விட்டு விடாதீர்கள்.

o ஏனென்றால் அது எப்போதாவது அதே பிரச்சனையை மீண்டும் கிளப்பும்.

பழைய நிலைக்குத் திரும்புங்கள்:

இப்போது அந்த மனநிலை மாறி விட்டதென நீங்கள் நினைத்தால், அந்த நபரை இயல்பான சூழ்நிலைக்கு நீங்கள் கொண்டு வந்து விட்டால், கசப்புகளை நிச்சயமாக மறந்து இயல்பாகப் பேசுங்கள். கசப்புகளை, கோபங்களை மனத்திற்குள் வைத்து வெறும் ஒப்புக்குச் சிரிக்காதீர்கள். இப்போது அவரும் நீங்களும் நிச்சயமாக பழைய, இயல்பான, சுமூகமான, நட்பான சூழ்நிலைக்கு வந்து விட்டால் அதை முழு மனத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அவருக்கு நீங்கள் உத்தரவாதம் கொடுத்த அந்த விஷயத்தைச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.

இது நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களின் மதிப்பை உயர்த்திக் கொள்வதற்குத் துணைபுரியும். இதனையே உங்களின் குடும்பத்திலும், நண்பர்களிடத்தும் கூடச் செயல்படுத்திப் பார்க்கலாம்.

மர்மத்தீவு ஒரு பார்வை!

நம்முடன் பேசிக்கொண்டிருக்கும் ஒருவர் திடீரென பேசிக்கொண்டிருக்கும் போதே மாயமாய் மறைந்து விட்டால் எப்படி இருக்கும் ? பயமும், வியப்பும், திகிலும், பிரம்மையும் கலந்த அந்த நிகழ்வை எப்படி விளக்க முடியும்.

அப்படி மனிதர்களை மாயமாய் மறையச் செய்யும் ஒரு தீவே இருந்தால் ? திடுக்கிட வைக்கிறது இந்த கேள்வி. கூடவே ஒரு நல்ல ஹாலிவுட் திகில் படத்தைப் பார்க்கும் பரபரப்பையும் தருகிறது.

கென்ய ருடால்ஃப் ஏரியில் இருக்கிறது ஒரு குட்டி தீவு. என்வையிட்டினெட் தீவு என அழைக்கப்படும் அந்த தீவின் பொருள் “திரும்ப முடியாது” என்பது தான் என்கின்றனர் உள்ளூர் வாசிகள்.

ஒரு காலகட்டத்தில் நன்றாக, இயல்பாக இருந்த கிராமம் தான் அது. அங்கே இருந்த மக்கள் மீன் பிடித்தல், வேட்டையாடுதல் என பல தொழில்களை செய்து வந்தனர்.

அவர்கள் அடிக்கடி தீவை விட்டு வெளியே வந்து நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து அவர்களுக்கும் மீன், விலங்குகள் போன்றவற்றை அளிப்பதும் வழக்கமாக இருந்தது.

திடீரென சில நாட்களாக தீவிலிருந்து யாரும் வெளியே வரவில்லை. நாட்கள் செல்லச் செல்ல அந்த இடைவெளி அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதில் ஏதோ விஷயம் இருக்க வேண்டும் என நினைத்த மக்கள் அந்தத் தீவுக்குச் சென்று தகவல் அறிந்து வர விரும்பினார்கள்.

தீவுக்குள் சென்ற மக்கள் அதிர்ந்தனர். அங்கே குடிசைகள் எல்லாம் காலியாய் கிடந்தன. வேட்டையாடப்பட்ட விலங்குகளும், பிடிக்கப்பட்ட மீன்களும் அழுகிப் போய் கிடந்தன. ஆனால் மக்களின் சுவடுகள் கூட மிச்சமில்லை.

என்னவானார்கள் இவர்கள் ? எங்கே போனார்கள் ? எதுவும் தகவல் இல்லை ! பயந்து போன மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினர் தங்கள் இருப்பிடம் நோக்கி. அதன் பின் பறவைகளைத் தவிர யாரும் அந்த தீவில் தங்கள் நிழல்கள் விழ அனுமதிக்கவில்லை.

இப்போது அந்த இடம் சாபத்துக்குள்ளான, மர்மத் தீவாக இருக்கிறது.

அந்த தீவில் யாருமே தங்குவதில்லை, அங்கே தங்குபவர்கள் மாயமாகி விடுவார்கள் எனும் நம்பிக்கை தான் அதன் காரணம். சில கிலோமீட்டர் அகலமே உள்ள அந்த தீவு சபிக்கப்பட்ட தீவாக மக்களிடையே பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

அங்கே அப்படி என்ன மர்மம் தான் இருக்கிறது என யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.

1935 களில் மார்டின் ஷெஃப்லிஸ் மற்றும் பில் டேசன் இருவரும் விவியன் என்பவருடைய தலைமையில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருந்தனர்.

அந்த தீவில் இருக்கும் ரகசியம் என்ன என்று பார்த்து விடுவோமே என்று கங்கணம் கட்டிக் கொண்டு அந்தத் தீவில் இருவரும் சென்றனர்.

நாட்கள் நகர்ந்தன. போனவர்கள் திரும்பவில்லை. பதினைந்து நாட்கள் பொறுமையுடன் காத்திருந்தவர்களை பயம் பிடித்துக் கொண்டது. உடனே விவியன் பாதுகாவலர் குழுவை அந்தத் தீவுக்கு அனுப்பினார்.

பாதுகாவலர் படை காணாமல் போன இருவரையும் தேடி தீவுக்குள் நுழைந்தது. அக்கு வேறு ஆணி வேறாக தீவை சல்லடை போட்டுத் தேடியும் இருவரும் அகப்படவேயில்லை !

ஆளே இல்லாத ஒரு அமானுஷ்யக் கிராமமாக அது அமைதிக்குள் உறைந்து கிடந்தது.

திடுக்கிட்ட விவியன் அரசு உதவியுடனும், வாகனங்களுடனும் தீவை மீண்டும் ஒருமுறை தலைகீழாய் புரட்டித் தேடினார். ஊஹூம். ஒன்றும் கிடைக்கவில்லை.

தேடப் போனவர்கள் திரும்பி வந்ததே பெரிய விஷயம் என்று பேசிக் கொண்டனர் உள்ளூர் மக்கள்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!

 

ஒன்றாக கல்லூரியில் படித்து, பட்டம் வாங்கி வேலை தேடி கொண்டிருக்கும் நண்பர்கள் நாங்கள். மாநகரில் மூலைக்கு மூலை வசித்தாலும், ஒரு குறிப்பிட்ட நாளில் சந்தித்து, உரையாடி, ஆறுதல் தேடுவது வழக்கம். எங்கள் குழு நண்பனொருவனை இரண்டு வாரங்களாக காணவில்லை. என்னமோ ஏதோவென்று பதறி, அவனைக் காண, அவன் வீட்டுக்கு சென்றோம். வீட்டில் அவன் இல்லை. இரண்டு தெரு தள்ளி, ஒரு வீட்டில் அவன் இருப்பதாக கூறினர். அங்கு சென்றோம்.

குறிப்பிட்ட வீடு பூட்டப்பட்டிருக்க, நண்பனும் இன்னும் சிலரும், கையில் உருட்டுக் கட்டைகளோடு காவல் காத்துக் கொண்டிருந்தனர்.
"என்னடா விஷயம்?' என வினவினோம்...

"அது ஒண்ணுமில்லடா... இந்த வீட்டுல இருக்கிறவங்க, ஒரு வாரம் வெளியூர் போயிருக்காங்க. அவுங்க திரும்பி வர்ற வரைக்கும், வீட்டோட பாதுகாப்பை, எங்க பொறுப்புல ஏத்துக்கிட்டிருக்கோம். சும்மா,வெட்டியா ஊரை சுத்தி, வம்பு பேசிகிட்டுத் திரியுற நேரத்துல, இது மாதிரி ஏதாவது உருப்படியா செஞ்சா, "அட்லீஸ்ட்' நாம அப்ளிகேஷன் போடுற செலவுக்காவது ஆகுமே... அதுக்குத் தான்...' என்றான்.

ஆச்சரியமடைந்து, "இதுக்கு எவ்ளோடா சார்ஜ் பண்ணுவீங்க?' என்றோம்
"அது ஆளோட வசதியை பொறுத்தது. இது மிடில் கிளாஸ் பேமிலி. அதனால், இரண்டாயிரம் ரூபா சார்ஜ். இதே, ஹை கிளாஸ் வீடாக இருந்தால், ஐயாயிரம் முதல் ஏழாயிரம் ரூபாய் வரை வாங்குவோம். மேலும், பாதுகாக்க வேண்டிய நாளுக்கு ஏத்த மாதிரி, சார்ஜ் பண்ணுவோம். உள்ளுர் பிள்ளைகளாதலால், நம்பிக்கையாக ஒப்படைக்கின்றனர்...' என்று சொன்னான்.

"மனம் இருந்தால் மார்க்கம் உண்டு'ன்னு சும்மாவா சொன்னாங்க... எங்கள் ஏரியாவில், நாங்களும் ஒரு காவல்படை துவங்க முடிவு செய்து விட்டோம்.

தாயன்பு!

தாய் இல்லாமல் நாம் இல்லை; தாய் இன்றி உலகில் எவரும் பிறப்பதில்லை. என்பது உலகறிந்த உண்மை. தாய் எனும் சொல் நாடு, மண் ஆறு, கடல், இயற்கை…… மேலும் பலவற்றிற்கு உவமையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் தாய் மீது அன்பு செய்வது போல் நாட்டின் மேலும், மனிதர்கள், இயற்கை மற்றும் இதர உயிரினங்கள் மீதும் அன்பு செய்ய வேண்டும் என்பதற்காகவே. இவ்வலைப் பூ தாய் மடியின் இதத்தையும், தாய் நாட்டின் மடியை பங்கிடுவதில் சகோதர இனங்களுக்கிடையே வலுப்பெற்ற ஆயுதக் கலாச்சாரத்தையும், இதனால் தாய் நாட்டிற்கு ஏற்பட்ட வீழ்ச்சிகளையும், கடல் தாயின் கோர தாண்டவம், கலாச்சார சீரழிவுகள், பெண்ணுரிமை மற்றும்; சிறுவர் உரிமைகளையும் எடுத்துரைப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டது.

அ.. ன்.. பு.. எனும் இந்த மூன்று எழுத்துக்கள் இரத்தத்தில் கலந்து, நரம்புகளை மீட்டி, ஊணர்சிகளை மெருகூட்டி வார்தையாக வரும் பொழுது இந்த உலகையே கட்டி வைக்கும் வல்லமையைப் பெறுகிறது. இத்தகைய அன்பிற்காக ஏங்குவோர் எத்தனை பேர், கிடைக்காமல் இறந்தவர் எத்தனை பேர், கிடைத்ததை இழந்தவர் எத்தனை பேர் அனுபவித்தவர் எத்தனை பேர், ஆசை காட்டி மோசம் செய்வதை போல் அன்பை காட்டி துவம்சம் செய்பவர்கள் எத்தனை பேர் உண்மையான அன்புடன் ஒருவர் பழகினாலும், அதைனை உரசிப் பார்த்து உண்மை, பொய் அறிய வேண்டிய சூழல்.

நம் கண்ணாடி மனதில் கல் வீசி விளையாடும் சமூகத்திலிருந்து நம்மை பாதுகாப்பவள் தாய். சோற்றோடு அன்பையும் சேர்த்தே ஊட்டியவள். வைரத்தைப் போலவே தாயும் பன்முகம் கொண்டவள். கணவனுக்காகவும், குடும்பத்திற்காகவும், குழந்தைக்காகவும், தன் தேவைகளை தியாகம் செய்தவள். இப்படித்தாங்க chemistry பாடத்தில் fail- ஆகி டீச்சரிடம் செமத்தியா, அழாம (ஏனெண்டா நான் படிச்சது coeducation School) அடி வாங்கிட்டு அப்படியே நேரா வீட்டுக்கு வந்து அப்பாட்ட நாலு குட்டு வாங்கிட்டு ஆள விட்டா போதும் சாமியோவ் எண்டு ஓடிப்போய் அம்மா மடியில தலைய வச்சு ஓன்னு அழுதா இருக்கிற சுகம் இருக்கே.

