.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 28 December 2013

ஆனந்தம் என்பது எது தெரியுமா?



* தீமையை நன்மையால் வெல்ல வேண்டும். கருமியை ஈகையால்
 வெல்ல வேண்டும். பொய்யனை உண்மையால் வெல்ல வேண்டும். பகைவனைஅன்பினால் வெல்ல வேண்டும். இவையே பண்புடையோரின்
 நெறிமுறையாகும்.


 * பிறர் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி அவர்களுடைய
 குறைகளையே காணுபவர்கள், பிறரைப் பற்றி புறஞ்சொல்லும்
 குணமுடையவர்கள், இறுதியில் தங்களுடைய குறைகளை திருத்த
 முடியாமல் தவிப்பார்கள்.


 * உண்மையில் ஆனந்தம் என்பது எது தெரியுமா? உங்களால்
 இயன்ற நல்ல செயல்களை செய்வதில் ஆர்வத்தை வளர்த்துக்
 கொள்ளுங்கள். அதன் மூலம் கிடைக்கும் ஆனந்தத்தை இழக்க
 மாட்டீர்கள்.


 * மனிதன் பழக்கத்திற்கு அடிமையானவன். ஒருமுறை செய்த
 செயலைத் திரும்ப திரும்பச் செய்யும் தன்மை கொண்டவன்.
ஆதலால், பாவம் தரும் செயல்களை செய்வதற்கு அஞ்சுங்கள்.
இல்லாவிட்டால், பழக்கத்தினால் மீண்டும் மீண்டும் செய்ய
 ஆரம்பித்து விடுவீர்கள்.


 * துன்பப்பட்டவனுக்கே இன்பத்தின் அருமையை உணர முடியும்.
எவ்வித முயற்சியும் இல்லாமல் பெறும் இன்பம் வந்த வேகத்தில்
 காணாமல் போய்விடும். பொறாமை, பேராசை மற்றும் கெட்ட எண்ணம்
 உடையவன் பேச்சாலோ, உடலழகாலோ மட்டும் நல்லவனாகி விட
 முடியாது.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top