.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 30 November 2013

ரத்தம் வெளியேறும் நேரம்!

 

ஒரு மனிதனின் உடலில் மிக முக்கியமானது ரத்தம். ஒரு மனிதனுக்கு அப்படிப்பட்ட ரத்தம் உறையும் நேரம் என்பது மிகவும் முக்கியம். ஒருவருக்கு ஆழமான காயம் ஏற்படும்போது ரத்தம் வெளியேறும்.

 இவ்வாறு வெளியேறும் ரத்தம் எவ்வளவு நேரத்தில் உறைகிறது என்பதை கணக்கிடுவதே ரத்தம் உறையும் நேரம் ஆகும்.

இதற்கு ஒரு சோதனையை செய்கின்றனர். விரல் நுனியை ஆல்கஹால் கொண்டு துடைத்து விட்டு சிறிது அழுத்தி தேய்கின்றனர். இந்த அழுத்தம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். பின்னர் சுத்தமான ஊசியை கொண்டு விரல் நுனியில் குத்துகின்றனர். அப்போது ரத்தம் வர ஆரம்பிக்கும். இந்த நேரத்தை குறித்து கொள்கின்றனர்.

பின்னர், "பிளாட்டிங்' பேப்பரை வைத்து ரத்தத்தை ஒத்தி எடுக்கின்றனர்.ரத்தம் வெளிவருவது நிற்கும் வரை இவ்வாறு தொடர்ந்து செய்கின்றனர். இதன்படி ரத்தம் நிற்கும் நேரத்தை கணக்கிடுகின்றனர்.

 இதனையே ரத்தம் உறையும் நேரம் என்கின்றனர். இந்த நேரம் ஒரு நிமிடம் முதல் 3 நிமிடம் வரை இருக்கும்.

சராசரியாக காயங்கள் ஏற்பட்டால் ரத்தம் உறையும் நேரம் 6 முதல் 10 நிமிடங்களாக இருக்கும். சிலருக்கு ரத்தம் உறைய தாமதமாகலாம்.

இவர்களுக்கு, ரத்த பிளேட்லெட்டுகள், த்ராம் பேரசைட்ஸ் குறைபாடுகள் உள்ளன என அறியலாம். சிலர், "ஹீமோபிலியா' எனும் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் உறைய அதிக நேரமாகும்.

சிலருக்கு மணிக்கணக்கானால் கூட ரத்தம் உறையாது. இதனால் ரத்த இழப்பு அதிகமாகி உடல்நிலை பாதிக்கப்படுவதோடு, உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். இந்த நோய் மரபணு குறைபாட்டினால் வருவதாகும். பெரும்பாலும் இவை பாரம்பரிய நோயாக இருக்கும். சந்ததிகளையும் தாக்கும் அபாயம் உண்டு.

ஆக்டர் அஜித் vs டாக்டர் அஜித்!

 

'' 'நான் எத்தனையோ படங்கள் நடிச்சிருக்கேன். ஆனா, இந்தப் படத்தோட க்ளைமாக்ஸ் ரொம்ப எமோஷனலா இருக்கு சிவா’னு நாசர் சார் சொன்னார். 'அஜித் சாரை வெச்சு ஆக்ஷன் ப்ளாக் இருக்கும்னு நினைச்சா, இவ்வளவு காமெடி இருக்கே’னு ஒளிப்பதிவாளர் வெற்றி ஆச்சர்யப்பட்டார். மேக்கிங்லயே 'வீரம்’ இவ்வளவு பாராட்டுக்களை வாங்கினது சந்தோஷமா இருக்கு!''  - அஜித்தின் அடுத்த படப் பரபரப்பைப் பற்ற வைக்கிறார் 'வீரம்’ இயக்குநர் சிவா.





'' 'வீரம்’ படத் தயாரிப்பாளர் வெங்கட்ராமரெட்டியை முதன்முதலா சந்திச்சப்போ, 'எம்.ஜி.ஆருக்கு 'எங்க வீட்டுப் பிள்ளை’ மாதிரி அஜித்துக்கு இந்தப் படம் இருக்கணும். குழந்தைகள்ல இருந்து தாத்தா பாட்டிகள் வரை எல்லாரையும் தியேட்டருக்குக் கொண்டுவந்து நிறுத்தணும்’னு சொன்னார். இதுபத்தி அஜித் சார்கிட்ட பேசினப்போ, 'அப்போ கிராமத்துக் கதையா ரெடி பண்ணுங்க சிவா’னு சொன்னார். மாமன், மச்சான், அண்ணன், தம்பி, அங்காளி, பங்காளினு எப்பவும் 'குட் ஃபீல்’ கொடுக்கிற குடும்ப உறவுக் கதைக்குள், அஜித்துக்குனு ஒரு கேரக்டரைப் புகுத்தினோம். அட்டகாசமான திரைக்கதை செட்டாச்சு. இந்த 'வீரம்’, வீட்டுச் சாப்பாடுனா... சாம்பார், ரசம், கூட்டு பொரியல்னு இல்லை... வெடக்கோழிக் குழம்பு, வஞ்சிரம் மீன், மட்டன் மசாலானு காரசாரமான வீட்டுச் சாப்பாடு!''




'' 'இந்தப் படத்தில் அஜித் ஸ்பெஷல் என்ன?''

''ஒண்ணே ஒண்ணுதான்... 'பன்ச் டயலாக் வேணாம் சிவா’னு அன்பா சொல்லிட்டார். ஏகப்பட்ட பன்ச் பிடிச்சு வெச்சிருந்தோம். ஆனா, அவர் இப்படிச் சொல்லிட்டாரேனு தவிர்த்துட்டோம். சாதாரணக் கிராமத்து மனுஷன் 'வினாயகம்’ கேரக்டர் அஜித்துக்கு.  வேட்டியை மடிச்சுக் கட்டினா, விளையாட்டுதான்.


ஸ்க்ரீனுக்குப் பின்னாடி அஜித் கலகலப்பா இருப்பார்.  தானும் சிரிச்சு, மத்தவங்களையும் சிரிக்க வெச்சுட்டே இருப்பார். 'சார் உங்களோட இந்தக் காமெடி முகத்தை நான் ஸ்க்ரீன்ல காட்டப் போறேன்’னு சொன்னேன். 'நல்லாவா இருக்கும்?’னு அப்பாவியாக் கேட்டார். 'அடி பின்னும்’னு சொன்னேன். சின்னதா சிரிச்சுக்கிட்டார். அஜித் சார்கூட சந்தானம், தம்பி ராமைய்யா கூட்டணி. 


ரொம்ப தன்மையா இருக்கார். ஸ்விட்சர்லாந்துல ஷூட்டிங். அங்கே லைட் எஃபெக்ட் எல்லாருக்கும் அலர்ஜியை உண்டாக்கி, கண்களைச் சிவக்கவெச்சிருச்சு. தவிச்சுப்போயிட்டோம். மறுநாள் காலையில எல்லார் ரூமுக்கும் அஜித் சாரே போய் எல்லார் கண்லயும் மருந்து போட்டுவிட்டார். எல்லாரும் அப்படியே மெல்ட் ஆகிட்டோம். 'சார் உங்களை ஆக்டர் அஜித் குமார்னு நினைச்சேன். ஆனா, இப்பத்தான் தெரியுது நீங்க டாக்டர் அஜித் குமார்’னு, அப்போ ஜோக் அடிச்சேன். கலகலனு வெள்ளந்தியாச் சிரிச்சார். இவ்வளவு ஈஸியான மனுஷன்கூட தொடர்ந்து வேலை பார்க்கணும்னு ஆசை வரும்தானே!''

நீங்க தூங்கும் போது முதலில் தூங்குவது எந்த உறுப்பு என்று தெரியுமா.?



நமது உடம்பின் அனைத்து உறுப்புகளும்


 ஒரே நேரத்தில் தூங்கத் தொடங்காது.



முதலில் கண்கள், பின்னர் வாசனையை உணரும்


உறுப்புகள், பின்பு சுவை மொட்டுக்கள், காது,


இறுதியாக தோல் ஆகியவை தூங்கும்.

-
ஆனால், நாம் விழிக்கும்போது இது தலைகீழாக


 நிகழும்.
முதலில் தோல் தன் வேலையைத்


 தொடங்கும். பின்னர் கேட்கும் உறுப்புகள், சுவை


 உணரும் உறுப்புகள், நுகரும் உறுப்புகள்,


கடைசியாக கண்கள் விழிப்படைகின்றன.

பறக்கும் தட்டு கடற்பரப்பில் வீழ்ந்தமையால் மாரவிலவில் பரபரப்பு!


சிலாபம், மாரவில பிரதேசத்தில் பறக்கும் தட்டு ஒன்று நேற்றிரவு தென்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு மாரவில கடற்பரப்பில் பறக்கும் தட்டொன்று வீழ்ந்த்தாக வெளியான தகவல் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இரவு 7.30 அளவில் கடற் பரப்பில் ஒளியொன்று தென்படுவதனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

கடலுக்கு 100 மீற்றர் தொலைவில் நீண்ட நேரத்திற்கு இந்த ஒளி தென்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது, நீல நிறத்திலான ஒளியொன்று தென்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். எதிலிருந்து இந்த ஒளி தோன்றியது என்பதனை பொலிஸாரினாலும் கண்டறிய முடியவில்லை.

இந்த ஒளியை பார்வையிட பிரதேசத்தைச் சேர்ந்த பலர் ஒன்று கூடியிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் 9 மணியளவில் இந்த ஒளி மின்குழில் ஒளி என தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் ஒளி கடலில் விழுந்துள்ளமை எவ்வாறு என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை.

கமலும் பாலாவும் காட்டிய வழி இது! - சடச் சடக்கும் சீரியஸ் விவேக்!

 

கையிலும் பையிலும் மரக்கன்றுகளோடு அலைந்து திரியும் ’சனக்களின் கலைஞன்’ விவேக் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்குத் திரும்பியிருக்கிறார். இயக்குனர் பாலாவின் உதவியாளர் ஆர்.கண்ணன் இயக்கும் ‘நான்தான் பாலா’ படத்தில் முதல்முறையாக, நகைச்சுவை உதறிவிட்டுச் சீரியஸ் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்.இந்த மாற்றத்தை எப்படி ஏற்றுக்கொண்டார் விவேக்? அவர் வழிபடும் அப்துல் கலாமிடம் அவருக்குப் பிடிக்காதது என்ன? இன்னும் பல சூடான கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் விவேக்...

நகைச்சுவை நடிகராக மட்டும் உங்களைப் பார்க்க முடியவில்லை. சமூக ஆர்வலராக இயங்குவதற்கு அப்பால், ஒரு கவிஞராக, ஒரு கட்டுரையாளராக ஆச்சர்யப்படுத்துகிறீர்கள். எப்போது எழுதத்தொடங்கினீர்கள்? 

உண்மையில் எனக்குப் பிடித்தமானது எழுதுவதுதான். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தபோதே எழுதத் தொடங்கி விட்டேன். வீதீநாடகங்கள் எழுதி, சகமாணவர்களுடன் நடிக்கவும் செய்தேன். மதுரையை ஒட்டிய சின்ன ஊர்களின் உள்ளூர் வினாக்களை எழுதி, அதில் நடிக்கவும் செய்தேன். எங்கள் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் சாமுவேல் சுத்தானந்தா எனது நாடக எழுத்தின் குரு. கே.பாலச்சந்தர் இயக்கிய கருப்பு வெள்ளைப் படங்களின் காதலன் நான். சென்னை வந்து அவரிடம் உதவியாளராகச் சேரவேண்டும் என்று விரும்பினேன். நான் பார்த்து வந்த அஞ்சல்துறை பணி அதற்குத் தடையாக இருந்தது. வேலையை உதறிவிட முடிவெடுத்தபோது, சென்னையில் தலைமைச் செயலகத்திலேயே புதிய வேலை கிடைத்தது. பிறகு பாலச்சந்தர் சாரிடம் உதவியாளனாகச் சேரும்வரை, சென்னை ஹியூமர் கிளபுக்காக எழுதிக்கொண்டிருந்தேன். என்னை மனதில் உறுதி வேண்டும் படத்தில் அறிமுகப்படுத்தினார். பிறகு புதுப்புது அர்த்தங்கள். அந்தப் படத்தின் வெற்றி என் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது.

நீங்கள் இணை இயக்குனர் என்பதும், உங்களுக்கொரு இசைமுகம் இருப்பதும் கூடப் பலருக்கும் தெரியாது என்று நினைக்கிறேன்.


இருக்கலாம். எனக்கு ஹார்மோனியம் வாசிப்பதில் அலாதியான ஈடுபாடு உண்டு. அதன் குரல், ஒரு குழந்தையின் குரல்போல அத்தனைக் கனிவானது ஆனால் தெளிவானது. உலகில் உள்ள எந்த இசை வடிவத்தத்தையும் ஹார்மோனியத்தில் சேதாரம் இல்லாமல் வாசிக்கமுடியும். சரண் அவர்கள் இயக்கிய காதல் மன்னன் படத்தில் பணியாற்றியபோது அந்தப் படத்தில் ’மெஸ் விஸ்வநாதன்’ என்ற கதாபாத்திரம் இருந்தது. அதில் எம்.எஸ்.விஸ்வநாதன் சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ’கண்ணதாசன் பெயரில் ’ கண்ணதாசன் மெஸ்’ வைத்து நடத்துபவர் கண்டிப்பாகச் சம்மதிப்பார் என்று நினைத்து, அவரைச் சந்தித்தேன். ” பாலச்சந்தர், பாரதிராஜா நடிக்க அழைத்தே நான் போகவில்லை தம்பி. என்னை விட்டுடு என்றார். கொஞ்ச நாட்களுக்குப்பிறகு மீண்டும் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது.. ” துபாய் விமான நிலையத்தில் என்னோட ஹார்மோனியத்தை அக்குவேறு ஆணிவேராகப் பிரிச்சுட்டாங்க. எனக்கு ஈரக்குழையே அறுந்துபோச்சு. காரணம் கேட்டப்போ ஹார்மோனியத்தில் வைச்சு போதைப்பொருள் கடத்துறதா அவங்களுக்கு தகவல் வந்துதாம்”என்றார். ” அவர்கள் சொன்னது உண்மைதானே என்றேன் நான். ” என்ன சொல்கிறாய் !? என்று கேட்டுப் பதறிப் போய்விட்டார். ” இத்தனை ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மெட்டுகளைப் போட்டு, தமிழ்நாட்டு மக்களைப் போதையில் ஆழ்த்தினீர்கள். அதற்கு உங்கள் ஹார்மோனியம்தானே காரணம். அப்படிப்பார்த்தால் இன்னும் எவ்வளவு போதை மருந்தை உங்கள் ஹார்மோனியத்தில் பதுக்கி வைத்திருக்கிறீர்களோ யாருக்குத் தெரியும்?” என்று சொன்னேன். எனது பேச்சு, அவரது வருத்தத்தைப் போக்கிவிட்டது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டார்.

இயக்குனர் சரணுடன் மனவருத்தம் ஏற்பட்டுப் பிறகு பிரிந்து விட்டீர்கள் இல்லையா?

தொழில்முறையில் ஏற்படும் கருத்துவேறுபாடுகள் எல்லா இடத்திலும் உண்டுதானே. அப்படி ஏற்பட்ட ஆரோக்கியமான கருத்துப் பிணக்குகள் அவை. அதை நான் தவறாகச் சொல்லமாட்டேன். சரண் நிறைய ’மியூசிக்கல் ஹிட் கொடுத்திருக்கிறார். அவரை விட்டு வெளியே வந்தபிறகு எனது பலம் என்ன பலவீனம் என்ன என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. எனக்காக நான் நான் எழுதத் தொடங்கினதும் அதன்பிறகுதான். திருநெல்வேலி படத்துக்கு எழுதத் தொடங்கின பிறகு, எழுத்தாளர் பிரசன்னக் குமார் என்னோடு வந்து இணைந்து கொண்டார். எங்கள் கூட்டணி சுமார் 500 படங்களில் பேசப்பட்டது. ஒரு கட்டத்தில், கலைவாணர் வழியில் திரை நகைச்சுவையை ஏன் செய்தி சொல்லும் ஊடகம் ஆக்கக் கூடாது என்று என்னை நானே கேட்டுக்கொண்டு இயங்க ஆரம்பித்த பிறகு, சின்னக் கலைவாணர் என்ற பட்டத்தை ரசிகர்கள் கொடுத்தார்கள். பிறகு தங்கர்பச்சான் ’சனங்களின் கலைஞனாக’ என்னை அங்கீகரித்தார். தமிழக அரசின் விருதுகளில் ஆரம்பித்து ’ மத்திய அரசின் ’பத்மஸ்ரீ’ வரை, எல்லாம், ரசிக எஜமானர்கள் நம்மை ஏற்றுக்கொண்டதால் சாத்தியமானது.

