.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 9 October 2013

மல்டி கலரில் அறிமுகமாகிறது வாக்காளர் அடையாள அட்டை!




 புதுவையில் புதிதாக சேர்க்கப்படும் வாக்காளர்களுக்கு மல்டி கலரில் அச்சிடப்பட்ட அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் வழங்க உள்ளது. 


புதுவை கூடுதல் தேர்தல் தலைமை அதிகாரி பங்கஜ்குமார் ஜா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி புதுவையில் நாளை(10ம் தேதி) முதல் அடுத்த மாதம் 1ம் தேதி வரை வாக்காளரை சேர்த்தல், நீக்குதல் பணி நடக்கிறது. புதுவை, காரைக்கால், மாகே, ஏனாம் உள்பட 30 தொகுதிகளில் நடக்கிறது. மாநிலம் முழுக்க உள்ள 875 வார்டுகளிலும் தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டு பணியை மேற்கொள்வார்.


புதிய வாக்காளர்களுக்கு பிளாஸ்டிக் கார்டில் மல்டி கலரில் அச்சிடப்பட்ட வாக்காளர் அட்டை வழங்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. அனைத்து மாநிலத்திலும் இந்த பணி நடந்து வரும் நிலையில் புதுவையில் இதற்காக பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது புதிய அட்டை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



எக்ஸ்ட்ரா தகவல்



தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க வாக்காளரின் போட்டோவுடன் கூடிய அடையாளம் அட்டை வழங்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் 1993ல் தொடங்கியது.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top