.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 18 November 2013

சின்னதாய் யோசித்து பார்ப்போமா ?

*கணவனும் மனைவியும் சண்டை போட்டுக் கொள்கின்றார்கள்
என்பதற்காக அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பதில்லை என்றாகி
விடுமா? இல்லவே இல்லை, ஏனென்றால் தம்பதியினர் ஒருவரை ஒருவர் மனதார நேசிக்கின்றார்கள்.இருந்தாலும் சில சமயங்களில் ஏன் சண்டை வருகின்றது.இப்படி சண்டை வருவதால் ஒருவரை
ஒருவர் புரிந்து கொள்ளாது மணவாழ்கை தனை முறிந்துக்
கொண்டு போகத்தான் வேண்டுமா என்பதனை சின்னததாய்
யோசித்து சின்னதாய் திருந்தினால் என்ன...............

*பொரும்பாலான தம்பதியினர் ஒருவர் மீது ஒருவர் அன்புடனும்
கனிவுடனும் நடத்தவே விரும்பினாலும் ,எல்லோரும் கருத்து
வேறுபாடு காரணமா, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல்
தங்கள் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து
வாக்குவாதம் செய்து பெரிதாக கத்தி கூச்சல் போட்டு
கெட்ட கெட்ட வார்தையால் திட்டி கடினமாக நடக்கின்றோமே
இப்படி நடக்கத்தான் வேணுமா ?இப்படி ஒருவரை ஒருவர்
காயப்படுத்துவதால் நாங்கள் எதை சாதிக்கின்றோம்.
என சின்னதாய் இருவரும் யோசித்து பார்த்தால் என்ன?

*கணவனும் மனைவியும் ஒரோ விதமான கருத்துக்களை
பரிமாறிக்கொள்வோம் என்று இல்லை, பெரும்பாலும்
இது நபருக்கு நபர் வேறுபடும். உதரணமாக, ஒருவர்
ஒருவிடையத்தை கூறும் போது விரிவாய் கூறவிரும்பலாம்
மற்றவர் அதனை சுருக்கமாக கேட்க விரும்பலாம், இதனை
புரிந்து கொள்ளாது சண்டை ஏற்படும் போது உங்களை புரிந்து
கொள்ள, உங்கள் மனதை சின்னாய் திறந்து ,சிந்திந்து சின்னதாய்
ஒரு தரம் யோசிந்தால் என்ன?இப்படி யோசிந்து வரும்
வாக்குவதை தவிப்பதற்காக ஒருவர் கலந்து பேசாது தவிர்க்கலாம்.
இதனையும் புரிந்து கொள்ளாது மற்றவர் விடப்பிடியாக
பேசமுயலும் போதும் அப்போதும் சண்டைவரலாம் இப்படி புரிந்து
கொள்ளாது கூட குடும்பங்களில் சண்டை வரலாம்
இதனை இருவரும் சின்னதாய் புரிந்து சின்னதாதய் யோசித்தால் என்ன?

*கணவனும் மனைவியும் வெவ்வோறு சுழலில் வளர்ந்தவர்களாக
இரு்ப்பதால் தங்களுக்குள் எப்படி பேசிக்கொள்ளவேண்டும்
என்பது குறிந்து வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருப்பார்கள் .
உதரணமாக, ஒருவர் அமைதியான வீட்டு சூழலில் வாழ்ந்து
இருப்பார் மற்றவர் கலகலப்பான வீட்டு சூழலில் வாழ்ந்திருப்பார்
இப்படியான வாழ்வியலில் இருந்து வரும் போது ஒருவர் தன்
மனம் திறந்து பேச தெரியாமல் தவிப்பார் .மற்றவர் தன்
மனம் திறந்து வெளிப்டையாக பேசுவார், இதனை புரிந்து
கொள்ளாது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு
ஒருவர் மேல் ஒருவர் கோவம் கொள்வதால் ஏற்படுபடும்
கருத்து வேறுபாட்டால் வரும் சண்டையை தவிர்ப்பதற்கு
சின்னததாய் மனம் திறந்து யோசிந்து பார்த்தால் என்ன?

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top