.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 13 December 2013

ஒரு சமயம் ஆயிரம் ரூபாய் நோட்டும், ஒரு ருபாய் நாணயமும் சந்தித்துக் கொண்டது?




ஒரு சமயம் ஆயிரம் ரூபாய் நோட்டும், ஒரு ருபாய் நாணயமும் சந்தித்துக் கொண்டது .


ஆயிரம் ருபாய் ,ஒருருபாயை நாணயத்தை பார்த்து ஏளனமாய் ,
 "நான் எப்போதுமே நடிகர்களிடமும் , பெரும் செல்வந்தர்களிடம் மட்டுமே இருப்பேன், தொழிலதிபர்களின் பெட்டியில்தான் தூங்குவேன், நட்சத்திர ஓட்டலில் விளையாடுவேன், விலையுயர்ந்த காரில்தான் பயணிப்பேன் , என் வாழ்க்கை எப்போதும் பரபரப்பாக இருக்கும் கவுரவமாக இருக்கும் நீ எதற்கு என்னருகினில் நிற்பதற்கெல்லாம் தகுதி இல்லை"
என்றது தலைகனத்துடன்.


அதற்கு ஒரு ரூபாய் நாணயம் அமைதியாக சொன்னது.


 "நான் எதற்கு நீ செல்லும் இடத்திற்கெல்லாம் போய் அவதிப்படவேண்டும் ,


 என்னை பாதுகாப்பதே கோவில் உண்டியளில்தான், மண் உண்டியலில் குழந்தைகள் என்னை பத்திரப்படுதுகிறார்கள்.


 குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு நானும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறேன்.


 வறியவரின் பசியை போக்க நான் சிறுதுளி வெள்ளமாக இருக்கிறேன்" என்றது.


நான் என்ன சொல்லவறேன்னா:


ஒரு வறியவனுக்கு தன்னைப்பற்றிய கம்பீரம் இருக்குமானால்


பகட்டு மனிதனின் தலைகனமும் அடங்கிப்போகும்...




 யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லையே.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top