.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 4 November 2013

டிகிரி முடித்தவர்களுக்கு கத்தோலிக் சிரியன் வங்கியில் அதிகாரி பணிவாய்ப்பு!

இந்தியாவில் இயங்கி வரும் தனியார் துறை வங்கிகளில் கத்தோலிக் சிரியன் வங்கி முக்கியமான ஒன்று. இது சுதேசி இயக்க காலத்திலேயே கேரளாவின் திருச்சூரை மையமாகக் கொண்டு நிறுவப்பட்டது. தற்போது இந்த வங்கிக்கு இந்தியா முழுவதும் கிளைகள் இருக்கிறது.இந்த வங்கியில் புரொபேஷனரி துணை மேலாளர்கள் பதவியில் உள்ள 300 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

                               nov 4 - vazhiatti bank
 
வயது :

கத்தோலிக் சிரியன் வங்கியின் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30.09.2013 அடிப்படையில் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.


தகுதிகள் :

 குறைந்த பட்சம் பட்டப் படிப்பு தேவை. அறிவியல் மற்றும் பொறியியல் புலத்தை சார்ந்தவர்கள் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடனும், இதர பிரிவினர் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடனும் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை :

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.500/- தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட இதர 6 மையங்களில் நடத்தப்படும்.முழுமையாக நிரப்பப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்துடன் பயோ-டேடா படிவத்தை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.11.2013

முழு விபரங்களை அறிய பார்க்க வேண்டிய இணையதள முகவரி 


0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top