நடிகர் விவேக் புகழ்பெற்று விட்டதால், இயக்குனர் விவேக் இனி வெளிப்பட வாய்ப்புகள் குறைவு இல்லையா?


அலைபாயுதே படத்தின்போது மணிரத்னம் சாரே கேட்டார். ஆனால் கேப்டன் ஆஃ த ஷிப் வேலை அத்தனை எளிதானது அல்ல. எதிர்பாராமல் கப்பல் முழ்கினால் கடைசியாகக் குதித்துக் கூட நீங்கள் தப்ப முடியாது. இயக்கம் என்று வரும்போது முன்தயாரிப்பு வேலைகளுக்கே ஆறுமாதம் போய்விடும். என்றாலும் இயக்கத்தைக் கண்டிப்பாகத் தொடுவேன். அதற்கு இன்னும் காலம் இருப்பதாக நினைக்கிறேன்.

ஆனால் முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், படமாக்க இருக்கும் கதைகளை உங்களிடம் சொல்லி ஆலோசனை கேட்கும்போது மறுப்பதில்லையாமே நீங்கள்?

என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையாக அதைப் பார்ப்பதால் அந்த இன்ப அவஸ்தையை ஏற்றுக்கொள்கிறேன். பலநேரங்களில் கேட்கப்படும் கதையால் துன்ப அவஸ்தையாகிவிடுகிறது. ஆனால் எனது ’ஸ்கிரிப்ட் சூப்பர்வைசிங்’ மூலமாக யாருடைய வாழ்க்கையும் கெட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். காரணம் சினிமாவில் அடையாளம் பெற இங்கே முதல்பாதி வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்தான் அதிகம்.

அதேநேரம் என் வெளிப்படையான விமர்சனத்தை மீறிப் படமெடுத்தவர்கள் முட்டியை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். திரையில் அவருக்கு மேல் உச்சபச்ச நட்சத்திரம் கிடையாது. அவர் என்னை அழைத்து நடிக்கவிருக்கும் கதையைச் சொல்லி ஆலோசனை கேட்டார். ” உங்களது வெறிபிடித்த ரசிகர்கள் விரும்பும் கதை இதுவல்ல. ஏதோ மந்திரசக்தி, மாயசக்தி வந்து, கதையில் வரும் தீயசக்தியை எதிர்ப்பதுபோல் இருப்பது மிகப்பெரிய ஓட்டை. ரசிகர்கள் உங்கள் சக்தியைத்தான் எதிர்பார்ப்பார்கள்” என்றேன். ஆனால் அவர் கேட்கவில்லை. நான் சொன்னது போலவே அந்தப் படத்தின் நிலை ஆனது. கதை கேட்பதோடு மட்டும் நான் நிறுத்தி கொள்வதில்லை. அதன்பிறகு அந்த அதைக்கதையில் இருக்கும் குறைகளைக் களையும் வரை எனக்கு மன அமைதி ஏற்படாது. இதற்காகவும் என் பொழுதுகளை இழந்திருக்கிறேன். அதில் பலரது வாழ்க்கையை மலரும்போது ஏற்படும் மகிழ்வே தனிதான்.

திக்குமுக்காடித் திசை தெரியாம திணறி, முட்டு சந்துல மாட்டிக்கிட்ட மூஞ்சுறு மாதிரி, நல்ல கதைகள் கிடைக்காம சிரமப்படுது சார் தமிழ் சினிமா’ என்று 2006 ல் ஒரு காட்டமான கட்டுரை எழுதியிருந்தீர்கள் இப்போ தமிழ்சினிமா எப்படியிருக்கிறது?

புதிய இளைஞர்கள் நிறைய வந்துவிட்டார்கள். இவர்களுக்கு என் வாழ்த்துகள். பிளாக் காமெடி என்ற சொற்பதங்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் காலையில் எழுந்து பல் கூட விளக்காமல் இளைஞர்கள் மது அருந்துவதாகக் காட்டும் பாடாவதி தமிழ்சினிமாகள் முன்பைவிட அதிகரித்திருக்கின்றன. கதாநாயகிகள் மது அருந்துவதாக, ஒரு த்ரிலுக்காகச் சித்தரிக்கும் அவலமும் அடிக்கடி வரத் தொடங்கியிருக்கிறது. இளைஞர்கள் என்றாலே மது அருந்துவது மட்டும்தான் அவர்களது ஒரே பொழுதுபோக்கு என்று சித்தரிப்பதை மட்டும் மாற்றிக்கொண்டால், வரலாறு வாழ்த்தும்.

இன்று சினிமா நகைச்சுவை என்பதை ஆபாசம் என்பதாகப் பல நடிகர்கள் புரிந்து கொண்டுவிட்டதுபோலத் தெரிகிறதே?

மலிவான சரக்கு உடனடியாக விற்பனையாகலாம். ஆனால் எப்போதுமே அதுவிலைபோகாது. கலப்படப்பொருள் என்று தெரியும்போது கைவிட்டுவிடுவார்கள். ஆபாசமும் அப்படித்தான். ரசிகர்கள் தெளிவான தீர்ப்பைத் தரக்கூடியவர்கள். சென்னை என்றாலும் கன்னியாகுமரி என்றாலும் ஒரே தீர்ப்புதான். திருந்தாதவர்கள் தப்பிக்கவே முடியாது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்களை எந்தத் திரைவிழாக்களிலும் காணமுடியவில்லையே?
விழாக்களில் மட்டுமல்ல, திரையிலும் என்னைப் பார்த்திருக்க முடியாது. அதற்குக் காரணம் ஐயா அப்துல் கலாம் அவர்கள். இரண்டு வருடங்களுக்கு முன் என்னை அழைத்த அவர் ” பல நடிகர்கள் இதை, கையிலெடுத்துப் பாதியில் போட்டுவிட்டார்கள். இதை உங்களால் செய்யமுடியும் என்று ’க்ரீம் கலாம்’ திட்டதை என் கையில் கொடுத்தார். நானும் ஏன் முடியாது என்று இறங்கிவிட்டேன். 25 ஆண்டுகளாக நம்மைப் புகழோடும், பொருளோடும் வைத்திருக்கிறது இந்தச் சினிமா. சினிமா என்றால் அதை வாழவைக்கும் மக்கள். அவர்களுக்கு நன்றிக்கடனாக இதைச் செய்ய வேண்டும் என்று களத்தில் இறங்கினேன். என்னை விரும்பும் கோடிக்கணக்கான ரசிகர்களையும், நலம் விரும்பிகளையும் இதில் ஈடுபடுத்த நினைத்தேன் பாதுகாப்பு மிக்க பள்ளி, கல்லூரி வளாகங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில், 20.5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறோம். மரங்களை நடும்முன்பு புவி வெப்பமடைதல் பற்றி பேசுகிறேன்.

 அது மாணவர்களைச் செயல் வீரர்களாக்குகிறது. தற்போது விவசாயிகளும் எங்களோடு கூட்டம் கூட்டமாகக் கைகோர்க்கத் தொடங்கியிருப்பது மிகப்பெரிய திருப்பம். திருநெல்வேலி பக்கத்தில் கோபாலசமுத்திரத்தில் 5 லட்சம் பெண்கள் உறுப்பினர்களாக இருக்கும் ’கிராமோதயம்’ என்ற உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்களும், விவசாயிகளும், முன்வந்து என்னை அழைத்தார்கள். 1 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்தோம். இனி நாங்கள் இந்தவேலையைக் கையில் எடுத்துக் கொள்கிறோம் என்றார்கள். விவசாயிகள் இதில் இறங்கினால் முடிவெடுக்காமலேயே கலைந்துபோகும் சர்வதேசச் சூழலியல் மாநாடுகள் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய தேவையில்லை. ஒரு கோடி மரங்களை நட்டு, அவை வளர்ந்து நிற்பதைப் பார்க்கும்வரை நான் ஓயமாட்டேன். ஆனால் உங்கள் தொழிலையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள் என்று கலாம் அவர்கள் சொன்னதால் தற்போது மீண்டும் திரைக்குத் திரும்பியிருக்கிறேன்.

நீங்கள் வழிகாட்டியாக, ரோல் மாடலாக நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் அப்துல் கலாம் அவர்களிடம் உங்களுக்குப் பிடிக்காத விஷயம் என்ன?
அவரது அதீதமான எளிமை. அவருக்கென்று வழங்கப்பட்ட சலுகைகளைக் கூட அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கலாம் அவர்களிடம் இருப்பது இரண்டே இரண்டு கோட், இரண்டு பேண்ட் ஆடைகள்தான். இந்த ’க்ரீன் கலாம்’ திட்டத்தில் தனது பெயர் இருப்பது எங்கே சுயவிளம்பரமாகப் பார்க்கப்படுமோ என்று, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எனது பெயரை அதிலிருந்து எடுத்துவிடுங்கள் என்றார். அதனால் தற்போது க்ரீன் கலாம் ’க்ரீன் குளோப்’ ஆகியிருக்கிறது. தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாராக ரஜினியும், ஆந்திராவின் சூப்பர் ஸ்டாராகச் சிரஞ்சீவியும் இருக்கலாம். ஆனால் அகில இந்தியாவுக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் அவர், அப்துல்கலாம் மட்டும்தான்.

இவன்தான் பாலா தொடக்கமே அமர்க்களமாக இருக்கிறதே?

இந்தக்கதையை கண்ணன் என்னிடம் சொன்னபோது “ இந்தக்கதையில் நான் எங்கே காமெடி பண்ணவேண்டும் என்று கேட்டேன் “ இல்லை நீங்கள் காமெடியைத்தவிரப் பாக்கியிருக்கும் எல்லாவற்றையும் நீங்கள் பண்ணவேண்டும் என்றார். இந்த 25 ஆண்டுகளில் என்னைத்தேடி இப்படியொரு கதையோடு எந்த உதவி இயக்குனரும் வந்ததில்லை. எனக்கு ஆச்சரியம். ” நான் இந்தக் கதையை எனது குருநாதர் பாலாவிடம் சொன்னேன். விவேக்கை ஹீரோவாகப் போடு என்று சொன்னதாக என்னிடம் சொன்னார். 15 ஆண்டுகளுக்கு முன்னர், திருமதி ஜானகி விஸ்வநாதன் ‘குட்டி’ என்ற படத்தை இயக்கினார். அதில் மளிகைக்கடை அண்ணாச்சியா நடித்திருந்தேன். அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு, அப்போது எனக்குத் தொலைபேசிய பாலா “ உங்களுக்கு இந்தமாதிரி இன்னொரு பக்கம் இருக்கிறது. அதிலும் நீங்கள் ஏன் முயற்சி செய்யக் கூடாது என்றார். இப்போது மீண்டும் பாலாவே என்னை வழிமொழிந்திருப்பதைக் கண்ணன் கூறினார். பாலா சொல்லிவிடுவார் ஆனால் இத்தனை ஆண்டுகளாகக் காமெடியில் பயணம் செய்து விட்டு எப்படி என்று மறுத்துவிட்டேன்.

பிறகு கமல் சாரை ஒரு நேர்காணல் நேர்காணல் நிகழ்ச்சியில் சந்தித்தேன். அப்போது என்னைத் தனியே அழைத்துச்சென்று மனவிட்டுப்பேசிய கமல், இது நீங்கள் அடுத்தக்கட்டத்துக்கு இடம்பெயர வேண்டிய தருணம். உங்களால் கணமாகக் கதாபாத்திரங்களைக் கண்டிப்பாகப் பண்ணமுடியும். உங்களைச் சீரியஸ் ரோல்களில் ரசிகர்கள் பார்ப்பாங்க..” என்று கமல் சொன்னார். கலைஞானியே சொன்னபிறகு வேறு தடையென்ன? அதன்பிறகுதான் இந்தப் படத்துக்கு ஒகே சொன்னேன். மொத்தபடமும் முடிந்துவிட்டது. படத்தை மொத்தமாக ஒருமுறை பார்த்தபோது ரசிகர்கள் என்னை எங்கே கொண்டுபோய் வைக்கப் போகிறார்கள் என்ற த்ரில் இப்போதே வந்துவிட்டது. ஒன்று சொல்லமுடியும். என் திரைவாழ்க்கையில் இந்தப் படம் மகுடமாக இருக்கும்.

இத்தனை ஆண்டுகாலச் சினிமாவில் நீங்கள் கமலோடு மட்டும் நடிக்கவில்லையே?


பாரதிராஜா - சிவக்குமார் இருவரும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள். ஆனால் பாரதிராஜா படத்தில் அவர் நடிக்கவே இல்லை.கே.பாலச்சந்தர் அவர்களின் பல நாடகங்களுக்குச் சென்று அவரைப் பாராட்டியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், அவரும் கே.பி இயக்கத்தில் நடிக்கவில்லை. கமலுடன் நான் இணைந்து நடிக்காதற்கும் காரணங்கள் இல்லை. அவரும் அழைத்ததில்லை. நானும் கேட்டதில்லை. எதிர்காலத்தில் வாய்ப்பு அமைந்தால் அது சீரியஸான வாய்ப்பாகக் கூட இருக்கலாம்!

முதன் முறையாக குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ. 1 கோடி வென்ற பெண்!


 அமிதாப் பச்சன் நடத்தும் கௌன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பிரோஸ் பாத்திமா என்ற பெண் ரூ. 1 கோடி வென்றுள்ளார்.

இந்தியில் கௌன் பனேகா குரோர்பதி என்ற பெயரில் கோடீஸ்வரன் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதன் 7வது சீசன் தற்போது நடந்து வருகிறது, இதனை இந்தி நடிகர் அமிதாப் பச்சன் நடத்துகிறார்.

இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள சன்சார்பூரைச் சேர்ந்த பிரோஸ் பாத்திமா(வயது 22) கலந்து கொண்டு ரூ.1 கோடி வென்றார்.

இந்த சீசனில் ரூ.1 கோடி வென்ற முதல் பெண் பாத்திமா தான்.

பாத்திமாவின் தந்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார், இதனால் அவர் தனது கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்.

ஆனால் தனது தங்கையின் கல்லூரி படிப்பு பாதிக்காமல் அவர் பார்த்துக் கொண்டார்.

அவரது தந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டபோது அவருக்கு சிகிச்சை அளிக்க வாங்கிய ரூ.12 லட்சம் கடனை அடைக்க முடியாமல் பாத்திமா, அவரது தாய் மற்றும் தங்கை தவித்தனர். இந்நிலையில் இந்த பரிசுத் தொகை கிடைத்துள்ளது.

இதுகுறித்து பாத்திமா கூறுகையில், அமிதாப் பச்சன்ஜி வந்து கட்டிப்பிடிக்கும் வரையில் நான் ரூ.1 கோடி வென்றுவிட்டேன் என்று என்னால் நம்ப முடியவில்லை.

எங்களுக்கு உள்ள கடனை அடைக்க இந்த பணம் உதவும். மீதி பணத்தை வைத்து எங்கள் நிலத்தில் விவசாயம் செய்யத் தேவையான உபகரணங்களை வாங்குவேன்.

முன்பு எங்கள் நிலத்தை பறிக்க பலர் முயன்றனர், ஆனால் தற்போது நான் பரிசுத் தொகையை வென்ற பிறகு மேடம் என்று என்னை அழைக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

பெற்றோர்களை பேணுவோம்!

உங்களி்ன் இந்த அபரிதமான வளர்ச்சிக்கு யார் காரணம்? என்ற கேள்விக்கு எனது தாயும், தந்தையும் தான் என லட்சக்கணக்கானோர் கூடியிருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நன்றிப் பெருக்குடன் உரத்தக்கூறியது வேறு யாருமல்ல, இரட்டை ஆஸ்கர் விருது நாயகன் நமது ஏஆர் ரஹ்மான் தான்!.

தனது பெற்றோர்களின் மீது வைத்திருந்த மதிப்பு, மரியாதையினால் தான் இறைவன் இந்த உயர்வை ஏஆர் ரஹ்மானுக்கு வழங்கினான். அதனால் தான் தமது பேச்சின் முடிவில் எல்லாப் புகழும் இறைவனுக்கே! எனக்கூறி நிறைவு செய்தார்.

