.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 3 December 2013

முதல்ல தம்பி.. அப்புறம் அண்ணன்?

 

'பிரியாணி' படத்தில் கார்த்தியை இயக்கிய வெங்கட்பிரபு, தனது அடுத்த படத்தில் சூர்யாவை இயக்கவிருக்கிறாராம்.


கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி, ராம்கி உள்ளிட்ட பலர் நடிக்கும் 'பிரியாணி' படத்தினை இயக்கினார் வெங்கட்பிரபு. யுவன் இசையமைக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் டிசம்பர் 20ம் தேதி வெளிவரவிருக்கிறது.


ஏற்கனவே படத்தின் பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டதால், தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார் வெங்கட்பிரபு. இம்முறை, சூர்யாவை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


வெங்கட்பிரபு கூறிய கதையை கேட்ட சூர்யா, நல்லாயிருக்கு இப்படத்தினை எனது டி2 நிறுவனம் மூலம் தயாரிக்கிறேன் என்று கூறிவிட்டாராம்.


'பிரியாணி' படத்தினைப் போலவே இப்படமும் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கதை தானாம். லிங்குசாமி படத்தினை முடித்தவுடன், வெங்கட்பிரபு இயக்கும் படத்திற்கு தேதிகள் ஒதுக்கி கொடுத்திருக்கிறாராம் சூர்யா.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top