.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 5 January 2014

ரஜினி நடித்த நான் சிகப்பு மனிதன் பட தலைப்பில் விஷால்!




படத்தின் பப்ளிசிட்டிக்காக வெற்றி பெற்ற ரஜினி பட டைட்டில்களை வளர்ந்து வரும் ஹீரோக்கள் தங்கள் படத்திற்கு வைத்துக்கொள்வது வழக்கமாக நடந்து வருகிறது. முன்பு தனுஷ் உள்ளிட்ட சில நடிகர்கள் பின்பற்றினார். இப்போது கார்த்தி பின்பற்றி வருகிறார். இந்த பட்டியலில் தற்போது விஷாலும் சேர்ந்து கொண்டுள்ளார்.

பாண்டியநாடு படத்தையடுத்து தீராதவிளையாட்டு பிள்ளை, சமர் படங்களை இயக்கிய திரு இயக்கத்தில் விஷால் நடிப்பது உறுதியாகியுள்ளது.இந்த படத்தையும் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலமே தயாரிக்கும் விஷால், இந்த படத்திற்கும் பாண்டியநாடு கதாநாயகி லட்சுமிமேனனையே ஜோடி சேர்த்திருக்கிறார்.

காரணம் பாண்டியநாடு படத்திற்கு லட்சுமிமேனன் காட்டிய ஈடுபாடு மட்டுமின்றி, விஷால்-லட்சுமிமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிக உயிரோட்டமாக இருப்பதாக படம் பார்த்த விஷாலின் திரையுலக நண்பர்கள் கருத்து சொல்லியிருக்கிறார்களாம். அதனால், அடுத்த படத்தில் வேறு சில முன்னணி நடிகைகளின் பெயர்களை பரிசீலனையில் வைத்திருந்தவர்கள், இப்போது லட்சுமிமேனனையே கமிட் பண்ணி விட்டனர்.

மேலும், இந்த படத்தின் தலைப்பு பேசப்படுவதாக இருக்க வேண்டும் என்று டைரக்டர் திருவிடம் சொல்லியிருந்தாராம் விஷால். ஆனால் அதையடுத்து அவர் சில டைட்டில்களை சொன்னவர், பின்னர் ரஜினி நடித்த நான் சிகப்பு மனிதன் தலைப்பு இந்த கதைக்கு மிகப்பொருத்தமாக இருக்கும் என்றாராம். அதைக்கேட்ட விஷால் குஷியாகி விட்டாராம்.

அதையடுத்து அப்படத்தை தயாரித்தவர்களிடம் முறைப்படி பேசி சிகப்பு மனிதனாகியிருக்கிறாராம் விஷால்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top