பெற்றோர்களின் மனம் குளிரும்படியாக நடந்து கொள்ளும் எந்தப் பிள்ளைகளும் இறைவனால் கைவிடப்பட மாட்டார்கள் என்பதற்கு எவ்வளவோ உதாரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். அதில் ஒரு உதாரணம் தான் ஏஆர் ரஹ்மான்!.

உங்களை பெற்ற தாய், தந்தையரை பார்த்து சீய்... என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாதீர்கள் என இறைவன் அல் குர்ஆன் மூலம் மனித சமுதாயத்தை எச்சரிக்கிறார்கள். மாறாக பெற்றோர்களிடம் பேசும் போது கண்ணியமாக பேசுங்கள் என்றும் இறைவனே சொல்லித் தருகிறான்.

வயதான தாய், தந்தையரோ அல்லது இருவரில் ஒருவரையோ அடைந்து அவர் (பெற்றோர்)களின் கோபத்திற்குள்ளாகி எவன் சொர்க்கம் நுழையவில்லையோ? அவனும் நாசமடைவானாக என்று வானவர் கோமான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம் கூறியபோது ஆமீன்! அப்படியே நடக்கட்டும் என நானும் பிரார்த்தனை செய்தேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பரில் இருந்து கொண்டு தமது கைகளை உயர்த்தி மூன்று முறை ஆமீன் கூறிய நிகழ்வில் ஒன்றாய் பெற்றோர்களை கண்ணியம் செய்வதை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.

மரணத்திற்குப் பிறகு நீ எங்கே செல்ல ஆசைப்படுகிறாய்? என யாரிடத்தில் கேட்டாலும் நல்லவர், தீயவர் என்ற பாகுபாடில்லாமல் சொல்லக்கூடிய ஒரே பதில் சொர்க்கம் என்பது தான்! காரணம் அங்கு தான் எவ்வித வேதனையில்லாமல் சுக போகமாக வாழ்வதற்குரிய சூழ்நிலை உள்ளதாக இறைவனும் இறைத்தூதரும் அறிவித்துள்ளார்கள்.

இப்படி ஆசைபடுவதில் தவறில்லை! அதே நேரத்தில் நாம் அதற்கு தகுதியானவர்களா? என்று சிந்திக்க வேண்டுமா? இல்லையா?

ஒருவர் சொர்க்கம் செல்ல வேண்டுமென நினைத்தால் அதற்குரிய அடிப்படை தகுதியே பெற்றோரிகளின் மனம் குளிரும் படியாக வாழ்ந்திருக்க வேண்டும். பெற்றோர்களின் உயர்வைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "பிள்ளைகளாய் இருப்போரே, தாயின் காலடியில் தான் உங்களுக்கான சொர்க்கம் உள்ளது" எனக் கூறுகிறார்கள்.

அதாவது தாயின் காலடி என்பது தாயின் மன திருப்தியை குறிக்கிறது என்பதாக அறிஞர்கள் கருத்துரைக்கிறார்கள். நாம் சொர்க்கம் செல்வதற்கு காரணமாய் இருக்கும் பெற்றோர்களையே முதியோர் இல்லம் என்ற நரகத்தில் தள்ளி விடுவது எவ்வளவு பெரிய அபத்தம்!

முன்பொரு காலத்தில் மூலை முடுக்கெல்லாம் பெட்டி கடைகள் தானிருக்கும். இன்றோ ஊர்தோறும் முதியோர் இல்லங்கள் உருவாகி வருகின்றன. இதெல்லாம் அதிகப்படியான மனிதர்கள் சொர்க்கத்தை விட்டு விட்டு நரகத்தை நோக்கிய தங்களது பயணத்தை தொடர்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

இன்று பிள்ளைகளாய் இருப்பவர்கள் தான் நாளை பெற்றோர்களாய் மாறுகிறோம்! "முன் செய்யின் பின் விளையும்" என்ற பழமொழியை மனதில் இருத்தி வாழ வேண்டும். இன்று நமது பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தால், நாளை நமது பிள்ளைகள் நம்மை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவர். முதியோர் இல்லங்கள் மூடப்படாமல் நீடித்து இருப்பதற்குரிய காரணம் புரிகிறதா?

பெற்றோர்களுக்கு பிள்ளைகள் எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டுமென்பதை இதோ, இறைவனே கூறுகிறான்: "எங்கள் இறைவா, நாங்கள் சிறு பிள்ளைகளாய் இருந்த போது எங்களின் பெற்றோர்கள் எப்படி எங்கள் மீது இரக்கம் காட்டினார்களோ, அதேபோல் எங்கள் பெற்றோர்களின் மீதும் நீ இரக்கம் காட்டுவாயாக" என்ற இந்த பிரார்த்தனையை தொடர்ந்து செய்து வர வேண்டுமென்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இரக்கம் எனற் வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதவர்களாய் நாமிருக்கும் போது பெற்றோர்களின் பெருமையை எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியம்?

நாம் குழந்தை பருவத்தில் இருக்கும் போது பாலூட்டிய தாய் தனக்கு பிடித்த உணவு தன் பிள்ளைக்கு ஒத்துக் கொள்ளுமா? என யோசித்து பிள்ளைக்கு ஆகாது என தெரிந்ததும் ஆசைபட்ட உணவுகளை உண்ண மறுத்துவிடுகிறாள். கருவை வயிற்றில் சுமப்பதற்கு முன்பு வரை மிகவும் விரும்பி உண்ட உணவையெல்லாம் கருவை சுமந்ததற்குப் பின் விஷமாக்கி கொண்டது யாருக்காக? எதற்காக?

எல்லாம் பிள்ளைகளாய் இருந்த நமக்காகத்தானே, நமது ஆரோக்கியத்திற்காகத் தானே, அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த அன்னையவளை வயதான காலத்தில் அரவணைத்துக் கொள்ளாமல் முதியோர் இல்லங்களிலும், அனாதை விடுதிகளிலும் அடைக்கலம் தேடிக்கொள்ள வைப்பது எவ்வளவு பெரிய கொடுமை!

ஒரு முறை மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்து கொண்டிருந்த வயதான மூதாட்டி ஒருவரை சந்தித்தேன். அவர் என்னிடம் யாசகம் கேட்ட போது நடந்த சந்திப்பு தான் அது! அவர் எதிர்பார்த்ததை நான் கொடுத்துவிட்டு, ஏம்மா இந்த வயதான காலத்தில் இப்படி திரிகிறீர்களே, உங்களுக்கு குடும்பம், பிள்ளைகள் இல்லையா? என பரிவோடு கேட்டதும் தான் தாமதம் பொலபொலவென வடிந்த கண்ணீர் துளிகளை துடைத்து கொண்டே கூறினார், தம்பி, எனக்கு நான்கு ஆண், இரண்டு பெண் என ஆறு குழந்தைகள் இருக்கிறார்கள்.

என் பிள்ளைகள் சிறுவர்களாயிருக்கும் போதே எனது குடிகார கணவனின் இம்சை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் பிள்ளைகளுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு நானும் விஷம் சாப்பிட்டு செத்துவிடலாம் என முடிவு செய்து கணவன் வீடு வராத ஒரு இரவில் திட்டமிட்டபடி விஷத்தை சாதத்தில் கலந்து பிள்ளைகளுக்கு ஊட்ட முயன்ற போது அவர்களின் பிஞ்சு முகத்தை பார்த்ததும் கைகள் நடுங்கி விஷ சாதத்தை தூக்கியெறிந்து விட்டு என் பிள்ளைகளை கட்டிப்பிடித்து கதறினேன்.

ஒவ்வொரு பத்து மாதமும் என் பிள்ளைகளை சுமந்த கஷ்டம் எனக்குத் தானே, தெரியும்! குடிகார கணவனால், கைவிடப்பட்ட நான் வைராக்கியமாய் வீடு வீடாக போய் பத்து பாத்திரம் கழுவி கொடுத்து அதன் மூலம் வரும் சொற்ப வருவாயில் என் ஆறு பிள்ளைகளையும் வளர்த்தேன்.

ஒரு கட்டத்தில் இட்லி, வடை செய்து தெரு தெருவாய் கூவி கூவி விற்றும் என் பிள்ளைகளை வளர்த்தேன். என் மூத்த மகன் கல்லூரி படிப்பை முடிக்கும் வரைக்கும் எனது இட்லி, வடை வியாபாரம் தொடர்ந்தது.

படிப்பில் என் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள். அதனால் கவர்மென்ட் ஸ்காலர்ஷிப் மூலமே மேற்படிப்பும் என் பிள்ளைகளுக்கு இலவசமாக கிடைத்தது. பிறகு எல்லாரும் படித்து முடித்து வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் அவரவர்களுக்குரிய துணையை தேடி திருமணமும் முடித்துக் கொடுத்து அவரவர் தனி குடித்தனம் போய்விட்டனர்.

நான் மட்டும் என் மூத்த மகன் வீட்டிலேயே இருந்து கொண்டேன். என் மகன் செய்யும் ஊதாரித்தனமான செலவுகளை சுட்டிக்காட்டி அவ்வவ்போது பழசை நினைவு படுத்தி புத்திமதி கூறுவேன். இது பிடிக்காத அவன் என்னை வீட்டை விட்டு துரத்திவிட்டேன். பிறகு வாரம் ஒரு வீடு என மற்ற பிள்ளைகளை தேடி போக ஆரம்பித்தேன்.

எனது கடைசி காலத்தில் என்னை சோற்றுக்கு வழியில்லாத பிச்சைக்காரியை போலத்தான் நினைத்தார்களே தவிர பெற்றெடுத்தவள் என்றோ அல்லது நமக்கு மறுபிறவி கொடுத்தவள் என்றோ நினைக்கவில்லை. (சாதத்தில் விஷம் கலந்து கொல்ல முயற்சித்தது என் பிள்ளைகளுக்கு தெரியாது) பெற்ற பிள்ளைகளோ என்னை பிச்சைக்காரியை போல் பார்க்கும் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் தான் முகம் தெரியாத ஊரில் இன்று உண்மையான பிச்சைக்காரியாக உன் முன் நிற்கிறேன் என அந்த மூதாட்டி கூறிய போது உழைத்து தேய்ந்து போயிருந்த அவரது கைகளை பார்த்ததும் எனக்குள் பீறிட்டு கிளம்பிய அழுகையை அடக்க முடியாமலும், அந்தம்மாவுக்கு ஆறுதல் சொல்ல முடியாமலும், அநியாயமாக இந்தம்மா பெற்று ஆறு பிள்ளைகளும் நரகத்திற்குரியவர்களாகி விடுவார்களோ என்ற கவலையாலும், நன்றி மறந்த அந்த பிள்ளைகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோபத்துடனுமே அந்தம்மாவை விட்டு விலகினேன்.

பெற்றோர்களுக்கெதிரான சமூக கொடுமைகள் தலைவிரித்தாடுவதற்கு நன்றி கொன்றல் ஒன்றே தான் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. பிள்ளைகளாய் இருப்போரே! நாளை நமக்கும் அந்த நிலை வருவதற்கு முன் நமது பெற்றோர்களை பேணுவோம். அவர்களது மன திருப்தியை பெற்றுக் கொள்வோம்!

சேரர்கள் வரலாறு - முழு தொகுப்பு



சேரர்கள்


பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரரகளின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.பெரும்பாலும் இன்றைய தமிழகம்த்தின் கொங்குநாடு பகுதியே அக்காலச் சேர நாடு எனலாம். பல சங்கத் தமிழ் நூல்களும்கூடச் சேர நாட்டில் உருவாயின. மெலும் வேணாடு, குட்டநாடு, தென்பாண்டிநாடு ஆகிய கொடுந்தமிழ் மண்டிலங்களையும் (இன்றைய கேரளா) சேரன் ஆண்டான். தலைநகர் கரூர் வஞ்சி. இது ஆண்பொருணை (அமராவதி) ஆற்றின் கரையிலுள்ளதாகச் சங்க இலக்கியங்கள் கூரும். மேலும் காஞ்சி எனும் நொய்யலாறு இங்கே ஓடுகிறது.
முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.

சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.

எல்லைகள்


சங்க காலச்சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அ்ழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.

மன்னர்கள்

சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.

நகரங்கள்



கரூர் அல்லது வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் சேர நாட்டின் தலை நகரமாக விளங்கியது. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும்.



சில அரசர்களின் ஆட்சியாண்டுகள் ஒருவாறு கணிக்கப்பெற்றுளன:

* இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டுகள்
* பல்யானைச் செல்கெழு குட்டுவன் 25 ஆண்டுகள்
* களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் 25 ஆண்டுகள்
* செங்குட்டுவன் 55 ஆண்டுகள்
* ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 38 ஆண்டுகள்
* செல்வக்கடுங்கோ வாழியாதன் 25 ஆண்டுகள்
* தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டுகள்
* இளஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டுகள்


தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரைசார்ந்த நிலப்பகுதிகளையே சேரர் ஆண்டனர் (தற்போது கேரளாவில் உள்ளது).

சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் கி.மு 1200 (?)



சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் முற்காலச் சேர அரசர்களுள் ஒருவன். இவனைப் போற்றி முரஞ்சியூர் முடிநாகனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இவ்வரசன் பாரதப் போர் நிகழ்ந்ததாகக் கருத்தப்படும் கி.மு. 1200 ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர் என கருத இடமுண்டு என்று சில ஆசிரியர்கள் கருதுகின்றனர். புறநானூற்றில் கூறப்படும் ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் என வரும் பகுதியும், இறையனார் அகப்பொருள் உரையில் கூறப்படும் தலைச்சங்கப் புலவருள் முரஞ்சியூர் முடிநாகனார் என்பார் ஒருவர் என்று கூறி இருப்பதாலும், இவன் முற்கால சேரர்களுள் ஒருவன் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இளங்கோ அடிகள் தன் சிலப்பதிகாரத்திலும் ஓரைவர் ஈரைம்பதின்மருடனெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் என கூறுகின்றார்.

உதியஞ்சேரலாதன் - கி.பி. 45-70


உதியஞ்சேரலாதன் கி.பி. முதல் நூற்றாண்டில் குட்டநாட்டை ஆண்ட சேர அரசன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் எல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. சோழன் கரிகாலனுடன் வெண்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் போரிட்ட பொழுது தவறுதலாக முதுகில் புண்பட்டதால் நாணி வடக்கிருந்து உயிர்துறந்ததாகக் கூறுவர். இச்செய்தியை சங்ககாலப் புலவர்கள் மாமூலர், வெண்னிகுயத்தியார், கழாத்தலையார் ஆகியோர் கூறுகின்றனர்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - கி.பி. 71-129

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். இவன் உதியஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனின் மகன். இவனது தாய் வெளியத்து வேண்மாளான நல்லினி. இவனுக்குப் பின் சேரநாட்டை ஆண்ட செல்கெழு குட்டுவன் இவனது தம்பி. இமயம் வரை படை நடத்திச் சென்றவன் என்னும் பொருளில் இவன் "இமய வரம்பன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். சங்காகாலத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்து என்னும் தொகுப்பு நூலில் அடங்கும், குமட்டூர்க் கண்ணனார் என்பவர் பாடிய இரண்டாம் பத்துப் பாடல்கள் இம் மன்னனைக் குறித்துப் பாடப்பட்டவை. இவரைவிட காழா அத் தலையார், மாமூலனார், பரணர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர்.



வட இந்தியாவில், நந்த மரபினருடைய வலிமை குன்றி மௌரியப் பேரரசு வலுவடைந்து வந்தது. இக் காலத்திலேயே இமயவரம்பன் சேர நாட்டை ஆண்டதாகக் கருதப்படுகிறது. இவன் படை நடத்திச் சென்று இமயம் வரையிலும் உள்ள பல அரசர்களை வென்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன் என்னும் பொருளில் இவனைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . எனினும், இதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்பதால் வரலாற்றாளர்கள் பலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், நந்த மன்னர்களுக்கும் மௌரியர்களுக்குமான போரில் சேரர்கள் நந்தருக்கு உதவியாகப் படைகளை அனுப்பியிருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகிறார்கள்.



