.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 2 January 2014

ஜில்லா பேனருக்கு தடை!

ஜில்லா பட பேனர்களை வைக்க பொலிசார் தடைவிதித்ததால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். தலைவா படத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மூலம் தடை உத்தரவுகள் பலப்படுத்தப்பட்டதால், மீண்டும் அதே நிலை தனது படங்களுக்கு வரக்கூடாது என்று உஷாராக செயல்பட்டு வருகிறார் விஜய்.அதனால் ஜில்லா படத்தில் எந்தவொரு பஞ்ச் டயலாக்கும் இல்லாமல், கதைக்கு தேவையான வசனங்களை மட்டுமே பேசி நடித்துள்ளார். அப்படி பேசி நடித்துள்ள டயலாக்கும் யாரையாவது மறைமுகமாக தாக்குவது போல் தெரிந்தால், அந்த வசனத்தையும் மாற்றி பேசி நடித்திருக்கிறார். பொங்கலுக்கு படம் திரைக்கு வருவது உறுதியாகி விட்டதால், ஜில்லா படத்தின் பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சில தினங்களுக்கு...

எத்தனை பேர் அப்பாவிடம் மனம் விட்டு பேசுகிறோம்??

நம்மில் எத்தனை பேர்  அப்பாவிடம் இப்பொழுது மனம் விட்டு பேசுகிறோம்?? சரி,இது ரொம்ப  கஷ்டமான கேள்வி, இப்போ வேற கேட்குறேன்.நம்மில் எத்தனை பேர்  அம்மாவிடம் பேசும் அளவிற்க்கு அப்பாவிடம்  பேசுகிறோம்???. அட்லீஸ்ட் அதில்  பாதி?? ஹ்ம்ம்ம் ,மனம் இந்த  கேள்வியை ஏற்க்க  மறுக்கிறதா???? நம் அம்மா கர்பிணியாக இருக்கும்  பொழுது,அவள் எடுக்கும்  வாந்தியை தன் கையில் ஏந்தும் அப்பா. அம்மா மகபேறு காலத்தில் சாப்பிடும்  ஒவ்வொரு பருக்கும் தன்  குழந்தை செழிப்பாக  பிறக்க ,என்று உணரும் நம் அப்பா ,நம்  அம்மா கேட்ட அனைத்தும்  வாங்கி தருகிறார்,அப்பொழுதே அவர்  நமக்காக...

ரஜினிக்குப் பதிலாக அஜித்?

ரஜினி அடுத்து யார் படத்தில் நடிக்கப் போகிறார் என்பது தான் கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக். கே.எஸ்.ரவிக்குமார் ரஜினியை இயக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் , கே.எஸ். ரவிக்குமாரே, 'ரஜினிக்கு இப்போது படம் இயக்கவில்லை. இது வதந்தி' என்று சொல்லிவிட்டார். ஷங்கர், பி.வாசு, கே.வி. ஆனந்த் என்று பல பெயர்கள் அடிபட்டன. அதில் இப்போது கே.வி.ஆனந்த் கழன்று கொண்டார். ரஜினிக்காகத் தயார் செய்த கதையை அஜித்திடம் சொல்லி ஓ.கே வாங்கிவிட்டாராம். ரஜினிக்குப் பதில் அஜித்தான் நடிக்கப் போகிறாராம் . கௌதம் மேனன் படம் முடிந்த பிறகு, அஜித் கே.வி.ஆனந்த் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் கே.வி.ஆனந்த் 'அனேகன்' படத்தை முடித்து...

உன் மொழி தமிழ் மொழியென்று !!!

தடுக்கி விழுந்தால் மட்டும்  அ...ஆ... சிரிக்கும்போது மட்டும்  இ..ஈ.. சூடு பட்டால் மட்டும்  உ...ஊ.. அதட்டும்போது மட்டும்  எ..ஏ... ஐயத்தின்போதுமட்டும்  ஐ... ஆச்சரியத்தின் போது மட்டும்  ஒ...ஓ... வக்கணையின்  போது மட்டும்  ஒள... விக்கலின்போது மட்டும்  ஃ  என்று தமிழ் பேசி மற்ற  நேரம் வேற்று மொழி பேசும் தமிழரிடம்  மறக்காமல் சொல்வோம்  உன் மொழி தமிழ் மொழியென்று !...

நயன்தாராவுக்கு விருது நிச்சயம்!