நான் அழ, அம்மா ஆறுதல் சொல்ல, அப்பாவுக்கு வீடே போர்க்களமாயிரும். திரும்பி வந்து என்னை தவணை முறையில் அடிச்சுப் போட்டு என்ட சத்தம் தாங்கமுடியாம புறமுதுகிடுவார் அப்பா. இப்படி அடிக்கடி அப்பாவை புறமுதுகிட வைத்துள்ளேன். அப்பொழுதெல்லாம் என்னை தலைகோதி, தன்னோடு அணைத்து, கண்ணீரைத் துடைத்து சிறந்த தளபதியாக இருந்தவர் தாய். அப்பாவின் அடிக்கு பயந்து எத்தனையோ குழந்தைகள் வீட்டை விட்டே ஓடுகிறார்கள். அவர்களை ஓடாமல் கட்டிப்போடும் அன்புச் சங்கிலி தாயிடமே உள்ளது.

ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்..!



நடிகர் : விமல், பார்த்திபன்

நடிகை : மனிஷா, பூர்ணா

இயக்குனர் : கரு.பழனியப்பன்

இசை : வித்யாசாகர்

ஓளிப்பதிவு : அர்பிந்து சாரா



பழனி-பண்ணக்காடு வழித்தடத்தில் செல்லும் ஒரு அரசு பேருந்தை மையமாக வைத்து கதை ஆரம்பிக்கிறது. இந்த பஸ் பழனியில் இருந்து தினமும் மாலை பண்ணக்காடுக்கும், மறுநாள் காலை பண்ணக்காட்டில் இருந்து பழனிக்கும் செல்லும். இந்த பஸ்சின் டிரைவர் பார்த்திபன் சீனியர். கண்டக்டராக வரும் விமல் வேலைக்கு புதுசு.

இந்த பஸ் ஒரு தடவை மட்டும் செல்வதால், டிரைவர்-கண்டக்டர் இரவில் பண்ணக்காடு பகுதியில் தங்குவது வழக்கம். இதனால் அப்பகுதி மக்களுடன் நண்பர்களாக பழகி வருகின்றனர். இவர்களுக்கு பண்ணக்காட்டில் தங்குவதற்கு இடம், உணவு அனைத்தையும் பொதுமக்களே செய்து தருகிறார்கள்.

பார்த்திபன் சீனியர் டிரைவர் என்று சொல்லிக் கொண்டு எப்போதும் போதையில் வண்டி ஓட்டுகிறார். இந்த பஸ்சில் தான் பண்ணக்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் வழக்கமாக பழனிக்கு செல்வார்கள். அதில் ஒரு பெண்ணாக மனிஷா வருகிறார். அவளை பார்த்தவுடன் மயங்குகிறார் விமல். அவருடைய காதலை அவளிடம் சொல்ல முயற்சிக்கிறார். மனிஷாவும் காதலை ஏற்றுக் கொள்கிறார்.

அண்ணா சார் என்ற பள்ளி வாத்தியாராக வருகிறார் ராஜேஷ். இவர் தன் நண்பரின் மகளான பூர்ணாவை தன் மகள் போன்று வளத்து வருகிறார். ஆசிரியையான பூர்ணாவை தன் வீட்டிலேயே தங்க வைத்திருக்கிறார்.

அந்த ஊரில் வசிக்கும் ரமணா, தன் தாயுடன் ராஜேஷ் வீட்டிற்கு சென்று பூர்ணாவை தனக்கு திருமணம் செய்து தரும்படி கேட்கிறார். அதை மறுக்கும் ராஜேஷ், “என் மகனுக்கு பூர்ணாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறேன். அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். மகன் ஊர் திருவிழாவுக்கு வரும் பொழுது திருமண நடத்த போகிறேன்” என்று கூறுகிறார்.

இதற்கிடையே அந்த ஊரின் டேம் பொறுப்பாளரான விதார்த், அந்த வேலையை மட்டும் செய்யாமல் ஊரில் உள்ள அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்கிறார். ராஜேஷ் மகனுக்கு நண்பர் என்பதால், அவரது வீட்டில் உள்ள அனைத்து வேலையையும் செய்கிறார்.

ஒரு கட்டத்தில் பழனியில் இருந்து பண்ணக்காடுக்கு பஸ் செல்லும் பொழுது வண்டி இன்ஜின் கோளாறு காரணமாக பாதி வழியில் நிற்கிறது. அதனை சரிசெய்யும் மெக்கானிக்கான சந்தான பாரதி, வண்டியை தன் உதவியாளரை சரி செய்ய சொல்லிவிட்டு பார்த்திபனுடன் சேர்ந்து மது அருந்துகிறார்.

இருவரும் நிலை தெரியாத அளவுக்கு மது அருந்திக்கொண்டிருக்கும் பொழுது வண்டி சரியாகி விடுகிறது. பார்த்திபனால் வண்டி ஓட்ட முடியாத சூழ்நிலையில் இருக்க, பஸ்சை விமல் ஓட்டிச் செல்கிறார். இருவரும் பாட்டுப் பாடிக்கொண்டி செல்கிறார்கள். அந்த நேரத்தில் ஒருவன் வண்டி முன்பு வந்து விழுந்து விடுகிறான். தலையில் பலத்த அடிபட்டு கிடக்கும் அவனை அந்த வழியில் வரும் ஒரு ஜீப்பில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறுகிறார்கள்.

நான் தான் அவன்மீது ஏற்றி விட்டேன் என்று நினைக்கும் விமல், பயத்துடன் அடிப்பட்டவன் பையை எடுத்துக் கொண்டு பண்ணக்காடு செல்கிறார். அந்த பையை திறந்து பார்க்கும் விமல், அடிப்பட்டவன் ராஜேஷின் மகன் என்று தெரிந்து கொள்கிறான். அதை ஊர் மக்கள் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று பார்த்திபன் சொல்ல, சொல்ல முடியாமல் விமல் தவிக்கிறான்.

இறுதியில் அடிப்பட்டவன் நிலை என்ன? விமல் ஊர் மக்களிடம் உண்மையை சொன்னானா? உண்மையாக அவன் எப்படி அடிப்பட்டான் என்பதே மீதிக்கதை.

கருப்பு என்னும் பார்த்திபன், நக்கல், நையாண்டி என அவருக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார். சுப்பையாவாக வரும் விமல் நல்ல கண்டக்டராக நடித்திருக்கிறார். இவருக்கும் மனிஷாவிற்கும் இடையேயான காதல் காட்சிகளில் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சாமி கதாபாத்திரத்தில் வரும் விதார்த்துக்கு, நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் கிடைத்திருக்கிறது. அதை திறமையாக செய்திருக்கிறார்.

பாவாடை தாவணியில் வரும் மனிஷாவுக்கு கிராமத்து வேடம் பொருந்தவில்லை. டீச்சரான பூர்ணாவும் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ரமணா, சிங்கம்புலி, மோனிகா என படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும் சிலர் மட்டுமே மனதில் பதிகிறார்கள்.

யுகபாரதியின் பாடல் வரிகளில் வித்யாசாகரின் இசையில் ஒரு சில பாடல்கள் மட்டுமே ரசிக்க முடிகிறது. அர்பிந்து சாரா ஒளிப்பதிவில் மலைப்பகுதிகளை அழகாக நம் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். இதுவரை நேரடி தமிழ் படங்களையே எடுத்து வந்த கரு.பழனியப்பன் முதல் முறையாக மலையாளத்தில் இருந்து இப்படத்தை தமிழுக்கு கொண்டு வந்து வெற்றி பெற முயற்சித்திருக்கிறார்.

பேருந்தில் நடக்கும் சம்பவங்களை அதிகப்படியாக வைத்திருந்தால் ரசிகர்கள் இன்னும் ரசித்திருக்கலாம்.

மொத்தத்தில் 'ஜன்னல் ஓரம்'  மிதமான காற்று வருகிறது.

மருந்துக் கடையின் பொறுப்பான செயல்!

 
 நான், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். சமீபத்தில், உடல் நல குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். மருத்துவரின் ஆலோசனையை பெற்று, அவர் அளித்த மருந்து சீட்டுடன், அருகில் இருந்த மருந்து கடைக்கு சென்றேன்.


மருந்து சீட்டை பெற்ற கடை ஊழியர், குறிப்பிட்ட மருந்து, மாத்திரைகளை எடுத்து வைத்து, ஒவ்வொரு மருந்து அட்டையின் பின்புறமும், ஸ்டிக்கர் ஒன்றை ஓட்டினார். அதை கவனித்த எனக்கு ஆச்சரியம். அந்த ஸ்டிக்கரில், காலை, மதியம், இரவு என, தமிழில் எழுதி இருந்தது.


இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "மருத்துவர்களின் கையெழுத்து புரியாத சிலர், காலையில் எடுக்க வேண்டிய மருந்தை இரவிலும், மதியம் எடுக்க வேண்டிய மருந்தை காலையிலும் உட்கொள்கின்றனர். வெறும் வாய் வார்த்தையால் நாங்கள் சொன்னால், அதை அவர்கள் மறந்து விடுவர். இதைத் தவிர்க்கவே, இந்த ஸ்டிக்கரை ஒட்டுகிறோம். என்னென்ன மாத்திரை எந்தந்த வேளைக்கு சாப்பிட வேண்டும் என, இதில் குறிப்பிட்டு விட்டால், குழப்பம் இருக்காது...' என்றார்.


தெருவிற்கு தெரு மருந்து கடைகள் முளைத்து விட்ட இக்காலத்தில், வெறும் வியாபார நோக்கோடு மட்டும் அல்லாமல், கடமை உணர்வோடு, மற்ற மருந்து கடைக்காரர்களும் இதை பின்பற்றலாமே!

பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்!



1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.

2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.

3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.

4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)

5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.

6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.

7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.

8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.

9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.

10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.

11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.

12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.

13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆய்வுகளின் நம்பகத் தன்மை:
1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.

2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.

4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.

6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.

7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.

ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:


1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.

7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.

8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.

சளிதொல்லையிலிருந்து விடுபட!


பாதுகாப்பு முறை:

சளி பிடித் திருந்தால் நோய்த் தொற்றைத் தடுக்க திறந்த வெளிகளில் விற்கும் உணவு மற்றும் பழ வகைகள், பழச்சாறுகள் சாப்பிடக் கூடாது. பனியால் ஏற்படும் தோல் வறட்சியை விரட்ட வெளியில் சென்று வந்த பின்னர் தண்ணீரில் முகம் கழுவவும். மாய்சரைசிங் சோப்பை மட்டுமே பயன்படுத்தவும்.


வெயில் மற்றும் பனியால் தோலுக்கு ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க தரமான கிரீம்களை பயன்படுத்தலாம். பனிக்காலத்தில் முடி கொட்டும். இதைத் தடுக்க முடி வறட்சியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். குளிர் காலத்தில் அடிக்கடி நாக்கு வறட்சி ஏற்படும். தாகம் தீர நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பிரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களை அப்படியே சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அவற்றை சூடுபடுத்தி சாப்பிட வேண்டும். தலைவலி மற்றும் சளித் தொல்லையின் போது டீ, காபி தவிர்க்கவும்.


சில தீர்வுகள் :

 * எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும்.

 * எலுமிச்சை பழச்சாற்றை காபியில் கலந்து குடிப்பதன் மூலம் தலைவலி தீரும். எலுமிச்சை இலைகளை தேநீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

 * கடல் அழிஞ்சில் பட்டை, திப்பிலி, தாளிசபத்திரி மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் பொடியை தினமும் இரண்டு வேளை தேனில் குழைத்து சாப்பிடலாம். சளி, இருமல், தும்மல் மற்றும் அலர்ஜியில் இருந்து தீர்வு கிடைக்கும்.

 * கடுகை பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும்.

 * அரைக் கீரை தண்டுடன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில் குடித்தால் சளி, இருமல் மற்றும் நுரையீரல்
 தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

 * அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மார்பு சளி குணமாகும்.

 * ஆடாதொடா இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் சளித் தொல்லை தீரும்.

 * ஆலமர விழுதை பொடி செய்து காலை, மாலையில் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

சைகோடிரியா எலாட்டாக்கு முத்தம் கொடுக்க வாரீகளா!

 

பெண்களின் உதடுகள் போன்று, மிக அழகாக, சிவப்பாக இருக்கும் இந்த இதழ்கள், "சைகோடிரியா எலாட்டா' எனும், ஒரு வகை தாவரத்துடையது. இவ்வகை செடிகள், மழை அதிகம் பொழியும் கொலம்பியா, கோஸ்டாரீகா, பனாமா போன்ற நாடுகளில், அதிகமாக காணப்படுகின்றன.


இதனை, "ஊக்கர்ஸ் லிப்ஸ்' என்று அழைப்பர். இந்த இதழ்கள், சின்ன சின்ன பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளை தன் பக்கம் இழுத்து விடும் தன்மை கொண்டது.