முதுமைப் பகுவத்திலும் போர்க்குணம் கொண்டு விளங்கிய நெடுஞ்சேரலாதன், வேற்பஃறடத்துப் பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னனோடு ஏற்பட்ட போரில் காயமுற்றான். அவ் வேளையிலும் தன்னைப் பாடிய கழா அத் தலையார் என்னும் புலவருக்குத் தன் கழுத்திலிருந்த மாலையைப் பரிசாக அளித்தான் என்று சொல்லப்படுகிறது. போரில் தனக்கு முதுகில் ஏற்பட்ட புண்ணினால் வெட்கமடைந்து வடக்கிருந்து இவன் மாண்டான் எனப் புறநாநூறு கூறுகிறது.


பல்யானைச் செல்கெழுகுட்டுவன் - கி.பி. 80-105


பல்யானைச் செல்கெழுகுட்டுவன், சேரநாட்டை ஆண்ட ஒரு மன்னன் ஆவான். இவனது தமையனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சோழ மன்னனுடனான போரில் இறந்த பின்னர் இவன் அரசனானான். சங்க கால இலக்கியமான பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. இது தவிர வேறு சங்கப் பாடல்கள் எதிலும் இவனது பெயர் காணப்படவில்லை. 25 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்த இவன், நெடும் பாரதாயினார் என்னும் தனது குருவுடன் காட்டுக்குத் தவம் செய்யச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இவனது ஆட்சிக் காலத்தில் பல போர்களில் ஈடுபட்டுச் சேர நாட்டின் ஆதிக்கத்தைப் பரப்பியதாகத் தெரிகிறது. 500 சிற்றூர்களை அடக்கிய உம்பற்காடு எனப்படும் பகுதியைச் சேரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான், பூழி நாட்டின்மீது படையெடுத்து அதனை வெற்றிகொண்டான், நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தான் என்பது போன்ற தகவல்கள் பதிற்றுப்பத்தில் காணப்படுகின்றன.

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் - கி.பி. 106-130


களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து இவனைக் குறித்துப் பாடப்பட்டது. இதனைப் பாடியவர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர். இப் பதிகத்துள் இவன் ....சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்.... எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலம்

பிற சங்ககால மன்னர்களைப் போலவே இவனது காலமும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் இவனைப் பாடிய கல்லாடனார் என்னும் புலவர், தலையானங்காலத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றியும் பாடியுள்ளார். இதனால் இப் பாண்டிய மன்னனும், நார்முடிச் சேரலும் ஏறத்தாழ ஒரே காலத்தவர் எனக் கருதப்படுகின்றது. இவன் 25 ஆண்டுகள் வரை ஆட்சி செய்ததாகக் கருதப்படுகிறது.

செயல்கள்

பூழி நாட்டுக்குப் படை எடுத்துச் சென்றது, நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தது போன்றவற்றை இவனது பெருமைகளாகச் சங்கப்பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடலில் கல்லாடனார், "......இரும்பொன்வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்....." என்று நன்னனைத் தோற்கடித்தமை பற்றிக் கூறுகிறார்.

சேரன் செங்குட்டுவன் - கி.பி. 129-184


சேரன் செங்குட்டுவன் பண்டைத் தமிழகத்தின் முதன்மையான மூன்று அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னன் ஆவான். இவன் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சேரநாட்டை ஆண்டதாகக் கருதப்படும் சேரலாதன் என்னும் மன்னனுக்கும், ஞாயிற்றுச் சோழன் என்னும் சோழ மன்னனுடைய மகள் நற்சோணைக்கும் பிறந்தவன். சேரநாடு மிகவும் வலிமை குன்றியிருந்த நேரத்தில் அதன் அரசுப் பொறுப்பை ஏற்ற செங்குட்டுவன் அதனை மீண்டும் ஒரு வலிமை மிக்க நாடாக்கினான்.


காலம்


பல்வேறு சேர மன்னர்களைப் பற்றிச் சங்கத் தமிழ் இலக்கியங்களில் குறிப்புக்கள் இருந்தாலும் செங்குட்டுவன் பற்றிய தகவல்கள் சங்க நூல்கள் எதிலும் காணப்படாமையால் இவன் சங்க காலத்துக்குப் பிற்பட்டவன் என்பது வெளிப்படை. இவன் சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியான கண்ணகிக்குச் சிலை எடுத்தபோது இலங்கையின் முதலாம் கயவாகு மன்னன் சேரநாட்டுக்கு வந்ததாகவும், அவன் பத்தினி (கண்ணகி) வணக்கத்தை இலங்கையில் பரப்பியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதால் செங்குட்டுவன் முதலாம் கயவாகு வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவன் என்பது துணிபு. முதலாம் கயவாகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்பது இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் போன்ற நூல்களில் இருந்து தெரிய வருவதால், செங்குட்டுவனும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று கூற முடியும். சாதவாகன மன்னன் சிறீசதகர்ணியும் செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் வாழ்ந்தவனே.

வரலாற்றுத் தகவல்கள்

தமிழ் இலக்கியங்களில், சிலப்பதிகாரம் அதன் வஞ்சிக் காண்டத்தில் சேரன் செங்குட்டுவன் பற்றிய பல தகவல்களைத் தருகிறது. தமிழ்ப் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகியின் கதையைக் கேட்ட சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோயில் அமைக்க எண்ணினான். அதற்காகப் பொதிய மலையில் கல்லெடுத்துக் காவிரி ஆற்றில் நீர்ப்படுத்துவது தனது வீரத்துக்குச் சான்றாகது என்று எண்ணிய அவன், ஒரு சமயம் தமிழ் மன்னர்களை எள்ளி நகையாடிய வடநாட்டு வேந்தரான கனக விசயரை வென்று, இமயமலையில் கல்லெடுத்து, அவர்கள் தலையிலேயே கற்களைச் சுமப்பித்து கங்கை ஆற்றில் நீர்ப்படுத்திச் சேர நாட்டுக்குக் கொண்டுவந்து சிலை எடுக்க அவன் முடிவு செய்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. இதன்படியே வட நாட்டுக்குப் படை நடத்திச் சென்று, எண்ணியபடியே கனக விசயர் தலையில் கல் சுமப்பித்துக் கண்ணகிக்குச் சிலை எடுத்ததாகவும், மாடலன் என்னும் மறையோனின் அறிவுரைகளைக் கேட்டுச் சினம் தணிந்து கனக விசயரைச் சிறையினின்றும் விடுவித்து, அறச் செயல்களில் ஈடுபடச் செங்குட்டுவன் முடிவு செய்தான் என்பதும், கண்ணகிக்குக் கோயில் எடுத்த விழாவில் கனக விசயர், இலங்கை மன்னன், மாழுவ மன்னன், குடகக் கொங்கர் முதலானோர் கலந்து கொண்டனர் என்பதும் சிலப்பதிகாரம் தரும் தகவல்கள்.

அந்துவஞ்சேரல் இரும்பொறை


அந்துவஞ்சேரல் இரும்பொறை சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்த பொறையநாட்டின் ஆட்சியாளர்கள் வழி வந்தவன். இரும்பொறை என்னும் மரபைத் தொடக்கி வைத்தவன் இவனே. இவனது வழி வந்தவர்களே இரும்பொறை அல்லது பொறையன் என அழைக்கப்பட்டார்கள். இவன் சேர நாட்டு அரசுரிமை பெறுவதற்கான மரபுவழி வந்தவனாக இல்லாது இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் சேர மன்னர்களின் உதியன் மரபுவழி அற்றுப்போனதாலும், இவனது புதல்வர்களுக்கு, அவர்களது தாய்வழியாக பொறையநாட்டு வாரிசுரிமை கிடைத்ததாலும் இவர்கள் சேரநாட்டு அரசர்கள் ஆகும் வாய்ப்புப் பெற்றார்கள்.


அந்துவஞ்சேரல், அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக அங்கே அனுப்பப்பட்டான். அவன் அங்கே ஒரு இராச்சியத்தை உருவாக்கினான் அது அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதி, கொங்கு நாடு, பொறையநாடு என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. அந்துவஞ்சேரல், இதன் ஆட்சியாளன் ஆனான். இதன் மூலம் அவன் அந்துவஞ்சேரல் இரும்பொறை என அறியப்பட்டான். அந்துவஞ்சேரல் பொறையநாட்டு வாரிசுரிமை பெற்ற இளவரசியை மணந்து கொண்டவன்.


இவனது இரண்டாவது மகனான செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை சேர மன்னன் ஆனான். இவனுக்கு முன் குறுகிய காலம் அந்துவஞ்சேரலாதன் அரசனாக இருந்திருக்கக்கூடும் என்பது சிலரது கருத்து. ஆனால் இதற்குப் பல காலம் முன்னரே, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் ஆட்சிக்கு வருவதற்கு முன் அந்துவஞ்சேரல் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை - கி.பி. 123-148



செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன். சேரர்களில் இரும்பொறை மரபைச் சேர்ந்த இவன் அத்துவஞ்சேரல் இரும்பொறைக்கும், பொறையன் பெருந் தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான மாந்தரன் சேரல் இரும்பொறை என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் இரும்பொறை அரசனானான். சங்கத் தமிழ் தொகை நூலான பதிற்றுப்பத்தில், கபிலர் பாடிய ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இவன். இவனுடைய பல்வேறு குண நலன்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் கபிலர் புகழ்ந்து கூறியுள்ளார். இவன் திராவிடக் கடவுளான மாயோனை வணங்கி வந்தான்.

இவனுடைய காலத்தில் தமிழகத்தில் பௌத்தம் பரவத் தொடங்கியிருந்தது. இக்காலத்தில் புத்த துறவிகளுக்குப் படுக்கைகள் செய்து கொடுப்பது அறமாகக் கருதப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட படுக்கைகளுக்கு அருகே இக் கொடைகளைக் குறிக்கும் கல்வெட்டுக்களும் வெட்டப்பட்டன. கரூருக்கு அண்மையில் புகழூர் என்னும் இடத்தில் காணப்படும் புகழூர்க் கல்வெட்டு என அறியப்படும் இத்தகையதொரு கல்வெட்டு "கோ ஆதன்" என்பவன் பற்றிக் குறிப்பிடுகிறது. இது வாழியாதன் இரும்பொறையே எனத் தொல்லியலாளர் கருதுகின்றனர்.



ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஆறாவது பத்து இவன் மீது பாடப்பட்டது. காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்னும் புலவர் இப் பதிகத்தைப் பாடியுள்ளார். குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும், வேளாவிக்கோமான் மகளுக்கும் இவன் மகனாகப் பிறந்தான். இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயரில் அரியணை ஏறுமுன், ஆடல்கலையில் வல்லவனாகி ஆட்டனத்தி என்னும் பெயரைக் கொண்டிருந்தான். கலையார்வம் கொண்டு விளங்கிய இவன், அன்பு, அறம், அருள் ஆகிய நற்பண்புகள் உடையவனாக நல்லாட்சி நடத்தி வந்தான். இவன் இவன் 35 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை - கி.பி. 148-165

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர வேந்தர்களின் மரபில் வந்தவன் இவன். இவனது தந்தையான செல்வக் கடுங்கோ ஆழியாதன் இரும்பொறைக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். சங்கத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. அரிசில்கிழார் என்னும் புலவர் இதனைப் பாடியுள்ளார்.



தகடூர் மீது படையெடுத்து அதன் மன்னன் அதியமானை வென்றதன் மூலம் இவனுக்குத் தகடூர் எறிந்த என்னும் சிறப்புப்பெயர் வழங்கியது. இதனையொட்டியே தகடூர் யாத்திரை என்னும் தனி நூலும் எழுந்தது. களைப்பு மிகுதியால் முரசு கட்டிலில் ஏறித் துயில் கொண்டு விட்ட மோசிகீரனார் என்னும் புலவர் துயில் கலையும் வரை கவரி வீசினான் இவன் என்று புகழப்படுகிறான்.கருவூரைச் சேர நாட்டின் தலைநகர் ஆக்கியவன் இவன் என்றும் கருதப்படுகிறது.


இளஞ்சேரல் இரும்பொறை - கி.பி. 165-180

இளஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் சேர நாட்டை ஆண்டவன். இவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் மகனான குட்டுவன் இரும்பொறைக்கும், வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன். இவனுக்குப் பாண்டியர், சோழர், குறுநில மன்னர்கள் எனப் பல முனைகளிலுமிருந்து எதிர்ப்புக்கள் இருந்தன எனினும் அவற்றைச் சமாளித்து 16 ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஒன்பதாவது பத்தின் பாட்டுடைத் தலைவன் இவனாவான். பெருங்குன்றூர் கிழார் என்பவர் இதனைப் பாடியுள்ளார்.

இவன் கோப்பெருஞ் சோழனின் தலைநகரான உறையூரைத் தாக்கிக் கைப்பற்றினான் அங்கு கிடைத்த பொருளையெல்லாம் வஞ்சிமாநகர் மக்களுக்குக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. எனினும், இவன் உறையூரைத் தாக்கியமை சேரர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது எனலாம். கோப்பெருஞ் சோழனின் மைந்தர்கள் இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்கக் காத்திருந்தனர்.



குட்டுவன் கோதை - கி.பி. 184-194

குட்டுவன் கோதை பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு அரசன். இவன் சேர நாட்டின் ஒரு பகுதியான குட்டநாட்டை ஆண்டவன். இவனைக் குறித்த தகவல்கள் சங்கத் தமிழ் இலக்கியமான புறநானூற்றின் மூலமே கிடைக்கின்றது. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றின் 54 ஆம் பாடலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்னும் சோழ மன்னனும் இவனும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாகத் தெரிகிறது. புகழ் பெற்ற சேர மன்னனான செங்குட்டுவனின் மகனான குட்டுவன் சேரலும் இவனும் ஒருவனே என்பாரும் உளர்.

சேரமான் வஞ்சன்




சேரமான் வஞ்சன், என்பவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேரர் மரபைச் சேர்ந்தவர். பாயல் என்னும் மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். திருத்தாமனார் என்பவர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றின் மூலமே இவன் பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளன. வஞ்சன் என்னும் பெயர் காரணப் பெயராக இருக்கலாம் எனத் தெரிகிறது. இவனது இயற்பெயர் தெரியவரவில்லை.ன் புறநானூற்றுப் பாடலின் மூலம் இவ்வரசன், புலவர்களை இன்முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு வேண்டியன அளித்துப் பேணும் பண்பு கொண்டவன் எனத் தெரிகிறது.

மருதம் பாடிய இளங்கடுங்கோ

மருதம் பாடிய இளங்கடுங்கோ பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்தவர். சங்கத் தமிழ் இலக்கிய நூல்களான அகநானூறு, நற்றிணை ஆகியவற்றில் காணப்படும் மூன்று பாடல்களைப் பாடிய புலவர் என்ற அளவிலேயே இவர் அறியப்படுகிறார். இவரும், இளஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே எனக் கூறுபவர்களும் உளர். எனினும் இதற்கான போதிய சான்றுகள் கிடைத்தில.

சேரமான் கணைக்கால் இரும்பொறை




சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவன். இவன் சோழன் செங்கணான் என்பவனோடு போரிட்டு அவனால் பிடிக்கப்பட்டுச் சிறையில் இருந்தவன். சிறையில் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடியாது ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் புறநானூற்றின் 74 ஆவது பாடலாக உள்ளது.

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை



சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, இவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒருவன். "மாக்கோதை" என்பது இவன் ஒரு இளவரசன் என்பதைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இவனைப் பற்றிய தகவல்கள், சங்க இலக்கியம் மூலமே கிடைக்கிறது. இவனது மனைவி இறந்தபோது இவன் பாடியதாகக் கூறப்படும் பாடல் ஒன்று புறநானூற்றில் 245 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது.

ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்!

• பீரோ நிறைய துணிமனிகளை அடிக்கி வச்சிகிட்டு, மனைவிமார்கள் டிரஸ்சே இல்லாத மாதிரி "நைட்டியில" அலையறது ஏன்னு புரியல?



• 337 அயிட்டத்தை பாத்ரூம் குள்ள வச்சிகிட்டு, போனா போகுதுன்னு 2 பொருட்களை வச்சிக நமக்கு எடம் தர்றது ஏங்க? (அவங்க வச்சிருக்குற பாதி அயிடத்தோட பெயரே தெரியாது நமக்கு)


• புதுசா கல்யாணமான ஆண் சந்தோஷமாக இருந்தால் ஏன்னு தெரியும்! ஆனா.. கல்யாணமாகி "10 வருடம்" ஆன ஆண் சந்தோஷமா இருந்தா ஏன்னு தெரிய மாட்டுது!!


