.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 29 December 2013

அந்த விஷயத்துல நாங்க ஒண்ணுதான்...




ஒரு நடிகை தான் வாங்கிய அட்வான்சை ஒரு போதும் திருப்பிக் கொடுப்பதில்லை என்பதற்கு சமீபத்திய உதாரணம் இரண்டு பட பூஜைகள்.

அண்மையில் தெலுங்கு பட இயக்குனர் ஒருவரது தலைமையில் சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரமாண்ட பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சாதாரண ஆட்களில்லை. நயன்தாரா, தெலுங்கின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான கோபிசந்த் ஆகியோர். இது நயன்தாரா நடிக்கும் படம் என்பதால் சென்னையிலிருக்கும் தமிழ் நடிகர்களில் முக்கியமான பலரும் கூடிவிட்டார்கள்.

சரி, முதல் வரி மேட்டருக்கு வருவோம். இந்த படம் ஏற்கனவே பூபதி பாண்டியன் டைரக்ட் செய்வதாக இருந்த படம். அதை துவங்கும் முன்பாகவே இவருக்கும் தயாரிப்பாளருக்கும் முட்டிக் கொண்டது. படத்தையே டிராப் செய்துவிட்டார் தயாரிப்பாளர். அப்படியென்றால் நடிகர் நடிகைகளுக்கு கொடுத்த அட்வான்ஸ்? அதை திருப்பி கேட்கும்போதுதான் படமாவே நடிச்சு கொடுத்துடறோம் பாஸ் என்றார்களாம் நயன்தாராவும் கோபிசந்தும். வேறு வழியில்லாமல் புதிய இயக்குனரை வைத்து இந்த படத்தை மீண்டும் துவங்கியிருக்கிறார் தயாரிப்பாளர்.

இதே நிலைமைதான் இப்போது தமன்னா நடிக்க ஒப்புக் கொண்ட தெலுங்கு படம் ஒன்றுக்கும். நாகசைதன்யாவுடன் தமன்னா ஜோடியாக நடிக்கவிருந்த ஹலோ பிரதர்ஸ் படம் டிராப். அட்வான்சை திருப்பி கேட்ட தயாரிப்பாளரிடம், படமே பண்ணிடலாமே. எதுக்கு அட்வான்சை திருப்பி கேட்கிறீங்க என்கிறார்களாம் இருவரும்.

இதே மாதிரி இலியானாவிடம் சில கோடிகளை கொடுத்துவிட்டு விழித்துக் கொண்டிருக்கிறார் இன்னொரு தயாரிப்பாளர். இத்தனைக்கும் இந்த படத்தில் இலியானாவுக்கு ஜோடியாக நடிக்க புக் ஆகியிருந்தவர் நம்ம ஊரு ஹீரோ விக்ரம். சீயானாவது திருப்பி கொடுத்தாரா இல்லையா? அது இப்ப தெரியாது...

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top