.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 27 November 2013

படித்தது / பிடித்தது ....


நண்பனுடன்
 அவனது
 வீட்டிற்குச்சென்றிருந்தேன்..

வாசலில்
 அவனது பாட்டி
கயிற்றுக்கட்டிலில்
 கிடந்தார்..

நண்பன் உள்ளே
 போய்விட்டான்..

நான் : என்ன பாட்டி
 நல்லா
 இருக்கிங்களா..?

பாட்டி : நல்லாருக்கேன் ராசா.. நீ ராசா..?

நான் : நல்லாருக்கேன் பாட்டி..

இடையே எனது Android
தொலைபேசி அழைத்தது..
பேசி முடித்தேன்..

பாட்டி : என்னாய்யா அது
 டிவி பொட்டி கணக்கா..?

நான் : இதுவா பாட்டி..
இது புதுசா வந்துருக்குற ஃபோனு..
சட்டென்று ஞாபகம் வந்தவனாய்
 அதிலிருந்த Talking Tom-ஐ
 எடுத்துக்காட்டினேன்..
பாட்டி இதுகிட்ட பேசினா
 அத அப்புடியே திரும்ப பேசும்..


பாட்டி : என்ன ராசா சொல்றே..?
Talking Tom :என்ன ராசா சொல்றே..?

நானும், பாட்டியும், Talking Tomமும் சிரித்தோம்..

பிறகு வீட்டினுள்
 சென்றேன்..

எல்லோருடன்
 பேசிவிட்டு வெளியில் வந்தேன்...

வாசலில் பாட்டி..

நான் : போயிட்டு வாரேன் பாட்டி..

பாட்டி : ராசா...

நான் : என்னா பாட்டி..?

பாட்டி : ஏய்யா.. அந்தபூனகுட்டிய
 இங்க உட்டுட்டு போயா..

நான் : என்ன பாட்டி சொல்றிங்க..?

பாட்டி : ஆமாய்யா..
இந்த வயசான காலத்துல இங்க
 எங்கிட்ட யாருமே பேச மாட்றாங்கயா..
நா செத்துபோறப்ப
 அந்த
 பூனகுட்டிகிட்டயாச்சும்
 பேசிட்டே சாவுறேன்யா..

 (வீட்டில் உள்ள முதியோர்களிடம்மூம் பேச நேரம் ஒதுக்குங்கள், அவர்கள் உணர்வுகளுக்கும் மதிப்பளியுங்கள்...)

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top