.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 7 December 2013

மனப் போராட்டத்தை தவிர்ப்பது எப்படி?





பயனற்ற, தேவையற்ற, நம்பிக்கை இல்லாத, மோசமான எண்ண உணர்வுகளை; நாம் பயனுள்ள, தேவையான, நம்பிக்கையான, மேன்மையான உணர்வுகளாக மாற்ற வேண்டும். இதை நம் அறிவால் ஆற்றலால் மாற்றி அமைக்க முயற்சிக்க வேண்டும்.


இது முடியுமா? என்ற எண்ணம் நமக்கு வரும், ஆனால் நம் மனது இடம் கொடுத்தால் நிச்சயம் முடியும். தியானம், சுவாசப்பயிற்சி, மகிழ்ச்சி தரும் இயற்கை சூழல்களுக்கு செல்லுதல்.


வழிபடும் ஆலயங்களுக்கு செல்லுதல், இசை கேட்பது, இசை கருவிகளை மீட்டுவது, நகைச்சுவை உணர்வை ஏற்படுத்தும் காட்சிகளை பார்ப்பது, புத்தகங்களை படிப்பது. சிறு வயதில் நாம் அனுபவித்த மகிழ்ச்சியான அனுபவங்களை நினைத்துப் பார்ப்பது, சிறிது நேரம் தூங்குவது போன்றவை போராடும் மனதை அமைதிப்படுத்த உதவும்.


வெறுங்கையை காட்டி ஒன்றும் இல்லை என்று சொல்லாமல், என்னிடம் 10 விரல்கள் உள்ளன, இதைக் கொண்டு எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். அமைதியான மனதில் மகிழ்ச்சி என்னும் நல்லுணர்வு தோன்றும் போது நகைச்சுவையை ரசித்து வாய் விட்டு சிரிக்க முடியும்.


இது போன்று சிரிப்பதால் ஒருவரது முகத்தில் 26 தசைகள் இயங்குகின்றன. எனவே, வாய்விட்டு சிரித்தால் நோயின்றி வாழமுடியும். இப்படி வாய்விட்டு கைதட்டி, வயிறு குலுங்க சிரிக்கும் போது ஏற்படும் ரசாயன மாற்றங்களால் என்டார்பீன்ஸ் மெலடோனின், செரடோனின் போன்ற நல்ல ஹார்மோன்கள் சுரப்பதால் இதயம், மூளை உள்ளிட்ட எல்லா உறுப்புகளும் இயல்பாக இயங்க வழி ஏற்படும்.


இரு உள்ளங்கைகளோடும் உடம்பிலுள்ள எல்லா உறுப்புகளும் தொடர்பில் உள்ளன. இரண்டு கைகளையும் தட்டி நாம் சிரித்து மகிழும் போது, `அக்குப்பிரஷர்' முறையில் அந்த உணர்வு, நரம்புகள் மூலமாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதன் தொடர்பால் எல்லா உறுப்புகளும் இயல்பாக இயங்க அது காரணமாகிறது.


நாம் அமைதியுடன், மகிழ்ச்சி நிறைந்த மனதை வெளிப்படுத்த கைகூப்பி வணங்கும் போதும் `அக்குடச்' முறையில் இந்த பயன்களை அடைகிறோம். வயிறு குலுங்க சிரிக்கும் போது வயிறு, குடல் தசைகள் அதிகமாக இயக்கப்படுகிறது.


இதனால் ஜீரணசக்தி அதிமாகிறது தொப்பையும் குறைகிறது. இவற்றை தொடர்ந்து கடைபிடித்தால் மனப் போராட்டம் மறையும். மனது சமநிலை பெறும், உடல் நலமுடன் வாழலாம்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top