வித்யாபாலனுக்கு பெரிய இமேஜை உருவாக்கிக்கொடுத்த 'கஹானி' படத்தின் தமிழ்-தெலுங்கு ரீமேக்கான 'அனாமிகா'வில் நயன்தாரா நடித்திருக்கிறார்.ஆனால், இந்தப் படத்தின் முக்கிய சாரம்சமாக இருந்த கர்ப்பிணி கதாபாத்திரத்தை நார்மலாக மாற்றியிருக்கிறாராம் இயக்குநர் சேகர்முல்லா.புதிதாக திருமணமான ஒரு பெண், காணாமல் போன தனது கணவரைத் தேடி வருவது போன்று படமாக்கியுள்ளாராம்.ஆனால்,'கஹானி' படத்தில் கர்ப்பிணி என்பதுதான்  கதையின் அடிநாதமாக விளங்கியது.'கஹானி' இந்தியா முழுக்க ஓடி விட்டதால், திரும்பவும் அதையே செய்கிறபோது ரசிகர்களுக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.அதனால்தான் இந்த பதிப்பில் நிறைய திருத்தங்களை செய்திருக்கிறேன் . 'அனாமிகா'வில் நடித்ததற்காக நிச்சயம் நயன்தாராவுக்கு...

காதலர்கள் சமூகத்தின் பார்வையில்..!

காதலர்கள் சமூகத்தின் பார்வையில்..! 1-15 வயதுக்கு உட்பட்டவராயின் : முளைச்சு மூணு இல விடல அதுக்குள்ளே உனக்கு லவ் (love ) கேக்குதோ16-21 வயது என்றால் : படிக்கிற வயதில கழுதைக்கு லவ் கேக்குதோ22-34 வயது என்றால் : வேல வெட்டி இல்லாத துடைப்பு கட்டைக்கு நீயே தண்டம் உனக்கு ஒரு தண்டமா ..?35-49 வயது என்றால் : பிள்ள குட்டிகள் லவ் பண்ணுற வயதில உனக்கெல்லாம் காதாலா ..?50-64 வயது என்றால் : பேரன் பேத்திய கானுற வயதில கிழட்டுக்கு காதல் கேக்குது65- வயது மேல் - காடு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது இந்த வயதில் காதாலா ...? கலிகாலமடா இது...

104-க்கு அழைத்தால் இலவச மருத்துவ ஆலோசனை: தமிழகத்தில் புதிய திட்டம் துவக்கம்!

'104' என்ற எண்ணுக்கு போன் செய்து இலவச மருத்துவ ஆலோசனைகளைப் பெறும் புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுமக்கள் இனிமேல் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், தாய், சேய் நலம் பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம் பற்றிய தகவல்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய தகவல்கள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், முதல்வரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள், குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள்...

சீழ்க் கட்டிகள் - வெயில் கால நோய் பற்றிய தகவல்கள்...??

சீழ்கட்டிகள் என்பது ஆபத்தான நோயல்ல என்ற போதும் வேதனை அளிக்கின்றவையாக இருக்கின்றன. சருமத்தில் உள்ள முடி வேர்களில் கிருமித் தொற்று ஏற்படுவதால் இவை உண்டாகின்றன. சொறிவது உராய்வது போன்றவற்றால் சழுமத்தில் ஏற்படக் கூடிய நுண்ணிய காயங்களுடாக கிருமிகள் சருமத்தைத் தாண்டி உள்ளே ஊடுருப் பெருகுவதால் கட்டிகள் ஏற்படுகின்றன  பொதுவாக முகம், கழுத்து, அக்குள், முதுகு, தொடை போன்ற இடங்களிலேயே இவை அதிகம் தோன்றுவதுண்டு. இருந்தாலும் வேறு முடி உள்ள வேறு இடங்களிலும் தோன்றலாம். காது, மூக்கு போன்ற நொய்த இடங்களில் தோன்றும் கட்டிகள் கடுமையான வேதனையைக் கொடுக்கும். எவ்வாறு இருக்கும்? கட்டி தோன்றும்போது ஆரம்பத்தில் சற்று வலி இருக்கும், தடவினால் வீக்கம் இருப்பதாக உணர்வீர்கள்....

தமிழ் சினிமா 2013: உள்ளம் கவர்ந்த ஜோடிகள்!!

இயக்குநர்கள் எத்தனை செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தாலும், திரையில் தெரியும் நாயகனும் நாயகியும்தான் ஒரு படத்தின் வெற்றிக்கான தூதுவர்களாக இருக்கிறார்கள். தங்களுக்கு பிடித்த நாயகன் - நாயகி காம்பினேஷன் ஹிட்டானால் அவர்களை நம் ரசிகர்கள் உள்ளங்கைகளால் தாங்குவார்கள். கமல்- SRIதேவி, ரஜினி - SRIபிரியா, பிரபு - குஷ்பு... என்று இதற்கு பல உதாரணங்கள் உண்டு. அந்த வரிசையில் கடந்த ஆண்டு ஹிட்டான ஜோடிகள். ஆர்யா – நயன்தாரா ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் அறிமுகமான இந்த ஜோடி அப்போதே பேசப்பட்டது. மீண்டும் ‘ராஜா ராணி’யில் ஜோடி சேர்ந்த இவர்களை ‘மேட் ஃபார் ஈச் அதர், ஜோடியாக ஜான் – ரெஜினா கதாபாத்திரங்களில் ‘ராஜா – ராணி’ படத்தில் வார்த்தெடுத்தார் இளம் இயக்குநர் அட்லி....

