.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 18 November 2013

பி.எஸ்.என்.எல்: தொலைபேசி கட்டணம் செலுத்த இனி வரிசையில் நிற்க வேண்டாம்..

 

தொலைபேசி கட்டணம் செலுத்த இனி வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. மொபைல் அல்லது ஐ பேட் மூலமாகவே இனி கட்டணத்தை செலுத்தலாம் என்று பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அறிவித்திருக்கிறது.



முதலில் ‘‘மை பி.எஸ்.என்.எல். ஆப்’ எனும் அப்ளிகேஷன் சாப்ட்வேரை ஸ்மார்ட் மொபைல் கொண்டோ அல்லது ஐ-பாடில் டவுன்லோடு (பதிவிறக்கம்) செய்துகொள்ள வேண்டும்.



இதனை ‘‘ஆன்ட்ராய்டு அப் ஸ்டோர்ஸ்’’ அல்லது ‘‘விண்டோஸ் அப் ஸ்டோர்ஸ்’’ எனும் இணைய தளங்களிலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.



இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்க் மற்றும் பி.எஸ்.என்.எல்.-பிராண்ட் ட்ரஸ்ட் கார்டு மூலமாகவும் தங்களது பில் தொகையை செலுத்தலாம்.



இதில் மொபைல் போன் ரீ-சார்ஜ் செய்யும் வசதி மற்றும் சிறப்பு கட்டண வவுச்சர்களை ஆக்டிவேட் செய்யும் வசதியும் உள்ளன. பணம் செலுத்திய பின்னர் அதற்கான விவரம் எஸ்.எம்.எஸ். மூலம் வாடிக்கையாளர்களின் மொபைலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top