.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 18 November 2013

குழந்தைகளுக்கான பல்கலைக்கழகம் – டெல்லியில் துவங்கியது!

 nov 18 - child university.2

ஓய்வு பெற்ற பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடி தலைமையில் செயல்பட்டு வரும் நவ்ஜோதி இந்தியா பவுண்டேஷன் என்ற தொண்டு அமைப்பு குழந்தைகளிடையே ஒழுக்க நெறிகளை வளர்க்கும் விதமாக குழந்தைகளே நடத்தும் குழந்தைகளுக்கான பல்கலைக்கழகம் ஒன்றை வடமேற்கு டெல்லி மாவட்டம், கராலா பகுதியில் தொடங்கியுள்ளது. இதற்கு நவ்ஜோதி பால குருக்குலம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் குறித்து கிரண்பேடி “மற்ற பல்கலைக்கழகம் போல் இல்லாமல், குழந்தைகளிடம் ஒழுக்க நெறிகளை போதிக்கும் துறைகளை கொண்டு இந்த பல்கலை செயல்படுத்தப்படும். குறிப்பாக, தைரியம், ஆரோக்கியம், சுகாதாரம், ஒருமை ப்பாடு போன்ற துறைகள் இருக்கும். இந்த சிறுவர் பல்கலைக்கு துணைவேந்தர், பதிவாளர், துறைத்தலைவர்கள், ஆகியோர் 16 முதல் 18 வயதுடைய சிறுவர், சிறுமிகளே இருப்பார்கள். அவர்களை சிறுவர்களே தேர்ந்தெடுப்பார்கள். இவர்கள் அனைவரும் அந்தந்த துறைக்கு இளம் தலைவர்களாக செயல்படுவார்கள். இதே போன்று ஒவ்வொரு ஆண்டும், தலைவரை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

அதில், தகுதி மற்றும் தலைமை பண்பு அடிப்படையில் சிறுவர், சிறுமியரே தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும், செல்ப் டீச்சிங், வழிபாடு, ஒழுக்க நெறிகளை கற்றுத்தரும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இதன் முக்கிய காரணம், சிறுவர்களிடையே இணைந்து செயல்படுதல், கற்றுகொள்ளுதல் போன்ற செயல்கள் ஊக்கப்படுத்தப்படுத்துவது என்பது தான். இந்த பவுண்டேசனில் உள்ள பெரியவர்கள் ஆலோசகராகவும், தன்னார்வலராகவும், வருகை பேராசிரியராகவும் மட்டுமே செயல்பட்டு சிறுவர்களை வழிநடத்துவார்கள். இது போன்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் பள்ளி நேரம் முடிந்த பிறகே துவங்கும். அப்போது தான் சிறுவர்கள் அவர்களது நேரத்தை நற்பண்புகளை வளர்த்து கொள்வதற்கும், படிப்பின் அனுபவத்தை உணர்ந்து கொள்ளவும் பயன்படுத்த இயலும்.

இதன் மூலம் சிறுவர்களுக்கு துணிவு, பெரியவர்களை மதிக்கும் குணம், சேவை உள்ளிட்ட பண்புகளை கற்றுக்கொள்வார்கள். சமூகத்தின் அனைத்து பிரிவுகளை சார்ந்த ஆயிரக்கணக்கான சிறுவர்கள் இதில் இணைந்து கற்கும் வாய்ப்பினை சாதகமாக்குவோம். இதை இதற்கு முன்பே துவங்கி இருக்க வேண்டும். . மேலும், இக்னோ போல், இதுவும் ஆன்லைன் பல்கலையாக மாறும்.” இவ்வாறு அவர் கூறினார்.

Children-led ‘university’ opens in Delhi

 ***************************************************

 Aiming to develop ethical values among children, a unique “university of the children and by the children” was today opened in the national capital with an emphasis on self-learning. The ‘Navjyoti Bal Gurukul’, set up in Karala area of North West district by former IPS officer Kiran Bedi-led Navjyoti India Foundation, would have “department of values” instead of regular departments of a varsity and the children would be taught values of courage, honesty and service.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top