.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 18 December 2013

மனைவி பாராட்ட வேண்டுமா?



குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வராமல் இருக்க கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்க வேண்டும். கணவர் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மனைவியும் ஒரு பெண் அவருக்கும் உணர்ந்து அவரிடம் அன்பாக நடத்து கொள்ள வேண்டும்.

தினமும் வேலையில் நடக்கும் விஷங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். மனைவி தான் விட்டு கொடுத்து போக வேண்டும் என்று நினைக்காமல் சில விஷயங்களை மனைவிக்காக விட்டு கொடுத்து பாருங்கள் குடும்பம் மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

• மனைவியைக் கவுரவமாக நடத்துங்கள்.

• வெளியில் எங்கே போகிறீர்கள், எப்போது திரும்புகிவீர்கள் என்பதைச் சொல்லிவிடுங்கள்

• ஆடம்பர செலவுகளைக் குறையுங்கள்

• மனைவிக்கு அவசர செலவுகளுக்கு சிறிது பணம் கொடுங்கள்

• உங்கள் பிரச்சனைகளை மனம் விட்டு அவரிடம் விவாதியுங்கள்

• அவர் தனது பிரச்சனைகளை உங்கள் செவியில் போட்டால் மனதார காது கொடுத்து கேளுங்கள்

• வருங்காலத்துக்கு ஒரளவு பணம் சேமித்து வைக்க பாருங்கள்

• குழந்தைகளைப் பற்றிய சிந்தனை சதாநேரமும் உங்களுக்கு இருக்கட்டும்

• பயணங்களால் மனைவியைப் பிரியும்போதும் வீட்டுக்குள் வரும் போதும் முத்தமிடுங்கள் அல்லது புன்னகையாவது பூத்தல் அவசியம்

 இவைகளை மறவாமல் கடைப்பிடித்து வந்தால் மனைவி உங்களை ஆஹா...ஓஹோ என புகழ்வது உறுதி.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top