.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 2 January 2014

'ஆகோ' கதையைக் கேட்டு வியந்த அனிருத்!




இயக்குநர் ஷ்யாம் சொன்ன கதையைக் கேட்டு 'ஆகோ' படத்திற்கு இசையமைக்கிறேன் என்று அனிருத் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

நாயகனாக நடிக்க பல வாய்ப்புகள் வந்தாலும், அவற்றை எல்லாம் தட்டிக் கழித்தே வருகிறார் அனிருத். தற்போதைக்கு திரையுலகில் இசை மூலமாக மட்டுமே தனது பங்களிப்பு என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார் அனிருத்.


'ஆகோ' என்ற படத்தை இயக்க இருக்கிறார் ஷ்யாம். ரெபெல் ஸ்டூடியோஸ் சார்பில் தீபன் பூபதி, ரதீஸ் வேலு ஆகியோர் தயாரித்து வருகின்றனர். இப்படத்தின் FIRST LOOK வெளியாகி இருக்கிறது. அனிருத்தை முன்னிலைப்படுத்தி படத்தின் போஸ்டர்கள் வெளியாகின. இதனால் அனிருத் நாயகனாக நடிக்க இருக்கிறாரா என்ற கேள்வி நிலவியது.


ஆனால், அனிருத் இப்படத்தின் கதையைக் கேட்டு இசையமைக்க மட்டுமே ஒப்புக் கொண்டிருக்கிறார். அனிருத்திற்கு இருக்கும் ரசிகர்களை மனதில் வைத்து, 'ஆகோ' படத்தின் FIRST LOOK போஸ்டரை அனிருத்தை பிரதானப்படுத்தி வடிவமைத்திருக்கிறார்கள்.


'ஆகோ' என்றால் ஆர்வ கோளாறு . மூன்று ஆர்வ கோளாறு இளைஞர்களின் ஆர்வத்தால் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களின் சாராம்சமே 'ஆர்வ கோளாறு' படத்தின் கதை என்றார் இயக்குநர் ஷ்யாம்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top