• பெண்கள் ஒருமணி நேரமா எழுதுன "மளிகை லிஸ்டை", அவங்க கடைக்கு போகும்போது எடுக்க மறந்துட்டு போறது... ஏங்க?


• பெண்கள் அவர்களது தோழிகளை அவர்கள் வீட்டில் பாத்து அரட்டை அடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியதும், "அதே தோழியிடம்" 2 மணி நேரம் போன் செஞ்சு பேசுறது... ஏங்க?


• பெண்கள் ஷாப்பிங் போகும் போதும், வீட்டை பெருக்கும் போதும், புத்தகம் படிக்கும் போதும், போன் பேசும் போதும், மெயில் அனுப்பும் போதும் மேக்கப் போட்டுகறாங்ளே.. ஏங்க? (மேல இருக்கறது பாதிதான்!!)


• பெண்கள் சமைக்கும் போது.. இப்படி செய்யி, அப்படி செய்யுன்னு சொல்லாத நம்மல பார்த்து.. கார் அல்லது பைக் ஓட்டுபோது "பிரேக் போடுங்க", "அப்டி வளைக்காதீங்க", "பார்த்து ஓட்டுங்க"ன்னு சொல்றது... ஏங்க?


• தேவையான பொருளை தள்ளுபடியில போட்டா கூட வாங்க நாம யோசிக்கிறபோது, "தேவையே இல்லாத பொருளை தள்ளுபடியில" போட்டுடாங்கன்னு.. தளராம கிளம்பி, தகதகன்னு தள்ளிகிட்டு வராங்களே... ஏங்க?

அற்புத பொன்மொழிகள் அவசியம் படிக்கவும்!


தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!



எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்.



பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட, முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்.



நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.



முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்..



ரொம்ப விளக்க வேண்டியதில்லை. நண்பர்களென்றால் நம்புவார்கள். எதிரிகளென்றால் எப்படியும் நம்பப்போகிறதில்லை.



யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.



மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.



பயமில்லாமை தைரியமல்ல. பலநேரங்களிலும் சரியாய் செயல்புரிவதே நிஜ தைரியம்.



எதிர்காலத்தை சரியாக கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும்.



நாளைய மழை அறியும் எறும்பாய் இரு
 நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும்
 காளானாய் இராதே!

கிராமத்து அஜித் வர்றார்... - இயக்குநர் சிவா

 

என்னை எல்லோரும் 'சிறுத்தை' சிவான்னு சொல்றாங்கன்னு எனக்கே தெரியாது. நாலு மாசத்துக்கு முன்னாடிதான் தெரியும். என்னோட பெயரை மக்கள் மறக்கமால் இருந்தா போதும். எப்படிக் கூப்பிட்டா என்ன..?’ என்று அடக்கமாகப் பேசுகிறார் அஜித்தை வைத்து 'வீரம்' படத்தை இயக்கிவருறார் சிவா.

வீரம் எந்த மாதிரியான படம்? 

வீரம் முழுக்க முழுக்க ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர். குடும்பத்துல சின்னக் குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் வந்து பார்க்குற ஜாலியான படமாக இருக்கும். அதே சமயத்துல ஆக்ஷனும் இருக்கும்.

அஜித் என்ன மாதிரியான கேரக்டர் பண்ணியிருக்கார்?


அஜித் இதுக்கு முன்னாடி இந்த மாதிரிக் கேரக்டர்ல பண்ணியிருக்கார். ஆனால் முழுப்படமும் பண்ணியதில்லை. கமர்ஷியல் படத்துல முழுக்க ஆக்ஷன் ஹீரோவா பட்டையக் கிளப்பியிருக்கார். வீரம் படத்தோட ஸ்பெஷல், அஜித் படம் முழுக்கவே, பட்டையக் கிளப்பியிருக்கார், முழுக்க வேட்டி சட்டைல தான் நடிச்சிருக்கார். அஜித் இந்த மாதிரி ஒரு கிராமத்துக் கதைல, இதுக்கு முன்னாடி நடிக்கல. அது தான் வீரம் ஸ்பெஷல்.

கதையைக் கேட்டுட்டு அஜித் என்ன சொன்னார்?

முதல் முறையா அஜித்தை சந்திச்சு, எந்த மாதிரி கதை பண்ணலாம் அப்படின்னு பேசிட்டு இருந்தோம். அப்போ அஜித் சார், ஸ்டைலிஷான படங்கள் எல்லாம் பண்ணிட்டார். நாம் ஏதாவது புதுசா பண்ணலாம்னு கிராமத்துக் கதைய படமா பண்ணலாம்னு ரெண்டு பேரும் சேர்ந்து முடிவு பண்ணினோம்.

மண்ணின் மனத்தோடு படம் பண்றோம் அப்படிங்கிறதுல ரெண்டு பெருமே தெளிவாக இருந்தோம். தமிழ்நாட்டில இருக்கிற சிட்டி மக்கள்ல இருந்து கிராமத்து மக்கள் வரைக்கும் ரீச்சாகிற மாதிரியான ஒரு கதை இது. அனைத்து தரப்பு மக்களையும் இந்தப் படம் கவரும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

முதல் முறையா அஜித்தை எங்க சந்திச்சீங்க?

அஜித்தை வைச்சு படம் பண்ணனும் அப்படிங்கிறது எனது நீண்ட நாள் ஆசை. சிறுத்தை முடிச்ச உடனே, உங்களோட நீண்ட நாள் ஆசை என்னன்னு கேட்டாங்க. நான் ஹாலிவுட் படம் பண்ணனும்னு சொன்னேன். ஹாலிவுட் படம் பண்ணா யாரை இங்கிருந்து ஹீரோவா வைச்சு பண்ணுவீங்கனு கேட்டாங்க. உடனே என்னோட ஒரே சாய்ஸ் அஜித்தான்னு சொன்னேன். எனக்கு மனசுல தோணுச்சு, சொன்னேன். அந்த ஆசை உடனே நிறைவேறும்னு நான் எதிர்பார்க்கல.

ஒருநாள் அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா கால் பண்ணினார். அஜித் சார் உங்களோட சேர்ந்து படம் பண்ணனும்னு ஆசைப்படுறார்னு சொன்னார். என்னால நம்பவே முடியல. அவரே அஜித் நம்பரையும் கொடுத்தார். நான் போன் பண்ணி அஜித்கிட்ட பேசினேன். என்னால நம்பவே முடியல.

ஒளிப்பதிவாளர் சிவா, இயக்குநர் சிவாவாக மாறக் காரணம் என்ன?

நான் 6ஆம் வகுப்பு படிக்கிறப்போ இருந்தே இயக்குநராகணும் அப்படிங்கிறது என்னோட ஆசையா இருந்துச்சு. நான் டிகிரி படிக்கல. அதனால இயக்குநர் படிப்பு பண்ண முடியாம போச்சு. உடனே ஒளிப்பதிவாளர் படிப்பு படிச்சேன். ஒளிப்பதிவாளரா படங்கள் பண்ணினாலும், நாம இயக்குநராகணும் அப்படிங்கிறது எனக்குள்ள இருந்த விஷயம்தான்.என்னோட இயக்குநர் பாதைக்கு ஒளிப்பதிவு உதவியா இருந்துச்சு.

தெலுங்குப் படங்கள், தமிழ்ப் படங்கள் என்ன வித்தியாசம் பார்க்குறீங்க?

தென்னிந்தியப் படங்கள் எல்லாமே ஒண்ணுதான். தமிழ், தெலுங்கு அப்படினு பிரிக்க முடியாது. இரண்டு மொழி படங்கள் பார்த்தீங்கன்னா, ஒரே எமோஷன்தான் இருக்கும். எனக்கு இரண்டு மொழிகளிலுமே தெரியும். ரெண்டிலுமே கதை எழுதுவேன், ஹீரோஸ்கிட்ட கதை சொல்லும்போது ஈஸியா இருக்கும். அதனால எனக்கு பெரிய வித்தியாசம் ஒண்ணும் தெரியல.

தமன்னா எப்படி தமிழ்ப் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினாங்க?
சிறுத்தை படம் முடிச்சவுடனே, நீங்க அடுத்த படம் பண்ணும் போது, ஹீரோயினா எப்போ கூப்பிட்டாலும் நான் ரெடின்னு சொன்னாங்க. வீரம் முடிவான உடனே, யார் ஹீரோயின்னு பேச்சு வந்துச்சு. அப்போ அஜித் - தமன்னா இதுவரைக்கும் ஒண்ணா படங்கள் பண்ணியதில்லை.

உடனே தமன்னாவிற்கு போன் பண்ணி, உங்க தேதிகள் வேணும், அஜித் சாருக்கு ஜோடி அப்படினு மட்டும் தான் சொன்னேன். எப்போனு கேட்டாங்க. நேரா ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துட்டாங்க. இதுவரைக்கும் படத்தோட கதை என்னனு கேட்கல. என் மேல அவ்வளவு நம்பிக்கை வைச்சுருக்காங்க.

தொடர்ச்சியாக மாஸ் மசாலா படங்கள் இயக்கிட்டு இருக்கீங்க...

மாஸ் மசாலா படங்கள் பண்றது தான் ரொம்ப கஷ்டம். பொதுவான ஆடியன்ஸுக்காக படம் எடுக்கிறோம். இதில் பணக்காரங்க, ஏழை, புத்திசாலி... இப்படி பலதரப்பட்ட மக்கள் இருப்பாங்க. இவங்க எல்லாருமே தியேட்டருக்கு வந்து படம் பார்த்து சூப்பர்னு சொல்லணும். அப்பத்தான் படம் சக்சஸ். பணம் போடுற தயாரிப்பாளர், ஹீரோ, தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், படம் பார்க்க வர்ற மக்கள் இப்படி எல்லாரையும் திருப்திப்படுத்துறது ரொம்ப கஷ்டம். எல்லாமே கரெக்டா இருந்தா, ஜாக்பாட்தான்.

வீரம் படத்துல ரொம்ப கஷ்டப்பட்டு படமாக்கிய காட்சின்னு ஏதாவது இருக்கா?

படம் பெரிய பட்ஜெட். மொத்தம் 28 ஆர்ட்டிஸ்ட் இருக்காங்க. எல்லாருமே பெரிய ஆர்டிஸ்ட். அப்போ எல்லாருக்குமே ஒரு பயம் இருக்கும். ஆனா, அந்த பயம் எல்லாத்தையும் போக்கியவர் அஜித்.’

ஷூட்டிங் ஸ்பாட்ல இயக்குநர், ஒளிப்பதிவாளர், லைட் மேன் இப்படி எல்லாருக்குமே ஒரே நோக்கம் படம் நல்லா வரணும். இந்த நோக்கத்திற்கு காரணம் அஜித் மட்டுமே. ஏன்னா எங்க எல்லார்கிட்டயும் ரொம்ப அன்பா பேசுவாரு, பழகுவாரு. படத்துல நாலு தம்பிகளுக்கு மட்டும், அண்ணனா இல்ல. எங்க மொத்த யூனிட்டுக்கே அண்ணன் அஜித்.

இடைவேளை அப்போ ஒரு ரயில்ல வைச்சு சண்டைக் காட்சி இருக்கும். அதுல ரொம்ப சிரமப்பட்டு எடுத்தோம். 100 கி.மீ. வேகத்துல போற ரயில்ல வைச்சு எட்டு நாள் ஷூட் பண்ணினோம்.

அஜித் ரசிகர்களுக்கு 'வீரம்' ஸ்பெஷல் என்ன?

இது வரைக்கும் பார்க்காத அஜித்தை பார்ப்பீங்க. எல்லாருமே சொல்றது தானே நினைப்பாங்க. முதல் முறையாக அஜித் இறங்கியடிச்சிருக்கார். நாங்க பொங்கல் வெளியீடு அப்படினு அஜித் டான்ஸ் ஆடுற மாதிரி ஒரு போஸ்டர் வெளியிட்டோம் பார்த்தீங்களா. அதே மாதிரி தான் படமும். சும்மா புகுந்து விளையாடிருக்கார் மனுஷன். சிவா, நான் இந்த மாதிரி டயலாக் எல்லாம் பேசி நடிச்சதில்லை. எனக்கே புதுசாயிருக்கு அப்படினு சொல்வார். அவரே புதுசாயிருக்குனு சொல்றப்போ, பாக்குற ரசிகர்களுக்கும் புதுசாதானே இருக்கும்.

‘மித்’ என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் எது?

 

முகநூல் எனத் தமிழ் எழுத்தாளர்களால் வழங்கப்படும் ஃபேஸ்புக்கில் தமிழ் சார்ந்த விவாதங்கள் அடிக்கடி நடப்பதுண்டு. முகநூலில் பெரும்பாலும் வேடிக்கை பார்ப்பவனாகவே பங்குபெறும் எனக்கு ஒரு சில விஷயங்களில் மட்டும் நேரடியாகப் பங்குபெறுவதற்கான உந்துதல் ஏற்படும். மொழி சார்ந்த விவாதங்கள் அவற்றில் ஒன்று. ஒருநாள் காலையில் தொன்மம் என்னும் சொல் குறித்துக் கவிஞர் பெருந்தேவி போட்டிருந்த பதிவு என் கவனத்தைக் கவர்ந்தது.

“ ‘மித்’(myth) என்கிற சொல்லுக்கு இணையான வார்த்தை தமிழில் இல்லை / உருவாக்கப்படவில்லை என்று நினைக்கிறேன்” என்று தொடங்கும் அந்தப் பதிவைச் சற்றே சுருக்கி இங்கே தருகிறேன்.

“தொன்மம் என்கிற மொழிபெயர்ப்பில் நிச்சயம் பிரச்சினை இருக்கிறது. ‘தொல்’, அது சுட்டும் பழமை, வரலாற்றுக்கும் ‘மித்’துக்குமான இடைவெளியை அழித்து, இரண்டையும் ஒன்றாக்கிவிடக்கூடிய தவறான, அபாயமான சாத்தியத்தை வலுப்படுத்துகிறது. ‘பழமை’ என்ற சுட்டுதல், ஒருவகையில் மரபுபோன்ற அதன் அதிகாரப் பிடிமானத்தைக் குறித்தாலும்கூட, ‘பழமை’ என்கிற கருத்தாக்கம் ‘இன்றைக்கு’ சமூக, பண்பாட்டு அறிவுப்புலத்தில் கொண்டிருக்கும் பொருண்மையான மதிப்பை அதிலிருந்து அந்நியப்படுத்திவிடுகிறது. மேலும், காலப்போக்கில் ‘மித்’தின் சொல்லாடலில் நேர்ந்திருக்கக்கூடிய மாற்றங்களைக் கணக்கில்கொள்ள மறுக்கிறது. ‘புனைவு’ என்று மொழிபெயர்க்கலாம். ஆனால், அந்த மொழிபெயர்ப்பு தட்டையாக, ‘மித்’கொள்ளும் பண்பாட்டு, சமூகத் தள அதிகார இயங்கியல் பரிமாணத்தைக் குறைத்துவிடுகிறது” என்றார் பெருந்தேவி.

இதற்குக் கருத்துத் தெரிவித்திருந்த ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன், “மிதோஸ் என்பதையும் வைத்துப் பார்க்கலாம். இதற்கு ஆக்யானம் என்னும் சொல்லும் ஒப்புமைக்கு வரும். ‘தொன்மம்’ சரியில்லைதான். ஏனெனில், நவீன கால ‘மித்’கள் நமக்கு நிறைய இருக்கின்றன” என்று குறிப்பிட்டிருந்தார். “ஆக்யானம், சம்ஸ்கிருதத்தில் இருக்கலாம். தமிழில் நான் தேடுகிறேன்” என்று பெருந்தேவி பதிலிட்டிருந்தார். “மாயை என்று சொல்லலாமா?” என்று ராம்ஜி யாஹூ என்பவர் கேட்டிருந்தார்.

