இண்டெர்நெட்டின் அருங்குணங்களில் ஒன்று சில நேரங்களில் அது உங்களை ராஜா போல உணர வைக்கும் என்பது தான்.அதாவது நீங்கள் ஒரு கட்டளையிட்டால் போதும் அதனை செய்து முடிக்க ஆயிரம் பேரை அது தேடித்தரும்.இந்த விசுவாசத்திற்கு பதிலாக நீங்கள் சிறு தொகையை செலுத்த வேண்டியிருக்கும் என்றாலும் உங்கள் சார்பில் ஒரு வேலையை சிறப்பாக முடித்து தர பலர் தயாராக இருப்பது உங்கள் கையில் அதிகாரம் தரப்பட்டிருப்பது போன்ற உணர்வைத்தரும்.இத்தகைய உணர்வைத்தரும் பல இணையதளங்கள் இருக்கின்றன.இப்போதைக்கு பிளைட்பாக்ஸ் இணையதளத்தை மட்டும் பார்க்கலாம்.பிளைட்பாக்ஸ் விமான சேவை தளங்களில் அடுத்த புதுமையாக அறிமுகமாகியிருக்கும் தளம்.நீங்கள் செல்லும் இடத்திற்கான மிக குறைந்த விலையிலான விமான டிக்கெட்டை தேடித்தருவது தான் இந்த தளத்தின் நோக்கம்.இதற்காக நூற்றுக்கணக்கான விமான டிக்கெட் நிபுணர்களை உங்களுக்கு சேவை செய்யவும் வைக்கிறது.அதிலும் எப்படி?உங்களுக்கு...
Thursday, 5 September 2013
தெரிந்து கொள்வோம்..
பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கான முதல் ஹார்ட் டிஸ்க்கினை 1979 ஆம் ஆண்டு முதன் முதலாக ஸி கேட்( Seagate ) நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் கொள்ளளவு 5 எம்.பி.( MB )
முதன் முதலில் தங்களுக்கென ஓர் இணையதளப் பெயருக்கு விண்ணப்பித்தவர்கள் டிஜிட்டல் எக்விப்மெண்ட் கார்ப்பரேஷன்(digital equipment corporation) ஆகும்.
ஐ.பி.எம் பெர்சனல் கம்ப்யூட்டரை வடிவமைத்த 12 பொறியாளர்களை என்ன குறியீட்டுப் பெயர் கொண்டு அழைத்தார்கள் தெரியுமா? ‘தி டர்ட்டி டஜன்’ ( The Dirty Dozen )
VIRUS ன் விரிவாக்கம்( கண்டிப்பா 'நண்பன்' படம் சத்தியராஜ் பெயர் இல்லை )
Vital Information Resource Under Siege
SIM ன் விரிவாக்கம் ( Sim card சொல்வோமே அதுதான் Simran இல்லப்பா.....
அறுவைசிகிச்சை பிரசவத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்!
தற்போது நடைமுறையில் சுகப்பிரசவம் என்பது குறைந்து பெரும்பாலான பெண்களுக்கு அறுவைசிகிச்சை பிரசவம் தான் நடைபெற்று வருகின்றது.பொதுவாக இந்த மாதிரியான பிரசவம், குழந்தை பிறக்கும்பொழுது சிக்கல் ஏற்பட்டால் தான் நடைபெறும். மேலும் சில அனுபவமுள்ள பெண்களும் அறுவைசிகிச்சை பிரசவத்தையே சிறந்ததாக சொல்கின்றனர். ஏனெனில் சுகப்பிரசவத்தின் போது எற்படும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்பதாலேயே. ஆனால் உண்மையில் அறுவைசிகிச்சை பிரசவத்தின் போது அவ்வளவாக வலி தெரியாவிட்டாலும் அந்த மாதிரியான பிரசவத்திற்குப் பின்னர் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி யாரும் யோசிக்கவில்லை. அறுவைசிகிச்சை பிரசவத்தை தேர்ந்தெடுத்தால், அதற்கு பின்னர் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முதலில் அறுவைசிகிச்சைபிரசவம் என்றாலேயே வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுப்பது. அவ்வாறு அறுவைச்சிகிச்சை செய்து குழந்தையை வெளியே...
.உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினையா!

உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால்உங்கள் கம்ப்யூட்டர்...
விண்டோஸ் இயங்குதளத்தில் கோப்புகளை மறைக்க!

இரகசியமாக தகவல்களை கணினியில் சேமித்து வைக்க நாம் ஏதாவது ஒரு கோப்புகளை மறைக்கும் மென்பொருளை பயன்படுத்துவோம். இவ்வாறு நாம் மூன்றாம் தர மென்பொருளை பயன்படுத்துவதால் இணைய இணைப்பு இருக்கும் பட்சத்தில் நம்முடைய கோப்புகளை திருட ஹேக்கர்களுக்கு வாய்ப்பு அதிகம். சாதாரணமாக தகவல்களை மறைத்து வைக்க விண்டோஸ் இயங்குதளத்திலேயே வழி இருக்கிறது.
விண்டோஸ் இயங்குதளத்தில் Folder Option வசதியை பயன்படுத்தி எளிதாக கோப்புகளை மறைத்துவிடலாம். ஆனால் இதனை யார் வேண்டுமானாலும் ஒப்பன் செய்துவிட முடியும். என்பதால் கணினி பயன்பாட்டாளர்கள் இதனை கையாள மாட்டார்கள். விண்டோஸ் இயங்குதளத்தில் Folder Option யை பயன்படுத்தி கோப்புகளை மறைத்துவிட்டு பின் இந்த Folder Option...
கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள், அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு முறைகள்!
இப்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது.குழந்தையைப் பெற்றெடுப்பதுடன் முடிந்து விடுவதில்லை பெண்ணின் போராட்டங்கள். பிரசவத்துக்குப் பிறகும் அவள் சந்திக்கிற உடல், மன உபாதைகள் ஏராளம். அதிலும் சுகப்பிரசவமான பெண்களுக்கு ஏற்படும் ‘அடி இறக்கம்’ என்கிற பிரச்னை, அவர்களைத் தூங்கவிடாமல் செய்யும். கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள், அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு முறைகள் பற்றி பார்க்கலாமா?
‘‘சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுகிற பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் பாதிக்கிறது. நீண்ட நேரம் வலியுடன் அவதி, கஷ்டப்பட்டு, முக்கி, குழந்தையை வெளித்தள்ளுவது, பிரசவத்துக்குப்...
ஒட்டு மொத்த ஹார்ட் பிரச்னைக்கு ஒரே ஒரு மாத்திரை!
உலக அளவில் உள்ள இதய நோயாளிகளில் இந்தியாவில் தான் 60 சதவீதம் பேர் உள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.வரும் 2015ம் ஆண்டிற்குள் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் 20 மில்லியன் பேர் இறக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.அது மட்டுமின்றி 2015ம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் பேருக்கு பக்கவாதம் ஏற்படக்கூடும் என்று கணக்கிடப்பட்டு இருந்தது.இந்நிலையில் எல்லாவகையான இதய நோய்களுக்கும் பொதுவானதொரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதுநாள்வரை இரத்தக் கொதிப்பு, இரவில் ஸ்ட்ரோக் வராமல் தடுக்க ஆஸ்பிரின் என இனி தனித்தனியாக மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இனி இல்லை என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்...
சங்கட ஹர சதுர்த்தி!
சதுர்த்தி திதி கணேசருக்கு மிகவும் உகந்த நன்னாள். சுக்ல பட்ச (வளர்பிறை) சதுர்த்தியை வரசதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச (தேய்பிறை சதுர்த்தியை) சங்கடஹர சதுர்த்தி என்றும், சங்கஷ்டஹர சதுர்த்தி என்றும் கூறுவர். நடுப்பகல் வரையுள்ள சுக்ல சதுர்த்தியும், இரவில் சந்திரோதயம் வரை நீடிக்கின்ற கிருஷ்ண சதுர்த்தியும் விரதத்திற்கேற்றவை. சங்கட ஹர சதுர்த்தியில் பகலில் உபவாசம் இருப்பர். இரவு சந்திரனை கண்டதும் அர்க்கியம் தந்து, பூஜையை முடித்து பின் உண்பர்.ஆதிசேஷன் நாரதரது உபதேசப்படி சங்கட ஹர சதுர்த்தி விரதமிருந்தார். விநாயகரது திருவருளால் சிவபெருமாள் முடியில் இருக்கும் பேறு பெற்றார். அவனியைத் தாங்கவும், விநாயகருக்கு உதரபந்தனமாக இருக்கவும் திருமாலின் படுக்கையாகவும் ஆகும்...