பார்த்ததும், நம்மை முத்தம் கொடுக்கத் தூண்டும் இவ்விதழ்கள், நீண்ட நேரம் இப்படியே இருக்காது. காரணம், இரண்டு இதழ்களுக்கு இடையிலிருந்து குட்டி குட்டி பூக்கள் பூக்கும் என்பது தான், ஆச்சரியமான விஷயம்.

சுற்றுகிற வரைதான் பூமி – போராடுகிற வரைதான் மனிதன்!


இலைகளை உதிர்த்துவிட்டு வெள்ளாடை கட்டாத விதவையாய் மரங்களெல்லாம் வாடி நிற்கிறபோது இதோ அவை துளிர்த்து சிரிக்கிற வசந்த காலத்தை நினைத்தால் மகிழ்ச்சியளிக்கிறது.

ஆற்றுப் படுகையின் வெடிப்புகளைப் பார்க்கிறபோதெல்லாம் நாளை அங்கு ஈரவாடையோடு பசுமை நம்பிக்கைக் கோலங்கள் வரைவதை நினைத்தால் உற்சாகம் உள்ளூர ஊற்றெடுக்கிறது.

கோடை காலத்தில் வெப்பம் தகித்து வியர்வை ஆறு ஓடுகிறபோது தை மாத சுகந்தமான குளிர்க்காற்று மனத்திற்கு சுகாமாயிருக்கிறது.

வெப்பமும், வெதுவெதுப்பும், குளிரும், கூதலும் ஒரு வருடத்தின் பருவங்கள் அதுபோலத்தான் மனிதவாழ்விலும் சுகமும் துக்கமும் வந்து போகும்.

இன்றைய இரவு நாளை விடிந்து விடும்; துன்பங்கள் துயரங்கள் மடிந்து விடும். நடக்கிறவரை நட பாலைவனப் பயணத்திலும் ஒருநாள் பசுஞ்சோலை தென்படும் என்ற நம்பிக்கையோடு நட.

முள்செடியின் கீறல்களை சகித்துக்கொள்ளாவிட்டால் தேன் எப்படி எடுக்க இயலும்?. கல்லிலும் கால் நடக்காது; முள்ளிலும் வதைபடாது ஒரு காலும் முன்னேற்றத்தை முத்தமிட முடியாது தோழா.

உயர்வின் உச்சியிலே ஒளி வீசிக்கொண்டிருக்கும் உயர்ந்த மனிதர்களின் உயரத்தை மட்டுமே நம்மில் பலர் எண்ணி வியக்கின்றோமேயொழிய அந்த நிலைக்குயர அவர்கள் பட்ட துன்பங்களையும் எடுத்தத் தொடர் முயற்சிகளையும் எண்ணிப்பார்ப்பதில்லை.

தந்தையின் திருவாக்கைக் காப்பதற்கு பதினான்கு ஆண்டுகள் கானகம் செல்ல துணியாவிட்டால் இன்று இராமன் நாமமில்லை
தோளிலே சிலுவை சுமந்து கல்வாரிக்கு நடக்காவிட்டால் இயேசு பிரானுமில்லை; கபிலவஸ்துவைவிட்டு வெளியேறாவிட்டால் போதிமர புத்தனுமில்லை.

கல்லடி, சொல்லிடி, கொலை மிரட்டல் போன்ற எதிர்ப்புகளை பொறுமையோடும் நம்பிக்கையோடும் சமாளித்தப் பின்னரே நபிகள் இஸ்லாத்தை உலகுக்குப் பரப்பினார்.


வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வியையே தழுவிய ஆப்ரகாம் லிங்கன் பின்னாளில் அதிபராக எழவில்லையா?

எத்துணை தோல்விகளையும் வெற்றியாக உருமாற்றிய எடிசனை உலகம் கொண்டாடவில்லையா? உடல் பழுதுபட்டாலும் உயர் எழுத்துக்களால் எலன் கெல்லர் பிரகாசிக்கவில்லையா?


இன்றும் நம்மோடு வாழும் சிலர் புயலையும் கடந்து வெள்ளி நிலவாய் பிரகாசிக்க நாம் மட்டும் இயலாமைகளையே வாழும் இலக்கணமாய் வைத்துக்கொண்டு வாழ்வது தகுமா?

நமது சொந்தச் சிறைகளிலிருந்து முதலில் வெளியேற வேண்டும். காட்டு யானையைப் பழக்குவதற்காக முதலில் அதன் காலை சங்கிலியால் பிணித்துத் தூணில் கட்டுவார்கள்.

காலப்போக்கில் எதிலும் கட்டப்படாத சிறிய சங்கிலி மட்டுமே அதன் காலில் தொங்க அந்த யானை நினைவால் வாழ்நாள் முழுவதும் சிறைப்பட்டிருக்கும்.
நாம் என்ன நினைக்கின்றோமோ அதுவாகவே ஆகிறோம் என்பது மாபெரும் உண்மை. நம்பிக்கையோடு நாள்களை நடத்திக் கொண்டிருப்பவர் வெள்ளி நட்சத்திரமாகிறார். நம்பிக்கை நலிந்து போனவர் தம்முள் நரகத்தை உருவாக்கி தம்மையே பலியிட்டுக் கொள்கிறார்.

எல்லா இரவுகளும் விடிந்திருக்கின்றன; நாளை விடியல் இல்லையென்று யார் கூறினாலும் நாம் ஏற்கப் போவதில்லை.


மனிதர்கள் வெறும் காற்றைச் சுவாசிப்பதால் வாழவில்லை; நம்பிக்கையைச் சுவாசிப்பதால்தான் வாழ்கிறார்கள். பிழைக்கவே மாட்டேன் என நினைக்கும் நோயாளிக்கு எத்தகைய மருந்து கொடுத்தும் பயனென்ன?

தூந்திர வெளிகளில் துயரத்தையே சுவாசித்துக் கொண்டிருக்கின்ற எஸ்கிமோக்களை வாழவைப்பதே என்றேனும் ஒரு பொழுது சூரியக் கதிர் எட்டிப் பார்க்குமென்ற நம்பிக்கைதான்.


எப்போதும் வெளிச்சத்தை நோக்கி நடக்க வேண்டும். நிதமும் எதிர்காலம் ஒளிமயமானது என்கிற நம்பிக்கையைச் சுமந்து நடைபயில வேண்டும். அப்போதுதான் இந்த வாழ்க்கையின் மீது சலிப்போ வெறுப்போ இருக்காது.

பாதைகள் பசுமையானவை; பயணங்கள் இனிமையானவை என்று நிதமும் எண்ண வேண்டும். துன்பங்கள் எதிர்பட்டாலும் அதைக் கண்டு துவண்டுவிடாமல் மேலே மேலே முன்னேற வேண்டும்.
துன்பம் தொடாத மனிதன் யாரேனும் உண்டா? துன்பத்தைத் தாங்கிக்கொண்டு நம்பிக்கையோடு பயணம் செய்தால் இன்பம் தானாக நம்மை வாழ்த்தும்.

சுடச்சுடத்தான் தங்கம் ஒளிரும்; பட்டை தீட்டத் தீட்டத்தான் வைரம் ஒளி வீசும். அதுபோல நம்மை வருத்தும் துயரம் யாவும் நம்மை பக்குவப்படுத்தி சிறந்த மனிதனாக உருவாக்குகின்றது. வாழ்க்கையை வளப்படுத்தும் நோக்கிலே எதிர்படும் சவால்களை நம்பிக்கையோடு போராடி வெல்ல வேண்டும்.

‘சுற்றுகிற வரைதான் பூமி – போராடுகிற வரைதான் மனிதன்’ என்ற கவிஞர் வைரமுத்து கூற்றுக்கிணங்க முன்னேற்றத்தைத் தரிசிக்க முட்டுக்கட்டைகளை எல்லாம் தகர்த்தெறிந்து போராடுகிறவனே மனிதன்.
நமது முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு. பசுமையான நிலத்தில் தூவப்பட்ட விதைகள் முளைக்காமல் போனதில்லை. நம்பிக்கை நம்மை மனிதர்களாக்கின்ற மகாமந்திரம்.

நம்பிக்கைதான் வாழ்க்கை. அதை எப்போதும் நெஞ்சிலே வைத்து வளர்த்தாக வேண்டும்.

‘காலம் இருண்டிருந்தாலும் இதயத்தையே தீபமாகப் பிடித்துக்கொண்டு தீர்க்க தரிசனத்தோடு முன்னேறுவோம், உழைப்புச் செங்கோலை உயர்த்திப் பிடிப்போம், நம் காலடிச் சுவடுகளால் எதிர்காலங்கள் பிரகாசிகட்டும்’ என்ற சூரிய காந்தன் வரிகளை துவழும் போதெல்லாம் நினைவு கொள்வோம்

எது இன்பம்...?


நம்முடைய தேவைகளே நமது சொர்க்கங்களை உருவாக்குகின்றன. நம் தேவைகளின் மாறுதலுக்கேற்ப,நமது சொர்க்கங்களும் மாறுகின்றன.


புலன்களின் மகிழ்ச்சி வாழ்க்கையின் எல்லா விசயங்களிலும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் நிர்மாணிக்கும் சொர்க்கத்தை போன்றதொரு சொர்க்கம் அமைந்தால் நாம் முன்னேறவே இயலாது!


நாம் அடையக்கூடியது இவ்வளவுதானா?


சிறிது காலம் அழுகின்றோம்;


சிறிது காலம் சிரிக்கின்றோம்;


கடைசியில் எல்லாம் இழந்து இறந்து போகின்றோம்!


உலக வாழ்க்கையின் இன்பங்களை துரத்திக்கொண்டே போகின்றோம் எது உண்மையான இன்பம் என்று தெரியாமலே....?


இன்பத்தை விட்டுவிடச்சொல்லி நம்மை தத்துவங்கள் ஒருபோதும் வற்புறுத்துவதில்லை.மாறாக எது உண்மையான இன்பம் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள் என்றே கூறுகிறது.

திருட்டு மொபைலை மோப்பம் பிடிக்கும் ஸ்மார்ட் சிம்!

 

மொபைல் திருட்டு போனால் ஒரே வழி அதை மறந்து விட வேண்டும் ஏன் என்றல் எடுத்தவன் டக்குனு ஆஃப் பண்ணி விடுவதுதான்.

 அப்புறம் ஆஃப்லைன்ல சிம்மை எடுத்திட்டு ரீஸெட் பண்ணி ஒன்று அவன் உபயோகிப்பான் அல்லது விற்று விடுகிறார்கள். அதனால் ஐ எம் ஐ வைத்தெல்லாம் கண்டுபிடிப்பது மிகுந்த சிரமத்துக்குள்ளாகி விடுகிறது.

அதனை போக்க ரஷியாவின் மாஸ்கோ மெட்ரோ போலீஸ் ஒவ்வொரு மெட்ரோ ஸ்டேஷ்னிலும் ஒரு மோப்பம் பிடிக்கும் சிம் போல நிறுவ உள்ளனர். இது எங்கே எங்கே நிறுவபட்டிருக்கிறது என்ற தகவல் போலீஸுக்கு மட்டும் தான் தெரியும்.

 இதனால் நீங்கள் தொலைத்த மொபைல் ஃபோனை உடனே போலீஸில் தெரிவித்தால் அவர்கள் திருட்டு ஃபோன் டேட்டாபேஸில் இந்த ஃபோனை லிஸ்ட் செய்து விடுவார்கள்.

பின்னர் இதை எடுத்த நல்லவன் வேறு சிம்மோ அல்லது சைலைன்ட்டாய் யூஸ் பண்ணினால் உடனே சங்கூதி போலீஸுக்கு அலெர்ட் செய்து விடும்.

அது போக அவர் மெட்ரோ ஸ்டேஷனுக்குள் இருக்கும் வரை அலெர்ட் செய்து அவரது தற்போதைய மூவென்ட்டை லைவாய் காட்டி விடுமாக்கும்.அப்புறம் என்ன காப்பு காப்புதான்.!

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்!

 

உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?


அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.


அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.


அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.


ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான். ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.


ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான், அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.


அடிபட்டுக் கிடக்கிறான் செட்டி, அவனை அழைத்து வா, பணம் பாக்கி என்கிறான் பட்டி.


ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?


இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்


இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்.


இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.


இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன?


உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது.


உதடு மன்றாடப் போய் உள்ளிருந்த பல்லும் போனாற் போல.


உபாயத்தால் ஆகிறது பராக்கிரமத்தால் ஆகுமா?


பசித்தவன் எதையும் தின்பான். பகைத்தவன் எதையும் சொல்வான்.


 ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி


கடுங்காற்று மழை கூட்டும். கடும் சினேகம் பகை கூட்டும்.


வீட்டு வாசலில் காவேரி, முழுக மாட்டாளாம் மூதேவி.