“‘மித்’ என்பதற்கு யதார்த்தத்தை மீறிய, மரபுவழிவந்த, தொல்கதை (traditional, ancient story) என்று அர்த்தம் கொள்கிறேன். அப்படியென்றால், அதற்கு ஈடான சொல்லாக ‘புராணம்’ என்பது சரியாக வரலாம் என விக்கி பக்கம் சொல்கிறது” என்று ஜ்யோவ்ராம் சுந்தர் கூறினார். “மொழிபெயர்க்கும்போது முழுமையான ஒப்புதல் இல்லாமல் நான் பயன்படுத்துகிற சொற்களில் இந்த ‘தொன்ம’மும் ஒன்று” என்பது மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமியின் வாக்குமூலம். “ ‘மித்’ என்பதை ‘புனைவில் பொதியப்பட்ட உண்மை’ என்பதாக எடுத்துக்கொள்கிறேன்” என அகநாழிகை பொன். வாசுதேவன் குறிப்பிட்டார்.

“காதை என்ற ஒரு சொல் இருக்கிறது. அதற்குக் கதை என்ற பொருள் இருந்தாலும், நவீன ‘மித்’களை நவீன காதைகள் என்று சொல்லலாம் (modern myths then can be called)” என்று வெங்கடேஷ் சக்கரவர்த்தி குறிப்பிட்டார். இவற்றுக்கு எதிர்வினையாற்றிய பெருந்தேவி, “தமிழ் எழுத்துச் சூழலில் ‘தொன்மம்’ என்கிற மொழிபெயர்ப்பு எப்போதிலிருந்து புழக்கத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆவல். கதிர்மகாதேவனின் ‘தொன்மம்’புத்தகத்தைப் படித்திருக்கிறேன். அதில் இச்சொல்லின் வரலாறு பற்றிக் குறிப்பிட்டிருப்பதாக ஞாபகத்தில் இல்லை. நண்பர் பொ.வேலுசாமி அவர்களுக்கு இவ்வார்த்தையின் பயன்பாடு குறித்துத் தெரிந்திருக்கலாம் என நினைக்கிறேன்” எனக் கூறினார்.

இந்த உரையாடலில் நானும் கலந்துகொண்டேன். எதிர்பார்த்ததைவிடவும் சற்றே நீளமாகிவிட்ட அந்தப் பதிவை இங்கே தருகிறேன்:

“தவறான கருத்து என்னும் பொருளில் மித் பயன்படுத்தப்படும்போது மாயை அல்லது பொய் என்னும் எளிய சொற்களே போதும். ஆனால், புராணிகப் படிமங்கள், கருத்தாக்கங்கள், நம்பிக்கைகளைக் குறிப்பிடும்போது, புராணிகம் என்னும் சொல் பொருத்தமாக இருக்கும். இந்துப் புராணிகம், கிரேக்கப் புராணிகம் என்று இந்தச் சொல்லாக்கத்தைப் பல பின்புலங்களிலும் பயன்படுத்தலாம். இங்கே இதிகாசங்களையும் புராணங்களாகவே கொள்ள வேண்டும். புராண, இதிகாச எல்லைகளுக்கு அப்பாற்பட்டு மக்களின் பொது/ஆழ்மன வெளியில் ஊறிப்போன புராணிகப் படிமங்கள், கருத்தாக்கங்கள், நம்பிக்கைகளைக் குறிப்பிடும்போதும் இச்சொல்லைப் பயன்படுத்தலாம்.

“ஒரு சொல் கலைச்சொல்லாகத் தொழிற்படும் போது, அது அச்சொல்லின் வேர்ச்சொல் மற்றும் நேரடிப் பொருளின் எல்லைகளைத் தாண்டிய பொருளைத் தரக்கூடியது என்பது தெரிந்ததுதானே. எனவே, புராணிகம் என்னும் சொல்லாக்கம் மித் என்னும் சொல்லுக்கு நெருக்கமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

“இச்சொல் வடமொழிச் சொல் என்பதை வைத்து இதைத் தவிர்க்க வேண்டியதில்லை. தொனி, நவ, தரிசனம் என்பன போன்ற பல வடமொழிச் சொற்கள் தமிழ் இலக்கியச் சொல்லாடல்களில் இயல்பாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. தமிழில்தான் வேண்டும் என்றால், தொன்மம் என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம். புராணிக என்பதும் தொல் என்பதும் பழைய என்று பொருள்படும் சொற்களே. தொன்மம் என்னும் சொல்லின் போதாமைகள் பற்றி நீங்கள் சொன்னது சரிதான். ஆனால், ‘மித்’என்னும் சொல்லுக்கு ‘தொன்மம்’தான் தமிழில் இணைச்சொல் என்று முடிவுசெய்து பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், அந்தப் பயன்பாடே அச்சொல்லின் வலிமையைக் காலப்போக்கில் கூட்டிவிடும். சொல்லின் பொருள் என்பது முற்றிலும் புறவயமானது அல்லவே. காலம், இடம், பண்பாடு ஆகிய காரணிகளால் கட்டுப்படுத்தப்பட்டும் விஸ்தரிக்கப்பட்டும் உருக்கொள்ளும்/ உருமாறும் சங்கதிதானே. பொருள் என்பது மிகுதியும் பொருள்கொள்ளுதல் என்பதாகவே உள்ளது. விவாதங்களில் ஒருவர் என்ன சொல்கிறார் என்பதைவிட, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதே முக்கியம். பொருளுக்கும் பொருள்கொள்ளுதலுக்கும் இடையே உள்ள தொடர்பை இதன் மூலம் அறியலாம்.”

இதற்குப் பதிலளித்த பெருந்தேவி, “உங்கள் கூற்றில் அர்த்தமிருக்கிறது என்றாலும் ‘ஆதர்சமான’ வாசகர்/உரையாடுபவர் குழுமத்தை நீங்கள் எண்ணத்தில் கொண்டு பேசுவதாகத் தோன்றுகிறது. ஏற்கெனவே ‘மித்’என்பதும் ‘வரலாறு’என்பதும் ஒன்றையொன்று ‘அபாயகரமாக’பதிலீடுசெய்து உயிர், உடைமை விரயங்களை, வன்முறையை ஏற்படுத்தும் சூழலில், தொன்மம் என்கிற மொழிபெயர்ப்பு இத்தகைய பதிலீடுகளின் சாத்தியத்தை இன்னும் வலுப்படுத்தும் என்பதே என் புரிதல்” என்று கூறினார்.

அதற்குப் பதிலளித்த நான், “செட் தோசை 30 ரூபாய் என்று சொல்லும்போது, செட் என்னும் சொல் எதைக் குறிக்கிறது என்பது சராசரி வாடிக்கையாளருக்குப் புரியவே செய்கிறது. மைசூர்பாகுக்கும் மைசூருக்கும் தொடர்பில்லை என்பதையும் அவர் புரிந்துகொள்கிறார். எனவே, கலைச்சொல்லாக்கத்தில் சொல்லின் நேர்ப்பொருள் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அவற்றின் வாசகர்கள் குறித்து நாம் சில அனுமானங்களைக் கொள்ளத்தான் வேண்டும்.

“என்னைப் பொறுத்தவரை புராணிகம் என்னும் சொல்லும் தொன்மம் என்னும் சொல்லும் நீங்கள் எழுப்பும் பெரும்பாலான கேள்விகளின் சோதனைகளைக் கடந்து நிற்கின்றன என்றே தோன்றுகிறது” என்று குறிப்பிட்டேன்.

முகநூல் உரையாடல் இத்துடன் தற்காலிகமாக முடிவுபெற்றது.

விடியும் முன் - பகுப்பாய்வு விமர்சனம்!

 

ஒரு பெண்ணும், ஒரு சிறுமியும் நான்கு சமூக விரோதிகளிடமிருந்து தப்பிப்பதற்குப் போராடும் நிகழ்வே ‘விடியும் முன்’.

பாலியல் தொழிலாளியாக ரேகா என்கிற காதாபாத்திரத்தில் பூஜா நடித்திருக்கிறார். பாலாவின் ‘நான் கடவுள்’ படத்திற்குப் பின் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பின் நடிப்பதால் காமெடி, கமெர்ஷியல், பெரிய இயக்குநர், பாப்புலர் நடிகர் இப்படி வணிகக் காரணங்களை முன்னிறுத்தி நடிக்காமல் ஒரு வலுவான கதாபாத்திரத்தை சுமக்கும் வாய்ப்பை ஏற்றதிலும், அதைச் சிறப்புடன் வெளிப்படுத்தியதிலும் பூஜா மிளிர்கிறார்.

12 வயதுச் சிறுமி நந்தினியை (மாளவிகா) மிகவும் ஆபத்தான சூழலில் இருந்து மீட்டுக்கொண்டு ரேகா (பூஜா) ரயிலில் புறப்படும் சூழலில் கதை நகர்கிறது. அவர்களைத் தேடிப் பிடித்தே ஆகவேண்டும் என்கிற நிர்ப்பந்தத்திற்குள் சிக்கிக்கொள்கிறார், புரோக்கரான சிங்காரம். அதற்கு லங்கன் என்ற ரவுடியின் உதவியை நாடுகிறார். லங்கனுக்குப் பணம், சிங்காரத்திற்கு அந்தச் சிறுமி என்று ஆரம்பிக்கும் தேடுதல், யாருடைய கட்டளைக்காக, தேவைக்காக என்கிற சஸ்பென்ஸ் முடிச்சுகளுடன் நகர்கிறது. லங்கன், சிங்காரம் ஆகியோருக்குப் பின்னணியில் இருப்பவர்கள் சின்னையா என்ற இளைஞனும் துரைசிங்கம் என்ற தாதாவும். எப்படியாவது இந்தச் சிறுமியைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்று போராடும் காட்சிகளில் பூஜா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பூஜா, சிறுமி மாளவிகாவை முதல் தடவை பார்த்துவிட்டு தன்னுடன் அழைத்து வரும்போது ‘உன் பெயர் என்ன?’ என்று கேட்கும்போது, சிறுமி மாளவிகா, சாலையோரச் சுவரில் நந்தினி என்று எழுதிய விளம்பரப் பெயரைப் பார்த்து, தன்னுடைய பெயர் ‘நந்தினி’ என்று சொல்லும் காட்சியும், படத்தின் முடிவில், ‘‘என் நிஜப் பெயர் நந்தினியில்லை!’’ என்று சிறுமி சொல்லும்போது, ‘‘இருக்கட்டும் உனக்கு அந்தப் பெயரே அழகா இருக்கு!’’ என்று பூஜா கூறும் காட்சியிலும் புதிதாக ஒரு வாழ்க்கையை அமைத்து க்கொள்ளத் தயாராகும் உணர்வை அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

பாலியல் தொழிலாளியான ஒரு பெண்ணையும், அந்தப் பாலியல் தொழிலின் சூழலுக்குள் சிக்கிக்கொள்ளாமல் காப்பாற்றப்பட வேண்டிய ஒரு சிறுமியையும் சுற்றிக் கதையை அமைத்த இயக்குநர் பாலாஜி கே. குமாரையும், அதனைக் காட்சிப்படுத்திய கேமராமேன் சிவகுமார் விஜயனையும் பாராட்டலாம்.

பூஜாவின் சொந்தக் குரல் சில இடங்களில் திணறினாலும் கேட்க நன்றாகவே இருக்கிறது. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சில நிமிடங்கள் வந்தாலும் பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். சின்னையாவாக வரும் வினோத் கிஷன் தான் படத்தின் நாயகன். அவர் திரையில் வரும் காட்சிகளும், அவர் தந்தையைக் கொன்றது சரியான முடிவுதான் என்பதைக் காட்டும் சில நிமிட ப்ளாஷ்பேக் காட்சியும் சிறப்பாக உள்ளன.

கிரீஷ் கோபாலகிருஷ்ணனின் இசை சில இடங்களில் பாடல் வரிகளைக் கேட்க விடவில்லை. எனினும் பின்னணி இசையில் தேறிவிட்டார். கலை, படத்தொகுப்பு, காட்சிப்படு த்தியிருக்கும் சூழல் எல்லாமும் சரியாக அமைந்திருக்கின்றன.

பெயருக்கேற்றபடி ஒரே ஒரு பொழுதில் எல்லாமே நடக்கின்றன என்பதால் விறுவிறுப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் கதை இது. அதற்கேற்பப் பல திருப்பங்களையும், அதற்கான காரணங்களையும், குறைவான கதாபாத்திரங்களையும் அடுத்த டுத்த நிகழ்வுகளையும் கொண்டு நகர்கிறது படம். என்றாலும் திரைக்கதையிலும் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தியதிலும் இன்னும் சற்று வேகத்தைக் கூட்டியிரு க்கலாம். இந்த ஒரு விஷயத்தைத் தவிரப் பெரிய குறை எதுவும் இல்லை.

குழந்தைகள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்து பெரியவர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்ற செய்தியை, கதையம்சம் குன்றாமல் கொடுத்திருப்பது பாராட்டத்தக்க முயற்சி.

மதிப்பீடு:
 
விடியும் முன், ஆவணத் தன்மையைத் தவிர்த்த விழிப்புணர்வுப் படம்.

தந்தை பெரியார் பொன்மொழிகள்!



 மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.


பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி


 மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்


 விதியை நம்பி மதியை இழக்காதே.


மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.


மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.


பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.


பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.


பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.

வாழ்க்கையையின் நிதர்சனம் இதுதான்!

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார்.

பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை.

சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து,

 "என்னுடைய சாவு நெருங்கி விட்டது.

எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன.

அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக,

 "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது,

 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக,

 "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன.

என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து,

 "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம்.

ஆனால்,

இதற்கான காரணத்தை தாங்கள் எங்களுக்கு விளக்க வேண்டும்" என்று கேட்க,

அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள்.

மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது.

மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

மரணம் ஒரு நிதர்சனமான உண்மை .

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை யாரும் தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது.

அது சவக்குழி வரை மட்டும்தான்..!

மனிதர்கள் வீணாக சொத்துக்கள்,செல்வங்கள் போன்றவற்றின் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3. உலகையே வென்றவன் இந்த மாவீரன் அலெக்ஸாண்டர்,

சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக..

ஆம். நண்பர்களே,

நாமும் அப்படித்தான் நம்ம  தற்போது வாழ்ந்து வருகின்றோம்.

நம் வாழ்க்கையே எப்போதும் பணம்,பணம்,பணம்தான்.

சதா நாம் அனைவரும் அதன் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கின்றோம்.

நம் கவியரசு.கண்ணதாசன் அவர்களின் ஒருதிரைப்பாடல்.

அதை மறைந்த டி.எம்.எஸ்.அவர்கள் உயிரோட்டமாக பாடிஇருப்பார்.

 "வீடு வரை உறவு,
வீதி வரை மனைவி,
காடு வரை பிள்ளை,
கடைசி வரை யாரோ, என்று..


என்ன அருமை நண்பர்களே, உண்மைதானே...???

Friday 29 November 2013

சிறப்பான சிந்தனைகள் பத்து!



 படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.

மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.

உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.

வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.

பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.

ஆசைகள் வளர வளர தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.

எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.

மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.

கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.

அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.

மின்சாரத்தைச் சேமிப்பதற்கும் மின் வெட்டு சமயம் இருட்டைச் சமாளிப்பதற்குமான டிப்ஸ்கள் !!!!!

தவிர்க்கவே முடியாதது... தமிழகமும் மின் வெட்டும் என்றாகிவிட்டது!மின்சாரம் இருக்கும் நேரங்களில் அதை அதீதமாகச் செலவழிப்பது, மின் வெட்டு நேரத்தை இன்னும் அதிகரிக்கவே செய்யும். ஆகவே, மின் சிக்கனம் தேவை இக்கணம்.

டாஸ்க் லைட்டிங்’ எனும் முறையைப் பின்பற்றலாம். அதாவது, உங்கள் வேலைக்குத் தேவையான மின்சாரத்தை மட்டும் பயன்படுத்துங்கள். உதாரணமாக, படுக்கை அறையில் புத்தகம் படிக்கும் சமயம், மொத்த அறைக்குமான விளக்கை ஒளிரவிடாமல், டேபிள் லேம்ப்பை மட்டும் பயன்படுத்துவது.

செல்போன், லேப்டாப் போன்றவற்றை சார்ஜ் செய்தவுடன் அதன் ப்ளக்கை மின்சார இணைப்பில் இருந்து எடுத்துவிடுங்கள். என்னதான் சுவிட்சை ஆஃப் செய்தாலும், அதில் மின்சாரம் கடந்துகொண்டேதான் இருக்கும். அதனால் மின்சாரம் விரயமாவதுடன், மின் சாதனப் பொருட்களுக்குச் சேதமும் உண்டாகலாம்.

