.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 1 December 2013

அழகு!

அழகு எங்கு இருக்கிறது? பார்பவர்களின் கண்களிலும் அதை ரசிக்கும் மனதிலும் தன இருக்கிறது. எனக்கு அழகு என்று தெரியும்  ஒரு பொருள் மற்றவர்களுக்கு அசிங்கமாகத் தெரியலாம். மற்றவர்களுக்கு அழகில்லாதது எனக்கு அழகாய் தோன்றலாம்.

ஒரு பெண்ணை நிறுத்தி அந்தப் பெண்ணிடம் எது அழகு என்று கேட்டுப் பாருங்கள். ஒருவன் அவள் வலை வீசும் கண்கள் அழகு என்று சொல்வான் இன்னொருவன் அவள் தேன் சிந்தும் உதடுகள் அழகு என்று சொல்வான். மற்றொருவன் அவள் இடை அழகு என்பான். இன்னொருவன் அவள் நடை அழகு என்று சொல்வான். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று அழகாய் தெரியும். அழகு பார்வைக்கு பார்வை வேறுபடும்.

இப்படி பார்வையில் அழகு வேறுபடுவதால் தான் அழகான பெண்ணுக்கு அழகில்லாத ஆணும், அழகான அணுகு அழகில்லாத பெண்ணும் வாழ்க்கைத் துணையாக அமைகிறார்கள். இது இறைவன் செயல், காதலித்து தங்கள் துணையை தாங்களே தேடிக் கொள்பவர்களில் கூட இந்த புதுமை நடக்கத் தானே செய்கிறது.

 எத்தனயோ அழகு சுந்தரிகள் அழகில்லாத காற்றடித்தால் பறந்துவிடும் வாலிபர்களை காதலிப்பது இல்லையா? அதை போல எத்தனையோ கட்டிளம் காளையர்கள் அழகில்லாத ஒட்டடை குச்சி பெண்களைக் காதலிப்பது இல்லையா? இவை அனைத்துக்கும் காரணம் அவர்கள் பார்வை மனம் இரண்டிலும் உள்ள வித்தியாசங்கள் தான்.

அழகில்லாத பெண்ணிடம் உள்ள நல்ல குணமோ அல்லது அவர்கள் தூய்மையான அன்போ சிலருக்கு அழகாக தெரிவதால் அந்த பெண்களுக்காக எதையும் இழக்கத் தயார் ஆகுகிறார்கள். பெண்களும் அதே போலத் தான். அன்ன அழகில்லாவிட்டாலும் அவனிடம் இருக்கும் பேச்சுத்திறனோ அல்லது கம்பிரமோ நல்ல குணமோ அழகாக தெரிந்தால் அவனுக்காக உயிரைம் விடத் தயாராக இருகிறார்கள். இதற்கெல்லாம் மனம் தானே காரணம்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top