.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 23 November 2013

திருமண பழமொழிகள்!

 
 திருமணம் செய்வதற்கு முன் இரண்டு கண்களையும் திறந்து வைத்துக்கொள்; திருமணம் ஆனபின் ஒன்றை மூடிக்கொள்.

- அமெரிக்கா

மணவாழ்க்கை என்பது இரும்புக் கோட்டை மாதிரி. வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புகிறார்கள்; உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல விரும்புகிறார்கள்.

- அரேபியா

 மனைவி - வீட்டின் ஆபரணம் - இந்தியா

 கெட்டிக்காரப் பெண் - தான் காதலிப்பவனை விட்டு விட்டுத் தன்னை காதலிப்பவனைத்தான் மணப்பாள்.-

 செக்கோஸ்லோவேகியா


 திருமணம் செய்து கொள்ளும் முன்பும், கோர்ட்டுக்குச் செல்லும் முன்பும் தீர்க்கமாக யோசிக்க வேண்டும்.-

 டென்மார்க்



 திருமணத்துக்குப் பெண்ணை நாடும்போது கண்களை மூடிக் கொண்டு கடவுளை தியானம் செய்.

- வேல்ஸ்

 அழுது கொண்டே வரும் மணமகள், சிரித்து கொண்டிருக்கும் மனைவியாகிறாள். - ஜெர்மனி

 பணத்திற்காகக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டாம்; பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்!-

ஐரோப்பா

 திருமணம் என்பது - மூடிய தட்டிலிருக்கும் உணவு போன்றது - ஸ்காட்லாந்து

 மணம் செய்யும் போதும், மாத்திரை சாப்பிடும்போதும் மிக அதிகமாகச் சிந்திக்கக் கூடாது.- ஹாலந்து

 கணவனின் அன்பே, பெண்ணிற்குப் பொக்கிஷம் - தமிழ் நாடு

 இரு இதயங்களும் ஒன்றானால் வைக்கோல் தொட்டி கூட அரண்மனையாகும்! - இலங்கை

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top