.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 10 October 2013

உலக மனநல தினம் – அக்டோபர் 10!


பொதுவாக் மனது என்ன நினைக்கிறதோ, அதுதான் செயல் வடிவம் பெறுகிறது.. ஆரோக்கியமான வாழ்வுக்கு,உடல்நலத்தைப் போல, மனநலமும் முக்கியம்..உலகளவில் 35 கோடி பேர், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்..என புள்ளிவிவரம் கூறுகிறது……எனினும்,நாம் எல்லோருமே ஏதோ ஒரு காலகட்டத்தில் மனநிலை பாதித்தவர்களாகவே இருக்கிறோம்…


10 - health world day

 


அனைத்து வயதினரையும் மனநலம் பாதிக்கிறது..நீண்டகால சோகம்,
வேலையின்மை,ஏமாற்றம்,ஏக்கம்,தொடர்தோல்வி,மதுப்பழக்கம்,பிடிப்பு இல்லாமை ஆகியவை மன அழுத்தம் உருவாக காரணங்கள்..மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்,தற்கொலைக்கும் முயற்சிக்கின்றனர்..ஆண்டு தோறும் உலகம் முழுவதும், 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர்..இவர்களில் 15 முதல் 44 வயதுக்குட்பட்டோரே அதிகம்..இந்நிலையில் உடலால் நன்றாக இருந்து, மனதால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்க வலியுறுத்தியே அக்., 10ம் தேதி உலக மனநல தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.




இத்தகைய மனநல பாதிப்பு என்பது வயதானவர்களுக்கு மட்டுமே சொந்தமல்ல. ஒரு வயது குழந்தைக்கு கூட மனஅழுத்தம், மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பின்னாளில் மனநலம் பாதிக்கப்படலாம். இன்று உலக மனநல தினம். இளமையிலும்,முதுமையிலும் மனநலம் பேணுவதின் அவசியத்தை விளக்குகின்றனர், இந்தாண்டு உலகமனநல நாள் முதியோர் மனநலம் பேணும் ஆண்டாக அனுசரிக்கப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் முதியோர்களாக உள்ளனர். உடல் நலம் குறைவு, பிள்ளைகள் புறக் கணிப்பு, கவனிக்க ஆள் இல்லாத நிலையில் கடுமையான மனஅழுத்தம், மனச்சோர்வால் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதில் ஆண்கள் அதிகம். பிள்ளைகளுக்கு கொடுக்க ஒன்றுமில்லாத போது தான் பெற்றோரின் உறவு கசக்க ஆரம்பிக்கும். 30 வயதைத் தாண்டும் போதே தங்களது முதுமைக்காக சேமித்து வைக்க வேண்டும். சொத்து இருந்தால் பிள்ளைகளின் பெயரில் மாற்றக்கூடாது. இப்படிச் செய்வதன் மூலம் முதுமையின் சுமையை ஓரளவு குறைக்கலாம் எனகிறார்கள் மருத்துவர்கள் . 



இதற்கிடையில் கண்டிப்பாக முதியோர் மன நலத்தையும் கவனித்தே ஆக வேண்டும். ஏனெனில் மருத்துவர்களின் கருத்தின்படி பெரும்பாலான உடல் நலக்குறைவிற்கு காரணம் மன அழுத்தம், கவலைகள் அதனால ஏற்படும் பதட்டம் ஆகியனவாகும். இவை சீரண மண்டலத்தை பாதிக்கலாம் முக்கியமாக கல்லீரல் பாதிக்கப்படும்.. விளைவாக நெஞ்சில் எரிச்சல், கைகால் வலி, சத்து குறைவு , மூச்சு கோளாறு தொடர்ச்சியான இருமல் ஆகியன ஏற்படும்.


இவை நாற்பதுகளின் ஆரம்பத்திலேயே ஏற்படலாம். டயாபடீஸ் , ஹைபர் டென்சன், இரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இல்லாதபோதே இவை அறிகுறி காட்டலாம். எந்த பரிசோதனையும் இவற்றின் ஆதிமூலத்தை அடையாளம் காட்டாது. இந்த நிலையில் அவர்களிடம் கனிவாக நடந்து கொண்டு, சீரணிக்க சுலபமான உணவு வகைகளை தரவேண்டும். காலை உணவை சீக்கிரமாக தந்து விடவேண்டும். முடிந்தால் தேநீர் போன்றவை தரும்போதே பிஸ்கட்டையும் சேர்க்கலாம். ஒரே வேளையில் அதிகம் உண்ணுவதைவிட கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை உட்கொள்ளச் செய்யலாம்.


மனிதகுலம் நாகரிகம் அடையாத காலத்தில், முதியோர் நலம் பேணுதல் என்பது கடமைகளுக்கான செயல் திட்டத்திலேயே(agenda) கிடையாது. பழங்கால சீனாவில் முதியோரை காட்டில் விடுவதும், சங்ககால தமிழகத்தில் முதுமக்கள் தாழியும் இருந்தன. விலங்கிலிருந்து மனிதன் தன்னை பிரித்துணர ஆரம்பித்தபின்தான் பெற்றோரை பராமரித்தல் என்ற விஷயமே வந்தது. அதிலும் அன்பு, பாசம், காதல் போன்றவைதான் மனிதனை மறு நாளை நோக்கி நகர்த்துகின்றன. போராட்டத்தில் வெற்றியடைய செய்கின்றன.


 வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியது. வியாபார கொள்கைகள் வாழ்க்கையிலும் வந்தபின் , எதையும் நியாயப்படுத்தும் சுயநல அரக்கன் முதலில் பலி கொண்டது இத்தகைய பொறுப்புகளைத்தான். இதன் முடிவில் மனித்தத்துவம் மரித்து போகும்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top