குளிர்சாதனப் பெட்டியின் 'கன்டென்சர் காயில்’-ஐ வாரம் ஒரு முறை சுத்தப்படுத்துங்கள். அதில் படியும் தூசி, குளிர்சாதனப் பெட்டியின் செயல்பாட்டுத் திறனைக் குறைத்து 25 சதவிகிதத்துக்கும் அதிகமான மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும்.

மேஜை விளக்கினை அறையின் ஓரத்தில் வைக்கவும். அதனால், விளக்கின் ஒளி இருபுறச் சுவர்களிலும் பட்டு பிரகாசமாகப் பிரதிபலிக்கும்.

வீட்டு உபயோகத்துக்கு என்றால், 'டெஸ்க்டாப்’ கணினியைவிட லேப்டாப்பே சிறந்தது. லேப்டாப் கணினியைவிட டெஸ்க்டாப் கணினி ஐந்து மடங்கு அதிகமான மின்சாரத்தை உட்கொள்ளும். ஒருவேளை டெஸ்க்டாப் கணினி வாங்கினாலும், அதற்கு எல்.சி.டி. மானிட்டரையே தேர்ந்தெடுங்கள்.

கணினியில் ஸ்க்ரீன்சேவர்கள் வைத்தால், மின்சாரப் பயன்பாடு குறையும் என்பது தவறு. பயன்பாடு இல்லாத நேரத்தில், மானிட்டரை அணைத்துவிடுவதே சிறந்தது.

வாஷிங் மெஷினின் அதிகபட்சக் கொள்ளவுக்குத் துணிகளை நிரப்புங்கள்.

ப்ரிஜ்ஜின் குளிர்நிலையை 37 டிகிரி முதல் 40 டிகிரிக்குள் செட் செய்துகொள்ளுங்கள்.

திரவப் பொருட்களை மூடிவைத்து பிறகு ஃப்ரிஜ்ஜுக்குள் வைக்கவும். திறந்துவைத்தால், ஃப்ரிஜ்ஜுக்குள் ஈரப்பதம் அதிகமாகும். அதனால், அதிக வேலைப் பளு காரணமாக மின்சாரம் கூடுதலாகச் செலவாகும்.

டிஸ்போஸபிள் பேட்டரிகளைவிட ரீ-சார்ஜ் வசதியுள்ள பேட்டரிகளைப் பயன்படுத்தலாம்.

மின் வெட்டு சமயங்களைச் சமாளிக்க, சந்தையில் என்னவெல்லாம் பொருட்கள் கிடைக்கின்றன...

எமர்ஜென்ஸி ஃபேன்:

டூ இன் ஒன் அல்லது த்ரீ இன் ஒன் ஆகக் கிடைக்கிறது இந்த எமர்ஜென்ஸி ஃபேன். எமர்ஜென்ஸி விளக்கும் ஃபேனும் பொருத்தப்பட்டு இருக்கும் சாதனத்தின் விலை 650 முதல் 800 வரை. ஃபேன், விளக்கு மற்றும் எஃப்.எம். ரேடியோ ஆகியவை இணைந்த சாதனம் 1,000 முதல் 1,200 வரை. சார்ஜ் செய்துகொண்டு மின்சாரம் இல்லாத சமயங்களில் இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தச் சாதனங்களை முழுமையாக சார்ஜ் ஏற்றிக்கொண்ட பிறகு, ஃபேன், விளக்கு, எஃப்.எம். இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் பயன்படுத்தினால், நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை இயங்கும். மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் ஒரு மணி நேரம் மட்டுமே சார்ஜ் நிற்கும்.

மொபைல் பவர் பேக்-அப்:

மின் வெட்டு சமயம் உங்கள் அலைபேசியை சார்ஜ் ஏற்றிக்கொள்ள உதவும் சாதனம் இது. மின்சாரம் இருக்கும் சமயம் இதை முழுக்க சார்ஜ் செய்துவிட வேண்டும். சுமார் மூன்று மணி நேரங்களில் இது சார்ஜ் ஆகிவிடும். பிறகு, மின்சாரம் இல்லாத சமயம் அலைபேசியில் இந்தச் சாதனம் மூலம் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். இரண்டு அலைபேசிகளை இதன் மூலம் சார்ஜ் செய்துகொள்ள முடியும். இதன் விலை 1,600 முதல் 2,000 வரை!

மினி இன்வெர்ட்டர்:


வழக்கமான இன்வெர்ட்டரின் மினி வடிவம். இதன் மூலம் லேப்டாப் இயக்கம், மொபைல் சார்ஜ் ஆகியவற்றின் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள முடியும். இதன் விலை 2,500 முதல் 3,500 வரை.

சோலார் லேம்ப்:

வெயிலில் சார்ஜ் ஏற்றிக்கொண்டு இருளைப் போக்கும் விளக்குகள் இவை. போட்டோவால்டிக் சோலார் பேனல் மூலம் சார்ஜ் ஆகும் பேட்டரி இந்தச் சாதனத்தின் எல்.இ.டி. விளக்கை ஒளிரவைக்கும். சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைத்துவிட்டால், இதன் சோலார் பேனல் சக்தியை உள்வாங்கிக்கொண்டு, மின் வெட்டு சமயங்களில் ஆபத்பாந்த வனாக ஒளி கொடுக்கும். முழுக்க சார்ஜ் ஏற்றிக்கொண்ட பிறகு இது சுமார் ஆறு மணி நேரம் வரை ஒளி கொடுக்கும். விலை 500 முதல் 800 வரை!

குட்டிக்கதைகள்!

ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் விளையாடிக்
 கொண்டு இருந்தார்கள். அந்த பையன் கைகளில் நிறைய
 பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய
 இனிப்புகளும் இருந்தது.

அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற பொம்மைகள்
 எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன் நீ வச்சு இருக்கிற
 இனிப்புகள் எல்லாத்தையும்
 எனக்கு தர்ரியா என்று கேட்டான். குட்டி பெண்ணும்
 அதற்கு சம்மதம் தெரிவித்தாள்.

அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல
 பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த
 குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான்.குட்டி பெண்
 எல்லா இனிப்புகளையும்
 கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிகொண்டாள்.

அன்று இரவு அந்த குட்டி பெண் நிம்மதியாக
 உறங்கினாள். அந்த பையனுக்கு உறக்கமே வரவில்லை. அவள்
 எல்லா இனிப்புகளையும் நம்மிடம்
 தந்திருப்பாளா இல்லை நாம் ஒளித்து வைத்தது போல்
 அவளும் ஏமாற்றி இருப்பாளா என்று நினைத்துக்
 கொண்டே உறக்கம் இல்லாமல் அவஸ்த்தைப்பட்டா ன்.

நீங்கள் 100 சதவீதம் அடுத்தவர் மேல்
 நம்பிக்கை வைக்கவில்லை என்றால் அடுத்தவர் உங்களிடம்
 காட்டும் அன்பின் மீது சந்தேகம்
 இருந்து கொண்டே இருக்கும்.

இது காதலுக்கும், நட்புக்கும்,வேலை செய்யும்
 இடத்தில் இருக்கும் முதலாளி தொழிலாளி உறவுக்கும்
 பொருந்தும்.

எப்போதும் எல்லோரிடமும் 100 சதவீத
 அன்பை காட்டுங்கள்.... !!!

வாழ்க்கையைப் வாழ்ந்து பாருங்கள்!

சிறுவன் ஒருவன் நடந்து போய்க் கொண்டிருந்த போது சாலையில் நூறு ரூபாய் நோட்டு கிடப்பதைப் பார்த்தான்.

அன்று முதல் ஏதும் தரையில் கிடக்கிறதா என்று பூமியைப் பார்த்துக் கொண்டே நடந்தான்.

அடுத்த அறுபது வருடங்கள் அப்படியே இருந்தான்.

அவனுக்குக் கிடைத்தவை 768 ரூபாய், 2 மோதிரங்கள், 3 கொலுசுகள்.

ஆனால் அவன் இழந்திருந்தவை, 21900சூர்யோதயங்கள், 630 வானவில் காட்சிகள். ஆயிரக்கணக்கான பூக்கள், பல்லாயிரம் குழந்தைகளின் புன்னகை முகங்கள்.

வாழ்க்கையைத் தொலைத்தவன் மீட்பதற்கு வாய்ப்பே இல்லை.

அதிர்ஷ்டம் காலை இடறினால் மட்டும் குனிந்து பாருங்கள்.

இல்லையென்றால் வாழ்க்கையைப் பாருங்கள்.

வாழ்ந்து பாருங்கள்.

உறவு முறை பழமொழிகள்!



அன்னையின் அன்புக்கு வயதே கிடையாது

 தந்தை எவ்வழி; தனயன் அவ்வழி

 அண்ணனுக்குப் பெண் பிறந்தால் அத்தை அயல் நாட்டார்

 தம்பி உடையான் படைக்கு அஞ்சான்

அக்காள் இருக்கிற வரைதான் மச்சான் உறவு

 அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா எனலாம்.

மகள் ஆனாலும் சும்மா வரமாட்டாள்

 கணவன்; புல்லானாலும் புருஷன்

 மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

 பிள்ளை பெறுவதற்கு முன்பே தின்றுபார்

 மருமகள் வருவதற்கு முன்பே கட்டிப் பார்

 பெண்ணின் கோணல் பொன்னில் நிமிரும்

 மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடமா?

உள்ளூர் மாப்பிள்ளையும் உழுத மாடும் ஒன்று.

நார்த்தங்காய்க்குப் போடுகிற உப்பும், நாத்தனாருக்குப் போடுகிற சாதமும் வீண் போகா!

சிறு குழந்தை இல்லாத வீடும் வீடல்ல;

சீரகம் இட்டு ஆட்டாத கறியும் கறியல்ல.

நகைச்சுவை!


 1) கணவன் : நான் செத்துட்டா நீ எங்கே இருப்பே?

மனைவி: நான் என் தங்கச்சி கூட இருப்பேன்... ஆமா நான் செத்துட்டா நீங்க எங்கே இருப்பீங்க?

கணவன்: நானும் உன் தங்கச்சி கூட இருப்பேன்...

மனைவி: ????

2) மனைவி: நம்ம பையன் ரொம்போ நச்சரிக்கிறான்... ஏதோ ஆப்பிள் போனாம்ல, ஒன்னு வாங்கி கொடுங்க.

கணவன் : “ஆப்பிள் போன விலை ரொம்ப அதிகம்”

மனைவி: “அப்ப ஒரு ஆரஞ்சு போனாவது வாங்கிக் கொடுக்க்லாமுல....”

கணவன் :????

3) டீச்சர்: உன்பேருஎன்ன..? -

மாணவி : " சௌமியா"

டீச்சர்: உங்கவீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?

மாணவி : தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

டீச்சர் : ????

4) டாக்டர்: "ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."

பேசன்ட் :"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"

டாக்டர்: ????

5) மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.

பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!

மாப்பிள்ளை வீட்டார்:???

6) ஆசிரியர் : மனுசனா பொறந்தா ஏதாவது சாதிக்கனும்.

மாணவர் : சாரி சார் நாங்க குழந்தையா தான் பிறந்தோம்.

ஆசிரியர் : ?

7) ஆசிரியர்: இரண்டாம் உலகப் போர் தோன்றக் காரணம் என்ன?

மாணவன்: முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க, அதையெல்லாம் திருத்தி 2ம் தடவை நல்ல போரா நடத்தணும்னு முடிவு செஞ்சிருப்பாங்க சார்!

ஆசிரியர் : ???

வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்...

சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.

வா‌த்‌‌தியா‌ர் : அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்?

மாணவன் : அ‌ப்படியெ‌ல்லா‌ம் ஒ‌ன்று‌மி‌ல்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானு‌ம் எழு‌ந்து ‌நி‌ன்றே‌ன்.

வா‌த்‌‌தியா‌ர் : ????

தமிழர்களின் கற்பனை மிருகமான "யாளி".


தமிழர்களின் கற்பனை மிருகமான

"யாளி".

இவை தென்னிந்திய கோவில்

 சிற்பங்களில் மட்டும் காணக்

 கிடைக்கும். கோயில் கோபுரங்கள்,

மண்டப தூண்களில்

இதனை காணலாம். சிங்க முகமும்

 அதனுடன் யானையின் துதிக்கையும்

 சேர்ந்தார் போல் காட்சி தருவதைப்

 போன்று பல கோவில்களில்

 இவற்றின் சிலைகள்

 அமைக்கபெற்றுள்ளது. சிங்கத்தின்

 தலை கொண்டதை " சிம்ம யாளி "

என்றும், ஆட்டுத்தலை கொண்டதை "

மகர யாளி " என்றும்,

யானை முகத்தை "யானை யாளி "

என்றும் அழைக்கிறார்கள்.

வேண்டியவை மூன்று எவை?



 * இருக்க வேண்டியது மூன்று தூய்மை, நீதி, நேர்மை


* அடக்க வேண்டிய மூன்று நாக்கு, நடத்தை, கோபம்


* பெற வேண்டிய மூன்று தைரியம், அன்பு, மென்மை


* கொடுக்க வேண்டிய மூன்று ஈதல், ஆறுதல், பாராட்டு


 * அடைய வேண்டிய மூன்று ஆன்மசுத்தம், முனைவு, மகிழ்வு


* தவிர்க்க வேண்டிய மூன்று இன்னா செய்தல், முரட்டுத்தனம்,

நன்றியில்லாமை


* நேசிக்க வேண்டிய மூன்று அறிவு, கற்பு, மாசின்மை

சொட்டுமருந்தும், தடுப்பூசியும் மறைக்கப்பட்ட அதிர்ச்சி உண்மைகள் !!!!


நம் வீட்டில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும் ஒரு பெரிய அட்டவணை வைத்துக்கொண்டு அதற்கு இதற்க்கு என்று ஆயிரத்தெட்டு தடுப்பூசிகள் போடுகிறோம் , போதாத குறைக்கு இடை இடையே சொட்டுமருந்துகள் வேறு கொடுக்கிறோம். இதெல்லாம் ஏன் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் என்றாவது சிந்தித்ததுண்டா ? எல்லாம் குழந்தைகளின் நல்லதுக்கு தானே அவர்களை உயிர்கொல்லி நோயிலிருந்து பாதுகாக்க தான் என்று நாம் நினைத்தால் நம்மை விட ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது.

உலகத்தில் உள்ள உயிர்கொல்லி நோய்கள் அனைத்திற்கும் சேர்த்து நம் குழந்தைக்கு தடுப்பூசி போட்டாச்சு ஆனாலும் மாதம் மாதம் மருத்துவமனைகளுக்கு ஜுரம், வைரஸ் ஜுரம் ,வாந்தி,பேதி, மலேரியா என்று பிள்ளைகளை கூட்டிகொண்டு நடையா நடக்கிறீர்களே உயிர்கொல்லி நோயை எதிர்க்கும் அளவிற்கு தயார்படுத்தபட்ட உங்கள் குழந்தையின் உடம்பினால் ஜுஜுபி ஜுரத்தை கட்டுப்படுத்த முடியவில்லையே ஏன் ? என்று என்றாவது யோசித்ததுண்டா ...?

அது வேற ஒண்ணுமில்ல சொல்ல சொல்ல கேட்காம ஐஸ் வாட்டர் குடுச்சான்,பச்ச தண்ணிகுடுச்சா என்று உங்கள் பிள்ளைகளை தான் குறைகூறுவீர்கள். ஆனால் உண்மை என்னவோ அதுவல்ல ..
நீங்கள் எதை உங்கள் பிள்ளைகளின் உடல் நலத்திற்கு நல்லது என்று கூறி தடுப்பூசியாகவோ, சொட்டு மருந்தாகவோ போட்டீர்களோ அதன் பக்கவிளைவுகள் என்றால் உங்களால் நம்ப முடியாது ஆனால் அதைவிட அதிர்ச்சியூட்டும் விஷயம் என்ன தெரியுமா ? நீங்கள் எந்த நோய் வரக்கூடாது என்று நினைத்துகொண்டு தடுப்பூசி போடுகிறீர்களோ அந்த தடுப்பூசியில் இருப்பது அதே நோய் கிருமி தான்... நோயிற்க்கான மருந்து அல்ல....
மண்டை குலம்புகிறதா..?

தொடர்ந்து படியுங்கள் நீண்ட கட்டுரை இது மிக முக்கிய செய்திகளை உள்ளடக்கியது.

