.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 22 August 2013

ஸ்டெதஸ்கோப், டயர் உருவான கதை


ஸ்டெதஸ்கோப், டயர் உருவான கதை :

 
ஸ்டெதஸ் கோப்பை 'லேனக்"என்ற பிரெஞ்சு டாக்டர் 1816 - ம்ஆண்டில் கண்டறிந்தார். சிறுவர்கள் ஒரு குழாயின் மேல்பகுதியில் ஒலிஎழுப்பி,அதை குழாயின் கீழ்ப்பகுதி மூலம் கேட்டு மகிழ்ந்தார்கள்.இதனை லேனக் பார்த்தபோது , நமது இதயம் மற்றும் நுரையீரல் ஒலிகளை இப்படிக் கேட்க முடியுமா? என்ற யோசனை தோன்றியதாம்.இந்த எண்ணத்துக்குக் கிடைத்த பரிசுதான் ஸ்டெதஸ் கோப் எனும் கருவியாகும்.


டன்லப்புக்கு ஒரு மகன். அவன் தோட்டத்தில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான்.அந்தக் காலத்தில் சைக்கிள்களுக்கு இரும்புச் கக்கரம்தான். இரும்புச் கக்கரம் ஈரத்தரையில் பதிந்து கொண்டு நகர மறுத்தது. மகன் படும்பாட்டை டன்லப் பார்த்தார்.அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றும்ரப்பர் குழாய் கிடைத்தது. அதை எடுத்து வெட்டி, சக்கரங்களில் வைத்து கட்டினார்.இரும்புச் சக்கரம் எளிதாக ஓடியது. இதைப் பார்த்த டன்லப் டயர்களில் சக்கரங்கள் செய்யத்தொடங்கினார்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top