குண்டு பட்டு சாகாதவன் வண்டு கடித்துச் செத்தானாம்


பண்ணிய பாவத்தைப் பட்டுத் தான் தொலைக்க வேண்டும்.


காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.


தலைக்குத் தலை அம்பலம். உலைக்கு அரிசி இல்லை.


நீரிலும் நனைய மாட்டான். நெருப்பிலும் வேக மாட்டான்.


அசை போட்டுத் தின்பது மாடு; அசையாமல் தின்பது வீடு.


ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம். இறங்கச் சொன்னால் நொண்டிக்குப் கோபம்.


அஞ்சு காசுக்குக் குதிரையும் வேணும். அது ஆற்றைக் கடந்து பாயவும் வேணும்.


அறுவடைக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.


மேய்த்தால் கழுதை மேய்ப்பேன். இல்லா விட்டால் பரதேசி ஆவேன்.


அன்ன நடை நடக்கப் போய் தன்னடையும் கெட்டுப் போச்சு.


குதிரை செத்ததும் இல்லாமல் குழி தோண்ட மூணு பணம்.


எண்ணம் எல்லாம் பொய், எமன் ஓலை மெய்.


என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருகிறாய்?


கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப் பாட்டா?


எள் எண்ணெய்க்குக் காய்கிறது. எலிப் புழுக்கை எதற்குக் காய்கிறது?


கோழி களவு போனதற்கு ஆடு வெட்டியா பொங்கல் இடுவார்கள்?


பூனைக்குப் பயந்து புலியிடம் போகலாமா?


சத்திரத்து சோத்துக்கு தாத்தய்யங்கார் உத்தரவு எதற்கு?


வேகாத சோத்துக்கு விருந்தாளி இரண்டு பேர்.


தானாகக் கெடுத்தது பாதி; தம்பிரான் கெடுத்தது பாதி.


தலைவலியும் தரித்திரமும் தனக்கு வந்தால் தெரியும்.


பறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை.


உடையவன் பாராத வேலை உருப்படாது.


தூங்குகிற மணியக்காரனை எழுப்பினால் பழைய கந்தாயம் கேட்டானாம்.


எடுக்கிறது எருமைச்சாணி, படுக்கிறது பஞ்சு மெத்தை


ஆசை தீர அனுபவித்தவனும் இல்லை, அள்ளிக்கொடுத்து கெட்டவனும் இல்லை.


இன்றைக்கு என்பதும், நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்


அஞ்சினவனைக் குஞ்சும் விரட்டும்.


தாய் அறியாத சூல் இல்லை. மனம் அறியாத பொய் இல்லை.


வைத்தியன் பிள்ளை மருந்தினால் சாகும்.


ஆயிரம் காக்கையை ஓட்ட ஒரு கல் போதும்.


காற்றில்லாமல் தூசு பறக்காது.


காவடிப்பாரம் சுமப்பவனுக்குத் தான் தெரியும்.


எகிறி எகிறி குதித்தாலும் எட்டு பத்தாகாது.


சாட்டை அடியும் சவுக்கடியும் தாங்கலாம்
மூட்டைக் கடியும் முணுமுணுப்பும் ஆகாது.


பனி பெய்து குளம் நிரம்பாது.


பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.


நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டி சுமப்பது புல் சுமையே.


பொன்குடத்திற்குப் பொட்டு தேவையில்லை.


இழவுக்கு வந்தவளா தாலி அறுப்பாள்?


மூன்று செவிக்கு எட்டின செய்தி மூடுமந்திரம் ஆகாது.


    காலம் போகும் வார்த்தை நிற்கும். கப்பல் போகும் துறை நிற்கும். (துறை=துறைமுகம்)
 

  அறிந்தவன் என்று கும்பிட்டால் அடிமை என்று சொல்லுவதா?


    ஆற்றிலே நின்று அரகரா என்றாலும் சோற்றிலே இருக்கார் சொக்கலிங்கம்.


    சுடுகாடு போன பிணம் வீடு திரும்பாது.


    இட்டது எல்லாம் பயிராகாது. பெற்றது எல்லாம் பிள்ளையாகாது.


    வாய் நல்லதானால் ஊர் நல்லது.


    கேடு வரும் பின்னே. மதி கெட்டு வரும் முன்னே.


    காரியம் பெரிதேயன்றி வீரியம் பெரியதல்ல.


    மயிர் சுட்டுக் கரியாகாது.


    ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்காது.


    விசாரம் முற்றினால் வியாதி. (விசாரம்=கவலை)


    திரு உண்டானால் திறமையும் உண்டாகும். (திரு=செல்வம்)


    பல்லக்கு ஏற பாக்கியம் உண்டு; உந்தி ஏற சீவன் இல்லை. (சீவன்=உடல் சக்தி)


    ஆசை இருக்குது தாசில் பண்ண; அம்சம் இருக்குது கழுதை மேய்க்க.


    ஞானிக்கு இல்லை நாளும் கிழமையும்.


    ஆற்று மணலில் கிடந்து புரண்டாலும் ஒட்டுகிறது தான் ஒட்டும்.


    தலையை சிரைப்பதால் தலையெழுத்து மாறாது.


    அரண்மனைக் கோழிமுட்டை அம்மியையும் உடைக்கும்.


    அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.


    தின்னப் படை உண்டு; வெல்லப் படை இல்லை.


    எட்டினால் சிண்டைப் பிடி; எட்டாவிட்டால் காலைப் பிடி.


வாழைப்பழம் கொண்டு வந்தவள் வாசலிலே. வாய் கொண்டு வந்தவள் வீட்டுக்குள்ளே.


    சாமி காட்டுமே தவிர ஊட்டாது.


    அறப்படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.


    இளமையில் கல்வி, சிலையில் எழுத்து.


    உலக்கைப் பூசைக்கு அசையாதவள் திருப்பாட்டுக்கு அசைய மாட்டாள்.


    கொண்டவன் தூற்றினால் கண்டவன் தூற்றுவான்.


    தெய்வம் பாதி திறமை பாதி.


    தளுக்கும் மினுக்கும் தாம்பத்தியம் ஆகாது.


    ஆங்காரத்தினால் அழிந்தவர்கள் ஆயிரம் பேர்.


    சனப்பலம் இருந்தால் மனப்பலம் வரும்.


    தாய் இல்லாத போது தகப்பன் தாயாதி.


    அரசன் குடுமியையும் அம்பட்டன் பிடிப்பான்.


    மனசாட்சியை விட மறுசாட்சி வேண்டாம்.


    கடல் வற்றிக் கருவாடு தின்ன ஆசைப்பட்டு குடல் வற்றி செத்ததாம் கொக்கு.


    கூத்தாடி கிழக்கே பார்ப்பான். கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்.


    பாராத உடைமையும் பாழ், கேளாத கல்வியும் பாழ்.


    குயவனுக்குப் பல நாள் வேலை, தடியனுக்கு ஒரு நிமிட வேலை.


    பெண்ணின் கோணல் பொன்னில் நிமிரும்.


    அரைக்காசுக்குப் போன வெட்கம் ஆயிரம் கொடுத்தாலும் திரும்பாது.


    எழுதிப் பாராதவன் கணக்கு கழுதை மேய்ந்த களம்.


    அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகாது.


    முடியுள்ள சீமாட்டி எப்படியும் முடிப்பாள்.


    கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.

    அக்காள் இருந்தால் மச்சான் உறவு.


முரட்டுத்தனத்துக்கு முதல் தாம்பூலம்.

காட்சியும் அதன் கவிதையும்!


 
இது காதல் அரும்பும்சிரிப்பல்ல ...!!!
******************************
உன் சிரிப்பின் அர்த்தம் ...
புரியாமல் தனிமையில் ....
தவிர்க்கிறேன் .....!!!
இவன் என்னிடம் ...
ஏமார்ந்து விட்டானே ...?
என்று சிரிக்கிறாயா ...?
நான் உன்னிடம் காதல் ..
சொல்ல தாமதமாகியதற்கு ...
சிரிக்கிறாயா ...?
ஒற்று மட்டும் உன் சிரிப்பில் ...
நன்றாக தெரிகிறது ...!!!
இது காதல் அரும்பும்....
சிரிப்பல்ல ...!!!



நீங்கள் உணவு தந்தால் கூட
நாங்கள் சாப்பிடும் சக்தியை
இழந்து விட்டோம் ....!!!

அப்படியென்றால்
எதற்காக கைநீட்டுகிறாய்...?
என்று கேட்கிறீர்களா ...?

நீட்டி நீட்டியே எங்கள்
கைகள் தானாக நீண்டு
விட்டன ....!!!



செல்கிறோம்
வருத்தி வருத்தி
உழைக்க செல்கிறோம்
எதிர் பார்க்கையுடன்
செல்கிறோம் ....!!!

செல்லவதை மட்டுமே
சொல்கிறோம்
வருவதை மனிதநேயம்
தான் சொல்ல வேண்டும் ....!!!

நாங்கள் விடும் கண்ணீர்
கடல் அன்னைக்கும்
புரியாது கண்ணீரின்
சுவையும் உவர்ப்புத்தானே ....!!!



இந்தா பெண்ணே ...
இப்போது என்றாலும்
இதய கதவை திறந்து
கொள் ....!!!


சகோதரியே ...!!!
இந்தவயதில் இருந்து
சுற்றியல் பிடித்திட்டோமே
சுற்றியலைவிட
வண்மையாகிவிடும்
நம் கைகள் -எம்மை
வேலைக்கு அழைத்த
முதலாளி எதையுமே
பிடிக்காமல் எப்படி
இதயம் இரும்பாகியது ..?
அவருக்கு...?





கட்டிட கலையின்
அற்புத கலை நாங்கள்...!!!

கட்டப்பட்ட கட்டிடத்தை
ரசிப்பவர்களே ....!!!!

கற்களை இப்படி
அடுக்குவதும்
ஒரு கலைதான் ...!!!

மாயக்கண்கள்
எம்மை கூலியாக தான்
பார்க்கும் ....!!!



அழகையும்
சிரிப்பையும்
பார்க்கும்
உள்ளங்களே
ஆபத்தும் உண்டு ....!!!
மறந்து விடாதே ....!!!




தனிமையில் இருந்தேன்
தானாக வந்தாய்
காதல் கொண்டாய்
இப்போ
தனிமைப்படுத்தி
சென்று விட்டாய் ....!!!
இரு எண்ணத்துடன் ..
தனிமையாக
இருப்பதில் சுகம்
உண்டுதான் கண்ணே ....!!!




அன்புக்கு கட்டுப்பட்டால்
அது உனக்கொரு விலங்கு...!!!

ஆசைக்கு கட்டுப்பட்டால்
அதுவும் உனக்கு விலங்கு ....!!!

கோபப்பட்டால் தானாக வரும்
விலங்கு .....!!!

வாழ்க்கையில் ஒரு
விலங்கு வந்தே தீரும்
விலக்கிக்கொண்டவன்
ஞானி ....!!!




தயவு செய்து எம்
வீட்டை கலைக்காதீர்
அழகுக்காக எம் வீட்டை
அபகரிப்பவர்களே
உங்கள் செயலால்
அருகி வரும் இனத்தில்
நாங்களும்
ஒன்றாகி விட்டோம் ....!!!

அழகு!

அழகு எங்கு இருக்கிறது? பார்பவர்களின் கண்களிலும் அதை ரசிக்கும் மனதிலும் தன இருக்கிறது. எனக்கு அழகு என்று தெரியும்  ஒரு பொருள் மற்றவர்களுக்கு அசிங்கமாகத் தெரியலாம். மற்றவர்களுக்கு அழகில்லாதது எனக்கு அழகாய் தோன்றலாம்.

ஒரு பெண்ணை நிறுத்தி அந்தப் பெண்ணிடம் எது அழகு என்று கேட்டுப் பாருங்கள். ஒருவன் அவள் வலை வீசும் கண்கள் அழகு என்று சொல்வான் இன்னொருவன் அவள் தேன் சிந்தும் உதடுகள் அழகு என்று சொல்வான். மற்றொருவன் அவள் இடை அழகு என்பான். இன்னொருவன் அவள் நடை அழகு என்று சொல்வான். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று அழகாய் தெரியும். அழகு பார்வைக்கு பார்வை வேறுபடும்.

இப்படி பார்வையில் அழகு வேறுபடுவதால் தான் அழகான பெண்ணுக்கு அழகில்லாத ஆணும், அழகான அணுகு அழகில்லாத பெண்ணும் வாழ்க்கைத் துணையாக அமைகிறார்கள். இது இறைவன் செயல், காதலித்து தங்கள் துணையை தாங்களே தேடிக் கொள்பவர்களில் கூட இந்த புதுமை நடக்கத் தானே செய்கிறது.

