.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 9 October 2013

ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தில் நடிக்கும் தீபிகா படுகோனேவுக்கு டப்பிங் குரல்!

 ரஜினிகாந்த் கதாநாயகனாகவும், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாகவும் நடித்து தயாராகி வரும் படம் 'கோச்சடையான்'.




ரஜினிகாந்தின் இளையமகளான சவுந்தர்யா இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படம் சென்னை, ஹாங்காங், லண்டன் என மூன்று இடங்களில் கிராபிக்ஸ் காட்சிகளால் மெருகேற்றப்பட்டு வருகிறது.  இப்படத்தில் அப்பா, மகன் என இரண்டு வேடங்கள் ரஜினி காந்த் நடித்து வருகிறார்.



ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12 -ல் இப்படத்தை வெளியிடத் திட்டமிடபட்டு உள்ளது. இப்படத்தில் நடித்து உள்ள தீபிகா படுகோனேவுக்கு இந்தபடத்தில் டப்பிங் குரல் கொடுக்கபட்டு உள்ளது. தீபிகா படுகோனே பெங்களூரை சேர்ந்தவர் அவருக்கு கன்னடம் சரளமாக வரும் ஆனால் தமிழ் சரியாக வராது அதனால் இப்படத்தில் தீபிகாவுக்கு சவீதா ரெட்டி டப்பிங் குரல் கொடுக்கிறார்.


கடந்த காலங்களில் சவிதா  ஜெனிலியா தேஷ்முக் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் போன்ற ஹிந்தி திரைப்பட நடிகைகளுகு டப்பிங் கொடுத்து உள்ளார். சவீதா முதன் முதலில்  ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யாராய்க்கு குரல் கொடுத்தார். "


இது குறித்து இயக்குனரும் ரஜினிகாந்தின் மகளுமான சவுந்தர்யா  அஸ்வின் கூறியதாவது:- தீபிகாவிற்க்ய் தமிழ் டப்பிங் செய்ய சவிதா  சரியான தேர்வு.அவரது குரல் ஒரு மிக விரிவான தொனியில் உள்ளது. அவர் தனது திறமையை வெளிப்படுத்துவார்.தீபிகா கதாபாத்திரம் கருணை மற்றும் சீரிய பண்பு உடையவராக காட்டபடுகிறது.இதற்கு சவிதா ஒரு சரியான தேர்வு இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top