கண் திறந்த கணபதி!
விநாயகப் பெருமானின் பல்வேறு வடிவங்களையும், கோணங்களையும், அவற்றின் சிறப்புக்களையும் நாம் அறிந்திருக்கிறோம். பார்வையற்ற பக்தனுக்கு கண் வழங்கிய கணபதியை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?இத்தகைய சிறப்பு பெற்ற கணபதி, தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார். நினைத்த காரியத்தை நிறைவேற்றித்தரும் கண் கொடுத்த கணபதியை, அந்த பெயரால் அழைக்கப்படும் நிகழ்ச்சி முன்பு நடந்ததாக வரலாறு உண்டு. பிறப்பால் பார்வையற்ற ஒருவர், தனக்கு பார்வை இல்லையே என்ற சோகத்திலும், வறுமை தன்னை வாட்டி வதைக்கிறதே என்ற ஆதங்கத்திலும் துன்பத்தோடு வாழ்ந்து வந்தார். இந்நிலையில் தான் சுவாமிமலையில் உள்ள விநாயகரின் பெருமைகளை அவர் உணந்து, அங்கு சென்றார். பிறர் உதவியுடன் வஜ்ச்சிர தீர்த்தம் என்ற கிணற்றில் நீராடி, கடவுளை வேண்டி விரதம் இருக்கத் துவங்கினார். பார்வையற்ற பக்தரின் செயலை பலர் ஏளனம் செய்தனர். எனினும் மனம் தளராமல்...
அன்னையும் விநாயகரும்!
ஸ்ரீ அரவிந்தருடன் ஆன்மீக மாமுயற்சியில் ஈடுபட்ட அன்னை அவர்கள் ஒவ்வொரு நாளும் மாலைப் பொழுதில் யோக பயிற்சிகள் குறித்து சாதகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள், சாதகி ஒருவர் விநாயகரைப் பற்றிய கேள்வி எழுப்பினார். இறைவன் அப்படிப்பட்ட உருவத்தி்ல் வருவாரா? அது உண்மையா? என்று அன்னையை வினவினார். அதற்கு பதிலளித்த அன்னை, "என்னுள்ளும் இந்தக் கேள்வி எழுந்தது. அதில் ஆழமாக தியானித்தேன். அப்பொழுது நான் சற்றும் எதிர்பாரா வண்ணம் ஆம் என்பது போல விநாயகர் - நீங்களெல்லாம் பார்க்கின்றீர்களே அதே ரூபத்தில் - என் முன் தோன்றினார். என்ன வேண்டும் என்று வினவினார். எனக்கு எப்படி உதவுவீர்கள் என்று கேட்டேன்.எல்லா வழியிலும்... செல்வத்தில் இருந்து காரியங்கள் வரை என்னால் உதவ முடியும் என்று பதில் கூறினார். அப்பொழுது ஆசிரமத்தை நடத்துவதில் நிதி ரீதியாக பெரும் சிக்கல் இருந்தது. அதனைத் தீர்க்க...
விநாயகர் சதுர்த்தியில் விரதம்!
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருக்கின்றன. விநாயகருக்காக எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பது பற்றி சில யோசனைகள்;ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி தினத்தில் அதிகாலையில் எழுந்தி மூஷிக வாகனனை முழு மனதோடு நினைத்து நீராட வேண்டும்.பூஜை அறையில் சுத்தமான மனப்பலகை வைத்து அதன் மீது கோலம் போட வேண்டும். அதன் மேல் தலைவாழை இலை ஒன்றை வடக்கு பார்த்து வைத்து அதன் மேலே பச்சரிசியை பரப்பி வைக்க வேண்டும். புதிய களிமண் பிள்ளையாரை அரிசிக்கு நடுவில் வைக்க வேண்டும்.அதன் பின் அருகம்புல்லோடு இலை, பூக்களோடு பிள்ளையாருக்கு பிடித்த வன்னி, மந்தாரை இலைகளோடு...