”ஒரு மூச்சு விடும் நேரம்,” ....??

புத்தர் தன சீடர்களிடம்,”ஒரு மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு?”என்றுகேட்டார்.ஒரு சீடர் எழுபது என்றார்,இன்னொருவர் அறுபது என்றார்.மற்றொருவர் ஐம்பது என்றார்.அனைத்துமே தவறு என்று புத்தர் சொல்ல,சரியான விடையை அவரே சொல்லும்படி  அனைத்து சீடர்களும் வேண்டினர்.புத்தர் புன் முறுவலுடன் சொன்னார்,”ஒரு மூச்சு விடும் நேரம்,”என்றார்.சீடர்கள் வியப்படைந்தனர்.”மூச்சு விடும் நேரம் என்பது கணப் பொழுதுதானே?” என்றனர்.”உண்மை.மூச்சு விடும் நேரம் கணப்பொழுதுதான்.ஆனால் வாழ்வு என்பது மூச்சு  விடுவதில்தான் உள்ளது.ஆகவே ஒவ்வொரு கணமாக வாழ வேண்டும்.அந்தக் கணத்தில் முழுமையாக வாழ வேண்டும்.”என்றார் புத்தர்.ஆம்,நண்பர்களே.,பெரும்பாலானவர்கள் கடந்த கால மகிழ்ச்சியிலே...

'ஆகோ' கதையைக் கேட்டு வியந்த அனிருத்!

இயக்குநர் ஷ்யாம் சொன்ன கதையைக் கேட்டு 'ஆகோ' படத்திற்கு இசையமைக்கிறேன் என்று அனிருத் ஒப்புக் கொண்டிருக்கிறார். நாயகனாக நடிக்க பல வாய்ப்புகள் வந்தாலும், அவற்றை எல்லாம் தட்டிக் கழித்தே வருகிறார் அனிருத். தற்போதைக்கு திரையுலகில் இசை மூலமாக மட்டுமே தனது பங்களிப்பு என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார் அனிருத். 'ஆகோ' என்ற படத்தை இயக்க இருக்கிறார் ஷ்யாம். ரெபெல் ஸ்டூடியோஸ் சார்பில் தீபன் பூபதி, ரதீஸ் வேலு ஆகியோர் தயாரித்து வருகின்றனர். இப்படத்தின் FIRST LOOK வெளியாகி இருக்கிறது. அனிருத்தை முன்னிலைப்படுத்தி படத்தின் போஸ்டர்கள் வெளியாகின. இதனால் அனிருத் நாயகனாக நடிக்க இருக்கிறாரா என்ற கேள்வி நிலவியது. ஆனால், அனிருத் இப்படத்தின் கதையைக் கேட்டு இசையமைக்க...

ஆண்கள் காதலை சொல்லும் போது பெண்கள் சொல்லும் 12 பதில்கள்..!

ஆண்கள் காதலை சொல்லும் போது பெண்கள் சொல்லும் 12 பதில்கள்..!1.நோ ஐடியா (no idea) 2.நண்பர்களாக இருக்கலாம்3.செருப்பு பிஞ்சிடும்4.நான் காதலை வெறுக்கிறேன்5.நான் உன்னை வெறுக்கிறேன்6.பெற்றோர் திட்டுவாங்க7.காதலில் நம்பிக்கை இல்லை8.யோசிக்க நேரம் வேண்டும்9.உங்களோட மாத வருமானம் என்ன?10.மன்னிக்கவும் அண்ணா11.நான் என்னுடைய பெற்றோர மட்டும் தான் காதலிக்கிறேன்.12.நீங்க எனக்கு அப்பா மாதிர...

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி!!!

டெல்லி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றது. சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் வெற்றி பெற்று, தமது அரசின் பெரும்பான்மையை நிரூபித்தார், ஆம் ஆத்மியின் தலைவரும், முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால். மொத்தம் உள்ள 70 உறுப்பினர்களில், ஆம் ஆத்மி அரசுக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 36 வாக்குகள் கிடைத்தது. ஆம் ஆத்மி கட்சியின் 28 உறுப்பினர்களும், காங்கிரஸின் 8 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். பாஜகவின் 31 உறுப்பினர்கள், ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர்...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top