.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 11 December 2013

கோயிலில் ஷூட்டிங் நடத்த திடீர் அனுமதி!



புதுமுகங்கள் மகி, சரவணன், திவ்யா, ஜான்விகா நடிக்கும் படம் மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனக துர்கா கதை எழுதி தயாரிக்கிறார் ஜெயபால். தேவா இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் சந்திர கண்ணையன் கூறியது:


பக்தி படம் என்பது இப்போது அரிதாகிவிட்டது. மேற்கு முகப்பேர் கனக துர்கை அம்மன் கோயிலில் நடந்த 2 உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. ஜாதகப்படி ஒரு பக்தர் விபத்தில் இறக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அம்மன் கோயிலுக்கு வந்து நேர்த்தி செய்வதாக வேண்டிக் கொண்டார்.


அவர் விபத்தில் சிக்கியபோது கை எலும்பு மட்டும் முறிந்து உயிர் பிழைத்தார். மற்றொரு சம்பவத்தில் பெண்ணின் காதலனை பேய் ஒன்று அழிக்க முயல்கிறது. அதிலிருந்து காதலன் தப்புகிறானா என்பது கிளைமாக்ஸ். இப்படத்துக்காக திவ்யா, ஜான்விகா தீச்சட்டி ஏந்தி ஆடிய பாம்பு நடனம் அம்மன் கோயிலில் படமாக்கப்பட்டது. வழக்கமாக கோயிலில் ஷூட்டிங் நடத்த உடனடியாக அனுமதி கிடைப்பது அரிது.


எங்களுக்கு அனுமதி கிடைத்தது இன்ப அதிர்ச¢சியாக அமைந்தது. இதன் ஆடியோ விழாவுக்கு வருபவர்கள் அனைவருக்கும் அம்மன் பிரசாதம் வழங்குவதற்காக ஆயிரம் தேங்காய் வாங்கப்பட்டதுடன். குங்குமம், பழம், வெற்றிலை பாக்குடன் பிரசாதம் தரப்பட்டது.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top