 எத்தனயோ அழகு சுந்தரிகள் அழகில்லாத காற்றடித்தால் பறந்துவிடும் வாலிபர்களை காதலிப்பது இல்லையா? அதை போல எத்தனையோ கட்டிளம் காளையர்கள் அழகில்லாத ஒட்டடை குச்சி பெண்களைக் காதலிப்பது இல்லையா? இவை அனைத்துக்கும் காரணம் அவர்கள் பார்வை மனம் இரண்டிலும் உள்ள வித்தியாசங்கள் தான்.

அழகில்லாத பெண்ணிடம் உள்ள நல்ல குணமோ அல்லது அவர்கள் தூய்மையான அன்போ சிலருக்கு அழகாக தெரிவதால் அந்த பெண்களுக்காக எதையும் இழக்கத் தயார் ஆகுகிறார்கள். பெண்களும் அதே போலத் தான். அன்ன அழகில்லாவிட்டாலும் அவனிடம் இருக்கும் பேச்சுத்திறனோ அல்லது கம்பிரமோ நல்ல குணமோ அழகாக தெரிந்தால் அவனுக்காக உயிரைம் விடத் தயாராக இருகிறார்கள். இதற்கெல்லாம் மனம் தானே காரணம்.

கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி…


கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. கற்பூரவள்ளி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும்.

கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. கற்பூரவல்லியின் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து.

வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும். இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.

இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும். இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.

இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது. கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும். தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.

மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும். சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.

குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.

இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும். அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.

கத்திரிக்காயின் மருத்துவ பயன்கள்…

 

கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து இருக்கிறதை தெரிந்துகொள்ள வேண்டும்..

மேலும் ஃபைபர் 11%, மாங்கனீசு 10%, பொட்டாசியம் 5.3%, ஃபோலேட் 4.5%, வைட்டமின் கே 3.5%, செம்பு 3.5%, வைட்டமின் பி 63.5%, டிரிப்தோபன் 3.1%, வைட்டமின் சி 3%, மெக்னீசியம் 2.8%, வைட்டமின் பி 32.6%, கலோரி 1%.
ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சாப்பிடலாம்.

மேலும் உடல் சூட்டை தக்க வைத்துக்கொள்ள விரும்புபவர்களும் இவ்வாறு சாப்பிடலாம். சரும நோயாளிகள், புண், அலர்ஜி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. மேலும் இவற்றை சாப்பிட்டால் அலர்ஜி அதிகப்படும், மேலும் அரிப்பை தூண்டும்..

அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் முதல் மூன்று மாதங்களுக்கு சாப்பிடக்கூடாது. கத்தரிக்காய் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும். மேலும் நீரிழிவை கட்டுப்படுத்த கத்தரிக்காயை பயன்படுத்துகின்றனர்.

நரம்புகளுக்கு வலுவூட்டும். சளி, இருமலை குறைக்கும். கொழுப்பின் அளவை கட்டுபடுத்தி இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும், ரத்த அழுத்தத்தை குறைக்கும். நீல நிற கத்தரிக்காய் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

தமிழர்கள் நாம் நம்மைப்பற்றி என்ன ஆராய்ச்சி செய்துள்ளோம்?


தமிழரின் பெருமை தெரியவேண்டும் என்றால்.தமிழகத்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று ஆணையிட வேண்டும் 

11500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம்!!

பூம்புகார் – காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம். இந்த நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும்போது கடலால் அழிந்துபோன நகரம் என்று மட்டும்சொல்லி முடித்துவிடுவார்கள். இந்த நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால் உலக நாகரீங்களுக்கெல்லாம், ஏன் உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடி நாம்தான் என்ற உண்மை வெளிப்படும்.

சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகை அருகே 11500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தே இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது. மிகப்பெரிய துறைமுகமாகவும், உலக வர்த்தகத்திற்கான சந்தையாகவும் இருந்திருகிறது. சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட நூல்களில் இந்நகரம் பற்றி போற்றுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளால் (சுனாமி) இந்நகரம் அழிந்துபோனது.இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சி நிலையம் பணப்பற்றாக்குறையால் இந்நகரம் பற்றி ஆராய்வதை நிறுத்திவிட்டது. திட்டமிட்டு நிறுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.

பூம்புகார் நகரத்தையும், குஜராத்தின் கடற்கரையில் (மும்பைக்கு மேற்கே) இருந்த துவாரக நகரத்தையும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்த இங்கிலாந்துக்காரர் கிரகாம் ஹன்காக் (Graham Hancock) ஒரு வீடியோவை (Underworld: Flooded Kingdoms Of The Ice Age) வெளியிட்டார். அதில் கடலுக்கடியில் இந்நகரம் இருந்த இடத்தில் இன்னும் கற்களாலான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச்சுவர், பாத்திரங்கள், குதிரைவடிவ பொம்மைகள், காணப்படுகின்றன. இந்த ஆராய்ச்சி முடிவுகளெல்லாம் வெளியானது 2002ல். இன்றுவரை அதுபற்றியெல்லாம் யாரும் கவலைப்படவில்லை.

தமிழர்கள் நாம் நம்மைப்பற்றி என்ன ஆராய்ச்சி செய்துள்ளோம்? இனியாவது தமிழக அரசு இந்த ஆராய்ச்சியை முன்னெடுக்குமா?

தமிழ்ச் சொற்கள்!

தமிழில் டீக்கு "தேநீர்',

காபிக்கு "குளம்பி' என்று

 பெரும்பாலோருக்குத் தெரியும்.

மற்ற சில முக்கியமான உணவு

 பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!

சப்பாத்தி - கோந்தடை

 புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

 கிச்சடி - காய்சோறு, காய்மா

 கேக் - கட்டிகை, கடினி

 சமோசா - கறிப்பொதி, முறுகி

 பாயசம் - பாற்கன்னல்

 சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு

 பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி

 பொறை - வறக்கை

 கேசரி - செழும்பம், பழும்பம்

 குருமா - கூட்டாளம்

 ஐஸ்கிரீம் - பனிக்குழைவு

 சோடா - காலகம்

 ஜாங்கிரி - முறுக்கினி

 ரோஸ்மில்க் - முளரிப்பால்

 சட்னி - அரைப்பம், துவையல்

 கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு

 பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்

 போண்டா - உழுந்தை

 ஸர்பத் - நறுமட்டு

 சோமாஸ் - பிறைமடி

 பப்ஸ் - புடைச்சி

 பன் - மெதுவன்

 ரோஸ்டு - முறுவல்

 லட்டு - கோளினி

 புரூட் சாலட் - பழக்கூட்டு

புதுச்சேரி அருகே ஆழ்கடலில் புதையுண்டிருக்கும் சங்கத் தமிழ் சரித்திரம்!


சென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். இவர்தான் முதன்முதலில் மேற்குறிப்பிட்ட சுவரை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர், ‘‘ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காகவும் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்களைத் தகுந்த உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் அழைத்துச் செல்வேன். அப்படி ஒருமுறை சென்றபோது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, அதற்கு ‘அரவிந்த் வால்’ என்று பெயரிட்டேன்” என்றார்.

இந்த விவரங்கள் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் ஒரிசா பாலுவின் கவனத்துக்குச் சென்றது. அவர் சில மாதங்களாக அங்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அந்தச் சுவரில் இருந்து மண்ணையோ கல்லையோ பெயர்க்காமல் மேற்பார்வை ஆய்வுகளை செய்தார். அதில்தான் இது அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுகமான எயிற்பட்டினம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து அவர் நம்மிடம் பேசினார்.

‘தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம்.

மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்.

ஒரிசா பாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த நகரத்தை கிரேக்கர்கள் ‘மரிக்கனா’என்று குறிப்பிட்டுள்ளனர். தவிர, பூம்புகார் கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்துபோன நகர இடிபாடுகளையும் கண்டுபிடித்தவர். தவிர அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்.

புவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக் கடல் விழுங்கிய சங்க கால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத் தொகையின் பாடல்களில் இருக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு தமிழக தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும் இந்திய கடல் சார் தொல்லியல் துறையும் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர, இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும்” என்றார்.

எயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலில் ‘மதிலொடு பெயரியப் பட்டினம்’என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது.

மதில் என்னும் சொல்லுக்கு ‘எயில்’என்றும் பெயர் உண்டு. அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். கிரேக்கர்கள் இந்த ஊரை ‘சோபட்மா’என்று குறிப்பிட்டுள்ளனர். ‘சோ’என்னும் சொல் மதிலைக் குறிக்கிறது.

நத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்ட மீனும் பழம்பேடு (பழச்சாற்று கள்) கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆராய்ச்சிகள் முறையாக செய்தால் இந்தியாவின் வரலாற்றை தமிழகத்தில் இருந்து தொடங்க வேண்டி வரலாம்..!

நம்ம ஊரு வைத்தியம் - வெங்காயம்!


வெங்காயத்துல சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்னு ரெண்டு வகை இருக்கறது பலருக்கு தெரியும். அதேபோல வெள்ளை வெங்காயம்னு ஒண்ணும் இருக்கு. இதுகள்ல மருத்துவ குணம் நிறைஞ்சது... சின்ன வெங்காயம்தான்!

ஜலதோஷம் வந்தா ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்னு, வெந்நீர் குடிச்சா... ஜலதோஷம் குறையுறதோட தும்மலும் நின்னுடும். கூடவே... நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் இதெல்லாமும் குணமாகும். நெஞ்சு படபடப்பு வந்தாலும், சின்ன வெங்காயத்தை தின்னு வெந்நீர் குடிச்சா, உடம்பு சமநிலைக்கு வந்துடும். இதய நோயாளிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது... முதலுதவி சிகிச்சையா இதை செய்யலாம். பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தா... ரத்தக்கொதிப்பு குறைஞ்சு, இதயம் பலமாகும்.

மூல நோயால அவதிப்படுறவங்க சாப்பாட்டுல அதிகமா சின்ன வெங்காயம் சேர்த்துக்கறது நல்லது. நீர்மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடிச்சாலும் பலன் கிடைக்கும். வெளிமூலம் உள்ளவங்க, சின்ன வெங்காயத்தை வதக்கி, பிரச்னை உள்ள இடத்துல வெச்சுக்கிட்டா... பலன் கிடைக்கும் (வெள்ளை வெங்காயத்தை அப்பப்போ நல்லெண்ணய் விட்டு வதக்கிச் சாப்பிட்டாலும் மூல உபத்திரவம் குறையும்).

பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல்னு அவதிப்படுறவங்களுக்கும் சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும். சின்ன வெங்காயத்தை மையா அரைச்சுக்கோங்க. இதை, நாட்டுக்கோழி முட்டையோட வெள்ளைக்கருவுல சேர்த்து, ஆம்லெட்டுக்கு அடிக்கிற மாதிரி நல்லா அடிச்சுக்கணும். இல்ல, மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினாலும் சரி. இப்படி செய்றப்ப... ஷாம்பு மாதிரி பொங்கி வரும். அதை அப்படியே தலையில தேய்ச்சி, அரை மணி நேரம் கழிச்சி வெதுவெதுப்பான தண்ணியில குளிக்கணும். முட்டை நாத்தம் போகறதுக்கு, நல்ல சிகைக்காய் பவுடரை போட்டு தேய்ச்சி குளிக்கணும். வாரத்துல ஒருநாள் வீதம், ரெண்டு மாசத்துக்கு இப்படி செய்தா... தலைமேல பலன் கிடைக்கும்.

தேள் கொட்டின இடத்துல வெங்காயச்சாறை தேய்ச்சா விஷம் ஏறாது. தலை பகுதியில சொட்டை விழுந்து முடி முளைக்காம இருந்தாலும் சின்ன வெங்காயத்தை தேய்ச்சி வந்தா... காலப்போக்குல முடி முளைக்கும். ஆம்பளைங்களுக்கு மீசை பகுதியில இப்படி சொட்டை இருந்தாலும், இதே வைத்தியத்தை செய்யலாம்!

சாமை அரிசி உப்புமா - சமையல்!

 

தேவையானவை:

சாமை அரிசி - ஒரு கப்

 வெள்ளை வெங்காயம் - 1

கேரட் - ஒன்று

 நறுக்கிய பீன்ஸ், பச்சைப் பட்டாணி - தலா அரை கப்,

பச்சை மிளகாய் - ஒன்று,

கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி - சிறிதளவு,

கடுகு - அரை டீஸ்பூன்,

உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் - சிறிதளவு,

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 * சாமை அரிசியை களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

 * வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

 * கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து வெங்காயத்தை சேர்க்கவும்.

 * வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு மூன்று கப் தண்ணீர் விடவும்.

 * கொதித்ததும் சாமை அரிசியைப் போட்டு, உப்பு சேர்த்துக் கிளறி, மூடி வைக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). 10, 15 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.

 * இப்போது சத்தான சாமை அரிசி உப்புமா ரெடி.

ஓட்ஸ் சம்பா ரவை இட்லி! சமையல்!

 

தேவையானவை:

ஓட்ஸ் - ஒரு கப்,

சம்பா கோதுமை ரவை - அரை கப்,

தயிர் - ஒரு கப்,

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,

பச்சை மிளகாய் - ஒன்று,

கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,

இஞ்சி - சிறிய துண்டு

 கொத்தமல்லித் தழை - சிறிதளவு,

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:


• இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• முதலில் ஓட்ஸை வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

• பிறகு, சம்பா ரவையை சிவக்க வறுத்து, இரண்டையும் கடைந்த தயிரில் சேர்க்கவும்.

• கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இத்துடன் சேர்க்கவும்.

• கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லித் தழை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றையும் கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.

• பிறகு, இந்தக் கலவையை இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

• சுவையான, சத்தான ஓட்ஸ் சம்பா ரவை இட்லி ரெடி

பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க!


• மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிற்று வலியும், இடுப்பு வலியும் ஏற்படுவது இயற்கை. இந்த வலிகளைப் போக்க வெந்தயத்துடன் நூறு கிராம் அளவுக்கு வெந்தயத்தை நன்றாக பொடியாக்கி, அதில் இருநூறு கிராம் சர்க்கரையை கலந்து சாப்பிட வயிற்றுவலி, இடுப்பு வலி நீங்கும்.


• வெள்ளைப் பூண்டுடன், கருப்பட்டியை கலந்து சாப்பிட இடுப்புவலி பெருமளவு குறைந்துவிடும்.


• நீங்கள் ஹைஹீல்ஸ் அணியும் பழக்கமுள்ளவர் எனில் அதன் மூலம் கூட உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும். ஹைஹீல்ஸ் அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி ஏற்படும்.


மிளகை பொன் வறுவலாக வறுத்து அதில் எள் எண்ணையை கலந்து சாப்பிட இடுப்பு வலி குறையும். தளுதாளி இலையுடன் பூண்டு, எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) சேர்த்து துவையல் செய்து சாப்பிட இடுப்பு வலி குணமாகும்.

எடை குறைவுடன் பிறந்த குழந்தை பராமரிப்பு முறைகள்!



எடை குறைவுடன் பிறந்த குழந்தையானது மிகவும் சிறியதாகவும், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கும். ஆனால் குழந்தை இவ்வாறு பிறந்துவிட்டது என்று வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தால் மட்டும் எதுவும் சரியாகிவிடாது.

இந்த நேரத்தில் தான், அத்தகைய குழந்தையை மிகவும் கவனமாக கவனித்து, சரியான உணவுகளை சரியான வேளையில் கொடுத்து, முறையாக பராமரிக்க வேண்டும். பொதுவாக எடை குறைவாக பிறந்த குழந்தைகளை எளிதில் நோய்கள் தொற்றும் வாய்ப்பு உள்ளதால், அதிகப்படியான கவனிப்பானது இன்றியமையாதது.

சொல்லப்போனால், இந்த நேரத்தில் பெற்றோர்கள் சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். ஆனால் இப்போது சிரமத்தை மனதில் கொள்ளாமல், சரியாக கவனித்தால், உங்கள் குழந்தையும் மற்ற குழந்தைகளைப் போல் இருப்பார்கள். சரி, இப்போது அப்படி எடை குறைவாக பிறந்த குழந்தையை சரியாக கவனிக்க சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

• குறைவான எடையில் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தையின் உடலில் போதிய சத்துக்கள் கிடைக்கும்.எடை குறைவில் குழந்தை பிறந்தால், அடிக்கடி தொடர்ச்சியாக பாலைக் கொடுக்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு உடலில் சத்துக்கள் சேர்வதற்கு சற்று தாமதமாகும்.

• மற்ற குழந்தைகளை விட, எடை குறைவாக பிறந்த குழந்ததையை மிகவும் கவனமாக தூக்க வேண்டும். ஏனெனில் இந்த மாதிரியான குழந்தைகள் மிகவும் சிறியதாக இருப்பதால், கைகளில் வைத்திருக்கும் போது, முக்கியமாக தலையை மிகவும் கவனமாக பிடித்துக் கொள்ள வேண்டும்

• பொதுவாக எடை குறைவில் பிறந்த குழந்தை தூங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த மாதிரியான குழந்தைகளுக்கு SIDS (Sudden Infant Death Syndrome) என்னும் திடீரென குழந்தை இறப்பு நோய்த்தாக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், பெற்றோர்கள் குழந்தையை தங்களது வயிற்றில் தூங்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.

• மிகவும் குறைந்த எடையில் பிறந்த குழந்தையைச் சுற்றியுள்ள இடங்களை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த குழந்தைகளுக்கு நோய்களானது எளிதில் தாக்கக்கூடும். எனவே குழந்தையை சுற்றியுள்ள இடத்தை மட்டுமின்றி, குழந்தையையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

• குழந்தையின் எடை சரியான அளவில் வரும் வரை, பெற்றோர்களைத் தவிர வேறு யாரையும் குழந்தையை தூக்க அனுமதிக்க வேண்டாம்.

தினேஷ்கார்த்திக்- தீபிகாபல்லிகல் திருமண நிச்சயதார்த்தம்: சென்னை நட்சத்திர ஓட்டலில் நடந்தது!

 

சென்னையை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கும், சர்வதேச ஸ்குவாஷ் வீராங்கனையான சென்னையை சேர்ந்த தீபிகா பல்லிகலும் கடந்த ஒரு ஆண்டாக நண்பர்களாக பழகி வந்தனர். இருவரும் உடல் தகுதிக்காக ஒரே பயிற்சியாளரிடம் பயிற்சி பெற சென்றபோது பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருவருக்கும் கடந்த வாரம் நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது. நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டூவிட்டர் இணைய தளத்தில் வெளியிட்டனர்.

இருவரும் தங்கள் விளையாட்டில் கவனம் செலுத்த உள்ளனர். இதனால் திருமணம் 2015–ம் ஆண்டு நடக்கிறது. 28 வயதான தினேஷ் கார்த்திக் ஏற்கனவே திருமணம் ஆனவர். 2007–ம் ஆண்டில் நிதிகா என்பவரை திருமணம் செய்திருந்தார். மனக்கசப்பு காரணமாக இருவரும் விவகாரத்து பெற்றனர்.

விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் 2004–ம் ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்தார். கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக ஆடியதால் மீண்டும் அணியில் இடம் பிடித்தார். ஐ.சிசி சாம்பியன்ஸ் டிராபி, ஜிம்பாப்வே பயணத்தில் சிறப்பாக ஆடினார். ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ் தொடரில் கழற்றிவிடப்பட்டார். தற்போதைய தென்ஆப்பிரிக்கா பயணத்திலும் இடம் பெறவில்லை. தற்போது சென்னையில் நடைபெற்று வரும் சவுராஸ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி டிராபியில் சதம் அடித்தார்.

தீபிகா பல்லிகல் சர்வதேச தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் பிடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.

ஆருஷி கதை படமாக்க அனுமதி தந்தால் ரூ.5 கோடி!

 

ஆருஷி வாழக்கை கதையை படமாக்க அனுமதி தந்தால் அவரது பெற்றோருக்கு ரூ.5 கோடி தர தயாராக இருப்பதாக லண்டன் பட அதிபர் அறிவித்துள்ளார்.

நொய்டாவை சேர்ந்தவர்கள் பல்டாக்டர் தம்பதி ராஜேஷ் தல்வார், நுபுர்த்தல்வார். இவர்களது மகள் ஆருஷி. இவரும் வீட்டில் வேலை செய்த ஹேம்ராஜும் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இதுதொடர்பாக இந்த வழக்கில் ஆருஷி, ஹேம்ராஜூவை ஆருஷியின் பெற்றோரே கொலை செய்ததாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

 இந்த வழக்கில் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை அடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆருஷி கதையை புத்தகமாகவும் சினிமா படமாகவும் தயாரிக்க உள்ளதாக லண்டனை சேர்ந்த எழுத்தாளரும் படத்தயாரிப்பாளருமான கிளிப் ரன்யார்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதற்காக தல்வார் குடும்பத்திற்கு ரூ.5 கோடி தர தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியா வந்த தல்வார் தம்பதியினரை சிறையில் சந்தித்து பேச முயன்றார். ஆனால் அவருக்கு சிறை அதிகாரிகள் அனுமதி தர மறுத்துவிட்டனர்.

சிறை விதிப்படி 15 நாட்களில் 3 பேர் மட்டுமே தண்டனை பெற்றவர்களை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள். தல்வாரின் உறவினர்கள் 3 பேர் ஏற்கனவே சந்தித்து உள்ளனர். எனவே 14 நாட்களுக்கு பிறகுதான் தல்வாரை சந்திக்க அனுமதி கிடைக்கும் என்றார்.

தல்வார் தம்பதிகள் நலமுடன் இருக்கின்றனர். சிறையில் பல் மருத்துவ முகாம் நடத்தி கைதிகளுக்கு இலவச சிகிச்சை அளித்தனர் என்றும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடிவயிற்றில் இருதயத்துடன் உயிர் வாழும் இளைஞர்!

 

பிறக்கும்போதே அடிவயிற்றில் இருதயத்துடன் பிறந்து 24 வயது வரை உயிர்வாழ்ந்து கொண்டியிருக்கும் இளைஞர் அதிசயமாக கருதப்படுகிறார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் இடமாற்றம் செய்து விலா எலும்பு பகுதியில் இருதயத்தை பொருத்த சீன டாக்டர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

சீனாவின் கினாம் மாகாணத்தை சேர்ந்தவர் ஹூஜிலியாங் (வயது 24). இவர் முடிதிருத்தல் தொழில் செய்து வருகிறார். பிறக்கும்போதே இவருக்கு அடிவயிற்றில் இருதய துடிப்பின் சத்தம் கேட்டது. ஆனால் இவரது பெற்றோர்கள் இதை சாதாரணாகவே எடுத்துக்கொண்டனர்.

நாளடைவில் ஹூஜிலியாங்கின் இருதயம் அடிவயிற்றில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இவர், பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. கடினமாக வேலை செய்தால் அல்லது ஓடினால் மூச்சிறைப்பு ஏற்பட்டது. அடிவயிற்றில் இருதயம் துடிப்பதை அவரால் உணர முடிந்தது.

இந்தநிலையில் பத்திரிகை செய்தி ஒன்றில் இதேபோல் பாதிக்கப்பட்ட ஒரு வாலிபருக்கு கடந்த 2012_ல் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து இருதயத்தை இடமாற்றம் செய்து சாதனை படைத்தனர். இதனை படித்த ஹூஜிலியாங், தானும் இதேபோல் அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்பி, அந்த மருத்தவமனையில் சேர்ந்துள்ளார்.

சீன டாக்டர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை அடிவயிற்றில் உள்ள இருதயத்தை இடமாற்றம் செய்து விலா எலும்பு பகுதியில் பொருத்த உள்ளனர். இதன் மூலம் தனக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஹூஜிலியாங் உள்ளார்.

சந்திரனுக்கு ஆளில்லா விண்கலம்: நாளை அனுப்புகிறது சீனா!

 

சீனா முதல் முறையாக சந்திரனுக்கு ஆளில்லா விண்கலத்தை நாளை அனுப்புகிறது. இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் உலகில் தனித்துவமான இடத்தைப் பெற வேண்டும் என்ற சீனாவின் லட்சியத் திட்டம் நிறைவேறுகிறது.

சாங் இ-3 (கியான் வைபிங் -3) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம், ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக விண்கல ஏவுதளத் தலைமை அலுவலகக் குழுவினர் தெரிவித்தனர்.

சீனா இதற்கு முன்பு சந்திரனுக்கு அனுப்பிய 2 விண்கலங்களும் சந்திரனின் சுற்றுப் பாதையில் சுற்றி வருகின்றன. தற்போது சந்திரனின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்வதற்காக ஆளில்லா விண்கலத்தை சீனா முதல் முறையாக அனுப்புகிறது.

விண்கலத்தை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், ஏவுதளமும் அதற்கேற்ப நல்ல நிலையில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்ததாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாங் இ-3 விண்கலம் "யுது' என்று அழைக்கப்படும் சந்திரனை ஆராய்ச்சி செய்யும் கருவியையும், அதை தரையில் நிலைநிறுத்தக் கூடிய கருவியையும் தாங்கிச் செல்கிறது. ("யுது' என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சீன மக்களால் சந்திரக் கடவுளாக வணங்கப்பட்டு வரும் வெள்ளை முயலைக் குறிப்பதாகும்.)