விநாயகர் சதுர்த்தி புராணம்!
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனைஇந்து இளம்பிறை போல் எயிற்றனைநந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைபுந்தியில் வைத்து அடி போற்றுதுமே!
ஆனைமுகப் பெருமானை போற்றிப் பூஜிக்கும் திருநாளான விநாயக சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணித் திங்கள் அமாவாசையை அடுத்த சதுர்த்தியன்று (சுக்ல பட்ச சதுர்த்தி) கோலாகலமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
இல்லந்தோறும் நடக்கம் இனிய பூஜை!வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம். அறிவு தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து எடுத்த செயல்கள்...
விநாயகர் சதுர்த்தி வரலாறு!

விநாயக சதுர்த்தி வரலாறு! (History of vinayagar sathurthi)
பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக நியமித்தார். அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.இந்து மக்கள் அனுட்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுட்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கணுமுள்ள இந்துக்கள்...
சர்வதேச விண்வெளி நிலையத்தை பார்க்க வேண்டுமா?
நாசாவின் புதிய முயற்சி..
சர்வதேச விண்வெளி நிலையத்தை இரவுப்பொழுதில் நாம் இருந்த இடத்தில் இருந்து வெறுங் கண்ணால் இனிமேல் பார்க்க நாசா குறுஞ்செய்தி (SMS) சேவை ஒன்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பூமி மற்றும் பிரபஞ்சம் ஆகியவற்றை விண்வெளி வீரர்கள் விண்ணில் தங்கியிருந்து ஆய்வு செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டது International Space Station (ISS).
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவான இந்நிலையத்துக்கு விண்வெளி வீரர்கள், ஆய்வுக் கருவிகள், உணவுகள் ஆகியவற்றை அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் விண் ஓடங்கள் அவ்வப்போது விண்ணுக்குச் சுமந்து சென்று வருகின்றன.
தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க...
குரூப் 2: 1064 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பம் கிடைக்கும்!
வணிகவரித் துறை துணை அலுவலர், சார் பதிவாளர், தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட 19 பதவிகளில் காலியாகவுள்ள ஆயிரத்து 64 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தேர்வுக்கு வியாழக்கிழமை-இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வழக்கம் போன்று, தேர்வாணைய இணையதளத்திலேயே (www.tnpsc.gov.in) விண்ணப்பம் செய்யலாம்..
துணை வணிக வரி அதிகாரி, சார்-பதிவாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 1064 காலி பணியிடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வு நடக்கிறது. இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் 1-ந் தேதி நடக்கிறது. தலைமை செயலக உதவி பிரிவு அதிகாரி, நகராட்சி கமிஷனர், சார் பதிவாளர், துணை வணிக வரி அதிகாரி, சிறை துறை நன்னடத்தை...
நல்லாசிரியர் விருதின் லட்சணம் இதுதான்!
இன்று ஆசிரியர் தினம்.
நிகழ் கல்வியாண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (நல்லாசிரியர் விருது) பெறுவோர் பட்டியலை தமிழக அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. இது தவிர, மத்திய அரசும் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கிறது. ஆசிரியர்களைப் பாராட்டுமுகமாக, அவர்களை ஊக்குவிக்க இத்தகைய விருதுகள் வழங்கப்படுவது இன்றியமையாதது. ஆனால் நல்லாசிரியர்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வாறு தெரிவு செய்கிறார்கள் என்று பார்த்தால், இன்னமும், அதிகார வரம்புக்குள்தான் இந்த விருது அடங்கிக் கிடக்கிறது என்பதும் இந்தப் பரிந்துரை இன்னமும் மாவட்ட முதன்மை கல்வி அலுவர் மூலமாகத்தான் அரசுக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதும் தெரியும்.
இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த ஆசிரியர்களே வாங்கி,...