போலியோ சொட்டு மருந்து :


போலியோ சொட்டு மருந்தால்தான் போலியோ உள்பட பல நோய்கள் ஏற்படுகின்றன என்றால் நம்ப முடிகிறதா..? இந்த உண்மையை சொல்பவர் யாரோ, எவரோ அல்ல. போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவரே தான்.

 ''1961ம் ஆண்டுக்குப் பின், அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவுக்கும் காரணம் போலியோ சொட்டு மருந்துதான்!'' என்று அமெரிக்க செனட் கமிட்டியில் ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜோனல் சால்க். இவர்தான் போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவர்.

 ''போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிக்குப் பின்னரும், இம்மருந்தால் பெருமளவு பலன் ஏதும் ஏற்படவில்லை என்பது அரசு ஆவணங்களை உற்று நோக்கும்போது தெரிகிறது...'' இப்படி சொன்னவரும் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கியவர்தான். அவர், சாபின்.

அம்மை நோய்க்கான மருந்தை 1796ல் எட்வர்ட் ஜென்னர் கண்டுபிடித்தார். தன்னுடைய மகனுக்கு முதன்முதலில் இந்த மருந்தை கொடுத்து தன் கண்டுபிடிப்பை நிரூபித்தார். அனைத்து மருத்துவர்களாலும் இந்த மருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு அந்த வேதனையான சம்பவம் நிகழ்ந்தது. ஆமாம், சிலவருடங்களில் அம்மை தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு போடப்பட்டதோ, அந்த ஜென்னருடைய மகனும், இன்னொருவரும் மருந்தின் வீரியத்தால் மரணமடைந்தனர். இதனால் எட்வர்ட் ஜென்னர் தன்னுடைய 2வது மகனுக்கு அம்மைத் தடுப்பூசியை போடவில்லை. ஆனால், அதற்குள் உலகம் முழுவதும் அம்மைத் தடுப்பூசி புழக்கத்துக்கு வந்துவிட்டது...

மேலே சொன்ன சம்பவங்கள் முதலாளித்துவத்தின் கோர பசிக்கு மனிதர்கள் தடுப்பூசிகள் என்ற பெயரில் இரையாகும் கொடூரத்தின் சில மாதிரிகள்தான். இப்படி உலகையே குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளையே சுடுகாடாக மாற்றும் போக்கு முதலாளித்துவ சமூகம் எப்போது பிறந்ததோ அப்போது முதலே நடைமுறைக்கு வந்துவிட்டது. முதலாளித்துவத்தின் அடுத்தகட்டமான ஏகாதிபத்தியத்தில் இந்தப் போக்கு உச்சநிலையை எட்டியிருக்கிறது.

தடுப்பூசிகளின் விபரீதம் குறித்து பார்ப்போம்.

கி.பி.1796ல் எட்வர்ட் ஜென்னர் அம்மை தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அதற்கு Vaccination என்று பெயர் சூட்டினார். பசுவைக் குறிக்கும் லத்தீன் சொல்லான Vacceinus-லிருந்து உருவான சொல் இது. இந்த மருந்து எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மனிதர்களுக்கு ஏற்படும் அம்மைக் கொப்புளங்களிலிருந்து வரும் சீழை எடுத்து பாதுகாத்து, பசுக்களுக்கு செயற்கையான காயங்களை ஏற்படுத்தி அந்த புண்களுக்குள் செலுத்துவார்கள். இதனால் இப்புண்கள் வழியே அதிகமான சீழ் வெளியேறத் தொடங்கும். இந்த சீழை எடுத்து அதோடு சில இருப்பு ரசாயனங்களைக் கலந்து அம்மை தடுப்பு மருந்தை தயாரிக்கிறார்கள்.

போலியோ சொட்டு மருந்து தயாரிப்பும் கிட்டத்தட்ட இதுமாதிரிதான். போலியோவை ஏற்படுத்துவதாக நம்பப்படும் கிருமிகளை குரங்குகளின் சிறுநீரகத்தில் ஊசி வழியே செலுத்துகிறார்கள். சிறுநீரக சூழலிலேயே இந்தக் கிருமிகள் வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் போலியோ சொட்டு மருந்தாக தயாரிக்கப்படுகிறது. இப்படி மருந்து தயாரிக்கப் பயன்படும் குரங்குகள், உரிய சோதனைக்கு பிறகுதான் தேர்வு செய்யப்படுகின்றன. என்றாலும், பரிசோதனைகளின் மூலமே வரப்போகிற அல்லது வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நோய்கள் அனைத்தையும் கண்டுபிடித்துவிட முடியாது. இப்படி 1950களில் பரிசோதிக்கப்பட்ட குரங்குகளில் சிமியன் வைரஸ் 40 (SV40) என்ற கிருமி பாதித்திருந்த விஷயம், மருந்துகள் தயாரிக்கப்பட்ட பிறகுதான் தெரிய வந்தது.

இதனால்தான் 'இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதைத் தடை செய்யவேண்டும்' என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர் சத்யமாலா வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது..!

அதேபோல், 2006ல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து இந்தியாவில் 1600 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 27,000 பேர் பாதிக்கப்பட சாத்தியம் இருப்பதாகவும் ஜூலை 11, 2008ம் ஆண்டு தேதியிட்ட 'தி இந்து' நாளிதழில் கட்டுரை எழுதினார் இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவரான டாக்டர் ஜேக்கப் புலியேல் (Politics of Polio, July 11/2008). இந்தக் கட்டுரையின் விவரத்தையும் உண்மையையும் ஆளும் வர்க்கங்கள் கண்டுகொள்ளவேயில்லை...

1853ம் ஆண்டு இங்கிலாந்தில் அம்மை தடுப்பு ஊசியை குத்தும் சட்டம் கட்டாயமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளுக்கும் தடுப்பு மருந்துகள் பரவின. கட்டாயச் சட்டங்களும் அமலுக்கு வந்தன. ஆனால், அம்மை நோய்த் தாக்கத்தில் இம்மருந்துகள் இந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பதிலாக பல புதிய எதிர் விளைவுகளே ஏற்பட்டன. இதனால் 1889ம் ஆண்டு இங்கிலாந்தில் ராயல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. 7 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு இக்கமிஷன் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து இங்கிலாந்தில் கட்டாயத் தடுப்பூசி சட்டம் நீக்கப்பட்டது.

1870 - 71களில் அம்மை நோய் ஜெர்மனியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் 10 லட்சம் பேருக்கு அம்மை நோய் தோன்றியது. இவர்களில் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களில் நூற்றுக்கு 96 பேர் அம்மை நோய் தடுப்பூசியை குத்திக் கொண்டவர்கள்.

அதுமட்டுமல்ல, அம்மைத் தடுப்பூசி குத்திக் கொண்ட சிறுமிகள், வளர்ந்து தாயானதும் அவர்களுக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.

இந்த உண்மை வெளிப்பட்டதும் 1880ம் ஆண்டு உலக தடுப்பூசி எதிர்ப்புச் சங்கம் (International Anti-Vaccination League) உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டின் இறுதியில் பாரீசில் நடைபெற்ற முதல் மாநாட்டில் பல நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். தடுப்பூசிகளை எதிர்க்கும், முறைப்படுத்தக் கோரும் 10 தீர்மானங்கள் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. ஆனால்... அது நடைமுறைக்கு வர பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கவில்லை...

இந்த புள்ளிவிபரத்தை பாருங்கள்.

1980களில் அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10. அதுவே 2008ல் 36 ஆக உயர்ந்தது. அத்துடன் 1983ல் மூளை வளர்ச்சி குறைவுள்ள அமெரிக்க குழந்தைகள் பத்தாயிரத்தில் ஒருவர்தான். ஆனால், 2008ல் அமெரிக்க குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவு விகிதம் நூற்றைம்பதில் ஒருவராக மாறியிருந்தது. அதாவது 3000 மடங்கு அதிகரித்திருந்தது. இதற்கு காரணம் தடுப்பூசிகள்தான். மூன்றாம் உலக நாடுகள் அமெரிக்கா செல்லும் பாதையைத்தான் பின்பற்றுகின்றன என்பதால் ஆசிய, ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள புதிய புதிய நோய் பாதிப்புக்குகளுக்கு காரணம் தடுப்பூசிகள்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மஞ்சள் காமாலைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட தடுப்பூசியின் கதையைக் கேட்டால் வயிறு எரியும்.

ஹெர்படைட்டிஸ் ஏ, ஹெர்படைட்டிஸ் பி என மஞ்சள் காமாலையில் இருவகை உண்டு. இதில் ஹெர்படைட்டிஸ் பி ஆட்கொல்லி நோய். ஆனால், தொற்று நோயல்ல. அதேபோல் பரவலாக வரக் கூடியதும் அல்ல. அபூர்வமாகவே மனிதர்களை தாக்கும் இந்த ஹெர்படைட்டிஸ் பி-க்கான தடுப்பூசி வீரியமிக்கது. இதை ஹெர்படைட்டிஸ் ஏ தாக்கியவர்களுக்கு போடக் கூடாது.

உண்மை இப்படியிருக்க, 1990களில் பூதாகரமாக மஞ்சள் காமாலைத் தடுப்பூசி குறித்து (ஹெர்படைட்டிஸ் ஏ) பிரசாரம் செய்யப்பட்டது. இது ஏதோ ஆட்கொல்லி நோய் போலவும், அந்நோய் வந்தவர்கள் எளிதில் மரணமடைவார்கள் என்பது போலவும் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த ஏகாதிபத்திய வெறிக்கு இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளும் பலியாகின. மஞ்சள் காமாலைக்கு மருந்துகள் எதுவும் இல்லாமல் உணவுமுறையை ஒழுங்குபடுத்துவதன் மூலமே குணமாக்கலாம் என்ற பழம்பெரும் உண்மை மறைக்கப்பட்டது.

இதன்விளைவாக 1990களில் அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால், 1997ல் நடத்தப்பட்ட அமெரிக்க அரசின் ஆய்வில் மஞ்சள் காமாலை தடுப்பூசியும், அம்மைத் தடுப்பூசி போன்றே 13 விதமான புதிய நோய்களை ஏற்படுத்தும் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. வலிப்பு, ஜன்னி, கண்பார்வை பாதிப்பு, மூளைக் காய்ச்சல் போன்றவை இதில் அடங்கும். உடனே அமெரிக்க அரசு கட்டாய தடுப்பூசி சட்டத்தை அவசரமாக நீக்கியது.

இதனால் ஏராளமான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வைத்திருந்த அமெரிக்க மருந்துக் கம்பெனிகள் அதிர்ந்தன. இந்த மருந்தை என்ன செய்வது? அவர்களின் துயர் தீர்க்க முன்வந்தார் பில்கேட்ஸ்.

தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசிகளை இலவசமாக போட்டார். இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்க அரசால் 1997ல் தடைசெய்யப்பட்டவை...!!!!

தடுப்பூசிகளை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

 'முன்பெல்லாம் கொள்ளை நோய்கள் மக்களை கூட்டம் கூட்டமாக தாக்கியதே... தடுப்பூசிகள் வந்ததற்கு பின்னால்தானே கொள்ளை நோய்கள் கட்டுக்குள் வந்தன?' நம் மனதில் இப்படித்தான் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை இதுமட்டுமே அல்ல. பல தீவிரமான கொள்ளை நோய்களை தடுப்பூசிகள் தடுத்து நிறுத்தியதை காட்டிலும் தடுப்பூசி என்னும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வணிகமும், இதனையடுத்து தோன்றியுள்ள புதுப்புது நோய்களும் மிக அதிகம்.

2009ம் ஆண்டு சீனாவிலிருந்து உலகம் முழுக்க சார்ஸ் (பறவைக்காய்ச்சல்) பரவுவதாக பிரசாரம் செய்தார்கள். இந்த சளிக்காய்ச்சலை கட்டுப்படுத்தவோ, பரவாமல் தடுக்கவோ எந்த மருந்தும் கண்டுபிடிப்பதற்கு முன்பே அக்காய்ச்சல் படிப்படியாக குறைந்தது. இதேநிலைதான் இந்தியாவில் ஏற்பட்ட சிக்குன்குனியா காய்ச்சலுக்கும் ஏற்பட்டது. பன்றிக்காய்ச்சலையே எடுத்துக் கொள்வோம். ஏதோ கொள்ளை நோய் போல உலகம் முழுவதும் பேசப்பட்ட இந்நோய்க்கான தடுப்பு மருந்து தாமிஃப்ளூ விற்பனைக்கு வரும் முன்பே இந்நோய் குறைந்துவிட்டது.

எந்தவொரு நோயானாலும் மக்களின் உடல் நிலை மற்றும் சுற்றுப்புற சமூக காரணிகளை வைத்து தானாகவே ஏற்படும். குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே மறையும். இந்த அறிவியல் உண்மை மறைக்கப்பட்டு, ஆனால், இதன் சாராம்சத்தை - அதாவது தானாகவே மறையும் தன்மை - மட்டும் எடுத்துக் கொண்டு ஆளும் வர்க்கங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் ஏதோ தங்களால்தான் - தாங்கள் அறிமுகப்படுத்திய தடுப்பூசியால்தான் - நோய்களை கட்டுப்படுத்த முயன்றது போல் பிரசாரம் செய்கின்றன.

சில பழைய பக்கங்களை பார்ப்போம். 1950களில் போலியோ நோயின் தாக்கம் உலகெங்கும் 40 மில்லியனாக இருந்தது. அப்போது போலியோவிற்கான எந்த தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. 1952ல் 19 மில்லியனாகவும், 1954ல் 8 மில்லியனாகவும் தன்னால் இது குறைந்த பிறகு 1956ல் போலியோ தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. இப்போது என்ன சொல்கிறார்கள்? இந்த தடுப்பு மருந்தால்தான் போலியோ கட்டுக்குள் இருப்பதாக...

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத டைபாய்டு காய்ச்சல் 1910ல் 500 மில்லியனுக்கு மேல் உலகெங்கும் பாதிப்பு ஏற்படுத்தியது. தடுப்பூசி பயன்படுத்தாத நிலையில் 1920ல் அதுவே 200 மில்லியனாகவும், 1930ல் 100 மில்லியனாகவும் குறைந்துவிட்டது.

இப்படி இயற்கையாகக் குறைந்த பல நோய்களைத் தங்கள் வரைபடத்தில் ஏற்றி வருமானமாக மாற்றும் தந்திரத்தைத்தான் தடுப்பூசி தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் செய்கின்றன.

இப்போது தடுப்பூசி மருந்துகள் குறித்த ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதற்கு பதிலாக -

இந்த மருந்துகளை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம். அதாவது 'புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு...' என்று அச்சிடுகிறார்கள் இல்லையா? அதேபோல் தடுப்பூசி மருந்துடனும் சில எச்சரிக்கைகளை பன்னாட்டு நிறுவனங்கள் அச்சிடுகின்றன. அவை என்ன தெரியுமா?

1. அதிகப்படியான காய்ச்சல் (105 டிகிரி அல்லது அதற்கு மேல்)
2. மந்தமாக இருத்தல்; நீடித்த அசதி
3. மூளை வளர்ச்சி குறைபாடு; மூளை பாதிப்பு
4. எப்போதாவது வலிப்பு; மயக்கம்
5. கண் நரம்புக் கோளாறுகள்; நரம்பு தொடர்பான நிரந்தக் கோளாறுகள்

... ஆகியவை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் ஏற்படலாம் என எச்சரிப்பது அந்த தடுப்பூசி தயாரித்த நிறுவனங்கள்தான். ஆனால், எந்த மருத்துவரும் இதைக் குறித்து நோயாளிகளிடம் சொல்வதில்லை. அதுமட்டுமல்ல, உச்சபட்ச விளைவாக SIDS (Sudden Infant Death Syndrom) ஏற்படுத்துவதாக தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனங்கள் சொல்கின்றன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? குழந்தை திடீரென இறந்து போகும்...

ஆனால், இந்த உண்மையை - அதாவது தடுப்பூசியை தயாரித்த நிறுவனம் சொல்லும் எச்சரிக்கையை - எந்த மருத்துவரும் நோயாளிகளிடம் சொல்வதில்லை. பதிலாக சிரஞ்சியில் ஏற்பட்ட மருந்தையே கண்ணுக்கு காட்டுகிறார்கள்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top