சந்திரனில் உள்ள இயற்கை வளங்கள், மேற்பரப்பில் உள்ள பொருள்கள், புவியியல் அமைப்பு போன்றவற்றை "யுது' ஆய்வு செய்யும்.

விண்வெளி மையத்தில் ரஷியா அமைத்துள்ள மீர் விண்வெளி நிலையத்தைப்போல, ஒரு நிரந்தரமான விண்வெளி நிலையத்தை தானும் அமைக்க வேண்டும் என்பதுதான் சீனா தொடர்ந்து விண்கலங்களை சந்திரனுக்கு செலுத்தி வருவதின் பின்னணியாகும்.

சந்திரனையும் தாண்டி, செவ்வாய், புதன் போன்ற கிரகங்கள் தொடர்பான நீண்ட ஆராய்ச்சியில் ஈடுபடவும் எங்களது விஞ்ஞானிகள் தயாராக உள்ளனர். அதற்கான அனுமதி கிடைத்தவுடன் செயல்படத் தொடங்குவோம் என்று சாங் இ-3 விண்கலத்தின் தலைமை விஞ்ஞானி யே பெய்ஜியான் தெரிவித்தார்.

செவ்வாய் கிரகம் நோக்கி “மங்கள்யான்” : சாதித்து காட்டிய இந்தியா!

 

நொடிக்கு 647.96 மைல் வேகத்தில் செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணிக்கும் மங்கல்யான் செயற்கைக்கோள் நேற்று வரை பயணித்த புவி வட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை வெற்றிகரமாக துவக்கியது.இதன் மூலம் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட சில நாடுகளால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட சாதனையை தற்போது இந்தியாவும் சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் என்ற அதிநவீன விண்கலத்தை பி.எஸ்.எல்.வி. சி25 ராக்கெட் மூலம் கடந்த 5ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பூமியை அதன் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த, ‘மங்கல்யான்’ செயற்கைக்கோள் நவம்பர் 16ம் தேதி, பூமியில் இருந்து, 1,92,874 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது.

இன்று அதிகாலை, 12:30 மணிக்கு ‘மங்கல்யான்’ செயற்கைக்கோள் செவ்வாய் கிரக பாதையை நோக்கி திருப்பப்ட்டது. தொடந்து 12.49 மணிக்கு மங்கல்யான் செயற்கைக்கோளை செவ்வாய் நோக்கி அனுப்பும் பணி துவங்கி வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு செவ்வாய் கிரகம் நோக்கி தனது 68 கோடி கி.மீ பயணத்தை துவக்கியது. அண்மையில் சீனா செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பிய விண்கலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து வெளியேற முடியாமல் தோல்வியடைந்தது. இதை அடுத்து இந்தியாவின் மங்கல்யான் பயணத்தை சீனா உள்ளிட்ட நாடுகள் கூர்மையாக கவனித்து வந்த நிலையில், மங்கள்யானின் இந்த வெற்றி விண்வெளி துறையில் இந்தியாவின் சாதனை பெருமைக்குரியதுதானே?

டிஜிட்டல் போஸ்ட்மார்ட்டம். மார்ச்சுவரி கொடுமைகள் குறைய வாய்ப்பு…!

 

உலகிலே மிக கொடுமையான விஷயம் மரண்ம். இயற்கை மரணம் ஏற்பட்டால கவலை இல்லை ஆனால் விபத்து, தற்கொலை மற்றும் இயற்கை அல்லாத ஒரு மரணம் சம்பவித்து விட்டால் கொடுமை – அதிலும் போஸ்ட்மார்ட்டம் என்னும் உடலை ஆய்வு செய்யும் ஒரு கொடுமை.

இதற்கிடையில் இதை அரசு மருத்துவமனையில் உள்ள மார்ச்சுவரியில் தான் செய்ய முடியும். அதை செய்ய பல ஃபார்மாலிட்டீஸ்……. போலீஸ் கம்ப்ளயன்ட் செய்திருக்க வேண்டும். மார்ச்சுவரி செய்ய மருத்துவர் நேரம் ஒதுக்க வேண்டும். சில சமயம் 1 நாளில் இருந்து மூன்று அல்லது 1 வாரம் கூட ஆகும் கொடுமை. அடுத்து அங்கிருக்கும் அக்க போர்கள்….. பான்டேஜ் வாங்கனும், காடா துணி வாங்கனும், காசு தாங்க சார் சரக்கு அடிச்சா தான் நல்லா அறுக்க முடியும்னு ஏற்கனவே சோகமா இருக்கிற உறவுகள் கிட்ட காசை புடுங்கு புடுங்குனு புடுங்கி மண்டையை இரண்டா புளந்து அப்புறம் உடம்பில் கழுத்தில் இருந்து கீழ் வரை ஒரே வெட்டு வெட்டு உள்ளே உள்ளது எல்லாம் எடுத்து அப்படியே கோனி தைக்கிற மாதிரி தைத்து ஒரு பொட்டலமாய் தான் தருவார்கள். இதனால் அவர்களுக்கு அளிக்க படும் இறுதி யாத்திரை குளியல் செய்ய முடியாது அது போக உடலை கட்டி கூட அழ முடியாத ஒரு அவலம் தான் இந்த போஸ்ட்மார்ட்டம்.

பெரும் சோகத்தை ஏற்படுத்தும் இதனை முறியடிக்க முதலில் இங்கிலாந்தின் மார்ச்சுவரியில் ஹைடெக் 3டி சி டி மற்றும் எம் ஆர் ஸ்கேனரை உபயோகபடுத்துகிறார்கள். இதன் மூலம் இறந்தவரை துல்லியமாக கத்தியின்றி ஆராய முடியும். அப்படியும் தேவை எனைல் தோலை சிறிதாக வெட்டினால் போதும். இதை செய்திருப்பது இங்கிலாந்து அரசாங்கம் செய்திருக்கும் கம்பெனி ஐஜீன் என்ற மலேஷிய கம்பெனி. இதன் மூலம் இங்கிலாந்தில் 2015க்குள் எல்லா மருத்துவமனையிலும் செய்ய இயலும். இதே போல மலேஷியாவில் உள்ல கோலலம்பூர் ஜி ஹெச் எனப்படும் அரசாங்க மருத்துவமனையிலும் இது நடக்கிறது.

இப்படி மோசமான மரணத்தின் இறுதி சடங்க்காற்றும் இந்தியாவுக்கு மிக அவசிய தேவையான ஒன்று இது. உலகில் எவ்வளவு பெரிய அப்பாடக்காராய் இருந்தாலும் ஒரு முறை ராயப்பேட்டை அல்லது ஜி ஹெச்சில் உள்ள சவக்கிடங்குக்கு போய் வந்தால் அவர்களின் அத்தனை ஆணவ ஆட்டமும் அடங்கும் என்று நான் அடித்து கூறுவேன்………….சே இவ்வளவுதானா மனிதன் வாழ்க்கை என்ற உண்மையை புரிந்து கொள்ளலாம்.!

உலகின் நீளமான பைக் சேல்ஸுற்க்காக இநதியா வருகிறது!

 

உலகின் மிக நீளமான ‘பைக்’ வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்காக விரைவில் இந்தியா வர உள்ளது. இந்த பைக்கில் பயணம் செய்வது என்பது காற்றில் கலந்து போகும் உணர்வை தர வல்லது. அத்துடன் கவர்ச்சிகரமான விசாலமான தோற்றத்துடன் உள்ள இந்த பைக்கை ஜெர்மனியில் உள்ள ஒரு நிறுவனம் தயாரித்துள்ளது.

பார்ப்போரை அசர வைக்கும் இந்த பைக் 11 அடி நீளமுள்ளது; அதிலும் சாதாரண பைக்கை விட ஐந்து மடங்கு அதிகமாக கிட்டத்தட்ட 650 கிலோ எடையைக் கொண்டுள்ளது; இதை ஓட்டுவதற்காக சிறப்புப் பயிற்சியுடன் விசேஷ லைசென்ஸ் பெற வேண்டும்.

அதிலும் இதுவரை எந்த பைக் தயாரிப்பு நிறுவனமும் பயன்படுத்தாத மிகப் பெரிய 6,728 சி.சி., திறன் கொண்ட ‘தம்தார்’ இன்ஜின் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் மூன்று டிரான்ஸ்மிஷன் கருவிகளும், மூன்று கியர்களும் உள்ள .இந்த பைக்கின் முன் சக்கரத்தில் 38 அங்குல டயரும், பின் சக்கரத்தில் 42 அங்குல டயரும் பொருத்தப்பட்டுள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இந்த பைக்கைதான் விரைவில் விற்பனைக்காக இந்தியாவிற்கு கொண்டு வர உள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக், ட்விட்டர் மூலம் சதி + வதந்தீ = ஐடி கம்பெனிகளின் தில்லு முல்லு அம்பலம்!

 

குறிப்பிட்ட அரசியல் தலைவருக்கு அமோக ஆதரவு இருப்பதாக காட்ட வேண்டுமா? அதற்கு ஒரு விலை.

*எதிராக உள்ள தலைவரின் செல்வாக்கை ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டுமா? இதற்கு இரு மடங்கு விலை.

*குறிப்பிட்ட தொகுதியில் யாருக்கும் ஓட்டு விழக்கூடாது என்று தடுக்க வேண்டுமா? சில லட்சம் ஆகும்.

*தேவைப்பட்டால் வாக்காளர்களை பீதியடைய செய்ய வதந்திகளை கிளப்ப வேண்டுமா? இதற்கு செலவு கோடியை எட்டும்.
nov 30 edit obra_post
 *உயர் அதிகாரி மீது குற்றச்சாட்டுக்களை எழுப்பி அவரை பதவியில் இருந்து தூக்க வேண்டுமா? சில லட்சம் ஆகும். இப்படி எதை வேண்டுமானாலும் செய்ய பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யுடியூப் வலைதளங்களை பயன்படுத்தி போலியாக செயற்கையாக மோசடித்தனமாக கருத்துக்களை பரப்புவது, வீடியோக்களை வெளியிடுவது என்பது ஒரு பிசினசாகவே நடக்கிறது. இப்படி அவதூறுகளை, வதந்திகளை பரப்பியும், ‘லைக்’ மற்றும் எதிரான கருத்துக்களை லட்சக்கணக்கில் வெளியிட்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தவே சில ஐடி கம்பெனிகள் உள்ளன. இவர்களால் போலியாக லட்சக்கணக்கில் வெறும் ‘லைக்’ போடுவது மட்டுமல்ல, எதிரான கருத்துகளை வெளியிடுவது மட்டுமல்ல, குறிப்பிட்ட பகுதிகளில் பதற்றம் ஏற்படுத்தவும், குறிப்பிட்ட அரசியல் கட்சி, தலைவருக்கு செல்வாக்கை அழிக்கவும் முடியும். இதை ஒரு பிசினசாகவே இந்தியாவில் செய்வது யார் தெரியுமா? ஏதோ தாதாக்கள், மாபியாக்கள் என்று எண்ணி விட வேண்டாம். சில ஐடி கம்பெனிகள் தான். இந்த பெரும் சதி பிசினசை கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு வெப்சைட் அம்பலப்படுத்தியுள்ளது.

கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு வெப்சைட் ஏற்கனவே பல மோசடிகள், தவறுகளை அம்பலப்படுத்தியுள்ளது இது. டெல்லியில் ஆரம்பித்து பெங்களூர் வரை 24 ஐடி கம்பெனிகளை கண்டுபிடித்து அவர்களின் இந்த கேவலமான ‘சதி’ பிசினசை இந்த வெப்சைட் அம்பலப்படுத்தியுள்ளது. இதற்காக கோப்ரா போஸ்ட் வெப்சைட்டின் இணை ஆசிரியர் சையது மஸ்ரூர் அசன் என்பவர் தான் இந்த மோசடி ஐடி கம்பெனிகளை அணுகி பேசியுள்ளார்.

‘என் பாஸ் நேதாஜி வரும் சட்டசபை தேர்தலில் நிற்க வேண்டும். அதற்கு அதிக ‘லைக்’ போட வேண்டும். அவர் வெற்றி பெற்றபின் லோக்சபா தேர்தலில் நிற்க வேண்டும். அதன் பின் அமைச்சராக வேண்டும். இதற்கு என்ன செலவானாலும் பரவாயில்லை. பேஸ்புக், ட்விட்டர், யுடியூப் என்று அனைத்திலும் கருத்துக்களை பரப்ப வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். இதை எல்லா கம்பெனிகளும் நம்பி பேரம் பேசியுள்ளன. இந்த கம்பெனிகளின் பெயர்களுடன் அவர்களுடன் நடத்திய பேரத்தை வெப்சைட் அம்பலப்படுத்தியுள்ளது.

இதையடுத்து கோப்ரா போஸ்ட் வெளியிட்ட தகவல்கள் குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, ஐடி நிறுவனங்கள் இப்படி நடந்து கொள்வது பற்றி வெப்சைட் வெளியிட்ட தகவல்கள் உண்மை தான் என்பது போல குறிப்பிட்டார். ‘சமீபத்தில் உளவுத்துறை கூட்டத்தில் கூட நான் இதுபற்றி குறிப்பிட்டேன். எனது கவலை இப்போது நிரூபணமாகி விட்டது. இன்னும் தகவல்கள் முழுமையாக வரட்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ரு தெரிவித்தார்.

சைனா Vs ஜப்பான் : பெரியண்ணன் அமெரிக்காவின் அத்து மீறல்.!

 

நாமெல்லாம் அடிக்கடி சொல்வோமே?- ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் அதை நினைவூட்டும் வகையில் நெடு நாள் பிரச்சினையான கிழக்கு சைனா ஸீயில் உள்ள ஒரு தீவு. இதை சைனா “டையாயூ” எனவும் ஜப்பான் “செனாக்கூ என பெயரிட்டு அழைத்து வருகிறது.இதற்கிடையில் பல நாளாக இது யாருக்கு சொந்தம் என்ற வகையில் போட்டி இருந்தது.

நவம்பர் 23 ஆம் தேதி சைனா இந்த பிரதேசத்தையும் சேர்த்து தன்னுடைய வான் எல்லை சைனா ஏர் டிஃபன்ஸ் ஐடென்ட்டிஃபிக்கேஷன் ஜோன் என்று அறிவித்த போது தான் பிரச்சினை எழுந்தது ஜப்பானுக்கு. அது மட்டுமல்ல பெட்ரோலுக்கு சைனா போர் விமானங்களை பறக்க செய்ய நேற்று ஆள் இல்லாத அமெரிக்க பி 52 பாம்பர் விமானங்களும் 10 ஜப்பான் ஏர் ஃபோர்ஸ் விமானங்களும் அங்கு பறந்து அமெரிக்கா நான் ஜப்பான் நண்பனாக்கும் என பறைசாற்ற கொஞ்சம் நேரத்தில் சைனா அத்தனை விமானங்களையும் விமான தடங்களையும் ஸ்கிராம்பிள் செய்து விட்டது. இதையொட்டி மெல்ல பற்றி கொண்டது ஒரு பதட்டம்.

“Air Defense Identification Zone” – ADIZ என்றால் என்ன? – தன் நாட்டை விட்டு அதன் அருகாமையில் உள்ள ஒரு இடத்தை கிளேய்ம் செய்யும் நாடுகள் – அமெரிக்கா ஜப்பான் போன்றவை ஏடிஸ் வைத்துள்ளன். இந்த வான் பறப்பில் பறக்கும் விமானங்கள் தங்களை ஏர் ஜோனுக்கு செல்லும் முன் – பறக்கும் போதும் தன்னை அடையாளப்படுத்தி கொள்ள வேண்டும் என்பது ஏடிஸின் விதிமுறை.

இந்த வகையில் ஜப்பான் செனாக்கூ தீவை ஏடிஸ் என அடையாளம் காட்ட வெகு நாள் பிரச்சினையாக கொண்ட இந்த தீவை சைனாவும் தன் பங்குக்கு இது சைனீஸ் ஏடிஸ் என அறிவிக்க இரண்டு நாட்டினரும் கிழக்கு சைனா ஸீயில் தன் புஜத்தை உயர்த்தி காட்டிய சமயத்தில்தான் அமெரிக்கா தன் பங்கிற்கு ஜப்பானுக்கு ஆதரவாக 4 விமானங்களை அனுப்ப சைனா இதை ஸ்கிராம்பிள் செய்ததுதான பெரும் பரபரப்புக்குண்டான விஷயம்.

அதே சமயம் சைனா கொஞ்சம் நாளைக்கும் முன்புதான் Yellow Sea எனப்படும் மஞ்சள் கடலில் கொரியாவுடன் உரன்டையை இழுத்த விவகாரம் உங்களும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அதாவது சவூத் கொரியாவில் இருந்து 149 கிலோமீட்டரில் மற்றூம் சைனாவில் இருந்து 287 கிலோமீட்டரில் உள்ள ஒரு ரீஃபின் பெயர் “லீடோ”. கொரியர்கள் ஏற்கனவே அங்கு கடலின ஆராய்ச்சி செய்து வருவது அனைவருக்கு தெரிந்த ஒன்று, அங்கும் சைனா திடீரென்று இதை ஏடிஸ் வட்டத்துக்குள் கொண்ட வந்த போதும் அப்ஸெட்டானது சௌத் கொரியா மட்டுமல்ல – அமெரிக்காவும் தான்.

இத்தனைக்கும் உலகின் முக்கியமாக ஏசியாவின் அதிக பண வளம் கொண்ட ஜப்பான் / சைனா / தாய்வான் / சவுத் கொரியா – மற்றூம் சைனாவின் தலை நகரமான பெய்ஜிங் இதன் அருகாமயில் இருப்பதால் சைனா கொஞ்சம் ஓவராய் உணர்ச்சிவசப்படுகிறது.

மேலும சைனா இதை 1440 முதல் தனக்கு சொந்தம் என சில டாக்குமென்ட்களை வைக்க ஜப்பானோ 1885 ஆம் ஆன்டு சர்வே செய்த போது இதில் இருந்தவர்கள் வெறும் ஜப்பானியரே. அதனால் ஜப்பான் 1895 ஆம் ஆண்டு இதை அங்கு வாழும் மக்களுகென இதை விற்று இதை ஜப்பானின் ஒரு பகுதியாக அறிவிக்கபட்டது. 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் சரண் அடைந்த போது இந்த தீவு அமெரிக்கா கைவசம் வந்தது. 1972 ஆம் ஆண்டு அமெரிக்கா ஜப்பானின் அத்தனை இடத்தையும் ஜப்பானிடமே ஒப்படைத்த போது இந்த தீவும் ஜப்பானுக்கே சொந்தமானது.

அப்போது சைனா இதில் எங்களுக்கு பங்குண்டு என கேட்க 1978 ஒரு ஒப்பந்தம் சைனாவும் ஜப்பானும் இதை அப்புறம் பார்த்து கொள்ளலாம் இதை வைத்து நாம் சண்டை செய்ய வேண்டாம் என கையெழுத்திட்ட பிறகு அமைதியாக இருந்த சைனா போன வருடம் ஜப்பான் அதன் அருகே இருக்கும் தீவுகளை வாங்கி அரசுடமைபடுத்திகிறது என்ற விஷயம் கசிய அதில் செனாக்கூவும் உண்டு என தகவல் பரவ சைனாவில் கலவரம் வெடித்து அரசு இந்த ஜோனை ஏடிஸ் ஆக்கியது தான் ஆதியும் அந்தமும்.

இதில் கச்சா எண்ணெய் / தாது பொருட்கள் மற்றும் மீன் பிடிப்புக்காக தான் இந்த சண்டை மற்றும் நேர் தாக்குதல் சைனாவின் பெய்ஜிங்கிற்க்கு உண்டு..என்பதை தனியாக சொல்ல வேண்டுமா என்ன?

அது சரி!ஜெட் ஸ்க்ராம்பிளீங் என்றால் என்ன? – அதாவது ஒரு நாட்டின் வான் எல்லைக்குள் வரும் விமாங்கள் இரண்டு வகைப்படும். கமர்ஷியல் விமானங்கள் – இது மனிதர்கள் பயணிக்கின்ற விமானங்கள்…இவ்வகை விமானங்கள் அனுமதி பெற்ற வான் எல்லைக்குள் தான் பறக்கும். இதன்படி மலேஷிய விமானங்கள் , ஈரான் விமாங்கள் இஸ்ரேல் எல்லையில் பறக்காது அந்த மாதிரி நிறைய விமானகள் நிறைய நாடுகளை அவாய்ட் செய்யும்.

மற்றது விமானப்படையை சேர்ந்தது. இது கூட்டு பயிற்ச்சி படை மற்று அறிவிக்க்பட்ட எல்லை கடந்து போகும் விஷயத்தை முன் கூட்டியே அறிவித்தால் அந்த் அந்த நாடு அதற்கு அனுமதி அளித்தி ரேடாரில் தென்படும்போது ஒன்றும் செய்யாது. அறிவிக்கபடாத விமாங்கள் அது கமர்ஷியல் அல்லது ராணுவ அல்லது ஆளில்லா விமானங்கள் வந்தால் உடனே ரேடார் உஷார் படுத்தும்.உடனே அந்த நாட்டு போர் விமானங்கள் ங்கள் விமானத்தை ரவுன்ட் செய்து உங்களை வலுகட்டாயமாக அவர்களின் வான் எல்லையில் இருந்து தள்ளும் அல்லது பாம் செய்து விடுவார்கள், இப்படி ஸ்கிராம்பிளிங் செய்திருந்தால் 9/11 அமெரிக்க இரட்டை கோபுரம் தப்பியிருக்கும் – உலகில் அதிகம் ஸ்கிராம்பிளிங் செய்யபடும் ஜோன் அலாஸ்காவில் அடிக்கடி ரஷிய விமானங்கள் நுழைய அதை அமெரிக்கா விரட்டியடிக்கும் ரெகுலர் ஒன்று

அரசு மருத்துவமனைகளில் இயற்கை வழி சிகிச்சை மையம்!

 


தற்போதைய அவசர உலகில் மன அழுத்தத்தின் காரணமாகவே பல்வேறு விதமான நோய்கள் வருகின்றன. இந்த மன அழுத்தத்தை போக்கவும், மன அழுத்தம் வராமல் தடுக்கவும் யோகா கலை உள்ளிட்ட இயற்கை சார்ந்த வாழ்க்கைத் தர சிகிச்சை மையம் தேவைப்படுகிறது.இதை உணர்ந்த முதல்வர் ஜெயலலிதா அண்மையில் தமிழ்நாடு சட்டசபை விதி 110ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் ரூ.9 கோடியே 60 லட்சம் செலவில் அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் யோகா மற்றும் இயற்கை சார்ந்த வாழ்க்கைத்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி 18 மருத்துவ கல்லூரிகளிலும் ஒரு உதவி மருத்துவர் உள்ளிட்ட 4 பதவிகள் உருவாக்கப்பட்டு்ள்ளன. இந்த மையத்தில் நோயாளிகள் அறை, யோகா அறை அமைக்கப்படும். இங்கு நீர்வழிசிகிச்சை, மண் வழிசிகிச்சை, காந்த சிகிச்சை, கலர் சிகிச்சை அக்குபஞ்சர் உள்ளிட்ட பல சிகிச்சைகள் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு அதிகாரி ஒருவர்,”’’காந்தியடிகள் ஆங்கில மருத்துவத்தைவிட இயற்கையின் அடிப்படையிலே நமக்கு நாமே வைத்தியராக நம்முடைய நோய்களை குணமாக்க முடியும் என்பதைக் கடைப்பிடித்தார்.அந்த அடிப்படையில் தமிழகத்தில் அமைக்கபட்ம் இந்த மையங்களில் ஒவ்வொரு நோய்களுக்கும் பலவீனத்திற்கும் ஏற்ப உணவுமுறை ஆலோசனை,நீராவி குளியல்,முதுகு தண்டுவட குளியல்,மூலிகை மண்சிகிச்சை, எண்ணெய் மசாஜ், யோகா, அக்குபிரஷர் போன்ற சிகிச்சைகள் அளிக்கபடும்.

அத்துடன் உடல் பருமன், மூட்டுவலி, முதுகுவலி நீரழிவு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ஆஸ்துமா, ரத்தக்கொதிப்பு, மற்றும் மாதவிடாய் கோளாறுகள் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் மன அழுத்தம், தூக்கமின்மை, மனச்சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்படுவோருக்கு தேவையான மசாஜ், நீராவி குளியல், முதுகு தண்டுவடக்குளியல், மற்றும் தோல் ஆரோக்கியமாக – பளபளப்பாக இருக்க நீராவி குளியல், முகத்தில் மசாஜ் மற்றும் மண்சி கிச்சை அளிக்கப்படுகிறது. பாதங்களுக்கும் பாதுகாப்பான சிகிச்சை முறைப்படி அளிக்கப்படுகிறது.” என்று தெரிவித்தார்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top